
Iyan Karthikeyan
@Iyankarthikeyan • 119,535 subscribers
Former Mission Director, Fact check unit, Govt of Tamilnadu Ex - Editor-in-Chief, https://t.co/3EOIm9ebOg , Tedx Speaker,40 under Forty awardee by Edex.
Shorts
Videos

'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை. தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன. இது எங்க போய் முடியுமோ !
Iyan Karthikeyan180,538 Aufrufe • vor 4 Tagen

சூட்டிங் ரோடு கதையும் Flop ! கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதிக்கு சூட்டிங் சென்ற போது பார்த்த சாலை இல்லாத கிராமத்துக்கு ஆட்சிக்கு வந்த உடனே சாலை போட நிதி ஒதுக்கியதாக அமைச்சர் ஆனந்த் பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, நீங்கள் சொல்வது தாண்டிக்குடி பஞ்சாயத்தில் உள்ள கூடல்நகர் கிராமம். அங்கு ஒப்பந்ததாரர் இறந்து விட்டார். அதனால், மறுடெண்டர் விடப்பட்டு பணி தொடங்கியுள்ளது. தி.மு.க ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தாண்டிக்குடியின் கூடல் நகர் கிராமத்தில் 3.82 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக சாலை அமைப்பதற்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் அடிக்கல் நாட்டி இருந்தார்.
Iyan Karthikeyan138,240 Aufrufe • vor 11 Tagen

பொய்யை உண்மையாக்க இன்னொரு பொய் மார்ச் மாதம் அவர்கள் 37,413ரூ மின் கட்டணம் கட்டியதாகக் கூறுவது திரிக்கப்பட்டு உள்ளது. வீடியோவில், அப்பார்ட்மெண்ட் மின் இணைப்பில் இருந்த பிரச்சனையால் ஒரு வருடத்திற்கு விடுபட்ட அளவீடுக்காக மொத்தமாக கட்ட சொன்ன தொகையே 37,413ரூ என்று தெளிவாக கூறுகின்றனர். அதன் பிறகு இரண்டு மாதம் வந்த தொகை தான் மாதங்களுக்கானது. உண்மை எதுவென்று அளித்த விளக்கத்தை வைத்தே மீண்டும் வதந்தியை பரப்புறதுலா நெக்ஸ்ட் லெவல். உண்மையே பேசமாட்டிங்களா ? நீங்கள் விஐய் ரசிகராகவே இருந்தாலும் எதிர்த்து நியாயமான கேள்வி எழுப்பினால் வேட்டையாடப் படுவீர்கள் என சொல்கிறார்கள் சொத்து வரி , மின் கட்டணம் என பல நிர்வாக குளறுபடிகளை சரி செய்வது தான் தீர்வு , இப்படி பொய் மேல் பொய் சொல்வதும் அவதூறும் அல்ல இடிப்பாரே இல்லா மன்னன் போல மாறி தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டுவது தான் இவர்கள் செய்யும் வேலை . மக்கள் சிக்கலை தீர்க்காமல், என்னை விசாரிக்க உளவுத்துறையில் இருந்து அழைப்பு. விமர்சனம் வைத்தவுடன் அப்படி என்ன பயம் ?
Iyan Karthikeyan131,892 Aufrufe • vor 19 Tagen

சின்னப்பிள்ளை அவர்கள் பற்றிய நேற்றைய உளறலுக்கு இன்று சட்டசபையில் விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா. ஆனால், அவர் இன்று பேசிய போது, 9 வருடத்துக்கு முன் தமிழ்நாட்டை விட்டு போன Suzlon Energy கம்பெனி திரும்ப முதலீடு செய்ய கொண்டு வந்ததாக பொய் சொல்லி உள்ளார். இதே நிறுவனம் 2016 முதல் 2026 வரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மின்சக்தி தொடர்பாக வெவ்வேறு பணிகளில் இயங்கியும், முதலீடும் செய்து வருகிறது. இதோ ஆதாரங்கள். 2016 - 2023 - 2025 - 2026 - இதேபோல், மே 10ம் தேதி தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்று கூறிய பொய்க்கும், ஆகஸ்ட் 22ம் தேதி விருதுநகரில் பேசும்போது தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக இருப்பதாக உதிர்த்த பொய்களுக்கும் நாளை சட்டமன்றத்தில் விளக்கமளிப்பீர்கள் என்று எதிர்பாக்கலாமா?
Iyan Karthikeyan27,541 Aufrufe • vor 5 Tagen

நீங்க செய்யக் கூடாது... நாங்கதான் செய்வோம்! விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது, தாயிடமிருந்து பிள்ளையைப் பறிப்பது போல என்றார்கள். விவசாயிகளின் வயிற்றில் அடித்து வரும் எந்த வளர்ச்சியும் தேவையில்லை என்றார்கள். “வேறு இடத்தில் எப்படி விமான நிலையம் அமைப்பீர்கள்?” என்று கேட்டால், “விவசாயிகள் பாதிக்காத வகையில்தான் நாங்கள் எந்தத் திட்டமாக இருந்தாலும் செயல்படுத்துவோம்” என்று சொன்னார்கள். இன்று, ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சொன்னால், அதற்கு, “விவசாயிகளின் நிலத்தை எடுக்காமல் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வர முடியாது. உங்கள் பகுதியில் விமான நிலையம் வந்தால், உங்கள் பகுதி வளர்ச்சி அடையும்” என்கிறார்கள். என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்!
Iyan Karthikeyan20,072 Aufrufe • vor 4 Tagen

