Iyan Karthikeyan's banner
Iyan Karthikeyan's profile picture

Iyan Karthikeyan

@Iyankarthikeyan119,535 subscribers

Former Mission Director, Fact check unit, Govt of Tamilnadu Ex - Editor-in-Chief, https://t.co/3EOIm9ebOg , Tedx Speaker,40 under Forty awardee by Edex.

Shorts

தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பேசி இருக்கிறார். ஆனால், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மாநிலத்தில் 360-க்கும் மேற்பட்ட GCC-க்கள் உள்ளன. இது இந்தியாவின் மொத்த GCC-க்களில் சுமார் 20%. 2019 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டில் IT மற்றும் GCC 69%-க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் சென்னையில் 125-க்கும் மேற்பட்ட புதிய GCC-கள் தொடங்கப்பட்டு, 94,121 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 60 புதிய GCC-கள் 2023-2024-ஆம் ஆண்டில் மட்டும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் முக்கிய GCC மையங்களில் ஒன்றாக சென்னையை ஒன்றிய அரசும் அடையாளப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 6,607 மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 7 TIDEL NEO மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் IT மற்றும் GCC “மிகவும் குறைவாக” இருப்பதாகக் கூறுவது பொய். அதை தொழில்துறை அமைச்சர் கூறுவது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. ஆதாரம் :

தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பேசி இருக்கிறார். ஆனால், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மாநிலத்தில் 360-க்கும் மேற்பட்ட GCC-க்கள் உள்ளன. இது இந்தியாவின் மொத்த GCC-க்களில் சுமார் 20%. 2019 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டில் IT மற்றும் GCC 69%-க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் சென்னையில் 125-க்கும் மேற்பட்ட புதிய GCC-கள் தொடங்கப்பட்டு, 94,121 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 60 புதிய GCC-கள் 2023-2024-ஆம் ஆண்டில் மட்டும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் முக்கிய GCC மையங்களில் ஒன்றாக சென்னையை ஒன்றிய அரசும் அடையாளப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 6,607 மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 7 TIDEL NEO மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் IT மற்றும் GCC “மிகவும் குறைவாக” இருப்பதாகக் கூறுவது பொய். அதை தொழில்துறை அமைச்சர் கூறுவது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. ஆதாரம் :

56,692 views

How they can literally lie ? Permission is between 3-10 . But why they misled public / fans. It’s man made.

How they can literally lie ? Permission is between 3-10 . But why they misled public / fans. It’s man made.

113,178 views

தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. பரப்பப்பபடும் வீடியோவில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் விஜயை பார்த்துக் கொண்டு முன்னால் இருந்த வாகனத்தை பார்க்காமல் செல்கின்றனர். அதில், ஒரு இரு சக்கர வாகனம் போலீஸ் வாகனம் அருகில் வந்து இடிக்காமல் தப்பித்து நகர்ந்து செல்கிறது. ஆனால், மற்றொருவர் போலீஸ் வாகனத்தை பார்க்காமல் இடித்ததில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வீடியோவில் போலீஸ் வாகனம் சாலையில் வாகனம் செல்லும் பகுதியில் நிற்கவில்லை, சாலை முடியும்(சர்வீஸ் பகுதியில்) நிற்பதை பார்க்கலாம். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். ஏற்கெனவே TN Fact Check விளக்கி பகிர்ந்தும் போலியான செய்தியை திட்டமிட்டு அமைதிக்கு குதங்கம் விளைவிக்கும் வகையில் பரப்புவது சட்டப்படி குற்றம்

தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. பரப்பப்பபடும் வீடியோவில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் விஜயை பார்த்துக் கொண்டு முன்னால் இருந்த வாகனத்தை பார்க்காமல் செல்கின்றனர். அதில், ஒரு இரு சக்கர வாகனம் போலீஸ் வாகனம் அருகில் வந்து இடிக்காமல் தப்பித்து நகர்ந்து செல்கிறது. ஆனால், மற்றொருவர் போலீஸ் வாகனத்தை பார்க்காமல் இடித்ததில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வீடியோவில் போலீஸ் வாகனம் சாலையில் வாகனம் செல்லும் பகுதியில் நிற்கவில்லை, சாலை முடியும்(சர்வீஸ் பகுதியில்) நிற்பதை பார்க்கலாம். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். ஏற்கெனவே TN Fact Check விளக்கி பகிர்ந்தும் போலியான செய்தியை திட்டமிட்டு அமைதிக்கு குதங்கம் விளைவிக்கும் வகையில் பரப்புவது சட்டப்படி குற்றம்

47,942 views

Videos

Iyankarthikeyan's profile picture

'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை. தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன. இது எங்க போய் முடியுமோ !

Iyan Karthikeyan

180,538 views • 4 days ago

Iyankarthikeyan's profile picture

சூட்டிங் ரோடு கதையும் Flop ! கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதிக்கு சூட்டிங் சென்ற போது பார்த்த சாலை இல்லாத கிராமத்துக்கு ஆட்சிக்கு வந்த உடனே சாலை போட நிதி ஒதுக்கியதாக அமைச்சர் ஆனந்த் பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, நீங்கள் சொல்வது தாண்டிக்குடி பஞ்சாயத்தில் உள்ள கூடல்நகர் கிராமம். அங்கு ஒப்பந்ததாரர் இறந்து விட்டார். அதனால், மறுடெண்டர் விடப்பட்டு பணி தொடங்கியுள்ளது. தி.மு.க ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தாண்டிக்குடியின் கூடல் நகர் கிராமத்தில் 3.82 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக சாலை அமைப்பதற்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் அடிக்கல் நாட்டி இருந்தார்.

