
DJayakumar
@djayakumaroffcl • 65,391 subscribers
EX Minister for Fisheries and Personnel and Administrative Reforms. Let's work together for the progress of Tamil Nadu.
Shorts
Videos

கடந்த ஆட்சியில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கையில் வைத்து கொண்டு தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்தது திமுக அரசு. ஆனால் தற்போதைய மாற்று தவெக அரசோ, இன்னும் ஒருபடி மேலாக சட்டசபையை சினிமா ஷீட்டிங் ஸ்பார்ட்டாகவே மாற்றிவிட்டது. நேற்று பள்ளிக்கூடங்களில் ரீல்ஸ் எடுப்பதும், போஸ்டர் ஒட்டுவதும் என தொடங்கி எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள் என ஒரு அரசாங்கமே ரசிகர் மன்றமானது வரையில், ஜனநாயகம்(ன்) மாபெரும் வெற்றி... உச்சக்கட்டம் - நமது இராயபுரம் எம்.எல்.ஏ வின் மக்கள் பணியை காண்க!!
DJayakumar48,678 views • 1 month ago

வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் பல லட்சம் இளைஞர்களின் சாபம்! இட்லி கடையில் தொடங்கிய பயணம் பராசக்தி வரை செல்ல எங்கே இருந்து பணம் வந்தது? சினிமாவில் துணை இயக்குநராக கூட தகுதி இல்லாதவரை தயாரிப்பாளராக மாற்றி தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளை குடும்பத்தின் செயல் திட்டமா? சிவப்பு சட்டையுடன்-சிரித்த முகத்துடன் நிதியமைச்சரை வரவேற்கும் காட்சி! பட்ஜெட்டிற்கு பணம் போதவில்லை என்றால் ஆகாஷ் பாஸ்கரனிடம் வாங்கி கொள்வார் போல...
DJayakumar314,863 views • 1 year ago

தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி. கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு? உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடி தேடி அழைத்துச் மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு? மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியது என்பது வெட்ட வெளிச்சமாகிறது!
DJayakumar295,685 views • 1 year ago

*இன்றைய அரசு பள்ளி மாணவர்கள்* *நாளை நமது* *தேசத்தின்* *தலைவர்கள்* *நேற்று ஒரு பெண் அமைச்சர், அரசு பள்ளியில் 'ஆய்வு' என்ற பெயரில், கேமராக்களை வைத்துக் கொண்டு, தனக்கு ஆங்கிலம் தெரியும் என்ற உடல் மொழியுடன்* *ஆய்வு என்ற பெயரிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தையிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும்; அதற்கு பதில் சொல்ல தடுமாறும் பொழுது, அந்த குழந்தையை வைத்துக் கொண்டே, இந்த மாணவிக்கு* *Simple சிம்பிளான கேள்வி தான் இதுவே தெரியவில்லை என்று அந்த குழந்தையை வைத்துக் கொண்டே சொல்வதும் ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்வதும்...* *இதைப் பார்க்கும் பொழுது, அந்த குழந்தைகளின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையும், ஒரு காயத்தையும் ஏற்படுத்தி இருக்கும்* *பள்ளி குழந்தைகளின், அவர்களின் அறிவு சார்ந்த சிறிய முயற்சியைக் கூட, குழந்தைகளை மனம் மகிழ்சியடையும் படியும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்திலும், 'All The Best' Super " என்று ஊக்கப்படுத்த வேண்டும். தட்டிக் கொடுக்க வேண்டும்.* *அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் முன்னாள் இந்திய ஜனாதிபதி இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம் பேரறிஞர் அண்ணா இதே மாணவி நாளை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக வரலாம்.* *இன்றைய தா வெ க அரசுக்கும் அமைச்சர்களுக்கும்* *நிர்வாகம் தான் தெரியவில்லை என்றால்* *குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர்!*
DJayakumar33,131 views • 2 months ago

தாயின் கருவறையை விட புனிதமானதாக கருதப்படும் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்தி கொலை! தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள்! தந்தையும்-மகனும் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய காட்டும் ஆர்வத்தை ஆட்சியில் காட்டியிருந்தால் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழுமா? இதன் பிறகு ’இது என் ஏரியா?’ என சினிமா நடிகர் போல வசனம் பேசி விளக்கம் அளிக்க Unfit அமைச்சர் அன்பில் மகேசை அனுப்பினால் ஆசிரியரின் உயிர் திரும்பி வந்து விடுமா? ஒரு குடும்பம் கொள்ளையடிக்க தமிழ்நாடு தினந்தினம் நிர்வாக சீர்கேட்டால் சீரழிகிறது! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது எள்ளளவும் இல்லை! #StalinGovtFails
DJayakumar206,839 views • 1 year ago

விருகம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவர் போஸ்டர் மீது செருப்பு வீசியதை வீடியோ எடுத்த பிரதீஸ் என்ற இளைஞரை கன்னியாகுமரி வரை சென்று காவல்துறை கைது செய்துள்ளது. அந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த திமுக அரசு,தனது சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டுகிறது என்பதற்கு இதுவே சாட்சி! எந்த மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தார்களோ, அந்த மக்களிடமே தன் அதிகார வெறியை தீர்ப்பதா? மூதாட்டியின் கோபத்திற்கு பின்னால் ஏதோ ஒரு கோரிக்கை உள்ளது. அதை கேட்க மறுத்து கைது செய்ய முயல்வது முட்டாள்தனம்! #SadistStalinGovt
DJayakumar165,960 views • 1 year ago

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். #FailedDMKGovt
DJayakumar175,752 views • 1 year ago