
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
@Autokabeer • 4,976 subscribers
வாய்ப்பை தேடி.. | நாஞ்சில்நாடு | ஊடகவியலாளர் | எழுத்தாளன் | வனம் & வன உயிரின் ஆர்வலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன்
Shorts
Videos

வேலூர் மாவட்டம் - அரியூர் : இரவு நேரம், தள்ளாடும் வயதில் கையில் தடியுடன் சாலையில் நின்ற முதியவர். ரோந்து வந்த காவலர் ஒருவர், அவரிடம் வாக்குவாதம் செய்து கன்னத்தில் ஓங்கி அறைந்த அந்த காட்சி இதயத்தை உலுக்குகிறது. காண்போர் கண்களில் கோபமும் வேதனையும். வீடியோ வைரலானதும், வேலூர் எஸ்.பி சிவராமன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்288,066 Aufrufe • vor 6 Tagen
1:16
Sensitive content
This media may contain sensitive content.

திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் சென்ற கார் மோதிய CCTV காட்சி - 8 பேர் பலி - கேரளம் - திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலத்தில் பெரும் சாலை விபத்து. - இன்று நள்ளிரவு கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் வேகமாக மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். - விபத்தில் சிக்கியவர்கள் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கார் முற்றிலும் நொறுங்கியதால், வாகனத்தை வெட்டி 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. - உயிரிழந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்194,751 Aufrufe • vor 9 Tagen

மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா? அந்த "பெண்ணுங்கிற ராட்சஷி" மறுபடியும் முகத்த மறைச்சுட்டு வீடியோ விட்டுருக்கா. டெலிவரி பாய் கிஷோருக்கும் அவளுக்கும் அன்னைக்கு பெரிய சண்டை வந்துச்சு. ரெண்டு பேரும் மாறி மாறி திட்டிக்கிட்டோம் னு இப்போ சொல்றா. தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுடுங்க னு நாடகம் பண்றா. அந்த வீடியோவ பாருங்க மக்கா. அவ மட்டும் பேசுறா. முகத்த மூடிட்டு பேசுறா. பக்கத்துல நிக்கிற கிஷோர் வாய தொறக்க கூட இல்ல. அவன் முகத்த பாருங்க. எவ்ளோ வலி, எவ்ளோ அவமானம் இருக்குனு தெரியுது. கூண்டுல நிக்க வச்ச மாதிரி நிக்க வச்சுருக்கா. இது மனசாட்சிக்கு பயந்து கேக்குற மன்னிப்பு இல்ல. சோஷியல் மீடியால மக்கள் காறி துப்புனதுக்கு பயந்து, போலீஸ் கேஸ் ஆகும்னு பயந்து பண்ற நிர்பந்த நாடகம் இது. அவன் செஞ்ச தப்பு என்ன? உனக்கு பசிக்கும்போது சாப்பாடு கொண்டு வந்தது. அதுக்கு நீ கொடுத்தது திட்டு, சாபம், கல்லு. இப்போ ஒரு 30 செகண்ட் வீடியோல "Sorry" சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா? கிஷோருக்கு நீதி கிடைச்சாச்சா? அவன் குடும்பம் பட்ட அவமானத்துக்கு பதில் என்ன? அவன் கண்ணீருக்கு விலை என்ன? சட்டம் தூங்க கூடாது. இவ மேல கடுமையான நடவடிக்கை எடுக்கனும். இல்லனா நாளைக்கு இன்னொரு கிஷோர் அடி வாங்குவான். மனுஷனா இருந்தா மனுஷன மதிச்சு வாழ கத்துக்கோங்க.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்192,540 Aufrufe • vor 1 Monat

சாலை விதிகளை கடைப்பிடியுங்கள் - ஒரு நொடி அலட்சியம், ஒரு உயிரை பறிக்கும்! பைக்கில் பின்னால் வந்தவரை சந்திப்பில் பொறுமையாக இறக்கி விட்டுவிட்டு, மெயின் ரோட்டுக்கு வரும்போது இடது, வலது பார்க்காமல் திடீரென வண்டியை எடுத்ததால் வேகமாக வந்த கார் மோதி பயங்கர விபத்து. இதில் இன்னொரு முக்கியமான விஷயம்... CCTV கேமரா மட்டும் இல்லை என்றால், "வேகமாக வந்த கார் தான் இடித்தது" என்று முழு தவறையும் கார் ஓட்டுநர் மீது போட்டிருக்கும் ஒரு கூட்டம். வீடியோவில் தெளிவாக தெரிகிறது - கார் அதன் வழியில் சரியாகத்தான் வருகிறது. பைக்காரர் தான் சந்திப்பில் நிறுத்தாமல், பார்க்காமல் திடீரென ஏறுகிறார். இன்று இந்த கேமரா தான் உண்மையான நீதிபதி. வண்டியை எடுக்கும் முன் ஒரு நிமிடம் நின்று பாருங்கள் - அது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்காகவும்!
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்45,929 Aufrufe • vor 15 Tagen

