Dr ANBUMANI RAMADOSS's banner
Dr ANBUMANI RAMADOSS's profile picture

Dr ANBUMANI RAMADOSS

@draramadoss463,851 subscribers

தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.

Shorts

தமிழக அரசு ஒருபக்கம் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது, மறுபக்கம் உழவர்களை மிரட்டி என்எல்சிக்காக விளைநிலங்களை பறிக்கிறது. இதற்கு உதாரணம் இன்று கடலூர் காவல் கண்காணிப்பாளர்(SP) கரிவெட்டி கிராமத்திற்கு சென்று நிலங்களை கொடுக்க மறைமுகமாக மிரட்டுகிறார். ஏன் இந்த இரட்டைவேடம்?

தமிழக அரசு ஒருபக்கம் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது, மறுபக்கம் உழவர்களை மிரட்டி என்எல்சிக்காக விளைநிலங்களை பறிக்கிறது. இதற்கு உதாரணம் இன்று கடலூர் காவல் கண்காணிப்பாளர்(SP) கரிவெட்டி கிராமத்திற்கு சென்று நிலங்களை கொடுக்க மறைமுகமாக மிரட்டுகிறார். ஏன் இந்த இரட்டைவேடம்?

31,243 views

Videos

draramadoss's profile picture

வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா? ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம். ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்? அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து...... #pallikaranai #marshland #wetlands #PasumaiThayagam #PMK #Chennai

Dr ANBUMANI RAMADOSS

73,751 views • 11 days ago

draramadoss's profile picture

காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே! தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன். காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை. சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு. அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்! உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...! #காவிரிகாப்போம் #மேகதாதுஅணைதடுப்போம் #CauveryKappom #MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu

Dr ANBUMANI RAMADOSS

17,367 views • 1 month ago

draramadoss's profile picture

எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்! கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும். வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன். மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே.... இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்! #காவிரிகாப்போம் #மேகதாதுஅணைதடுப்போம் #CauveryKappom #MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu

Dr ANBUMANI RAMADOSS

10,055 views • 1 month ago

draramadoss's profile picture

தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!! சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் இன்று கலந்து கொண்டு பேசினேன். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று நான் ஆற்றிய உரை…. இந்த அவையில் உரையாற்றும் வாய்ப்பை வழங்கியதற்காக பேரவையின் துணைத் தலைவர் அவர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21-ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை செயல்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் (OHCHR’s Sri Lanka Accountability Project-SLAP) திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இலங்கை அரசின் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தல், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நீதிமன்றங்களில் சிவில், குற்றவியல் வழக்குகளை தொடருதல், உலகில் இப்போது செயல்பாட்டில் உள்ள பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றங்களுக்கு போர்க்குற்றம் குறித்த வழக்குகளை மாற்றுதல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விசாரிக்கும் வகையில் பன்னாட்டு குற்றவியல் நீதி வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்க வேண்டும் என்று ஐ,நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம். அதேபோல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, பரிந்துரை வழங்குவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் கீழ்க்கண்ட வகைகளில் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். *இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி, சாத்தியமாகக் கூடிய அனைத்து சட்டத் தளங்களிலும் வழக்குகளை வலிமையாக்குவதன் மூலம் பொறுப்புடைமைத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள வலிமையான குழுவை அதே நிலையில் பராமரித்தல் மற்றும் வலுப்படுத்துதல். * இதுவரை மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழினப்படுகொலை மற்றும் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் திட்டமிட்ட, பரவலான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பொறிமுறை மூலம் ஆதாரங்கள் திரட்டப்படுவதை உறுதி செய்தல். மூன்றாவதாக, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். * இலங்கையில் காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவும், இலங்கை அரசின் உதவியுடன் இந்து கோயில்கள் சிதைக்கப்படுவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை மாற்றத்தை தடுத்து நிறுத்துதல். * ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக இலங்கை அரசி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (ICC), பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றம் (ICJ) மற்றும் பிற பன்னாட்டு பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். #HRC54 #SL #SriLanka #TamilGenocide #WarCrimes UN Human Rights UN Human Rights Council United Nations Geneva UN Web TV

Dr ANBUMANI RAMADOSS

122,295 views • 2 years ago

draramadoss's profile picture

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்! மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தி வரும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர் மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்து ஈட்டிய இலாபம் முழுவதையும் வட மாநிலங்களில் முதலீடு செய்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மக்களின் விருப்பமும், வலியுறுத்தலும் ஆகும். மக்களின் இந்த உணர்வுகளை மதித்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்பட்டு கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் இதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது. எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன். கடலூர் மாவட்ட உழவர்களையும், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அனைத்து அமைப்புகளும், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், தமிழ்நாடு உழவர் பேரமைப்பு உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன். NLC India Limited (Official) #NLCIndiaAtrocities #NLCStopLandgrabing

