
Arappor Iyakkam
@Arappor • 104,359 subscribers
Official Twitter id of Arappor Iyakkam
Shorts
Videos

அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது. இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி Thinakaran Rajamani பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார். அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம். RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம். 27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி! அறப்போர் தொடரும்!
Arappor Iyakkam367,710 次观看 • 2 天前

அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது. அது என்ன புகார்? சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். புகாருக்கு பிறகு அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள். Youtube link - இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. #PF #DMK #Velu
Arappor Iyakkam57,024 次观看 • 4 天前

நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
Arappor Iyakkam62,535 次观看 • 7 天前

வடபழனி தபால் நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள பந்தலை சுற்றி இரவோடு இரவாக சாலை அமைத்து பந்தலுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டி செல்லும் நபர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். பந்தலுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சாலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு அறிவு கெட்ட சமூக விரோதி. CMOTamilNadu Greater Chennai Traffic Police Greater Chennai Corporation Sameeran TVK Vijay
Arappor Iyakkam86,154 次观看 • 26 天前

சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.
Arappor Iyakkam116,484 次观看 • 1 个月前

கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா? சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை. சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே... என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!! N Anand TVK Party HQ TVK Vijay
Arappor Iyakkam34,356 次观看 • 13 天前

ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் ! அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து. ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
Arappor Iyakkam70,461 次观看 • 1 个月前

Brigade's Environmental clearance for their project within Ramsar site has been cancelled. It must be understood that Brigade's project was well within the Ramsar site. Let us make it clear that Brigade's construction site is not in zone of influence. It is right within the Ramsar site where construction cannot be allowed as per Wetland Conservation and Management rules 2017 under Environment Act. Brigade played fraud in its application by misrepresenting and concealing key facts. The officials/ politicians of different Departments colluded to provide the EC and CMDA construction approval fraudulently to them. Better sense prevailed and their approval has been cancelled now! Thanks to all those who raised your voice and supported us in this struggle. Lets save and preserve Ramsar land to preserve our ecology as well as prevent flooding in Perumbakkam and Pallikaranai.
Arappor Iyakkam18,363 次观看 • 9 天前

பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்த விவரகாரத்தில், மோசடியில் ஈடுபட்ட எந்த ஒரு கல்லூரி மீதும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி செழியன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும், ஒவ்வொரு முறையும், நாங்கள் விதிகளை உறுதியாக்குகிறோம், எச்சரிக்கை செய்துள்ளோம், கண்காணிக்கிறோம் என பொய் கதைகளை கூறினார்களே தவிர, நடவடிக்கை பற்றிய எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பம் துவங்கியுள்ளது. புதிய உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்ன செய்ய போகிறார்கள்? CMOTamilNadu
Arappor Iyakkam79,231 次观看 • 1 个月前

Arappor Chennai Volunteer Meet! பிரிகேட் ராம்சார் ஊழல், திட்ட அனுமதிக்கு ரூ 28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் போன்ற பல ஊழல்களை அறப்போர் வெளிக்கொண்டு வந்தது எப்படி ? வரும் ஞாயிறு அறப்போர் சென்னை தன்னார்வலர்கள் சந்திப்பு! அறப்போர் இயக்கத்தில் இணைந்து லஞ்சம் ஊழலை எதிர்த்தும் சமூக பிரச்சனைகளை தீர்க்கவும் தன்னார்வலராக வேலை செய்ய விரும்புவோர், இங்கே பதிவு செய்யவும். வரும் ஞாயிறு ஜூன் 28, மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் தன்னார்வலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்! நாள்: ஜூன் 28, 2026 நேரம்: மாலை 5 மணிக்கு இடம்: அறப்போர் அலுவலகம், 7, திருமூர்த்தி நகர் பிரதான சாலை, நுங்கம்பாக்கம், சென்னை
Arappor Iyakkam12,488 次观看 • 6 天前

சாலைகளில் பேனர் வைக்கும், சுய விளம்பர, அறிவு கெட்ட சமூக விரோதிகளே... இந்த பேனர்களால் ஏற்படும் விபத்தில் உங்கள் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டால் தான் உங்களுக்கெல்லாம் புத்தி வருமா? இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் காவல்துறைக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? CMOTamilNadu Viswanathan Perumal Congress TN Congress IT & Social Media Department Tamil Nadu Police Selvaperunthagai K
Arappor Iyakkam19,082 次观看 • 11 天前

காணவில்லை..! 11.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் ATM இயந்திரங்களை காணவில்லை. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களால் 3 வருட பராமரிப்பு செய்ய வேண்டிய நிலையில் ஆறே மாதத்தில் இயந்திரங்களை காணவில்லை. இருக்கும் இயந்திரங்களில் தண்ணீர் வரவில்லை. அப்படியே வந்தாலும் அந்த குடிநீர் துர்நாற்றம் அடிக்கிறது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் செய்யப்பட்ட இந்த பணிக்கான ஒப்பந்த ஆவணங்கள் எங்கே? பணி ஆணை எங்கே? முன்னாள் திமுக அமைச்சர் நேரு பதில் சொல்வாரா? முன்னாள் MAWS sec கார்த்திகேயன் IAS விளக்கம் அளிப்பாரா? K.N.NEHRU தற்போதைய TVK அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு குடிநீர் ATMகள் மூலம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வார்களா? CMOTamilNadu TVK Vijay TN_MAWS Chennai Metro Water
Arappor Iyakkam37,773 次观看 • 1 个月前

கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள். இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது. Dr.Tk.Prabhu CMOTamilNadu TVK Vijay
Arappor Iyakkam34,221 次观看 • 1 个月前