
வைரமுத்து
@Vairamuthu • 503,096 subscribers
கவிஞர் - பாடலாசிரியர்
Shorts
Videos

கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும் “அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல் நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும் என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும் காடு அதிரட்டும் களிறே பிளிறு” Kamal Haasan
வைரமுத்து51,826 Aufrufe • vor 6 Monaten

இத்தாலியில் இருக்கிறேன் மிலன் நகரத்தில் ஒரு ஜப்பானிய உணவகம் சென்றிருந்தேன் உணவைக் கேளிக்கை மிக்க வேடிக்கை ஆக்கியிருக்கிறது அந்த உணவகம் உங்கள் முன்னால் இருக்கும் உணவு மேஜை ஒரு வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் அதில் பல்வகை உணவுகள் உங்களைக் கடந்து கடந்து போகும் ஆட்டிறைச்சி உரித்த கோழி பன்றியின் செவ்விறைச்சி இறால் ஐரோப்பியக் கீரைகள் கலவைக் காய்கறிகள் கேக் துண்டுகள் பச்சை மீன்கள் பாலாடைக் கட்டிகள் உங்கள் கைகளுக்கருகே சுற்றிக்கொண்டே போகும் பிடித்ததை எடுத்துப் புசிக்கலாம் உணவைத் தேடி மனிதன் சுற்றியது வேட்டை யுகம் உணவை மனிதனே உற்பத்தி செய்தது வேளாண் யுகம் உணவு மனிதனையே சுற்றிவருவது தொழில்நுட்ப யுகம் இனி உணவும் உண்ணுதலும் என்னென்ன வடிவுறுமோ?
வைரமுத்து74,339 Aufrufe • vor 2 Jahren

சோத்துப்பாறை போயிருந்தேன் நீர்த்தேக்கத்தின் நீரோசை கேட்டேன் அந்த ஓசை என்னை என்னென்னவோ செய்தது கவிஞன் என்ற கர்வத்தைக் கழுவி முடித்தது மூளைக்குள் ஒட்டியிருந்த ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது என்னைப் பாதி மரணத்திற்குப் பழக்கப் படுத்தியது அதன் கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன் ஒரு மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் தன்னையே நினைத்துக் கொண்டிருத்தல் தவறு; நித்தம் ஒருபொழுதேனும் நினைவொழிய வேண்டும் காலியாகாத பாத்திரத்தில் புதியதை நிரப்ப முடியாது தன்னை மறந்து தன் நாமம் கெட்டுக் காலம் கடந்து கருத்தழிய வேண்டும் அந்த ஓசை அப்படியோர் உபாசனை செய்தது அதுவொரு மன மருத்துவம் அதை எதிர்பார்த்துச் செல்லவில்லை; ஆனால் அது நேர்ந்தது அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை; சுண்டுவிரல் மட்டும் சொர்க்கத்தில் நுழைந்துவந்த அனுபவம் எதில் வேண்டுமானாலும் இது நேரலாம் சிறு தூறலின் சிணுங்கலில், வானவில் துண்டில், கடக்கும் மேகங்களின் உருவ மாற்றத்தில், இருளின் ஆழ்கடலில், முதல் வெளிச்சத்தின் முணுமுணுப்பில், உதிரும் சருகில், அதிரும் பூமியில் இது நேரலாம் எனக்கு நீரோசையில் நேர்ந்தது நேற்று கொஞ்ச நேரம் இறந்து பிறந்தேன் இன்று எனக்கு வயது ஒருநாள்
வைரமுத்து30,340 Aufrufe • vor 9 Monaten

ஐதராபாத்தில் இருக்கிறேன் ஜென்டில்மேன் 2 படத்திற்கான பாடல் புனைவு நடந்து கொண்டிருக்கிறது கே.டி.குஞ்சுமோனுக்கு வாக்களித்தபடி இந்த வாரம் மொத்தப் பாடல்களையும் முடித்துக்கொடுப்போம் கீரவாணியின் இசைக்கு வயது 20 நம் தமிழுக்கு வயது 18 காத்திருங்கள் ஒரு கலக்குக் கலக்கும் பாருங்கள் mmkeeravaani | K.T.Kunjumon Gentleman Film International | A.Gokul Krishna #Gentleman2
வைரமுத்து73,827 Aufrufe • vor 3 Jahren

முத்தமிழறிஞரே! முதல் தமிழாசானே! ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலை உங்கள் நினைவிடம் சேர்க்கிறேன்; நெஞ்சு நிறைகிறேன் அப்பாவின் சட்டையை அணிந்துகொள்ள ஆசைப்படும் குழந்தையைப்போல நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு நானும் எழுதியிருக்கிறேன் உரையாசிரியர் பட்டியலில் சேர்வதைவிட உங்கள் வரிசையில் சேர்வதில் உள்ளம் கசிகிறேன் வணங்குகிறேன்; என் பிறந்தநாளில் வாழ்த்துங்கள் என்னை #தமிழ் | #கலைஞர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை
வைரமுத்து33,952 Aufrufe • vor 1 Jahr

