Arappor Iyakkam's banner
Arappor Iyakkam's profile picture

Arappor Iyakkam

@Arappor106,276 subscribers

Official Twitter id of Arappor Iyakkam

Shorts

சாலை உயரம் தமிழ்நாட்டின் அவமானம். டெண்டர் செட்டிங் செய்து கமிஷன் அடிப்பதற்காக, திமுக அதிமுக ஆட்சிகளில் ஈவு இரக்கமற்று, உயரங்களை அதிகரித்து போடப்பட்ட சாலைகளால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம். மக்கள் உழைத்து சம்பாதித்து கடன் வாங்கி கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளி அந்த வீடுகளை பயனற்றதாக மாற்றிய குற்றத்திற்கு தமிழக அரசுக்கு என்ன தண்டனை? மீண்டும் சாலைகளை பழைய உயரத்திற்கு கொண்டு வருவீர்களா? அல்லது அந்த வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி கொடுப்பீர்களா? என்ன செய்ய போகிறது தமிழக அரசு? இனி தவெக ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் பழைய சாலை மட்டத்தை விட குறைத்து போடுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில்? CMOTamilNadu TVK Vijay Aadhav Arjuna Madurai Corporation

சாலை உயரம் தமிழ்நாட்டின் அவமானம். டெண்டர் செட்டிங் செய்து கமிஷன் அடிப்பதற்காக, திமுக அதிமுக ஆட்சிகளில் ஈவு இரக்கமற்று, உயரங்களை அதிகரித்து போடப்பட்ட சாலைகளால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம். மக்கள் உழைத்து சம்பாதித்து கடன் வாங்கி கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளி அந்த வீடுகளை பயனற்றதாக மாற்றிய குற்றத்திற்கு தமிழக அரசுக்கு என்ன தண்டனை? மீண்டும் சாலைகளை பழைய உயரத்திற்கு கொண்டு வருவீர்களா? அல்லது அந்த வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி கொடுப்பீர்களா? என்ன செய்ய போகிறது தமிழக அரசு? இனி தவெக ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் பழைய சாலை மட்டத்தை விட குறைத்து போடுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில்? CMOTamilNadu TVK Vijay Aadhav Arjuna Madurai Corporation

120,310 views

சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? TVK Vijay N Anand TVK Party HQ GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Corporation Greater Chennai Traffic Police CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Chief Minister's Special Cell Tamil nadu

சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? TVK Vijay N Anand TVK Party HQ GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Corporation Greater Chennai Traffic Police CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Chief Minister's Special Cell Tamil nadu

47,770 views

பழைய சாலைக்கும் புதிய சாலைக்கும் இருக்கும் உயர வித்தியாசத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். அரசாங்கம் இப்படித்தான் சாலையை உயர்த்துவார்கள் என்ற பயத்தில் புதிய வீடுகளை அதிக உயரத்தில் கட்டி இருப்பதையும் காணலாம். பழைய சாலை மட்டத்தில் இருக்கும் வீடுகள் இனி குழிக்குள் சென்று விடும். ஒவ்வொரு மழைக்கும் அவர்கள் வீட்டு உள்ளே தண்ணீர் வரும். அதை அவர்கள் பம்ப் வைத்து வெளியேற்ற வேண்டும். மக்களுக்காக போடப்படும் சாலைகள் இது போல மக்களை பல இன்னல்களுக்குள்ளாக்குவது இனியாவது தடுக்கப்படுமா? CMOTamilNadu பாரதியார் முதல் தெரு | மேடவாக்கம் தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள். சாலை உயர பிரச்சனைக்காக அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

