Arappor Iyakkam's banner
Arappor Iyakkam's profile picture

Arappor Iyakkam

@Arappor104,359 subscribers

Official Twitter id of Arappor Iyakkam

Shorts

சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? TVK Vijay N Anand TVK Party HQ GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Corporation Greater Chennai Traffic Police CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Chief Minister's Special Cell Tamil nadu

சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? TVK Vijay N Anand TVK Party HQ GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Corporation Greater Chennai Traffic Police CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Chief Minister's Special Cell Tamil nadu

47,331 просмотров

மேகம் கருக்குது.. தகரம் பறக்குது... சென்னையில் ரேஸ் நடக்குது...! 🤡🤡

மேகம் கருக்குது.. தகரம் பறக்குது... சென்னையில் ரேஸ் நடக்குது...! 🤡🤡

539,870 просмотров

வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி. இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. CMOTamilNadu Greater Chennai Corporation Sameeran

வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி. இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. CMOTamilNadu Greater Chennai Corporation Sameeran

19,519 просмотров

முதல்வரே! உங்கள் முகத்தை எங்கள் நடைபாதை குறுக்கே மற்றும் சாலைகள் குறுக்கே வைக்காதீர்கள்.இந்த பேனர்களை உங்கள் சித்தரஞ்சன் சாலை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள் ! M.K.Stalin சட்டவிரோத பேனர்கள் வைக்கக்கூடாது என்ற பகுத்தறிவு திமுகவிற்கு தான் இல்லை என்றால் காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூடவா இல்லை ?? உயர்நீதிமன்ற ஆணைகளை மீறி இதுபோல பேனர் வைப்பதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் மயிலை காவல்துறையினரும் வாங்கும் லஞ்சம் எவ்வளவு?? நடைபாதை குறுக்கே மற்றும் முக்கிய ஜங்ஷனில் சட்டவிரோத பேனர் வைக்க உங்களுடைய லஞ்ச ரேட் அட்டவணையை உங்கள் காவல்நிலைய வாசலிலும் மாநகராட்சி அலுவலக வாசலிலும் தொங்க விடவும் ! Place: Mylapore Tank Junction

முதல்வரே! உங்கள் முகத்தை எங்கள் நடைபாதை குறுக்கே மற்றும் சாலைகள் குறுக்கே வைக்காதீர்கள்.இந்த பேனர்களை உங்கள் சித்தரஞ்சன் சாலை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள் ! M.K.Stalin சட்டவிரோத பேனர்கள் வைக்கக்கூடாது என்ற பகுத்தறிவு திமுகவிற்கு தான் இல்லை என்றால் காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூடவா இல்லை ?? உயர்நீதிமன்ற ஆணைகளை மீறி இதுபோல பேனர் வைப்பதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் மயிலை காவல்துறையினரும் வாங்கும் லஞ்சம் எவ்வளவு?? நடைபாதை குறுக்கே மற்றும் முக்கிய ஜங்ஷனில் சட்டவிரோத பேனர் வைக்க உங்களுடைய லஞ்ச ரேட் அட்டவணையை உங்கள் காவல்நிலைய வாசலிலும் மாநகராட்சி அலுவலக வாசலிலும் தொங்க விடவும் ! Place: Mylapore Tank Junction

126,446 просмотров

வில்லிவாக்கம் Pumping Stationல் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு அரசாங்கம் செய்யும் செயலா இது? Chennai Metro Water CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் K.N.NEHRU

வில்லிவாக்கம் Pumping Stationல் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு அரசாங்கம் செய்யும் செயலா இது? Chennai Metro Water CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் K.N.NEHRU

