Indra Kumar Theradi's banner
Indra Kumar Theradi's profile picture

Indra Kumar Theradi

@THE_INDRA_KUMAR16,922 subscribers

Living Being...

Shorts

"சனாதன தர்மப்படி எனக்குத் தெரிஞ்சு வாழக்கூடிய ஒரு மனுஷன் எந்தத் தப்புமே செஞ்சிருக்கவே முடியாதே" - மாண்புமிகு நீதிபதி ஜி ஆர். சாமிநாதன் அவர்கள் Watch full video at "தினமலர்":

"சனாதன தர்மப்படி எனக்குத் தெரிஞ்சு வாழக்கூடிய ஒரு மனுஷன் எந்தத் தப்புமே செஞ்சிருக்கவே முடியாதே" - மாண்புமிகு நீதிபதி ஜி ஆர். சாமிநாதன் அவர்கள் Watch full video at "தினமலர்":

155,967 görüntüleme

நயினார் ஜீ உங்களுக்கு ஆன்மீகம் செட் ஆவல 😂 "தொல்காப்பியத்தில் பத்துப்பாட்டு இருக்கிறது. அதில் முதல் பாட்டு நக்கினாரால் நக்கீரனால் எழுதப்பட்டது. திருமுருகாற்றுப்படை" உங்களுக்கு எதாவது புரியிதா? That சேக்கிழார் எழுதிய கம்பராமாயண moment for Nainar Nagenthiran

நயினார் ஜீ உங்களுக்கு ஆன்மீகம் செட் ஆவல 😂 "தொல்காப்பியத்தில் பத்துப்பாட்டு இருக்கிறது. அதில் முதல் பாட்டு நக்கினாரால் நக்கீரனால் எழுதப்பட்டது. திருமுருகாற்றுப்படை" உங்களுக்கு எதாவது புரியிதா? That சேக்கிழார் எழுதிய கம்பராமாயண moment for Nainar Nagenthiran

84,404 görüntüleme

Videos

THE_INDRA_KUMAR's profile picture

எதிர்க்கட்சித் தலைவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு. அதில் 3 மட்டுமே சர்சைக்குரிய வகையில் நடிகை குறித்துப் பேசியதாகச் சொல்லப்படுவதற்குப் பொருந்துகிறது. மீதமுள்ள 6 பிரிவுகளும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்நாடக அரசைக் கண்டித்தும் தமிழ்நாட்டுத் தவெக அரசின் செயலின்மையைக் கண்டித்தும் பேசியதற்காகப் போடப்பட்டுள்ள பிரிவுகள். இவை 6 பிரிவுகளும் குறிப்பிட்ட பெண் அல்லது சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பானவை அல்ல. தவெகவின் பைரவி கொடுத்த புகாரிலும் இப்பிரிவுகளுக்கான முகாந்திரம் இல்லை ஆகவே கைது முன்னரே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகிறது. பெண்களுக்கு எதிரான பேச்சு என்ற செய்தி முதன்மைப்படுத்தப்படுவது, இதிலிருந்து பொதுச்சமூகத்தையும் பிற கட்சியினரையும் பேசவிடாமல் தள்ளி வைப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது. அவ்வாறு பேசியிருக்கத் தேவையில்லை எனும் போது அதற்கான கைது மிக மிக அராஜகமானது. ஆனால் கைதுக்கான வழக்குப் பிரிவுகள் நடைபெற்ற கைது அவர் காவிரி உரிமை கேட்டு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசை நோக்கிய கண்டனப் பேச்சுக்கானது என்பதை உறுதிப்படுத்தவே செய்கிறது.

Indra Kumar Theradi

54,459 görüntüleme • 3 gün önce

THE_INDRA_KUMAR's profile picture

கலைஞரின் கடைசிக் காலத்தைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? கலைஞரின் கடைசி நாட்களில் இப்படி ஒரு மகன் யாருக்கும் கிடைக்கமாட்டான் என்று மொத்தத் தமிழ்நாடும் ஏங்கும்படி அப்படி ஒரு மகனாக நின்று அவரைப் பார்த்துக்கொண்டார் ஸ்டாலின் அவர்கள். அவரைப் பற்றிப் பேச எடப்பாடிக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஒவ்வொரு நாளும் கலைஞருக்கு நடக்கும் சிகிச்சை அத்தனையும் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. சிறைவைக்கப்பட்டாராம். உங்கள் தலைவருக்கு நீங்கள் செய்த துரோகத்தை யாரும் மறக்கவில்லை எடப்பாடியாரே. கலைஞரின் கடைசிக் காலத்தில் அவர் உடல் நலமில்லாத நிலையிலும் முரசொலிக்குச் செல்ல ஆசைப்பட்டார் என்பதற்காக கண்காட்சி வைத்து கலைஞர் அழைத்துச் சென்றவர் ஸ்டாலின்! தமிழ்நாடுள்ளவரை தமிழன் உள்ளவரை மானத்தோடு வாழ்வதற்காக கலைஞர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் சண்டை செய்யும் போராளி ஸ்டாலின்! உங்களைப் போல அம்மையார் ஜெயலலிதா வாக்குறுதியை காற்றிலே பறக்கவிடவில்லை. கலைஞர் இறந்த பிறகு ஒரே ஒரு முறை உங்களை அப்பா என்று அழைத்துக்கொள்கிறேன் தலைவரே என்று அன்றைய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம் இன்றும் நெஞ்சை உருக்கும். கோடிக்கணக்கான தொண்டர்கள் இரவுபகல் பாராமல் காவேரி மருத்துவமனை வாசலிலே முழங்கிய முழக்கங்கள் இன்னும் காதுக்குள்ளேயே ஒலிக்கின்றது. "வா வா தலைவா", "எழுந்து வா தலைவா" என்று முழங்கிய படி கண்களிலே நீர் தேங்கியபடி நின்ற அந்தக் கூட்டத்திலே உணர்ச்சியை அடக்க முடியாமல் நின்றவன் என்ற வகையில் அங்கே இருந்த உணர்வை விவரிக்கக்கூட முடியவில்லை. அத்தனை உணர்ச்சிகரமானது. நல்ல அடக்கம் நடத்தக்கூட உங்கள் அரசாங்கம் அனுமதி தரவில்லை என்பதையும் கடைசி வரை நீதித்துறையிலே போராடி அவரது அடக்கத்தளத்தை வென்றார் என்பதையும் தமிழ்நாடு உள்ளவரை தமிழன் என்றோர் இனம் உள்ளவரை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழினத் துரோகி எடப்பாடி. #StayStrongStalin