Dr ANBUMANI RAMADOSS

67,024 views • 3 years ago

சிவகங்கையில் நியூஸ் தமிழ் செய்தியாளர் இராஜேஷ் மீது தாக்குதல்: திமுகவினரின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு! தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவகங்கையில் இன்று நடைபெற்ற News Tamil 24x7 தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் திமுக அரசின் தோல்விகள் குறித்து வினா எழுப்பியதற்காக திமுக ரவுடிகள் நடத்தியத் தாக்குதலில் அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் இராஜேஷ், மாவட்ட செய்தியாளர் சதாம் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த இலை கடை லட்சுமணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளங்கோவன் ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உலகிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சும் கட்சி என்றால் அது திமுக தான். பாசிசத்தின் ஒட்டுமொத்த அடையாளமும் அது தான். ஊரை அடித்து உலையில் போட்டாலும் திமுக தான் ஆகச்சிறந்த கட்சி என்று அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற அற்ப மனம் கொண்டது தான் திமுக தலைமை ஆகும். அதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் சிவகங்கையில் News Tamil 24x7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மீதும், பிற கட்சியினர் மீது திமுக நடத்தியிருக்கும் தாக்குதல் ஆகும். சிவகங்கையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததையும், திமுகவினர் மீது மக்கள் மத்தியில் நிலவும் கோபம் குறித்து செய்தியாளர் வினா எழுப்பியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அந்தக் கேள்விகளுக்கு விடையளித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு திமுகவிடம் விடை இல்லாததாலும், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததாலும் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையிலான குண்டர்கள் இந்தக் கொடியத் தாக்குதலை நடத்தியுள்ளனர். திமுகவுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய வன்முறையை திமுக கையிலெடுக்கும் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் நிறைந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக தாக்குதல்களை நடத்தியது; அடுத்து வந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. 1989-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டப்பேரவையில் அவரைத் தாக்கினார்கள். அடுத்து வந்த தேர்தலில் 233 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்திய பிறகு தமிழ்நாட்டுக்கு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுகவினர் கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது பெண்மையை பழித்தார். அடுத்த சில மாதங்களில் அவரது காலில் விழுந்து கூட்டணி அமைத்தனர். எப்போதெல்லாம் திமுகவுக்கு தோல்வி பரிசாகக் காத்திருக்கிறதோ, அப்போதெல்லாம் திமுக வன்முறையை கையில் எடுப்பது வாடிக்கையாகும். அப்படித்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடையப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப் போகிறது என்பதையே இது காட்டுகிறது. ஊடகத்தின் விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு திமுக பாசிசக் குவியலாக மாறியிருக்கிறது. நியூஸ் தமிழ் செய்தியாளரைத் தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். CMOTamilNadu
1:04

Sensitive content

This media may contain sensitive content.

draramadoss's profile picture

சிவகங்கையில் நியூஸ் தமிழ் செய்தியாளர் இராஜேஷ் மீது தாக்குதல்: திமுகவினரின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு! தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவகங்கையில் இன்று நடைபெற்ற News Tamil 24x7 தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் திமுக அரசின் தோல்விகள் குறித்து வினா எழுப்பியதற்காக திமுக ரவுடிகள் நடத்தியத் தாக்குதலில் அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் இராஜேஷ், மாவட்ட செய்தியாளர் சதாம் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த இலை கடை லட்சுமணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளங்கோவன் ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உலகிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சும் கட்சி என்றால் அது திமுக தான். பாசிசத்தின் ஒட்டுமொத்த அடையாளமும் அது தான். ஊரை அடித்து உலையில் போட்டாலும் திமுக தான் ஆகச்சிறந்த கட்சி என்று அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற அற்ப மனம் கொண்டது தான் திமுக தலைமை ஆகும். அதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் சிவகங்கையில் News Tamil 24x7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மீதும், பிற கட்சியினர் மீது திமுக நடத்தியிருக்கும் தாக்குதல் ஆகும். சிவகங்கையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததையும், திமுகவினர் மீது மக்கள் மத்தியில் நிலவும் கோபம் குறித்து செய்தியாளர் வினா எழுப்பியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அந்தக் கேள்விகளுக்கு விடையளித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு திமுகவிடம் விடை இல்லாததாலும், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததாலும் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையிலான குண்டர்கள் இந்தக் கொடியத் தாக்குதலை நடத்தியுள்ளனர். திமுகவுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய வன்முறையை திமுக கையிலெடுக்கும் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் நிறைந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக தாக்குதல்களை நடத்தியது; அடுத்து வந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. 1989-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டப்பேரவையில் அவரைத் தாக்கினார்கள். அடுத்து வந்த தேர்தலில் 233 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்திய பிறகு தமிழ்நாட்டுக்கு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுகவினர் கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது பெண்மையை பழித்தார். அடுத்த சில மாதங்களில் அவரது காலில் விழுந்து கூட்டணி அமைத்தனர். எப்போதெல்லாம் திமுகவுக்கு தோல்வி பரிசாகக் காத்திருக்கிறதோ, அப்போதெல்லாம் திமுக வன்முறையை கையில் எடுப்பது வாடிக்கையாகும். அப்படித்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடையப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப் போகிறது என்பதையே இது காட்டுகிறது. ஊடகத்தின் விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு திமுக பாசிசக் குவியலாக மாறியிருக்கிறது. நியூஸ் தமிழ் செய்தியாளரைத் தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். CMOTamilNadu

Dr ANBUMANI RAMADOSS

10,486 views • 4 months ago