
Urimai Kalam TV
@Peruvazhuthiyar • 10,198 subscribers
அம்பேத்கரியம் 🔥🔥 பெரியாரியம்🔥🔥 மார்க்சியம்🔥🔥
Shorts
Videos

அன்றே கணித்தார் இளம்பெருவழுதி..✊️✊️✊️ "பிரியன் :- விசிக குறி வைத்து தாக்கப்படுகின்றது என்று நினைக்கின்றீர்களா? திருமா:- கட்டாயமாக அதில் நீங்களும் ஒருவர்" திமுகவின் வாடகை வாய்களுக்கு தலையிலேயே ஒரு குட்டு வைத்திருக்கின்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள். இது தேர்தலுக்கு முன்பாக நான் பதிவேற்றம் செய்த காணொளி.. பல நாட்களாகவே பத்திரிக்கையாளர் பிரியன் உட்பட, பல திமுகவின் வாடகை வாய்கள் இதுபோன்று தான் Narrative'களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சான்று..
Urimai Kalam TV37,909 Aufrufe • vor 18 Tagen

உங்களுக்கு கூசவில்லையா அண்ணா.?? நீங்கள் விஜய் அவர்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள் தவறு இல்லை. ஆனால் தலைவர் திருமாவளவன் அவர்கள் என்ன முடிவென்று அறிவிக்கும் முன்னரே, தலைவரை மீறி பொதுத்தளத்தில் ஒரு Negative Narrative Set செய்ய உங்களுக்கு கூசவில்லையா.?? மேலும் தன்னை MLA ஆக்கிய தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, சட்டமன்றத்தினுடைய கடைசி நாளில் நன்றி கூறாமல், மு.க.ஸ்டாலின் அவர்களுடைய துணைவியாருக்கு நன்றி சொன்ன பொழுது உங்களுக்கு நா கூசவில்லையா.??? கூச்சத்தை பற்றி நீங்கள் வகுப்பெடுப்பது தான் பெரும் ஆச்சரியமாக உள்ளது அண்ணா.??
Urimai Kalam TV47,010 Aufrufe • vor 1 Monat

"ஆட்டோ டிரைவர் MLA ஆகக்கூடாது... ஆட்டோ டிரைவர்'க்கு என்ன தெரியும்.??" என்று நடிகர் #பிரகாஷ்ராஜ் பேசியதுக்கு என்னைக்கு திமுக கொத்தடிமைகள் பயர் விட்டாங்களோ, அன்னைக்கே சனாதன வர்ணாசிரம கட்டமைப்பை எதிர்க்கும் தகுதியை திமுக இழந்துவிட்டது... சமூக நீதியை நிலை நாட்டுவதில் திமுக விட்ட gape எல்லாத்தையும் தவெக Fill பண்ணிட்டாங்க... மறுமுறை திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், "தவெக'வை விட கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அமைச்சரவை பகிர்ந்து அளிக்கின்றோம், அதிக சீட்டுகள் பகிர்ந்து அளிக்கின்றோம்" என்ற சமூக நீதிப் போட்டியை தான் திமுக இனி மேற்கொள்ள வேண்டுமே தவிர, வழக்கம்போல Rss கைக்கூலி என்று முத்திரை குத்தும் நமுத்து போன பொரியை பிரச்சாரமாக மேற்கொண்டால் திமுகவுக்கு எதிர்காலத்தில் சங்கு தான். - இரா.இளம்பெருவழுதி
Urimai Kalam TV29,669 Aufrufe • vor 1 Monat

அவ்வளவு சாதிவெறி.. " தொடர்ச்சியாக தலித் மக்களிடம் மட்டுமே அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டு போய் சேர்ப்பதை விட, பொது சமுதாய மக்களிடமும் அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்" இடம்:- கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி மேற்கு ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமம்.
Urimai Kalam TV298,268 Aufrufe • vor 1 Jahr

ஓ.. இதுக்கு தான் 🅰️ சான்றிதழ் கொடுத்தாங்களா... அடேய் செஞ்சித்.. 🤣🤣🤣
Urimai Kalam TV252,254 Aufrufe • vor 1 Jahr