Pocso பற்றிய புரிதல் இன்றி பேசிய ஒரு பெண் காவலர் , சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை பார்த்திருப்போம். முந்தைய ஆட்சியில் Pocso , Fact check பற்றி காவலர்களுக்கும் தொடர்ந்து பயற்சி வழங்கினோம் பயற்சிக்குப்பின் முன்முடிவோடு பெண்கள் , பெண் குழந்தைகள் பிரச்சினைகளை அணுக மாட்டேன் என AC ஒருவர் கொடுத்த Feedback . அர்த்தமுள்ள வேலையை செய்ய வாய்ப்பளித்த M.K.Stalin Udhay இருவருக்கும் நன்றி.
Iyan Karthikeyan121,519 Aufrufe • vor 1 Monat

தமிழுக்கு முதல் இடத்தை முன்னாள் அமைச்சர் அதே கல்லூரியில் உறுதி செய்துள்ளார் And வேலை போகல, இப்போதைய அரசு பதிவேற்பு செய்யும் முன் நான் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன். I cannot continue working with someone who does not take responsibility for their actions.
Iyan Karthikeyan71,386 Aufrufe • vor 21 Tagen

நீட் தேர்வுக்கு எதிராக அனிதா போராடிய போது , அவருக்கு துணையாக நிற்கும் மாணவர் தான் பாரதிதாசன் . இப்போது கல்வி உதவித்தொகை கேட்டு மோசமாக வசையில் சிக்கி இருக்கிறார். சாதிய ரீதியான தொடர் அவதூறுகளை எதிர் கொள்ளும் சூழலில் , அனைவரும் துணை நிற்பது தான் சரி. இதில் அரசியல் செய்ய ஏதும் இல்லை. அரசியலைத் தாண்டி ,பொறுப்புணர்வுடன் நடப்பது அவசியமான ஒன்று. அரசா ? மாணவரா? மாணவரின் பக்கமே நிற்க வேண்டும். அதுவே அறம் . அதுவே தேவை !
Iyan Karthikeyan27,984 Aufrufe • vor 11 Tagen

01.11.2022-க்கு பிறகு ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். மேலும் அவர் பேசும் போது, “தற்போது 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.35, ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயுமாக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை ரூ.38 ஆக 05.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார் ஆனால், 05.11.2022 முதல் பசும்பால் கொள்முதல் விலை ரூ.32ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது. பிறகு ஊக்கத்தொகை ரூ.3 சேர்த்து 18.12.2023 முதல் பசும்பால் ரூ.35ல் இருந்து ரூ.38 ஆகவும், எருமை பால் ரூ.44ல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. 2021ல் விற்பனை விலையில் ரூ.3 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எந்த தேதியில் அரசு எந்த அறிவிப்பை வெளியிட்டது என தெரியாமல் பேசியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
Iyan Karthikeyan31,623 Aufrufe • vor 13 Tagen

நேரலையை நிறுத்த சொன்னாரா எ.வ.வேலு ? சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தனது உரையில் தவறான சொற்களை பயன்படுத்தியதாக நடந்த விவாதத்தில், சபாநாயகர் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கூற. இதுகுறித்து எ.வ. வேலு அவர்கள் பேசுகையில், மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால், காலதாமதமின்றி அந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார். விவாதத்தின் முழு காணொளி கீழே. கேரளத்தில் இருந்து ஒரு உருட்டு
Iyan Karthikeyan42,152 Aufrufe • vor 21 Tagen

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்பில் சிறப்பாகச் செயல்படும் காவலர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது, அதிமுக- ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலம் முதலே வழங்கப்பட்டு வருவதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், காவலர்களுக்கான இந்தச் சிறப்பு விருது 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்றும், தவறான தகவலை அமைச்சர் சட்டப்பேரவைப் பதிவில் இடம்பெறச் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார். இதோ ஆதாரம்..
Iyan Karthikeyan27,414 Aufrufe • vor 15 Tagen

ரீல்ஸ்-காக கண்டதையும் பேசாதீங்கணு சொல்றாரு போல ? மொத்த மானத்தையும் வாங்கிட்டார்..
Iyan Karthikeyan19,387 Aufrufe • vor 14 Tagen

இதை விட கேவலமான வேலை வேறில்லை. இப்படித்தான் பாலியல் குற்றத்திற்கு எதிராக போராடும் வீராங்கனைகள் , போராடி பின் சிரித்து மகிழ்வாக உள்ளதாக Face app மூலம் செய்து வெளியிட்டு வன்மத்தை கொட்டுகிறார்கள். கவனம் மக்களே! இப்படியான கீழான செயலைச் செய்வதற்காக செங்கோல் பெருமை?
Iyan Karthikeyan245,842 Aufrufe • vor 3 Jahren
