
BBC News Tamil
@bbctamil • 1,123,002 subscribers
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Shorts
Videos

ஆந்திராவில் இரவு நேரம் நடைபாதையில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஆறு மாத குழந்தையை கடத்திச் சென்றார். காவல்துறையினர் சிறப்பு செயலியைப் பயன்படுத்தி, குற்றவாளியைக் கண்டறிந்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. #AndhraPradesh #Rescue
BBC News Tamil308,163 görüntüleme • 24 gün önce

வெள்ளம் வரும்போது என்ன நடந்தது? - தமிழ்நாட்டு பயணிகள் எடுத்த வீடியோ நேபாளத்தில் பெருவெள்ளம் வரும்போது, வாகனத்தில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டு பயணிகள், அந்த காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். முதலில், அந்த நிகழ்வின் வீரியத்தை உணராமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், நேரம் கடக்க கடக்க அங்கு சூழல் மாறுவதை அறிந்து, வாகனத்தில் இருந்து இறங்கி, மலைமீது ஏறி உயிர் தப்பித்ததாகவும் செய்தியாளர்களிடம் பேசிய சத்யா தெரிவித்தார். தமிழ்நாட்டு பயணி விஜய புவனேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசிய வீடியோ 🔗 #Nepal #NepalFloods #Chennai
BBC News Tamil54,835 görüntüleme • 5 gün önce

நேபாளம் வெள்ளத்தின் போது வீட்டின் பால்கனியில் சிக்கியிருந்த குழுவினர் உயிர்தப்பியதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை 'பிபிசி வெரிஃபை' உறுதி செய்துள்ளது. பெருவெள்ளம் வந்த போது அந்தக் கட்டடம் உறுதியாக இருப்பது வீடியோவில் தெரிகிறது. சுற்றி இருந்த கட்டடம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. #Nepal #NepalFlood
BBC News Tamil25,580 görüntüleme • 6 gün önce

சுமார் 36 டன் 'மங்கூர்' மீன்கள் அழிக்கப்பட்டது ஏன்? சுமார் 36 டன் எடையுள்ள தாய்லாந்து 'மங்கூர்' மீன்கள் அழிக்கப்பட்டன. தாய்லாந்து மங்கூர் மீன்களின் சட்டவிரோத வளர்ப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீன்வளத்துறை நாக்பூரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. #Fish #Maharashtra
BBC News Tamil45,326 görüntüleme • 12 gün önce

மனைவிக்காக வீட்டுப் படிக்கட்டுகளில் லிஃப்ட் வைத்த கணவர் #AndhraPradesh #Lift
BBC News Tamil231,108 görüntüleme • 3 ay önce

தமிழ்நாட்டில் காணாமல் போன மகனை 23 ஆண்டுக்குப் பின் பஞ்சாபில் சந்தித்த தாய் கோவை நீலாம்பூர் ஆச்சாங்குளத்தைச் சேர்ந்த சுந்தரி காணாமல் போன தனது மகன் பிரகாசத்தை 23 ஆண்டுக்குப் பின் பஞ்சாபில் சந்தித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட காலம் பிரகாசம் கொத்தடிமையாக இருந்தது தெரியவந்தது. #Tamilnadu #Punjab
BBC News Tamil90,149 görüntüleme • 1 ay önce

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துரு விஷ்ணுவின் தந்தை விமல், விஜய் முதலமைச்சரானது பற்றி கூறியது என்ன? கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். #CMVijay #Karur #TVK
BBC News Tamil266,521 görüntüleme • 3 ay önce

4 அடி அகலமுள்ள குறுகிய வீட்டில் 4 தலைமுறைகளாக வாழும் குடும்பம் #Gujarat
BBC News Tamil159,527 görüntüleme • 3 ay önce

அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்த தவெக எம்எல்ஏ கமலி #AvinashiMLA #TVK
BBC News Tamil196,109 görüntüleme • 3 ay önce

நேபாளம் பெரு வெள்ளம்; மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாளம் ராணுவத்தினர் தேற்றினர். ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். #Nepal #NepalFlood
BBC News Tamil15,352 görüntüleme • 7 gün önce

'மனித கணினி’ சகுந்தலா தேவி தனது திறமையால் பிபிசி செய்தியாளரை வியப்பில் ஆழ்த்திய நேர்காணல் எண்கள் மற்றும் சிக்கலான கணக்கீடுகளைக் கையாள்வதில் சகுந்தலா தேவி வியக்கத்தக்க திறமைக் கொண்டிருந்தார். இதன் மூலம், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமாக இருந்தார். மனிதக் கணினி என்றும் அழைக்கப்பட்டார். பல்வேறு நேர்காணல்களில், தனது திறமைகளை 'ஒரு தெய்வீகப் பரிசு' என்றும், அவற்றை எப்போதும் 'மேம்படுத்திக்கொள்ள முயன்றதாகவும்' அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் பயணம் செய்து புகழ்பெற்ற ஒருவராக இருந்த சகுந்தலா தேவி, 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-அன்று தனது 83-வது வயதில் காலமானார். அவர் பிபிசி தொகுப்பாளர் டெனிஸ் டுஹியை வியப்பில் ஆழ்த்திய 1979-ஆம் ஆண்டு நேர்காணலின் ஒரு பகுதி இது.
BBC News Tamil37,468 görüntüleme • 20 gün önce
7:50
Sensitive content
This media may contain sensitive content.

முதலமைச்சரான விஜய்; கரூர் கூட்ட நெரிசலில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சொல்வது என்ன? #Karur #Vijay
BBC News Tamil183,064 görüntüleme • 3 ay önce

"சைனீஸ் என சொல்லாதீங்க; இந்தியர் என சொல்லுங்கள்" அருணாச்சலப் பிரதேசத்தின் இடாநகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தன்னை 'சைனீஸ்' என்று ஒருவர் அழைத்ததற்கு பதிலளித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து அவர் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசியுள்ளார். #ArunachalPradesh #Child
BBC News Tamil22,800 görüntüleme • 12 gün önce

யுக்ரேனில் நபரை பின்தொடர்ந்து சென்று வெடித்த ட்ரோன் #Ukraine #Russia #Drone
BBC News Tamil51,507 görüntüleme • 1 ay önce

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "உதயநிதி பேசாத ஒன்றை பேசியதாக சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்னையை திசைதிருப்புவது ஆகும்" என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்கப்பட்ட போது, "போலியான வீடியோ என்றால் கருத்தை திரும்ப பெறத் தயார்" என்றார். "உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சை மறுபரிசீலனை செய்வார், வருந்துவார் என்று நம்புகிறேன்" என முன்னதாக திருமாவளவன் கூறியிருந்தார். #Thirumavalavan #UdhayanidhiStalin
BBC News Tamil51,814 görüntüleme • 1 ay önce

சகோதரிகள் என்றே தெரியாமல் பழகிவந்த தோழிகள் #Sisters #Family #Adoption
BBC News Tamil35,778 görüntüleme • 21 gün önce

மேகேதாட்டு அணை குறித்து கர்நாடக மாநில மக்கள் கூறுவது என்ன? #Mekedatu #karnataka
BBC News Tamil40,066 görüntüleme • 24 gün önce