
Aadhav Arjuna
@AadhavArjuna • 92,666 subscribers
Cabinet Minister, Govt. of TN| GS (Election Campaign Management)@tvkvijayhq| MLA, Villivakkam| President @BFI_basketball |GS @TNOA_Offi |Founder @thevocofficial
Shorts
Videos

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் இந்த ஓட்டம் குறித்த விழிப்புணர்வு பாடல் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் CMOTamilNadu அவர்களால் வெளியிடப்பட்டது. போதை இல்லாத மாநிலத்தை உருவாக்க விழையும் முதல்வர் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் பொருட்டு சீரிய முன்னெடுப்புகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். உன் தலை நிமிர... உன் நிலை உயர... முடிவெடுத்திடு Say NO to Drugs. #ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs #AntiDrugRun2026
Aadhav Arjuna63,596 Aufrufe • vor 8 Tagen

"போதையில்லா தமிழ்நாடு" என்ற இலக்குடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்னெடுக்கும் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' என்கிற பிரசார இயக்கத்தின் விழிப்புணர்வு பாடலை மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று பார்வையிட்டு வெளியிட்டார். தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வையும் காக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு அரசு முதன்மை கடமையாக முன்னெடுத்துச் செல்லும்.
Aadhav Arjuna36,262 Aufrufe • vor 8 Tagen

டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது. அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும். இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும். மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும். எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும். Let the battle to reclaim the people's power begin!
Aadhav Arjuna302,173 Aufrufe • vor 3 Monaten

பேரலையாகத் திரண்டு, அன்பு மழை பொழிந்த பெரம்பூர் மக்களுக்கு நன்றி!
Aadhav Arjuna119,540 Aufrufe • vor 3 Monaten

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றேன். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்கள் எனக்கு அளித்துள்ள இந்த வரலாற்றுக் கடமையை என்றும் கட்டிக் காப்பேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் சிறப்பை உலகறிய செய்யும். இந்த பொறுப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Aadhav Arjuna65,439 Aufrufe • vor 1 Monat

மன்னராட்சிக்கு முடிவுகட்ட எழுச்சி வெள்ளமாய் திரண்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு நன்றி!
Aadhav Arjuna83,197 Aufrufe • vor 2 Monaten

வாகை சூடும் வெற்றி வரலாற்றைப் படைக்க, வாஞ்சையுடன் கூடிய காரைக்குடி மக்களுக்கு நன்றி!
Aadhav Arjuna71,579 Aufrufe • vor 2 Monaten

நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுப்பேற்றேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான நல்லாட்சியை வழங்குவார். கழக அரசு தமிழ்நாட்டை உலக அரங்கில் பெருமையடையச் செய்யும். இந்த காலத்தின் பொறுப்பை அளித்த தமிழ்நாட்டு மக்களைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Aadhav Arjuna43,582 Aufrufe • vor 1 Monat

மகத்தான மக்களாட்சி படைக்கப் பெருங்கடலாகத் திரண்ட திருவள்ளூர் மற்றும் சென்னை மக்களுக்கு நன்றி!
Aadhav Arjuna50,483 Aufrufe • vor 2 Monaten

திறனற்ற ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் திருப்பூரில் திரண்ட மக்கள்!
Aadhav Arjuna52,612 Aufrufe • vor 2 Monaten

மாற்றத்திற்கான தொடக்கமாக, ஆர்ப்பரிக்கும் அன்பால் திரண்ட திருச்சி மக்களுக்கு நன்றி!
Aadhav Arjuna58,217 Aufrufe • vor 3 Monaten

திருவாரூர் தங்களோட கோட்டை, தாமே அதன் மன்னர்கள், தமது வாரிசுகளே அதன் இளவரசர்கள் என நினைத்துக்கொண்டு மக்களை அடிமைகளாக நினைத்து அதிகாரம் செய்து வந்தது திமுக தலைமை குடும்பம். அந்த குடும்பத்தின் பிரதிநிதிகளாக தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு இந்த திருவாரூர் மண்ணின் பண்ணையார்களாகப் பவனி வந்தவர்களுக்கு எதிராக, மக்கள் தலைவர் திரு. விஜய் அவர்கள் மீது கொண்ட அன்பாலும் நம்பிக்கையாலும் தன்னெழுச்சியாக திரண்டார்கள் மக்கள். மக்களின் புதிய எழுச்சியும், மக்கள் தலைவரின் பிரசாரமும் வரும் தேர்தலில் அந்த மன்னர்களின் மகுடத்திற்கே ஆபத்தாக மாறியதைக் கண்டு அவர்களை பதற வைத்துள்ளது. இனி, திருவாரூர் என்றாலே தேருக்குப் பிறகு வெற்றித் தலைவரின் பிரசாரத்தில் மக்கள் காட்டிய எழுச்சியையே வரலாறு பேசும்!
Aadhav Arjuna145,031 Aufrufe • vor 9 Monaten