திருக்குறள் உரை தலைப்பு அறிவிப்பு #திருக்குறள் | #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை
வைரமுத்து29,857 Aufrufe • vor 1 Jahr

நேற்று என் பிறந்தநாள் கவிஞர் தோட்டம் நிகழ்விடமனது என்ன அன்பு எவ்வளவு ஆசை அழைப்பிதழ் தயாரிக்காத போதே பிதுக்கி எடுத்தது பெருங்கூட்டம் பழ.புகழேந்திக்குக் கவிஞர்கள் திருநாள் விருது ரூபாய் 25ஆயிரம் நலிவுற்ற குடும்பத்து மாணவர் ஐவருக்கு ஒரு லட்சம் கல்வித்தொகை பெரியகுளம் நூற்றாண்டு நூலகத்துக்கு ஒரு லட்சம் தொண்டுத் தொகை பொருள் பெற்றோர் புன்னகையை விடவும் பொருள் ஒன்றும் உயர்ந்ததில்லை தமிழ்கொடுத்த பொருளைத் தமிழர்க்குத் தருகிறோம் இவ்வுறவை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்!
வைரமுத்து35,415 Aufrufe • vor 2 Jahren

அவர் ஒரு சீனப் பெண் இயற்பெயர் கிகி ஜாங்; தமிழ் படித்துச் சூடிக்கொண்ட பெயர் நிறைமதி; வகிக்கும் தொழில் யுனான் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் ”வள்ளுவர் மறை வைரமுத்து உரை” அனுப்பி வைத்தேன் ஆகா! படித்துவிட்டு அந்தச் சீனக் கிளி குயில்மொழியில் கூவியிருக்கிறது கேட்கக் கேட்க இருதயமே இனிப்பின் உறுப்பாய் மாறிவிடுகிறது நீங்களும் கேளுங்களேன்; கேட்டுச் சொல்லுங்களேன்
வைரமுத்து16,665 Aufrufe • vor 11 Monaten

ஒரு மகாகவி ஜனிப்பது சதைவழிப்பட்ட புழைவழியல்ல காலம் தன்னை யுகம்செய்துகொள்ள ஒருவனைத் தட்டித் தட்டித் தயாரிக்கிறது அவனை வறுமையால் ஆசீர்வதிக்கிறது சனாதனத்தின்மீது மீசைவைக்கிறது நூற்றாண்டுப் புழுக்கத்தில் நுரையீரைலைப் பட்டினியிடுகிறது சாப்பாட்டைப் பறித்து சாம்ராஜ்யத்தோடு சண்டையிடச் செய்கிறது முக்காலம் இருள்செய்து மூளைக்குள் சூரியன் வைக்கிறது ராஜசபைகளில் மொழிபயிற்றிப் பாமரவெளியில் பாடச்செய்கிறது ஏதேனுமொரு தீயில் இட்டு இட்டுச் சுட்டுச் சுட்டுத் தங்கம்தான் என்று சான்றளிக்கிறது தெருவைத் திரட்டி அவமதிக்கச் செய்கிறது தேசத்தையே கூட்டி அஞ்சலிக்கச் சொல்கிறது ஆயுளைப் பறிக்கிறது புகழைத் திணிக்கிறது மண்ணுக்குள் புதைத்து மகாகவி ஆக்குகிறது அவன் அக்கிரகாரத்தான் என்றுசிலர் அலட்சியம் செய்யாதீர்; சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று சகலரும் கொண்டாடுவீர் வாழ்க பாரதி! #பாரதியார் | #Bharathiyar
வைரமுத்து10,814 Aufrufe • vor 8 Monaten

மலைவாழ் பழங்குடி மக்களின் துயரப் பாடலொன்று காட்டுமுள் கிழித்த மாமிசத்தில் வழியும் இரத்தம் தேவா உயிர்கலந்து பாடினார் ஒலிப்பதிவில் உடனிருந்தேன் பாலசுப்ரமணியம் இசை தமிழ் தயாளன் இயக்கம் "மா மலையே - எங்க மலைச் சாமியே ஓம் மடியில் - எங்க உசுரு கெடக்குதே இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல - உள்ள முள்ளு பழுக்குமா?" இந்த ஒலிப்பதிவின் ஒளிப்பதிவு உங்கள் கலைக் கண்களுக்கு Balasubramanian G | #TamilDhayalan
வைரமுத்து21,223 Aufrufe • vor 2 Jahren