Aadhav Arjuna's banner
Aadhav Arjuna's profile picture

Aadhav Arjuna

@AadhavArjuna90,708 subscribers

Cabinet Minister, Govt. of TN| GS (Election Campaign Management)@tvkvijayhq| MLA, Villivakkam| President @BFI_basketball |GS @TNOA_Offi |Founder @thevocofficial

Shorts

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு விஜய் இருக்கும்வரையில் எக்கொடி பறந்தாலும் சரி, வெற்றிக்கொடி நமதே!

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு விஜய் இருக்கும்வரையில் எக்கொடி பறந்தாலும் சரி, வெற்றிக்கொடி நமதே!

62,719 views

மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும். ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது. இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல். எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம். கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்! இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். "இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.

மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும். ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது. இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல். எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம். கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்! இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். "இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.

48,805 views

Videos

AadhavArjuna's profile picture

டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது. அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும். இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும். மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும். எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும். Let the battle to reclaim the people's power begin!

Aadhav Arjuna

302,094 views • 3 months ago

AadhavArjuna's profile picture

திருவாரூர் தங்களோட கோட்டை, தாமே அதன் மன்னர்கள், தமது வாரிசுகளே அதன் இளவரசர்கள் என நினைத்துக்கொண்டு மக்களை அடிமைகளாக நினைத்து அதிகாரம் செய்து வந்தது திமுக தலைமை குடும்பம். அந்த குடும்பத்தின் பிரதிநிதிகளாக தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு இந்த திருவாரூர் மண்ணின் பண்ணையார்களாகப் பவனி வந்தவர்களுக்கு எதிராக, மக்கள் தலைவர் திரு. விஜய் அவர்கள் மீது கொண்ட அன்பாலும் நம்பிக்கையாலும் தன்னெழுச்சியாக திரண்டார்கள் மக்கள். மக்களின் புதிய எழுச்சியும், மக்கள் தலைவரின் பிரசாரமும் வரும் தேர்தலில் அந்த மன்னர்களின் மகுடத்திற்கே ஆபத்தாக மாறியதைக் கண்டு அவர்களை பதற வைத்துள்ளது. இனி, திருவாரூர் என்றாலே தேருக்குப் பிறகு வெற்றித் தலைவரின் பிரசாரத்தில் மக்கள் காட்டிய எழுச்சியையே வரலாறு பேசும்!

Aadhav Arjuna

145,031 views • 8 months ago