வைரமுத்து's banner
வைரமுத்து's profile picture

வைரமுத்து

@Vairamuthu503,096 subscribers

கவிஞர் - பாடலாசிரியர்

Shorts

ஞானபீட விருதை முன்னிட்டு திருமதி சசிகலா அவர்கள் இல்லம் வந்து வாழ்த்துரைத்தார்; புன்னகை மணக்கும் பூச்செண்டு தந்தார் நறுந்தேநீர் தந்தோம்; பருகினார் நெடுநேரம் உரையாடினோம்; பழங்கதை பகிர்ந்தார்; ஊடறுக்காமல் உள்வாங்கிக்கொண்டேன் முதல்சந்திப்பு போல் அல்லாமல் முப்பதாண்டு உறவுபோல் விடைகொண்டார் வாஞ்சையோடு வழியனுப்பினேன் V K Sasikala

ஞானபீட விருதை முன்னிட்டு திருமதி சசிகலா அவர்கள் இல்லம் வந்து வாழ்த்துரைத்தார்; புன்னகை மணக்கும் பூச்செண்டு தந்தார் நறுந்தேநீர் தந்தோம்; பருகினார் நெடுநேரம் உரையாடினோம்; பழங்கதை பகிர்ந்தார்; ஊடறுக்காமல் உள்வாங்கிக்கொண்டேன் முதல்சந்திப்பு போல் அல்லாமல் முப்பதாண்டு உறவுபோல் விடைகொண்டார் வாஞ்சையோடு வழியனுப்பினேன் V K Sasikala

38,759 Aufrufe

Videos

Vairamuthu's profile picture

இத்தாலியில் இருக்கிறேன் மிலன் நகரத்தில் ஒரு ஜப்பானிய உணவகம் சென்றிருந்தேன் உணவைக் கேளிக்கை மிக்க வேடிக்கை ஆக்கியிருக்கிறது அந்த உணவகம் உங்கள் முன்னால் இருக்கும் உணவு மேஜை ஒரு வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் அதில் பல்வகை உணவுகள் உங்களைக் கடந்து கடந்து போகும் ஆட்டிறைச்சி உரித்த கோழி பன்றியின் செவ்விறைச்சி இறால் ஐரோப்பியக் கீரைகள் கலவைக் காய்கறிகள் கேக் துண்டுகள் பச்சை மீன்கள் பாலாடைக் கட்டிகள் உங்கள் கைகளுக்கருகே சுற்றிக்கொண்டே போகும் பிடித்ததை எடுத்துப் புசிக்கலாம் உணவைத் தேடி மனிதன் சுற்றியது வேட்டை யுகம் உணவை மனிதனே உற்பத்தி செய்தது வேளாண் யுகம் உணவு மனிதனையே சுற்றிவருவது தொழில்நுட்ப யுகம் இனி உணவும் உண்ணுதலும் என்னென்ன வடிவுறுமோ?

வைரமுத்து

74,339 Aufrufe • vor 2 Jahren

Vairamuthu's profile picture

சோத்துப்பாறை போயிருந்தேன் நீர்த்தேக்கத்தின் நீரோசை கேட்டேன் அந்த ஓசை என்னை என்னென்னவோ செய்தது கவிஞன் என்ற கர்வத்தைக் கழுவி முடித்தது மூளைக்குள் ஒட்டியிருந்த ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது என்னைப் பாதி மரணத்திற்குப் பழக்கப் படுத்தியது அதன் கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன் ஒரு மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் தன்னையே நினைத்துக் கொண்டிருத்தல் தவறு; நித்தம் ஒருபொழுதேனும் நினைவொழிய வேண்டும் காலியாகாத பாத்திரத்தில் புதியதை நிரப்ப முடியாது தன்னை மறந்து தன் நாமம் கெட்டுக் காலம் கடந்து கருத்தழிய வேண்டும் அந்த ஓசை அப்படியோர் உபாசனை செய்தது அதுவொரு மன மருத்துவம் அதை எதிர்பார்த்துச் செல்லவில்லை; ஆனால் அது நேர்ந்தது அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை; சுண்டுவிரல் மட்டும் சொர்க்கத்தில் நுழைந்துவந்த அனுபவம் எதில் வேண்டுமானாலும் இது நேரலாம் சிறு தூறலின் சிணுங்கலில், வானவில் துண்டில், கடக்கும் மேகங்களின் உருவ மாற்றத்தில், இருளின் ஆழ்கடலில், முதல் வெளிச்சத்தின் முணுமுணுப்பில், உதிரும் சருகில், அதிரும் பூமியில் இது நேரலாம் எனக்கு நீரோசையில் நேர்ந்தது நேற்று கொஞ்ச நேரம் இறந்து பிறந்தேன் இன்று எனக்கு வயது ஒருநாள்

வைரமுத்து

30,340 Aufrufe • vor 9 Monaten

Vairamuthu's profile picture

ஒரு மகாகவி ஜனிப்பது சதைவழிப்பட்ட புழைவழியல்ல காலம் தன்னை யுகம்செய்துகொள்ள ஒருவனைத் தட்டித் தட்டித் தயாரிக்கிறது அவனை வறுமையால் ஆசீர்வதிக்கிறது சனாதனத்தின்மீது மீசைவைக்கிறது நூற்றாண்டுப் புழுக்கத்தில் நுரையீரைலைப் பட்டினியிடுகிறது சாப்பாட்டைப் பறித்து சாம்ராஜ்யத்தோடு சண்டையிடச் செய்கிறது முக்காலம் இருள்செய்து மூளைக்குள் சூரியன் வைக்கிறது ராஜசபைகளில் மொழிபயிற்றிப் பாமரவெளியில் பாடச்செய்கிறது ஏதேனுமொரு தீயில் இட்டு இட்டுச் சுட்டுச் சுட்டுத் தங்கம்தான் என்று சான்றளிக்கிறது தெருவைத் திரட்டி அவமதிக்கச் செய்கிறது தேசத்தையே கூட்டி அஞ்சலிக்கச் சொல்கிறது ஆயுளைப் பறிக்கிறது புகழைத் திணிக்கிறது மண்ணுக்குள் புதைத்து மகாகவி ஆக்குகிறது அவன் அக்கிரகாரத்தான் என்றுசிலர் அலட்சியம் செய்யாதீர்; சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று சகலரும் கொண்டாடுவீர் வாழ்க பாரதி! #பாரதியார் | #Bharathiyar

வைரமுத்து

10,814 Aufrufe • vor 8 Monaten