
Arappor Iyakkam
@Arappor • 106,276 subscribers
Official Twitter id of Arappor Iyakkam
Shorts
Videos

அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது. இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி Thinakaran Rajamani பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார். அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம். RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம். 27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி! அறப்போர் தொடரும்!
Arappor Iyakkam375,350 views • 1 month ago

சிறிய டெண்டர்களில் டெண்டர் செட்டிங் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் ? தற்பொழுது ஊரக வளர்ச்சி துறையில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய 5 லட்சம் டெண்டரை வைத்து பார்ப்போம். டெண்டர் பதிவேற்றம் செய்ய கொடுக்கப்படும் மொத்த நேரமே வெறும் 30 நிமிடம் மட்டும் தான். சட்டப்படி சிறிய டெண்டர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பெரிதும் டெண்டர் செட்டிங் செய்யவே வழி வகுக்கும். மாற்றம் வருமா ? CMOTamilNadu N Anand
Arappor Iyakkam202,585 views • 25 days ago

Big news: முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை! 2015 -16 காலகட்டத்தில் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது. ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்தியலிங்கம் மகன் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அறப்போர் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால் வைத்திலிங்கம் ஜனவரி 2026 இல் திமுகவில் இணைந்த உடன் திமுக வாஷிங் மெஷின் வேலை செய்து இந்த வழக்கை பிப்ரவரி 2026 இல் லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புகார் தாரரான அறப்போர் இயக்கத்திடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை. ஜூன் மாதம் வழக்கு மூடப்பட்ட தகவல் பத்திரிகைகள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக அறப்போர் இயக்கமும் இந்த வழக்கை மூடுவதை எதிர்த்து சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தற்பொழுது கூடுதல் விசாரணைக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆணையிட்டுள்ளார். மேலும் ஒரு அறப்போர் புகார் வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் கூடுதல் விசாரணை செய்வோம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். மேலும் கடந்த அரசு இந்த வழக்கை மூடியதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் சித்தார்த் பிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அறப்போர் தொடரும்!
Arappor Iyakkam35,477 views • 6 days ago

சோழிங்கநல்லூர் MLA சரவணன் அவர்களே, சாலைகளில் பேனர் வைப்பது உங்கள் தலைவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது இங்கே பிரச்சனை இல்லை. சாலை மற்றும் நடைபாதைகளில் பேனர் வைப்பது சட்ட விரோத செயல். பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான சமூக விரோத செயல். உங்கள் கட்சியினர் சாலை, நடைபாதைகளில் வைக்கும் அனைத்து பேனர்களும் பொது மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவை தான். காரணம் அந்த பேனர்கள் வைப்பதற்கு எந்த விதமான எழுத்துப்பூர்வ அனுமதியும் உங்கள் கட்சியினர் வாங்குவதில்லை. பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்த பகுதி காவல்நிலையத்தில் அந்த பேனர் வைக்கும் இடம், அந்த பேனர் அளவு, பேனர் வைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும். போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவோ, நடைபாதையை பயன்படுத்த தடையாகவோ, ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவோ வைக்கப்படும் பேனர்களுக்கு காவல்துறையால் அனுமதி தர முடியாது. சாலையின் நடுவே மீடியனில் மற்றும் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் பேனர் அல்லது கொடி கம்பங்கள் வைக்க காவல்துறையால் அனுமதி கொடுக்க முடியாது. நீங்கள் வைக்கும் பேனர் அல்லது கொடி கம்பங்கள் காற்றிலோ அல்லது கவனக்குறைவிலோ கீழே விழுந்தாலும் அது சாலை மற்றும் நடைபாதையில் விழாத வகையில் வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். காவல்துறையின் எழுத்துப்பூர்வ அனுமதி வாங்காமல் வைக்கப்படும் பேனர்களுக்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமீபத்திய நீதிமன்ற உத்தரவில் சாலைகளில் வைக்கப்படும் ஒவ்வொரு கொடி கம்பத்திற்கும் 1000 ரூபாய் வசூல் செய்யலாம் என்று நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பேனர்களை தடுக்க வேண்டும் என்று உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் கட்சி சார்பாக பேனர் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவு கொடுங்களேன். காவல்துறை உங்கள் கட்சியினர் வைக்கும் சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீங்களோ உங்கள் கட்சியினரோ அதில் தலையிட மாட்டோம் என்று பொது மேடையில் ஒரு அறிவிப்பு கொடுங்களேன். ECR.P.Saravanan TVK Vijay N Anand Tamil Nadu Police
Arappor Iyakkam101,931 views • 20 days ago

திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது. எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Arappor Iyakkam74,213 views • 18 days ago

வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம். இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா? சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா? உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள். சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ பயன்படுத்துங்கள். TVK Vijay TN_MAWS CMOTamilNadu Aadhav Arjuna Greater Chennai Corporation CMDA Chennai
Arappor Iyakkam88,925 views • 24 days ago

ஒரு வருடம் முன்பு... ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் டெண்டர் செட்டிங் செய்யப்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் கிறிஸ்டி நிறுவனம். Video - திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்து டெண்டரில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு 992 கோடி. அதற்கு காரணம் அதே கிறிஸ்டி நிறுவனம். Video - அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், புகாருக்குள்ளான அதே கிறிஸ்டி நிறுவனத்தை வைத்து திமுக அரசு கொள்ளை அடிக்கிறதே என்று போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினரை சரியாக ஒரு வருடம் முன்பாக அன்றைய திமுக அரசு கைதும் செய்தது. தற்பொழுது இரண்டு கட்சி ஆட்சியிலும் நடந்த ஊழலை விசாரிக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். ஊழல் செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று இன்று கூட கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ஆதாரங்களுடன் சொல்லிவிட்டோம். நீங்கள் எப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் முதல்வரே? TVK Vijay CMOTamilNadu Venkataramanan M.Com, MBA, M.L.,
Arappor Iyakkam76,968 views • 23 days ago

சட்டத்தை மீறி கட்சி கொடிகளையும், கட்சி பிரமுகர்களின் சுயவிளம்பர பேனர் கட்அவுட்களையும் சாலைகளில் வைத்து பொது மக்கள் உயிருடன் விளையாடும் சமூக விரோதிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? Tamil Nadu Police GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Traffic Police உங்கள் மின்சார கம்பங்களை ஆளுங்கட்சி பேனர் வைக்க வாடகைக்கு விட்டுள்ளீர்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? TANGEDCO Official Dr J Radhakrishnan IAS ECR | Sholinganallur நாங்க வேண்டாம்னு சொல்லிட்டே இருப்போம், நீங்க உங்க இஷ்டத்துக்கு வைத்துக் கொண்டே இருங்கள் என்பது தான் தவெகவின் எழுதப்படாத விதியா? இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் உங்களை பார்த்து அறிவிருக்கா தவெக..? என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படும். N Anand TVK Party HQ
Arappor Iyakkam64,246 views • 26 days ago

தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. CMOTamilNadu Office Of Dr TK Prabhu
Arappor Iyakkam62,074 views • 27 days ago

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய துறை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம். ஆய்வுக்கு பின் அமைச்சர் ராஜ்குமார் செய்தது என்ன ? கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அப்பகுதிவாசி முருகன் சொல்வதை கேளுங்கள்! Tamil Nadu Urban Habitat Development Board CMOTamilNadu
Arappor Iyakkam38,587 views • 16 days ago

சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.
Arappor Iyakkam116,776 views • 2 months ago

நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
Arappor Iyakkam63,175 views • 1 month ago

அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது. அது என்ன புகார்? சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். புகாருக்கு பிறகு அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள். Youtube link - இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. #PF #DMK #Velu
Arappor Iyakkam57,813 views • 1 month ago

வடபழனி தபால் நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள பந்தலை சுற்றி இரவோடு இரவாக சாலை அமைத்து பந்தலுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டி செல்லும் நபர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். பந்தலுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சாலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு அறிவு கெட்ட சமூக விரோதி. CMOTamilNadu Greater Chennai Traffic Police Greater Chennai Corporation Sameeran TVK Vijay
Arappor Iyakkam86,287 views • 2 months ago