52,728 просмотров

இன்று காலை போஸ்ட் போட்டதை அடுத்து துரைப்பாக்கம் எழில் நகருக்கு நாளை அமைச்சர் அன்பரசன் வருகை தர இருக்கிறாராம். ஆகையால் அவசர அவசரமாக சாக்கடை நீர் ஓடும் இடங்களில் மண் அடித்து நிரப்பப்படுகிறது. மேலே கொஞ்சம் பளீச்சிங்க பவுடர் போட்டு நாளை அங்கே நின்று அமைச்சர் சிரித்தபடி போஸ் கொடுப்பார். ஒரே இரவில் சாக்கடைகளை மறைய வைக்கும் அதிசயம் நடக்கும் ஆட்சி இது என்று பேட்டியும் கொடுப்பார். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவர்கள் இப்படி மக்களை ஏமாற்றி பிழைக்க போகிறார்கள்? இந்த மக்களின் பல வருட பிரச்சனை இப்படி ஒரு நாள் மண் அடித்து நாடகம் போடுவதால் தீர்ந்து விடப் போகிறதா? மக்களை ஏமாளிகள் என்று நினைப்பவர்கள் தான் துணிந்து இது போன்ற சர்க்கஸ் வேலைகளை செய்வார்கள். இந்த சர்க்கஸ் வேலைகளுக்கு எல்லாம் ஏமாந்து போக மக்கள் தயாராக இல்லை. நிரந்தர தீர்வு குறித்து பேச வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடுவோம். #KeluChennaiKelu Tamil Nadu Urban Habitat Development Board CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Tamil Nadu Police

இன்று காலை போஸ்ட் போட்டதை அடுத்து துரைப்பாக்கம் எழில் நகருக்கு நாளை அமைச்சர் அன்பரசன் வருகை தர இருக்கிறாராம். ஆகையால் அவசர அவசரமாக சாக்கடை நீர் ஓடும் இடங்களில் மண் அடித்து நிரப்பப்படுகிறது. மேலே கொஞ்சம் பளீச்சிங்க பவுடர் போட்டு நாளை அங்கே நின்று அமைச்சர் சிரித்தபடி போஸ் கொடுப்பார். ஒரே இரவில் சாக்கடைகளை மறைய வைக்கும் அதிசயம் நடக்கும் ஆட்சி இது என்று பேட்டியும் கொடுப்பார். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவர்கள் இப்படி மக்களை ஏமாற்றி பிழைக்க போகிறார்கள்? இந்த மக்களின் பல வருட பிரச்சனை இப்படி ஒரு நாள் மண் அடித்து நாடகம் போடுவதால் தீர்ந்து விடப் போகிறதா? மக்களை ஏமாளிகள் என்று நினைப்பவர்கள் தான் துணிந்து இது போன்ற சர்க்கஸ் வேலைகளை செய்வார்கள். இந்த சர்க்கஸ் வேலைகளுக்கு எல்லாம் ஏமாந்து போக மக்கள் தயாராக இல்லை. நிரந்தர தீர்வு குறித்து பேச வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடுவோம். #KeluChennaiKelu Tamil Nadu Urban Habitat Development Board CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Tamil Nadu Police

26,591 просмотров

பொது சாலையை தோண்டி கம்பம் நட இது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ?? தமிழ்நாட்டின் அப்பா என்று உங்களை நீங்களே சொல்லி கொண்டதற்கு இதுதான் காரணமா ?? M.K.Stalin

பொது சாலையை தோண்டி கம்பம் நட இது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ?? தமிழ்நாட்டின் அப்பா என்று உங்களை நீங்களே சொல்லி கொண்டதற்கு இதுதான் காரணமா ?? M.K.Stalin

39,196 просмотров

தண்ணீர் தேங்கக்கூடிய ஈர நிலமான ராம்சார் பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் 1250 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு மோசடியாக அனுமதி அளித்த தமிழ்நாடு அரசின் செயல் சட்டவிரோதமானது மட்டும் அல்ல. ராம்சார் நிலத்தை பாதுகாக்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு தென் சென்னை மக்களுக்கு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் செய்யும் பெரும் துரோகமும் கூட. இதற்கு பிறகும் இந்த நிறுவனத்திற்கு அளித்த மோசடி ஒப்புதல்களை ரத்து செய்து அனைத்து ராம்சார் நிலங்களையும் பாதுகாக்காவிட்டால் தென் சென்னை பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் ! M.K.Stalin Udhay CMDA Chennai Supriya Sahu IAS Chief Secretary, Govt. of Tamil Nadu P.K. Sekar Babu