Indra Kumar Theradi

39,679 görüntüleme • 4 ay önce

THE_INDRA_KUMAR's profile picture

திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் தோழர் S.M.Mathivadhani அவர்கள் பேசிய பேச்சை வெட்டி ஒட்டி தவறாகச் சித்தரித்துப் பரப்புகின்றனர் சிலர். எளிய மனிதர்களுக்கு எதிராக அவர் பேசியது போல ஒரு பொய்யைக் கட்டமைக்கின்றனர். அவர் எளியவர்களுக்கு எதிரால எதுவும் பேசவில்லை. மாறாக 1967இலேயே எளியவர்கள் சட்டமன்றம் சென்றுவிட்டனர் என்று சில வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கிறார். நாம் எளியோர் செல்வதை வரவேற்கிறோம். ஆனால் எதுவும் (எளிய மக்களைப் பற்றியோ மாநிலத்தின் வரலாறு பற்றியோ உரிமைகளை வென்ற முறை பற்றியோ) தெரியாதவர்கள் சட்டமன்றம் சென்றதை வருத்தத்தோடு சொல்கிறாரே தவிர எளியவர்கள் செல்லக்கூடாது என்று சொல்லவில்லை. மேலும் ஹண்டேவுக்கும் கலைஞருக்கும் நடந்த சட்டமன்ற விவாதம் பற்றி விவரித்தார். இந்த இரண்டையும் விளக்கங்களைக் கத்தரித்துவிட்டு அவர் எளியோரை அவமரியாதை செய்ததாகப் பரப்புவது மோசடி. அயோக்கியத்தனம். ஒரு பெண் தவெகவினரை நோக்கிச் சில கேள்விகளை எழுப்பினால் வருகின்ற எதிர்வினைகள் தொடர்ந்து தரந்தாழ்ந்ததாகவே இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தோழர் மதிவதனி மிகக் கண்ணியமாக தனது கருத்துகளை எடுத்துரைக்கிறார். சமகாலத்தில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த அரிய சொத்து தோழர் மதிவதனி. அவருக்கு நாகரிகமாக, கண்னியமாக் பதிலளிக்க முடியாதவர்கள் அதனை வெட்டி ஒட்டி அவதூறு பரப்பி வருகின்றனர். #StandWithMathivadhani அவரது பேச்சு முழுவதுமாக புதிய தலைமுறை ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள்ளது. இணைப்பு:

Indra Kumar Theradi

14,925 görüntüleme • 1 ay önce

THE_INDRA_KUMAR's profile picture

'மாண்பு'மிகு 'நீதி'பதி ஜி.ஆர்.சாமிநாதன் 'அவர்'கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கூடாது? 1) சனாதனி தவறிழைக்க மாட்டான் என்ற முன் யோசனை மற்றும் சிந்தனைத் தடை. 2) குடுமி வைத்திருந்ததால் 6 மாதங்களுக்கு பதில் 18 மாதங்கள் தண்டனை கொடுத்தார் என்று இன்னொரு நீதிபதியின் மீது குற்றம் சும்த்தி, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தல். 3) தான் காப்பாற்ற முயற்சிக்கும் மனுதாரரின் மேல்முறையீட்டை அவரது நண்பரே விசாரித்தது, அதனை நல்லவேளை என்று சொன்னது. 4) வேதத்தை நாம் காப்பாற்றினால் வேதம் நம்மைக் காக்கும். இந்தக் கருத்துகள் எல்லாம் நீதிமன்றத்தின் மாண்புகளை எந்த வகையில் காக்கின்றன என்பதை மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு கவாய் அவர்கள் பதிலளிப்பாரா? அல்லது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பாரா? வழக்கறிஞர் மீதான தனிப்பட்ட வன்மத்துடன் நடந்த்கொள்வதை வன்மையாகக் கண்டித்து நீதித்துறை தனது மாண்பைக் காக்குமா? #westandwithvanjinathan

Indra Kumar Theradi

22,575 görüntüleme • 1 yıl önce

Daha fazla içerik yok.