பழைய சாலைக்கும் புதிய சாலைக்கும் இருக்கும் உயர வித்தியாசத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். அரசாங்கம் இப்படித்தான் சாலையை உயர்த்துவார்கள் என்ற பயத்தில் புதிய வீடுகளை அதிக உயரத்தில் கட்டி இருப்பதையும் காணலாம். பழைய சாலை மட்டத்தில் இருக்கும் வீடுகள் இனி குழிக்குள் சென்று விடும். ஒவ்வொரு மழைக்கும் அவர்கள் வீட்டு உள்ளே தண்ணீர் வரும். அதை அவர்கள் பம்ப் வைத்து வெளியேற்ற வேண்டும். மக்களுக்காக போடப்படும் சாலைகள் இது போல மக்களை பல இன்னல்களுக்குள்ளாக்குவது இனியாவது தடுக்கப்படுமா? CMOTamilNadu பாரதியார் முதல் தெரு | மேடவாக்கம் தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள். சாலை உயர பிரச்சனைக்காக அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

24,708 views

மேகம் கருக்குது.. தகரம் பறக்குது... சென்னையில் ரேஸ் நடக்குது...! 🤡🤡

மேகம் கருக்குது.. தகரம் பறக்குது... சென்னையில் ரேஸ் நடக்குது...! 🤡🤡

539,915 views

முதல்வரே! உங்கள் முகத்தை எங்கள் நடைபாதை குறுக்கே மற்றும் சாலைகள் குறுக்கே வைக்காதீர்கள்.இந்த பேனர்களை உங்கள் சித்தரஞ்சன் சாலை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள் ! M.K.Stalin சட்டவிரோத பேனர்கள் வைக்கக்கூடாது என்ற பகுத்தறிவு திமுகவிற்கு தான் இல்லை என்றால் காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூடவா இல்லை ?? உயர்நீதிமன்ற ஆணைகளை மீறி இதுபோல பேனர் வைப்பதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் மயிலை காவல்துறையினரும் வாங்கும் லஞ்சம் எவ்வளவு?? நடைபாதை குறுக்கே மற்றும் முக்கிய ஜங்ஷனில் சட்டவிரோத பேனர் வைக்க உங்களுடைய லஞ்ச ரேட் அட்டவணையை உங்கள் காவல்நிலைய வாசலிலும் மாநகராட்சி அலுவலக வாசலிலும் தொங்க விடவும் ! Place: Mylapore Tank Junction

முதல்வரே! உங்கள் முகத்தை எங்கள் நடைபாதை குறுக்கே மற்றும் சாலைகள் குறுக்கே வைக்காதீர்கள்.இந்த பேனர்களை உங்கள் சித்தரஞ்சன் சாலை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள் ! M.K.Stalin சட்டவிரோத பேனர்கள் வைக்கக்கூடாது என்ற பகுத்தறிவு திமுகவிற்கு தான் இல்லை என்றால் காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூடவா இல்லை ?? உயர்நீதிமன்ற ஆணைகளை மீறி இதுபோல பேனர் வைப்பதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் மயிலை காவல்துறையினரும் வாங்கும் லஞ்சம் எவ்வளவு?? நடைபாதை குறுக்கே மற்றும் முக்கிய ஜங்ஷனில் சட்டவிரோத பேனர் வைக்க உங்களுடைய லஞ்ச ரேட் அட்டவணையை உங்கள் காவல்நிலைய வாசலிலும் மாநகராட்சி அலுவலக வாசலிலும் தொங்க விடவும் ! Place: Mylapore Tank Junction

126,466 views

வில்லிவாக்கம் Pumping Stationல் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு அரசாங்கம் செய்யும் செயலா இது? Chennai Metro Water CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் K.N.NEHRU

வில்லிவாக்கம் Pumping Stationல் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு அரசாங்கம் செய்யும் செயலா இது? Chennai Metro Water CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் K.N.NEHRU

52,728 views

வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி. இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. CMOTamilNadu Greater Chennai Corporation Sameeran

வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி. இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. CMOTamilNadu Greater Chennai Corporation Sameeran