கடைசியா ஒரு கை பெயிண்ட் அடிச்சா வேலை முடிஞ்சுடும்... இந்த மாசம் 28-ம் தேதி வீட்ல குடி போகலாம்னு கனவு கண்டாங்க. மூணு வருஷம்.வெயில்லயும் மழையிலயும் உழைச்ச காசு. கடன் வாங்கி, சிக்கனமா சேத்து கட்டுன வீடு. ஆனா செப்டிக் டேங்கு குழி தோண்டுன அந்த ஒரு நிமிஷம்... அந்த குடும்பத்தோட வாழ்க்கையே கவிழ்ந்து போச்சு. குழிக்குள்ள எட்டி பாத்தா... அங்க வீடே இல்ல, பூமிக்கு அடியில பத்து அடி பெரிய பள்ளம். அதுக்குள்ள வெள்ளம் மாதிரி தண்ணி ஓடுது. அவங்க கட்டுன சுவரெல்லாம் அந்த பள்ளத்தோட விளிம்புல தான் நிக்குது. எப்ப வேணா இடிஞ்சு விழலாம். எப்ப வேணா மண்ணோட மண்ணா போகலாம். "ஐயோ... என் வீடு... என் கனவு..." வீட்டு பொண்ணு அழுது அழுது மயங்கி விழுறாங்க. குழந்தைக "அம்மா ஏன் அழற?" னு கேக்குது. பதில் சொல்ல வார்த்தை இல்ல. வங்கி கடன கட்டனுமே... இப்போ இந்த வீட்லயும் குடி போக முடியாதே... அடுத்து எங்க போவோம்னு கூட தெரியலையே... அதிகாரிகள் வந்து போட்டோ எடுத்துட்டு "ரிப்போர்ட் வரும்" னு சொல்லிட்டு போய்டாங்க. ஆனா அதுக்குள்ள அவங்க கனவு உடைஞ்சு போய்டுச்சே. இது வெறும் மண்ணும் செங்கலும் இல்ல... இது ஒரு அப்பாவோட வேர்வை, ஒரு அம்மாவோட ஆசை, ஒரு குடும்பத்தோட மொத்த வாழ்கை. இன்னைக்கு அவங்க வீடு இல்லாம நிக்கிறாங்க, நாளைக்கு அந்த வீடும் இல்லாம போய்டும். யாருக்கும் வர கூடாத நிலைமை இது. கேரளம் - காசர்கோடு மாவட்டம், குட்டிக்கோல் பஞ்சாயத்து, கரிவெளகம் கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம்
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்60,296 Aufrufe • vor 26 Tagen

செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை மிரட்டிய பெண் காவலர் தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, "சீருடையில் பணியில் இருந்த என்னை கையை பிடித்து இழுத்ததாக புகார் அளிப்பேன்" என்று பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்112,383 Aufrufe • vor 2 Monaten

வேலைக்கு வராத கோவம் - கல்லால கண்ணாடிக்கு வைத்தியம் 🤦♀️ எங்க குமரி மாவட்டதுல கருங்கல் ஊர் பக்கம் நடந்த கூத்து வேலைக்கு வரலைனு மெடிக்கல் கடை ஓனர் அக்காவுக்கு BP எகிறிட்டுது போல. "நான் இவ்ளோ சம்பளம் தாரேன், நீ லீவு போடுறியா?"னு டயலாக் விட்டுட்டு நேரா வேலைக்காரி வீட்டுக்கு படையெடுப்பு. அங்க போய் HR மீட்டிங் நடத்தல... கையில கெடச்ச கல்ல எடுத்து ஜன்னல கண்ணாடிய "சில்லு சில்லா" உடைச்சுட்டு போய்டா. மருந்து விக்க வேண்டிய ஆளு, இப்போ கல்லால "கண்ணாடி உடைக்கிற தெரபி" பண்ணுது "அக்கா, வேலைக்கு வரலைனா ஒரு call பண்ணி திட்டிட்டு விட வேண்டியதுதான... கண்ணாடி கடை வச்சுருக்கீங்களா என்ன?"
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்112,556 Aufrufe • vor 2 Monaten