தண்ணீர் தேங்கக்கூடிய ஈர நிலமான ராம்சார் பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் 1250 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு மோசடியாக அனுமதி அளித்த தமிழ்நாடு அரசின் செயல் சட்டவிரோதமானது மட்டும் அல்ல. ராம்சார் நிலத்தை பாதுகாக்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு தென் சென்னை மக்களுக்கு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் செய்யும் பெரும் துரோகமும் கூட. இதற்கு பிறகும் இந்த நிறுவனத்திற்கு அளித்த மோசடி ஒப்புதல்களை ரத்து செய்து அனைத்து ராம்சார் நிலங்களையும் பாதுகாக்காவிட்டால் தென் சென்னை பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் ! M.K.Stalin Udhay CMDA Chennai Supriya Sahu IAS Chief Secretary, Govt. of Tamil Nadu P.K. Sekar Babu

20,920 просмотров

இன்று தாம்பரம் மாநகராட்சியின் பல்லாவரம் 13வது வார்டு (அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறிப்பிடும் பகுதி) பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரின் நிலை இதுதான். இந்த நீரை ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பீர்களா அமைச்சரே? Tha Mo Anbarasan

இன்று தாம்பரம் மாநகராட்சியின் பல்லாவரம் 13வது வார்டு (அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறிப்பிடும் பகுதி) பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரின் நிலை இதுதான். இந்த நீரை ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பீர்களா அமைச்சரே? Tha Mo Anbarasan

43,176 просмотров

நெடுஞ்சாலையின் நடுவே மணலில் இது போல குத்தி நிறுத்தப்படும் கொடி கம்பங்கள் காற்று அடிக்கும் போதும், அதிக வேகத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போதும் சாய்ந்து சாலையில் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் இதை வைக்கும் உங்க கட்சிக்கு #அறிவு_இருக்கா DMK ? #Trichy

நெடுஞ்சாலையின் நடுவே மணலில் இது போல குத்தி நிறுத்தப்படும் கொடி கம்பங்கள் காற்று அடிக்கும் போதும், அதிக வேகத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போதும் சாய்ந்து சாலையில் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் இதை வைக்கும் உங்க கட்சிக்கு #அறிவு_இருக்கா DMK ? #Trichy

56,214 просмотров

ரேஷன் ஊழல் குறித்த எந்த ஒரு செய்தியும் வெளி வரக்கூடாது என்பதற்காக முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் Tamil Nadu Police இரும்புக்கரம் கொண்டு அடக்கிய போது .. We can see how the Tamil Nadu CM, Food Supplies Minister and TN Police handled Ration corruption with iron fist! #992croresrationscam #tnchristysuppliescorporation Office of Udhayanidhi Stalin DMK DMK IT WING Dr. T R B Rajaa Satyabrata Sahoo IAS News18 Tamil Nadu Sun News Thanthi TV puthiyathalaimurai Polimer News IndiaToday NDTV India TIMES NOW TheNewsMinute

ரேஷன் ஊழல் குறித்த எந்த ஒரு செய்தியும் வெளி வரக்கூடாது என்பதற்காக முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் Tamil Nadu Police இரும்புக்கரம் கொண்டு அடக்கிய போது .. We can see how the Tamil Nadu CM, Food Supplies Minister and TN Police handled Ration corruption with iron fist! #992croresrationscam #tnchristysuppliescorporation Office of Udhayanidhi Stalin DMK DMK IT WING Dr. T R B Rajaa Satyabrata Sahoo IAS News18 Tamil Nadu Sun News Thanthi TV puthiyathalaimurai Polimer News IndiaToday NDTV India TIMES NOW TheNewsMinute

20,357 просмотров

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பெரும்பாலான சாலைகளின் நிலை இது தான். சரியாக திட்டமிடாத கழிவுநீர் வடிகால் பணிகள் முற்றிலுமாக தோல்வி அடைந்து சாலைகள் முழுவதும் கழிவுநீர் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த கழிவுநீர் எங்கே ஓடி எதில் கலக்கிறது என்று மக்கள் மீது பழி போடும் அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்து சொல்லட்டும். Tha Mo Anbarasan Tambaram Corporation

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பெரும்பாலான சாலைகளின் நிலை இது தான். சரியாக திட்டமிடாத கழிவுநீர் வடிகால் பணிகள் முற்றிலுமாக தோல்வி அடைந்து சாலைகள் முழுவதும் கழிவுநீர் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த கழிவுநீர் எங்கே ஓடி எதில் கலக்கிறது என்று மக்கள் மீது பழி போடும் அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்து சொல்லட்டும். Tha Mo Anbarasan Tambaram Corporation

12,655 просмотров

Videos

Arappor's profile picture

அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது. இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி Thinakaran Rajamani பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார். அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம். RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம். 27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி! அறப்போர் தொடரும்!