19,519 views

இன்று காலை போஸ்ட் போட்டதை அடுத்து துரைப்பாக்கம் எழில் நகருக்கு நாளை அமைச்சர் அன்பரசன் வருகை தர இருக்கிறாராம். ஆகையால் அவசர அவசரமாக சாக்கடை நீர் ஓடும் இடங்களில் மண் அடித்து நிரப்பப்படுகிறது. மேலே கொஞ்சம் பளீச்சிங்க பவுடர் போட்டு நாளை அங்கே நின்று அமைச்சர் சிரித்தபடி போஸ் கொடுப்பார். ஒரே இரவில் சாக்கடைகளை மறைய வைக்கும் அதிசயம் நடக்கும் ஆட்சி இது என்று பேட்டியும் கொடுப்பார். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவர்கள் இப்படி மக்களை ஏமாற்றி பிழைக்க போகிறார்கள்? இந்த மக்களின் பல வருட பிரச்சனை இப்படி ஒரு நாள் மண் அடித்து நாடகம் போடுவதால் தீர்ந்து விடப் போகிறதா? மக்களை ஏமாளிகள் என்று நினைப்பவர்கள் தான் துணிந்து இது போன்ற சர்க்கஸ் வேலைகளை செய்வார்கள். இந்த சர்க்கஸ் வேலைகளுக்கு எல்லாம் ஏமாந்து போக மக்கள் தயாராக இல்லை. நிரந்தர தீர்வு குறித்து பேச வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடுவோம். #KeluChennaiKelu Tamil Nadu Urban Habitat Development Board CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Tamil Nadu Police

இன்று காலை போஸ்ட் போட்டதை அடுத்து துரைப்பாக்கம் எழில் நகருக்கு நாளை அமைச்சர் அன்பரசன் வருகை தர இருக்கிறாராம். ஆகையால் அவசர அவசரமாக சாக்கடை நீர் ஓடும் இடங்களில் மண் அடித்து நிரப்பப்படுகிறது. மேலே கொஞ்சம் பளீச்சிங்க பவுடர் போட்டு நாளை அங்கே நின்று அமைச்சர் சிரித்தபடி போஸ் கொடுப்பார். ஒரே இரவில் சாக்கடைகளை மறைய வைக்கும் அதிசயம் நடக்கும் ஆட்சி இது என்று பேட்டியும் கொடுப்பார். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவர்கள் இப்படி மக்களை ஏமாற்றி பிழைக்க போகிறார்கள்? இந்த மக்களின் பல வருட பிரச்சனை இப்படி ஒரு நாள் மண் அடித்து நாடகம் போடுவதால் தீர்ந்து விடப் போகிறதா? மக்களை ஏமாளிகள் என்று நினைப்பவர்கள் தான் துணிந்து இது போன்ற சர்க்கஸ் வேலைகளை செய்வார்கள். இந்த சர்க்கஸ் வேலைகளுக்கு எல்லாம் ஏமாந்து போக மக்கள் தயாராக இல்லை. நிரந்தர தீர்வு குறித்து பேச வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடுவோம். #KeluChennaiKelu Tamil Nadu Urban Habitat Development Board CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Tamil Nadu Police

26,591 views

பொது சாலையை தோண்டி கம்பம் நட இது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ?? தமிழ்நாட்டின் அப்பா என்று உங்களை நீங்களே சொல்லி கொண்டதற்கு இதுதான் காரணமா ?? M.K.Stalin

பொது சாலையை தோண்டி கம்பம் நட இது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ?? தமிழ்நாட்டின் அப்பா என்று உங்களை நீங்களே சொல்லி கொண்டதற்கு இதுதான் காரணமா ?? M.K.Stalin

39,239 views

இன்று தாம்பரம் மாநகராட்சியின் பல்லாவரம் 13வது வார்டு (அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறிப்பிடும் பகுதி) பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரின் நிலை இதுதான். இந்த நீரை ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பீர்களா அமைச்சரே? Tha Mo Anbarasan

இன்று தாம்பரம் மாநகராட்சியின் பல்லாவரம் 13வது வார்டு (அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறிப்பிடும் பகுதி) பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரின் நிலை இதுதான். இந்த நீரை ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பீர்களா அமைச்சரே? Tha Mo Anbarasan