Iyan Karthikeyan

138,240 views • 11 days ago

Iyankarthikeyan's profile picture

பொய்யை உண்மையாக்க இன்னொரு பொய் மார்ச் மாதம் அவர்கள் 37,413ரூ மின் கட்டணம் கட்டியதாகக் கூறுவது திரிக்கப்பட்டு உள்ளது. வீடியோவில், அப்பார்ட்மெண்ட் மின் இணைப்பில் இருந்த பிரச்சனையால் ஒரு வருடத்திற்கு விடுபட்ட அளவீடுக்காக மொத்தமாக கட்ட சொன்ன தொகையே 37,413ரூ என்று தெளிவாக கூறுகின்றனர். அதன் பிறகு இரண்டு மாதம் வந்த தொகை தான் மாதங்களுக்கானது. உண்மை எதுவென்று அளித்த விளக்கத்தை வைத்தே மீண்டும் வதந்தியை பரப்புறதுலா நெக்ஸ்ட் லெவல். உண்மையே பேசமாட்டிங்களா ? நீங்கள் விஐய் ரசிகராகவே இருந்தாலும் எதிர்த்து நியாயமான கேள்வி எழுப்பினால் வேட்டையாடப் படுவீர்கள் என சொல்கிறார்கள் சொத்து வரி , மின் கட்டணம் என பல நிர்வாக குளறுபடிகளை சரி செய்வது தான் தீர்வு , இப்படி பொய் மேல் பொய் சொல்வதும் அவதூறும் அல்ல இடிப்பாரே இல்லா மன்னன் போல மாறி தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டுவது தான் இவர்கள் செய்யும் வேலை . மக்கள் சிக்கலை தீர்க்காமல், என்னை விசாரிக்க உளவுத்துறையில் இருந்து அழைப்பு. விமர்சனம் வைத்தவுடன் அப்படி என்ன பயம் ?

Iyan Karthikeyan

131,892 views • 19 days ago

Iyankarthikeyan's profile picture

சின்னப்பிள்ளை அவர்கள் பற்றிய நேற்றைய உளறலுக்கு இன்று சட்டசபையில் விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா. ஆனால், அவர் இன்று பேசிய போது, 9 வருடத்துக்கு முன் தமிழ்நாட்டை விட்டு போன Suzlon Energy கம்பெனி திரும்ப முதலீடு செய்ய கொண்டு வந்ததாக பொய் சொல்லி உள்ளார். இதே நிறுவனம் 2016 முதல் 2026 வரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மின்சக்தி தொடர்பாக வெவ்வேறு பணிகளில் இயங்கியும், முதலீடும் செய்து வருகிறது. இதோ ஆதாரங்கள். 2016 - 2023 - 2025 - 2026 - இதேபோல், மே 10ம் தேதி தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்று கூறிய பொய்க்கும், ஆகஸ்ட் 22ம் தேதி விருதுநகரில் பேசும்போது தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக இருப்பதாக உதிர்த்த பொய்களுக்கும் நாளை சட்டமன்றத்தில் விளக்கமளிப்பீர்கள் என்று எதிர்பாக்கலாமா?

Iyan Karthikeyan

27,541 views • 5 days ago

Iyankarthikeyan's profile picture

நீங்க செய்யக் கூடாது... நாங்கதான் செய்வோம்! விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது, தாயிடமிருந்து பிள்ளையைப் பறிப்பது போல என்றார்கள். விவசாயிகளின் வயிற்றில் அடித்து வரும் எந்த வளர்ச்சியும் தேவையில்லை என்றார்கள். “வேறு இடத்தில் எப்படி விமான நிலையம் அமைப்பீர்கள்?” என்று கேட்டால், “விவசாயிகள் பாதிக்காத வகையில்தான் நாங்கள் எந்தத் திட்டமாக இருந்தாலும் செயல்படுத்துவோம்” என்று சொன்னார்கள். இன்று, ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சொன்னால், அதற்கு, “விவசாயிகளின் நிலத்தை எடுக்காமல் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வர முடியாது. உங்கள் பகுதியில் விமான நிலையம் வந்தால், உங்கள் பகுதி வளர்ச்சி அடையும்” என்கிறார்கள். என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்!

Iyan Karthikeyan

20,072 views • 4 days ago

Iyankarthikeyan's profile picture

01.11.2022-க்கு பிறகு ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். மேலும் அவர் பேசும் போது, “தற்போது 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.35, ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயுமாக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை ரூ.38 ஆக 05.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார் ஆனால், 05.11.2022 முதல் பசும்பால் கொள்முதல் விலை ரூ.32ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது. பிறகு ஊக்கத்தொகை ரூ.3 சேர்த்து 18.12.2023 முதல் பசும்பால் ரூ.35ல் இருந்து ரூ.38 ஆகவும், எருமை பால் ரூ.44ல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. 2021ல் விற்பனை விலையில் ரூ.3 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எந்த தேதியில் அரசு எந்த அறிவிப்பை வெளியிட்டது என தெரியாமல் பேசியுள்ளார் முதலமைச்சர் விஜய்.

Iyan Karthikeyan

31,623 views • 13 days ago