விசிக சார்பாக பலமுறை புகார் அளித்திருக்கின்றோம். பல கட்ட போராட்டங்களையும் மேற்கொண்டு இருக்கின்றோம். அதிகாரிகள் வருவார்கள், ஆய்வுகள் செய்வார்கள், கடையை மூடுகின்றோம் என வாக்குறுதி அளிப்பார்கள் ஆனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தண்ணீரில் போட்ட கோலம் போல கரைந்து விடும். ஏன் இவர்கள் சாராயக்கடையை மூடவில்லை என்றால், இப்பகுதியின் பார்கள் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆதலால் தான் சாராயக்கடைகளை மூடுவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இன்று மூடப்பட்ட 717 கடைகளில் எங்கள் பகுதியியுடைய சாராயக்கடையும் ஒன்று. மிக்க நன்றிகள் முதல்வர் அவர்களே.. விரைவில் மீதம் இருக்கும் மூன்று சாராயக்கடைகளையும் அகற்றுவார் என நம்புகின்றோம். குறிப்பு:- அருகில் தான் பாத்திமா பெண்கள் மகளிர் கல்லூரி உள்ளது.
Urimai Kalam TV24,926 Aufrufe • vor 1 Monat

எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் - காவல்துறை திருநெல்வேலியை சார்ந்த செல்வம் என்ற மாணவன் தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 13.02.2025 அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இருந்து கடந்துள்ளார். காவல்துறை மருத்துவமனையில் உடலை சேர்த்ததற்கு பின், மாணவன் இறந்த கிடந்த இடத்தை பெற்றோர்களிடம் காண்பித்த பொழுது, "ஏன் இவ்வளவு ரத்தம் சிந்தி இருக்கின்றது" என்று பெற்றோர்கள் கேட்டதற்கு எறும்பு கடித்திருக்க கூடும் என்று பதில் கூறியுள்ளார். எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் எவ்வாறு வெளிவரும்.?? உலகத்தில் யாருமே ஒரு இறப்புக்கு இது போன்ற காரணத்தை கூறி இருக்க மாட்டார்கள். எறும்பு கடித்திருந்திருக்க கூடும் என்று காவல்துறை முந்திக்கொண்டு ஒரு காரணத்தை கூறுகின்றார் என்றால், அந்த குறிப்பிட்ட காவல் அதிகாரி எந்த உண்மையை மறைக்க நினைக்கின்றார்.?? யாரை காப்பாற்ற நினைக்கின்றார்.?? என்ற பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் இறந்து கிடந்த செல்வத்தினுடைய காதுகளில் ரத்தம் வழிந்து இருக்கின்றது. உடலில் கீறல்கள் இருந்திருக்கின்றது. ஆசனவாய் பகுதியில் ரத்தம் உறைந்து இருக்கின்றது என்று பெற்றோர்கள் கூறுகின்றார்கள். மேலும் உடலை உடல்கூறாய்வு செய்யும் பொழுது வீடியோ காட்சி பதிவு செய்ய வேண்டுமெனவும், சிபிசிஐடி'க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.
Urimai Kalam TV157,619 Aufrufe • vor 1 Jahr

பாதிக்கப்பட்டவன் கேட்க தான் செய்வான்.. 🔥🔥🔥 அதுக்கு ஏன் சார் கத்துறீங்க..
Urimai Kalam TV53,169 Aufrufe • vor 5 Monaten

இவர் கூறியவாறு இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முன்பாக வேங்கவயல் செய்தி வெளியான போது Roots தமிழ் youtube சேனலில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் இருந்த Roots தமிழ் லோகோ தெரியாதவாறு ஜூம் செய்துதான் தற்பொழுது புதிய வீடியோ போன்று இந்த வீடியோவை ஆதாரம் என்னும் பெயரில் வெளியிடுகின்றார்கள். (பழைய வீடியோ:- அந்த பழைய வீடியோவை புது வீடியோ போல பிரேக்கிங் நியூஸ் செய்தியாக வெளியிடுவதன் மூலம், பொதுச் சமுதாய மக்களிடம் ஒரு Narrative Set செய்து, அதன் மூலம் இயல்பாகவே அவர்களிடம் இருக்கும் சாதி உணர்வை சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்த முயல்கின்றார்கள்.
Urimai Kalam TV127,296 Aufrufe • vor 1 Jahr

100k Subscribers.. 💙❤️ அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தம் திருத்தமாக வளர்வோம்..
Urimai Kalam TV64,112 Aufrufe • vor 8 Monaten

வேங்கைவயல் மரணம் அரச பயங்கரவாதம்... செத்துப்போன பிணத்திற்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட உறவினர்களை காவல்துறை வேங்கை வயலுக்குள் அனுமதிக்கவில்லையாம்... அதனால் பிணத்தை ரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றார்கள். சமத்துவம், சமூகநீதி பேசிய தமிழ்நாட்டு மண்ணில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா.?? முள்ளிவாய்க்காலை சூழ்ந்த சிங்களப் படையைப் போல, மாற்றான் தாய் மனப்போக்குடன் வேங்கவயலை சூழ்ந்துள்ளது தமிழ்நாட்டு காவல் படை. அப்பட்டமான அரசு பயங்கரவாதம்..
Urimai Kalam TV103,687 Aufrufe • vor 1 Jahr