43,176 views

தண்ணீர் தேங்கக்கூடிய ஈர நிலமான ராம்சார் பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் 1250 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு மோசடியாக அனுமதி அளித்த தமிழ்நாடு அரசின் செயல் சட்டவிரோதமானது மட்டும் அல்ல. ராம்சார் நிலத்தை பாதுகாக்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு தென் சென்னை மக்களுக்கு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் செய்யும் பெரும் துரோகமும் கூட. இதற்கு பிறகும் இந்த நிறுவனத்திற்கு அளித்த மோசடி ஒப்புதல்களை ரத்து செய்து அனைத்து ராம்சார் நிலங்களையும் பாதுகாக்காவிட்டால் தென் சென்னை பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் ! M.K.Stalin Udhay CMDA Chennai Supriya Sahu IAS Chief Secretary, Govt. of Tamil Nadu P.K. Sekar Babu

தண்ணீர் தேங்கக்கூடிய ஈர நிலமான ராம்சார் பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் 1250 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு மோசடியாக அனுமதி அளித்த தமிழ்நாடு அரசின் செயல் சட்டவிரோதமானது மட்டும் அல்ல. ராம்சார் நிலத்தை பாதுகாக்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு தென் சென்னை மக்களுக்கு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் செய்யும் பெரும் துரோகமும் கூட. இதற்கு பிறகும் இந்த நிறுவனத்திற்கு அளித்த மோசடி ஒப்புதல்களை ரத்து செய்து அனைத்து ராம்சார் நிலங்களையும் பாதுகாக்காவிட்டால் தென் சென்னை பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் ! M.K.Stalin Udhay CMDA Chennai Supriya Sahu IAS Chief Secretary, Govt. of Tamil Nadu P.K. Sekar Babu

20,920 views

நெடுஞ்சாலையின் நடுவே மணலில் இது போல குத்தி நிறுத்தப்படும் கொடி கம்பங்கள் காற்று அடிக்கும் போதும், அதிக வேகத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போதும் சாய்ந்து சாலையில் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் இதை வைக்கும் உங்க கட்சிக்கு #அறிவு_இருக்கா DMK ? #Trichy

நெடுஞ்சாலையின் நடுவே மணலில் இது போல குத்தி நிறுத்தப்படும் கொடி கம்பங்கள் காற்று அடிக்கும் போதும், அதிக வேகத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போதும் சாய்ந்து சாலையில் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் இதை வைக்கும் உங்க கட்சிக்கு #அறிவு_இருக்கா DMK ? #Trichy

56,216 views

ரேஷன் ஊழல் குறித்த எந்த ஒரு செய்தியும் வெளி வரக்கூடாது என்பதற்காக முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் Tamil Nadu Police இரும்புக்கரம் கொண்டு அடக்கிய போது .. We can see how the Tamil Nadu CM, Food Supplies Minister and TN Police handled Ration corruption with iron fist! #992croresrationscam #tnchristysuppliescorporation Office of Udhayanidhi Stalin DMK DMK IT WING Dr. T R B Rajaa Satyabrata Sahoo IAS News18 Tamil Nadu Sun News Thanthi TV puthiyathalaimurai Polimer News IndiaToday NDTV India TIMES NOW TheNewsMinute

ரேஷன் ஊழல் குறித்த எந்த ஒரு செய்தியும் வெளி வரக்கூடாது என்பதற்காக முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் Tamil Nadu Police இரும்புக்கரம் கொண்டு அடக்கிய போது .. We can see how the Tamil Nadu CM, Food Supplies Minister and TN Police handled Ration corruption with iron fist! #992croresrationscam #tnchristysuppliescorporation Office of Udhayanidhi Stalin DMK DMK IT WING Dr. T R B Rajaa Satyabrata Sahoo IAS News18 Tamil Nadu Sun News Thanthi TV puthiyathalaimurai Polimer News IndiaToday NDTV India TIMES NOW TheNewsMinute

