
DJayakumar
@djayakumaroffcl • 64,921 subscribers
EX Minister for Fisheries and Personnel and Administrative Reforms. Let's work together for the progress of Tamil Nadu.
Shorts
Videos

வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் பல லட்சம் இளைஞர்களின் சாபம்! இட்லி கடையில் தொடங்கிய பயணம் பராசக்தி வரை செல்ல எங்கே இருந்து பணம் வந்தது? சினிமாவில் துணை இயக்குநராக கூட தகுதி இல்லாதவரை தயாரிப்பாளராக மாற்றி தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளை குடும்பத்தின் செயல் திட்டமா? சிவப்பு சட்டையுடன்-சிரித்த முகத்துடன் நிதியமைச்சரை வரவேற்கும் காட்சி! பட்ஜெட்டிற்கு பணம் போதவில்லை என்றால் ஆகாஷ் பாஸ்கரனிடம் வாங்கி கொள்வார் போல...
DJayakumar314,849 görüntüleme • 1 yıl önce

தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி. கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு? உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடி தேடி அழைத்துச் மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு? மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியது என்பது வெட்ட வெளிச்சமாகிறது!
DJayakumar295,633 görüntüleme • 1 yıl önce

விருகம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவர் போஸ்டர் மீது செருப்பு வீசியதை வீடியோ எடுத்த பிரதீஸ் என்ற இளைஞரை கன்னியாகுமரி வரை சென்று காவல்துறை கைது செய்துள்ளது. அந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த திமுக அரசு,தனது சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டுகிறது என்பதற்கு இதுவே சாட்சி! எந்த மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தார்களோ, அந்த மக்களிடமே தன் அதிகார வெறியை தீர்ப்பதா? மூதாட்டியின் கோபத்திற்கு பின்னால் ஏதோ ஒரு கோரிக்கை உள்ளது. அதை கேட்க மறுத்து கைது செய்ய முயல்வது முட்டாள்தனம்! #SadistStalinGovt
DJayakumar165,916 görüntüleme • 1 yıl önce

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். #FailedDMKGovt
DJayakumar175,747 görüntüleme • 1 yıl önce