6 வருஷம் வளர்த்தான்! ஒரே தீர்ப்புல பறிச்சுட்டாங்க - ஒரு தந்தையின் கதறல் முடிவு 💔 இடுக்கி மாவட்டம் கட்டப்பனா, கோழிமலையை சேர்ந்த 38 வயது பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ். திருமணமாகி 2 வருஷம் கூட ஆகல. மனைவி "வேலை"னு சொல்லிட்டு ஷார்ஜாவுக்கு பறந்துட்டாங்க. அங்க போய் இன்னொருத்தரோட வாழ்கையை தொடங்கிட்டாங்க. ரஞ்சீஷையும், பிறந்த குழந்தையும் முழுசா தூக்கி எறிஞ்சுட்டாங்க. அடுத்த 6 வருஷம்... வயசான அம்மா அப்பாவ துணைக்கு வச்சுகிட்டு, ஒரு ஆண் தனியா தன் மகனை வளர்த்தான். பால் ஊட்டுறதுல இருந்து, ஸ்கூல்ல சேர்கிறது வரைக்கும்... அழுதா தோள் கொடுக்கிறது வரைக்கும்... எல்லாமே அவர்தான். அந்த குழந்தைக்கு உலகமே அப்பா தான். 6 வருஷம் கழிச்சு அவங்க திரும்பி வந்தாங்க. "என் மகன் வேணும்"னு கட்டப்பனா குடும்ப நல கோர்ட் கதவ தட்டினாங்க. நீதிமன்றமும் ஒரே வரில தீர்ப்பு எழுதிட்டு: "மகன் கஸ்டடி அம்மாக்கு" 6 வருஷமா நெஞ்சுல சுமந்து வளர்த்த மகனை, கோர்ட் உத்தரவுனு சொல்லி கைய விரிச்சு கொடுக்க வேண்டிய நிலை. அந்த நிமிஷமே ரஞ்சீஷ் உடைஞ்சு போய்டாரு. "மகன் இல்லாம என்னால வாழ முடியாது"னு ஒரு வாரத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சாரு. சிகிச்சை பலிக்கல. கடந்த புதன்கிழமை அவர் சடலமா திரும்பினார். ஊரே அழுதுச்சு. எப்பவும் சிரிச்ச முகத்தோட பஸ்ல டிக்கெட் கிழிச்சவரு... இன்னைக்கு பேச்சு மூச்சு இல்லாம போய்டாரு. இதோடயும் முடியல கொடுமை. தன் அப்பா செத்து கிடக்கும்போது, கடைசியா ஒரு தடவ முகத்த பாக்க கூட அந்த அம்மா மகன அனுப்பல. "இறுதி சடங்குக்கு வரக்கூடாது"னு பிடிவாதம். மறுபடியும் கோர்ட் படி ஏறி கெஞ்சி கூத்தாடி தான், அப்பாவோட கடைசி யாத்திரைக்கு அந்த பிஞ்சு குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க. இது என்ன நீதி? 6 வருஷம் வளர்தவனுக்கு உரிமை இல்லையா? 6 வருஷம் கைவிட்டவளுக்கு மட்டும் உரிமை இருக்கா? ஒரு தந்தையோட காதலும் தியாகமும் கோர்ட் கண்ணுக்கு தெரியலையா? ரஞ்சீஷ் செத்து போனது வெறும் தற்கொலை இல்ல. இது ஒரு சிஸ்டம் கொலை என கேரள மக்களின் வாதம் வீடியோ கடைசில பாருங்க.. 💔
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்84,416 Aufrufe • vor 1 Monat