20,357 views

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பெரும்பாலான சாலைகளின் நிலை இது தான். சரியாக திட்டமிடாத கழிவுநீர் வடிகால் பணிகள் முற்றிலுமாக தோல்வி அடைந்து சாலைகள் முழுவதும் கழிவுநீர் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த கழிவுநீர் எங்கே ஓடி எதில் கலக்கிறது என்று மக்கள் மீது பழி போடும் அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்து சொல்லட்டும். Tha Mo Anbarasan Tambaram Corporation

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பெரும்பாலான சாலைகளின் நிலை இது தான். சரியாக திட்டமிடாத கழிவுநீர் வடிகால் பணிகள் முற்றிலுமாக தோல்வி அடைந்து சாலைகள் முழுவதும் கழிவுநீர் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த கழிவுநீர் எங்கே ஓடி எதில் கலக்கிறது என்று மக்கள் மீது பழி போடும் அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்து சொல்லட்டும். Tha Mo Anbarasan Tambaram Corporation

12,655 views

Videos

Arappor's profile picture

அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது. இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி Thinakaran Rajamani பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார். அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம். RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம். 27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி! அறப்போர் தொடரும்!

Arappor Iyakkam

375,350 views • 1 month ago

Arappor's profile picture

Big news: முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை! 2015 -16 காலகட்டத்தில் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது. ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்தியலிங்கம் மகன் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அறப்போர் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால் வைத்திலிங்கம் ஜனவரி 2026 இல் திமுகவில் இணைந்த உடன் திமுக வாஷிங் மெஷின் வேலை செய்து இந்த வழக்கை பிப்ரவரி 2026 இல் லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புகார் தாரரான அறப்போர் இயக்கத்திடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை. ஜூன் மாதம் வழக்கு மூடப்பட்ட தகவல் பத்திரிகைகள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக அறப்போர் இயக்கமும் இந்த வழக்கை மூடுவதை எதிர்த்து சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தற்பொழுது கூடுதல் விசாரணைக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆணையிட்டுள்ளார். மேலும் ஒரு அறப்போர் புகார் வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் கூடுதல் விசாரணை செய்வோம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். மேலும் கடந்த அரசு இந்த வழக்கை மூடியதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் சித்தார்த் பிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அறப்போர் தொடரும்!

Arappor Iyakkam

35,477 views • 6 days ago

Arappor's profile picture

சோழிங்கநல்லூர் MLA சரவணன் அவர்களே, சாலைகளில் பேனர் வைப்பது உங்கள் தலைவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது இங்கே பிரச்சனை இல்லை. சாலை மற்றும் நடைபாதைகளில் பேனர் வைப்பது சட்ட விரோத செயல். பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான சமூக விரோத செயல். உங்கள் கட்சியினர் சாலை, நடைபாதைகளில் வைக்கும் அனைத்து பேனர்களும் பொது மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவை தான். காரணம் அந்த பேனர்கள் வைப்பதற்கு எந்த விதமான எழுத்துப்பூர்வ அனுமதியும் உங்கள் கட்சியினர் வாங்குவதில்லை. பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்த பகுதி காவல்நிலையத்தில் அந்த பேனர் வைக்கும் இடம், அந்த பேனர் அளவு, பேனர் வைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும். போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவோ, நடைபாதையை பயன்படுத்த தடையாகவோ, ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவோ வைக்கப்படும் பேனர்களுக்கு காவல்துறையால் அனுமதி தர முடியாது. சாலையின் நடுவே மீடியனில் மற்றும் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் பேனர் அல்லது கொடி கம்பங்கள் வைக்க காவல்துறையால் அனுமதி கொடுக்க முடியாது. நீங்கள் வைக்கும் பேனர் அல்லது கொடி கம்பங்கள் காற்றிலோ அல்லது கவனக்குறைவிலோ கீழே விழுந்தாலும் அது சாலை மற்றும் நடைபாதையில் விழாத வகையில் வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். காவல்துறையின் எழுத்துப்பூர்வ அனுமதி வாங்காமல் வைக்கப்படும் பேனர்களுக்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமீபத்திய நீதிமன்ற உத்தரவில் சாலைகளில் வைக்கப்படும் ஒவ்வொரு கொடி கம்பத்திற்கும் 1000 ரூபாய் வசூல் செய்யலாம் என்று நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பேனர்களை தடுக்க வேண்டும் என்று உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் கட்சி சார்பாக பேனர் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவு கொடுங்களேன். காவல்துறை உங்கள் கட்சியினர் வைக்கும் சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீங்களோ உங்கள் கட்சியினரோ அதில் தலையிட மாட்டோம் என்று பொது மேடையில் ஒரு அறிவிப்பு கொடுங்களேன். ECR.P.Saravanan TVK Vijay N Anand Tamil Nadu Police

