
DMK IT WING
@DMKITwing • 350,539 subscribers
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
Shorts
Videos

ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும். ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
DMK IT WING40,737 görüntüleme • 2 gün önce

முதலமைச்சர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்வது இப்பதான் முதல் முறை நடக்குதுனு புதுசா கிளம்பி வந்தவங்க கதையளக்குறாங்க. ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்குத் திடீரென நேரில் சென்று, மாணவர்களோடு கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு கண்டவர் நம் திராவிட நாயகர்.
DMK IT WING23,181 görüntüleme • 1 gün önce

செய்தியாளர்களைப் பார்த்தால் பயம், எதிர்கட்சிகள் பேசினால் பயம், அவர்களின் திட்டங்களின் பெயரைக் கேட்டால் பயம், தங்கள் கட்சி அமைச்சர்களின் சர்ச்கைகளால் பயமென பயத்திலேயே திரியும் த.வெ.க அரசு, தற்போது எதிர்கட்சியினர் வெளியே வந்தாலே பயத்தில் நடுங்க ஆரம்பித்துள்ளது. இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமிகு Kanimozhi (கனிமொழி) எம்.பி.யை த.வெ.க அரசின் காவல்துறையினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்தநாள் முதல் பொய், பித்தலாட்டம், அராஜகம், களவாணித்தனம் செய்வதையும், அடக்குமுறைகளை ஏவிவிடுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு காலம் தக்க பாடத்தை புகட்டும்!
DMK IT WING99,593 görüntüleme • 8 gün önce

தேர்தலுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு, இன்று சபரிவர்மன் வீடு ஏன் இவ்வளவு தூரமாகத் தெரிகிறது? காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தின் கதறல் கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லையா? அஜித்குமார் வீட்டிற்குச் சென்றது வெறும் தேர்தல் நாடகமா? சபரிவர்மன் மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவதாக ஒரு வார்த்தை சொல்லக்கூட உங்களுக்குத் திராணியில்லையா?
DMK IT WING34,037 görüntüleme • 4 gün önce

சபரிவர்மன் மரணத்தில் மௌனம் காக்கும் கோழை முதல்வர்! நாகர்கோவில் சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினரின் கண்ணீருக்கு, முதல்வர் விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? உங்கள் காவல்துறை செய்த கொடூரத்தை மூடி மறைக்க, 10 லட்சம் ரூபாயையும் அரசுப் பணியையும் வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாயை அடைக்கப் பார்க்கிறீர்கள் என அதை நிராகரித்துள்ளனர். சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர். ஆனால், உங்கள் அதிகார மமதை குறையவில்லையே! தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க அலைந்த உங்களுக்கு, ஆட்சிக்கு வந்ததும் சாமானிய மக்களின் உயிருக்கு மதிப்பு கொடுக்கத் திராணியில்லையா?
DMK IT WING19,019 görüntüleme • 2 gün önce

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அதைச் சரியாக வழிநடத்தத் தெரியாமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் அவர்களே உங்கள் கைகளில் இருக்கும் பொம்மை விளையாட்டுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முதலில் உங்கள் துறையைச் சீர் செய்யப் பாருங்கள். மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை, இன்று பொதுமக்களுக்கே அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. உங்கள் அரசியல் லாபங்களுக்காகவும் சுயவிளம்பரங்களுக்காகவும் காவல்துறையைப் பயன்படுத்தாமல், உண்மையாகவே மக்களைக் காப்பதற்குப் பயன்படுத்துங்கள். இனியாவது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, இந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
DMK IT WING14,967 görüntüleme • 2 gün önce

மேயர் பிரியா அவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது! மதிப்பிற்குரிய சென்னை மேயர் திருமிகு Priya அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே விளக்கியுள்ளார். திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை (Warrant of Precedence and Protocol) மீறி நடந்துகொண்டது தவெக MLA பல்லவி தானே தவிர, மேயர் பிரியா இல்லை என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனால், Protocol என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் என்ற வன்மத்தில் சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த 'Virtual Abusers'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மாண்புமிகு சபாநாயகர்! அரசு மரபுகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இணையத்தில் குரைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, பாடம் எடுத்த மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! இனியாவது Warrant of Precedence என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேசுங்கள் இணையத்து அறிவுஜீவிகளே! #TVKFails
DMK IT WING178,701 görüntüleme • 27 gün önce

பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று வாய் கிழிய வீர வசனம் பேசிய Dummy CM விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை இரத்து செய்துவிட்டு தன் மேலாளர் புது வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அரசு நிகழ்ச்சிகளை விட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் உங்களின் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் CM Saar. #TVKFails
DMK IT WING223,331 görüntüleme • 1 ay önce

தாய்மாமனின் தடியடி! . டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது கப்சா விஜயின் அரசு. நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா? முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!
DMK IT WING27,201 görüntüleme • 6 gün önce

பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு! பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு! கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது. நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா? முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
DMK IT WING26,793 görüntüleme • 6 gün önce