ரீல்ஸ் வெறியினால் அப்பாவி நபரின் உயிர் பலியான சோகம் - கேரளாவை உலுக்கிய சம்பவம் கோழிக்கோடு: இரு தினங்களுக்கு முன், ஷிம்ஜிதா என்ற பெண் பஸ்ல போகும்போது தன்னை அநாகரிகமாக ஓரு நபர் தொட்டுட்டார் என்று அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வீவர்ஸ் கூட கூடுதலாக அந்த நபரின் குணத்தை கேவலபடுத்தி, அவர் மீது வெறுப்பேற்றும் விதமாக பேசி இன்ஸ்டாவில் பதிவு போட அது Viral ஆகி உள்ளது. பஸ்ஸில் கூட்ட நெரிசலில் அறிந்தோ அறியாமலோ செய்த ஒரு தவறுக்காக, அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோவால்... 37 வயதான தீபக் என்ற அந்த நபரை உறவினர்கள், அண்டை வீட்டார்கள், அக்கம்பக்கத்தினர்கள், வேலை பணியாளர்கள், பொது மக்கள், சோசியல் இன்ப்ளூயன்சர்கள் என அனைத்து தரப்பினர்களும் அசிங்க அசிங்கமாகவும் கீழ்தரமாகவும் கமெண்ட் செய்தும், நேரிலும் கண்டு விமர்சிக்கவும் விசாரிக்கவும் செய்ய.. தன்னை அறியாமல் நடந்த சம்பவத்தால் அவமானமும், கவலையும், மன உளச்சலும் கொண்ட தீபக், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். விசயம் விஸ்வரூபம் ஆனது.. ஷிம்ஜிதாவின் ரீல்ஸ் பொறிக்கு இரையான தீபக்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, பலதரப்பினர்களும் கடும் கண்டனமும், போர்கொடி தூக்கி வருகின்றனர். பஸ்ஸில் பெண்ணை உரசினால் மீண்டும் உரசாதவாறு நீங்கியிருக்க முடியும், அல்லது அந்த இடத்திலே கண்டிக்கவும் முடியும்.. ஆனால் இதன் மூலம் பிரபலமும் லைக்கும் வேண்டுமே... Big boss ல் அடுத்த சீசனுக்கு வாய்ப்பும் கிடைக்கலாமே... உண்மையில் அந்த வீடியோவில் ஷிம்ஜிதா வேண்டுமென்றே தீபக்கின் அருகில் ஒட்டி நிற்பது போலவும், ஒரு சாதாரண மனிதனை உசுப்பேற்றி நெருங்கி நின்று, அதன் பிறகு நடக்கும் நிகழ்வை அவருக்கே தெரியாமல் படம்பிடித்தது போலவும், பாலியல் சீண்டல் செய்த குற்றவாளி என கேவலபடுத்தி பேசி சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி சைபர் தாக்குதல் நடத்தியதன் விளைவு... கண்ணியமான மனிதராக நடப்பவர் என ஊர் மக்களால் கூறுப்படும் தீபக், தன் மீது இப்படியொரு அவதூறு பரவுவதை தாங்க இயலாமல், தான் நிரபராதி குற்றமற்றவன் என்னை நம்புங்கள் என தனது உயிரை மாய்த்து கொண்டார்... இதற்கு காரணமான ரீல்ஸ் வெறி ஷிம்ஜிதாவை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன். சட்டம் ,கோர்ட், காவல்துறை இதெல்லாம் சும்மா என்று நினைக்க வேண்டாம். சட்டத்தின் அனைத்து ஆதரவும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் தான் என பெண் வழக்கறிஞர் ஃபவுஸி ஹபீப் களமிறங்கியுள்ளார்.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்285,474 Aufrufe • vor 7 Monaten

பெங்களூருலிந்து ஓசூருக்கு பயணம் செய்யும் இவர், பஸ்ஸில் பயணிகள் உக்காரும் இருக்கை இன்னும் பெரியதாக இருக்க வேண்டுமாம். நான் பாடிகட்டி பெரிய வண்டியா கொண்டு வரமுடியுமா.? நீங்க அதிகாரிகிட்ட கேளுங்க என்றதற்கு.. கண்டக்டர் நீங்க தான் பொறுப்பு, உங்க மேல புகார் அளிக்க போறேன் என வாக்கு வாதம்.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்174,701 Aufrufe • vor 6 Monaten

