DMK Youth Wing's banner
DMK Youth Wing's profile picture

DMK Youth Wing

@dmk_youthwing184,976 subscribers

The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி

Shorts

காவல்துறை மானியக் கோரிக்கைக்கும் இந்த Dialogue-க்கும் என்ன சம்பந்தம்? #TNAssembly #TVKVijayFails

காவல்துறை மானியக் கோரிக்கைக்கும் இந்த Dialogue-க்கும் என்ன சம்பந்தம்? #TNAssembly #TVKVijayFails

21,424 görüntüleme

Mastering the art of staying cool! 😎 LOP Udhay #TNAssembly

Mastering the art of staying cool! 😎 LOP Udhay #TNAssembly

11,295 görüntüleme

The Leader & The Rapper. Udhay × Vedan

The Leader & The Rapper. Udhay × Vedan

257,635 görüntüleme

ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே.. 🙂 #TVKFails #DummyCM

ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே.. 🙂 #TVKFails #DummyCM

43,451 görüntüleme

This is Just the Beginning! ❤️💥 Udhay #UdhayanidhiStalin #தொடைநடுங்கி_அரசு #TVKVijay‌Fails

This is Just the Beginning! ❤️💥 Udhay #UdhayanidhiStalin #தொடைநடுங்கி_அரசு #TVKVijay‌Fails

12,081 görüntüleme

கரூர் #TVK கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். - செய்தி (27.09.2025) Meanwhile TVK Vijay : 👇 #KarurStampede #KarurTragedy #VijayFails

கரூர் #TVK கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். - செய்தி (27.09.2025) Meanwhile TVK Vijay : 👇 #KarurStampede #KarurTragedy #VijayFails

14,405 görüntüleme

“I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large." ~ Perarignar Anna Udhay #Dravidian_Stock #TNLeadsIndia #hindinotnationallanguage

“I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large." ~ Perarignar Anna Udhay #Dravidian_Stock #TNLeadsIndia #hindinotnationallanguage

34,430 görüntüleme

Videos

dmk_youthwing's profile picture

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் Udhay அவர்கள் இன்று சட்டசபையில் பேசும்போது, ‘’பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிட்டதைப்போல, செம்மஞ்சேரியில் திராவிட மாடல் ஆட்சியில், சுமார் 127 ஏக்கர் பரப்பளவில், ரூ.261 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட Global Sports City திட்டத்தையும் இந்த அரசு கைவிட்டுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் Aadhav Arjuna, கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை கைவிடவில்லை என்றும், மறுசீரமைப்பு செய்யவிருப்பதாகவும் பதிலளித்தார். ஆனால், அமைச்சரின் பதிலில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நீர்வளத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகள் இணைந்து, பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்திய பின்னரே, செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரத்தை அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, கடந்த 18.02.2026 அன்று, கழகத்தலைவர் M.K.Stalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அதை மறுசீரமைப்பு செய்யவிருப்பதாக இந்த அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில், சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருப்போரூரில் 120 ஏக்கர் நிலப் பரப்பில், 34 விளையாட்டுகளை உள்ளடக்கிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கவிருப்பதாக பேசியிருந்தார். இன்று சட்டசபையில் அவர், 42 விளையாட்டுகளுக்கென தனி ஒலிம்பிக் ஸ்டேடியம் அமைக்கவிருப்பதாகவும், அதற்கு விரிவான திட்ட அறிக்கை கோரி இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேநேரத்தில், செம்மஞ்சேரியில் கையகப்படுத்தப்பட்ட அந்த நிலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் முன்னுக்குப் பின் முரணான இந்த பேச்சை வைத்துப் பார்க்கும்போது, த.வெ.க ஆட்சிக்கு வந்த உடனேயே, திராவிட மாடல் அரசின் Global Sports City திட்டத்தைக் கைவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பரந்தூரில் விமான நிலையம் கூடாது என முதலமைச்சர் விஜய் விடாப்பிடியாக இருந்ததைப் போல, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமையக் கூடாது என்பதிலும் ஆதவ் அர்ஜுனா முரண்டு பிடிக்கிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திருப்போரூரில் புதிய திட்டம் அமைய இருப்பதாகச் சொன்னதைத் தொடர்ந்தே, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைய சாத்தியமில்லை என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன. இன்று அமைச்சரும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமையவிருக்கும் பகுதியில் வெள்ளத் தடுப்பு, வெள்ள நீர் மேலாண்மை குறித்து ஆலோசித்து, அதற்குத் தீர்வாக செம்மஞ்சேரி மற்றும் நாவலூர் பகுதிகளில் உள்ள குளங்களை ஆழப்படுத்துவது என்றும், புதிதாக 42 ஏக்கரில் குளம் உருவாக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதோடு, வெள்ளநீரை பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அனுப்பும் வகையில் 4.1 கிலோ மீட்டர் நீள மண் வடிகால் மற்றும் கான்கிரீட் கால்வாய்கள் அமைப்பது என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து விளையாட்டு நகரத்துக்கு புதிய மெட்ரோ இணைப்பு அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருந்தது. இப்படி எல்லாவகையான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகே, செம்மஞ்சேரியில் Global Sports City உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அமைச்சர் சொல்வதைப் போல எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று திராவிட மாடல் அரசு செய்யவில்லை. ஆறு மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை பெற்று, முதற்கட்ட பணிகளை தொடங்கப் போவதாக சொல்கிறார் அமைச்சர். அப்படியெனில், ஏற்கனவே அவர் திருப்போரூரில் தனக்குச் சாதகமான இடத்தில் புதிய விளையாட்டு நகரம் அமைக்க தீர்மானித்து விட்டாரா, செம்மஞ்சேரியில் கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாகும் என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆதவ் அர்ஜுனா பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பெரிய ஸ்டேடியங்கள் கட்டப்படவில்லை என்று உண்மைக்கு புறம்பாக பேசியிருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு தேசிய அளவில் விளையாட்டின் தலைநகராகத் திகழ்ந்ததை உலகறியும். தன் பேச்சில் ஜெயலலிதாவை மேற்கோள்காட்டிய ஆதவ் அர்ஜுனா அவர் வழியிலேயே, முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் முடக்குகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

DMK Youth Wing

13,993 görüntüleme • 7 gün önce