Arappor Iyakkam

101,931 views • 20 days ago

Arappor's profile picture

திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது. எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Arappor Iyakkam

74,213 views • 18 days ago

Arappor's profile picture

வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம். இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா? சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா? உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள். சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ பயன்படுத்துங்கள். TVK Vijay TN_MAWS CMOTamilNadu Aadhav Arjuna Greater Chennai Corporation CMDA Chennai

Arappor Iyakkam

88,925 views • 24 days ago

Arappor's profile picture

ஒரு வருடம் முன்பு... ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் டெண்டர் செட்டிங் செய்யப்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் கிறிஸ்டி நிறுவனம். Video - திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்து டெண்டரில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு 992 கோடி. அதற்கு காரணம் அதே கிறிஸ்டி நிறுவனம். Video - அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், புகாருக்குள்ளான அதே கிறிஸ்டி நிறுவனத்தை வைத்து திமுக அரசு கொள்ளை அடிக்கிறதே என்று போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினரை சரியாக ஒரு வருடம் முன்பாக அன்றைய திமுக அரசு கைதும் செய்தது. தற்பொழுது இரண்டு கட்சி ஆட்சியிலும் நடந்த ஊழலை விசாரிக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். ஊழல் செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று இன்று கூட கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ஆதாரங்களுடன் சொல்லிவிட்டோம். நீங்கள் எப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் முதல்வரே? TVK Vijay CMOTamilNadu Venkataramanan M.Com, MBA, M.L.,

Arappor Iyakkam

76,968 views • 23 days ago

Arappor's profile picture

சட்டத்தை மீறி கட்சி கொடிகளையும், கட்சி பிரமுகர்களின் சுயவிளம்பர பேனர் கட்அவுட்களையும் சாலைகளில் வைத்து பொது மக்கள் உயிருடன் விளையாடும் சமூக விரோதிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? Tamil Nadu Police GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Traffic Police உங்கள் மின்சார கம்பங்களை ஆளுங்கட்சி பேனர் வைக்க வாடகைக்கு விட்டுள்ளீர்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? TANGEDCO Official Dr J Radhakrishnan IAS ECR | Sholinganallur நாங்க வேண்டாம்னு சொல்லிட்டே இருப்போம், நீங்க உங்க இஷ்டத்துக்கு வைத்துக் கொண்டே இருங்கள் என்பது தான் தவெகவின் எழுதப்படாத விதியா? இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் உங்களை பார்த்து அறிவிருக்கா தவெக..? என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படும். N Anand TVK Party HQ

Arappor Iyakkam

64,246 views • 26 days ago

Arappor's profile picture

சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.

Arappor Iyakkam

116,776 views • 2 months ago

Arappor's profile picture

நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.

Arappor Iyakkam

63,175 views • 1 month ago

Arappor's profile picture

அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது. அது என்ன புகார்? சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். புகாருக்கு பிறகு அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள். Youtube link - இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. #PF #DMK #Velu

Arappor Iyakkam

57,813 views • 1 month ago