ரீல்ஸால வந்த வினை முல்லை பெரியாறுல தண்ணி திறந்ததும் "நானும் போய் பாக்கணும்"னு கிளம்புனாரு தவெக பெரியகுளம் MLA சபரி ஐயங்கரன். போன இடம் பெரியாறு புலிகள் காப்பகம். அங்க "ட்ரோன் பறக்கவிட தடை" இருக்கு. "அதெல்லாம் பரவால்ல, ஒரு ரீல்ஸ் எடுத்து Instagram-ல் போட்டா வைரலாகிடும்"னு ட்ரோன ஏத்தி விட்டுட்டாரு. விளைவு: காட்சி சூப்பரா வந்துச்சு. ஆனா கூடவே கேரள வனத்துறைல இருந்து FIR-ம் சூப்பரா வந்துடுச்சு.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்30,229 Aufrufe • vor 1 Monat

கன்னியாகுமரி - குழித்துறை: சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரல். பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நடைபாதையில் மட்டுமே நடங்கள், வாகனம் செல்லும் சாலையில் அலட்சியமாக நடக்காதீர்கள் சிறு கவனக்குறைவு கூட பெரிய விபத்தில் முடியலாம். பாதுகாப்பாக இருப்போம். #Kanyakumari #Kulithurai #RoadSafety
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்34,324 Aufrufe • vor 1 Monat

எச்சரிக்கை பதிவு | ஆபத்தான படகு ஓட்டம் குமரி மாவட்டம் மணக்குடி பக்கம் காலேஜ் புள்ளைகள கூட்டிட்டு போன படகுல Life Jacket ஒண்ணு கூட இல்லியாம். பெரிய குற்றசாட்டு வந்திருக்கு. இந்த வீடியோல பாருங்க... காலேஜ் புள்ளைங்களும் டீச்சர்மாரும் சிரிச்சிகிட்டே படகுல போறாங்க. ஆனா ஒருத்தரு கூட உசிர காக்குற Life Jacket போடல. ஒரு சின்ன அல வந்தாலும் போதும்... படகு லேசா ஆடுனாலும் போதும்... பெரிய விபத்து ஆயிடும். அப்புறம் அழுது பிரயோஜனம் இல்ல. படகுல போகும் போது Life Jacket போடுறது சட்டம். அத மறந்துடாதீங்க. ஆள அதிகமா ஏத்துறது, படகு ஓரத்துல உக்காருறது, கரைல வெளையாடுறது எல்லாமே ஆபத்து தான். School Tour ஆ இருந்தாலும் சரி, Field Work ஆ இருந்தாலும் சரி... மொதல்ல உயிரு முக்கியம். பாதுகாப்பு உபகரணம் இல்லாம படகு ஓட்டுறவன் மேல உடனே புகார் குடுங்க. புள்ளைங்க உயிரு வௌயாட்டு இல்ல. அதிகாரிமாரே இத விட்டுடாதீங்க, நல்லா விசாரிச்சு கடும் நடவடிக்கை எடுங்க. அப்பாக்காரனும் School நிர்வாகமும் கொஞ்சம் கண்ண தொறந்து பாருங்க. Life Jacket இல்லனா அடுத்து ஓட போறது "அழுக சோக பாட்டு" தான்.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்17,623 Aufrufe • vor 1 Monat
0:35
Sensitive content
This media may contain sensitive content.
1:08
Sensitive content
This media may contain sensitive content.

நடுரோட்டில் தவழ்ந்து வந்த பிஞ்சு, பின்னாடி வேகமா வந்த பஸ்! - பதற வச்ச காட்சி, பரவசப்படுத்துன முடிவு கேரளம் - மலப்புறம் : புளிக்கல்ல நடுரோட்டுல பால் குடி குழந்தை ஒன்று தவழ்ந்து வந்துடுச்சு. பஸ் டிரைவர் உடனே பிரேக் போட்டு நிறுத்த, கண்டக்டர் நவாஸ் ஓடிபோய் குழந்தைய தூக்கி அதன் அம்மா-அப்பா கிட்ட கொடுத்து பிறகு தான் பெத்தவங்களுக்கு விஷயமே தெரிஞ்சுது. ஒரு நிமிஷ அசந்த நேரம், ஆனா அந்த பஸ் ஓட்டுனர் சரியான நேரத்துல காப்பாத்திட்டார். வீடியோ வைரல் ஆகி எல்லாரும் அந்த பஸ் சேட்டன்களை பாராட்டுறாங்க ❤️
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்10,589 Aufrufe • vor 3 Monaten
Keine weiteren Inhalte verfügbar