Arappor Iyakkam

367,710 просмотров • 2 дней назад

Arappor's profile picture

அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது. அது என்ன புகார்? சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். புகாருக்கு பிறகு அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள். Youtube link - இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. #PF #DMK #Velu

Arappor Iyakkam

57,024 просмотров • 4 дней назад

Arappor's profile picture

நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.

Arappor Iyakkam

62,535 просмотров • 7 дней назад

Arappor's profile picture

சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.

Arappor Iyakkam

116,484 просмотров • 1 месяц назад

Arappor's profile picture

கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா? சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை. சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே... என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!! N Anand TVK Party HQ TVK Vijay

Arappor Iyakkam

34,356 просмотров • 13 дней назад

Arappor's profile picture

பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்த விவரகாரத்தில், மோசடியில் ஈடுபட்ட எந்த ஒரு கல்லூரி மீதும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி செழியன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும், ஒவ்வொரு முறையும், நாங்கள் விதிகளை உறுதியாக்குகிறோம், எச்சரிக்கை செய்துள்ளோம், கண்காணிக்கிறோம் என பொய் கதைகளை கூறினார்களே தவிர, நடவடிக்கை பற்றிய எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பம் துவங்கியுள்ளது. புதிய உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்ன செய்ய போகிறார்கள்? CMOTamilNadu

Arappor Iyakkam

79,231 просмотров • 1 месяц назад

Arappor's profile picture

Arappor Chennai Volunteer Meet! பிரிகேட் ராம்சார் ஊழல், திட்ட அனுமதிக்கு ரூ 28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் போன்ற பல ஊழல்களை அறப்போர் வெளிக்கொண்டு வந்தது எப்படி ? வரும் ஞாயிறு அறப்போர் சென்னை தன்னார்வலர்கள் சந்திப்பு! அறப்போர் இயக்கத்தில் இணைந்து லஞ்சம் ஊழலை எதிர்த்தும் சமூக பிரச்சனைகளை தீர்க்கவும் தன்னார்வலராக வேலை செய்ய விரும்புவோர், இங்கே பதிவு செய்யவும். வரும் ஞாயிறு ஜூன் 28, மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் தன்னார்வலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்! நாள்: ஜூன் 28, 2026 நேரம்: மாலை 5 மணிக்கு இடம்: அறப்போர் அலுவலகம், 7, திருமூர்த்தி நகர் பிரதான சாலை, நுங்கம்பாக்கம், சென்னை

Arappor Iyakkam

12,488 просмотров • 6 дней назад

Arappor's profile picture

காணவில்லை..! 11.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் ATM இயந்திரங்களை காணவில்லை. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களால் 3 வருட பராமரிப்பு செய்ய வேண்டிய நிலையில் ஆறே மாதத்தில் இயந்திரங்களை காணவில்லை. இருக்கும் இயந்திரங்களில் தண்ணீர் வரவில்லை. அப்படியே வந்தாலும் அந்த குடிநீர் துர்நாற்றம் அடிக்கிறது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் செய்யப்பட்ட இந்த பணிக்கான ஒப்பந்த ஆவணங்கள் எங்கே? பணி ஆணை எங்கே? முன்னாள் திமுக அமைச்சர் நேரு பதில் சொல்வாரா? முன்னாள் MAWS sec கார்த்திகேயன் IAS விளக்கம் அளிப்பாரா? K.N.NEHRU தற்போதைய TVK அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு குடிநீர் ATMகள் மூலம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வார்களா? CMOTamilNadu TVK Vijay TN_MAWS Chennai Metro Water

Arappor Iyakkam

37,773 просмотров • 1 месяц назад

Arappor's profile picture

கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள். இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது. Dr.Tk.Prabhu CMOTamilNadu TVK Vijay

Arappor Iyakkam

34,221 просмотров • 1 месяц назад