
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu • 677,704 subscribers
General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu
Shorts
Videos

தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை AIADMK ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும். என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே… தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம். நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்! தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK63,712 views • 2 months ago

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அறிவித்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு 2019ம் ஆண்டு, ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் மாநில நிதியின் கீழ், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன். இத்திட்டத்தின்படி பவானி ஆற்றின் உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரினை காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து நீரேற்று முறையில் குழாய்களின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலுள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குட்டைகளும், சுமார் 24,500 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். 2021ல், எங்களது ஆட்சி முடிவில், சுமார் 90 சதவீத பணிகள் முடிவுற்றிருந்தது. எஞ்சிய 10 சதவீத பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் நிலையில் இருந்தது. அஇஅதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டது இந்த விடியா திமுக அரசு. நான் பலமுறை சட்டமன்றத்திலும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முடிக்க வலியுறுத்தியும், 3 ஆண்டுகள் கழித்து ரூ.250 கோடி கூடுதல் செலவில், எஞ்சிய 10 சதவீதப் பணிகளை முடித்து, இன்றுதான் பொம்மை முதலமைச்சர் திறந்துள்ளார். இதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எஞ்சியப் பணிகளை முடித்து திறந்திருந்தால், மூன்று மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவை மற்றும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இதுபோல ஏற்கனவே சேலம் மாவட்டம், தலைவாசலில் எங்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், கிடப்பில் போட்டுள்ள காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும் என்றும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். M.K.Stalin CMOTamilNadu AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK514,623 views • 1 year ago

2021-ல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தரமாக வழங்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் வயிராற உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழாவும் நடத்தியது விடியா திமுக அரசு. விடியா திமுக அரசின் மேற்கண்ட செயல்பாட்டினை உடனடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக கடுமையாக எதிர்த்தேன். அதனையடுத்து, அம்மா உணவகங்களை மூடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது விடியா திமுக அரசு. உண்மை நிலை இவ்வாறு இருக்க, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சர் 19.7.2024 அன்று, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட விடியா திமுக அரசின் முதலமைச்சர், உணவின் சுவையை சோதித்தார். முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதை போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, விடியா திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார். அம்மா ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது இந்த விடியா திமுக அரசு. திரு. ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்? இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, அம்மா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் CMOTamilNadu AIADMK - -SayYesToWomenSafety&AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK515,371 views • 2 years ago

நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் M.K.Stalin-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை, ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது, #ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்? தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்? அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா? அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! #ByeByeStalin AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK187,560 views • 9 months ago

தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்! மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது! பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு! இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்! ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க AIADMK எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும். தொற்று நோய் தடுத்து, விவசாயம் செழிக்கச் செய்து, கல்வியில் புரட்சி செய்து, தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும், AIADMK தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும், உங்கள் பொன்னான வாக்குகளை #இரட்டைஇலை சின்னத்திலும், #தாமரை சின்னத்திலும், #மாம்பழம் சின்னத்திலும், #குக்கர் சின்னத்திலும் அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். “அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது! சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும். அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்! #அண்ணாதிமுக_WINNING!✌️ #நல்லாட்சி_COMING!🌱 #Vote4AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK68,875 views • 3 months ago

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது. இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்! இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும். CMOTamilNadu AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK269,393 views • 2 years ago

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும். பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். AIADMK News7 Tamil NewsJ
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK284,153 views • 2 years ago

சிறு பிள்ளையின் மருத்துவ சிகிச்சை என்பது கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது, அதிலும் நமக்காக இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு காவலரின் குழந்தைக்கு இன்னும் கவனத்துடன் இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகத் திறனற்ற இந்த அரசு இதிலும் மெத்தனம் காட்டி இருப்பது வருந்தத்தக்கது. பெண் பிள்ளைகளுக்கு சுகாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தமிழ்நாடு திணறி வருவதையும் , ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை இருப்பதையும் , நம்பர் ஒன் முதல்வர் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் இந்த விடியா முதல்வர் எப்போது உணர்வார்? M.K.Stalin CMOTamilNadu
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK308,911 views • 3 years ago

கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும் , கண்டணத்துக்கு உரியதாகும், சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன். CMOTamilNadu AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK210,263 views • 2 years ago

உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல் , சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான CPIM Tamilnadu மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் (கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan) அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று , M.K.Stalin அரசு அனைத்து விதமான "கோரிக்கைக் குரல்களை" ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof! ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK46,329 views • 5 months ago

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொகுதி என்ற பெருமைக்குரிய #ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்கள் அளித்த மகத்தான வரவேற்பிற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். திமுக-வின் கூட்டணி வெற்றுக் கூட்டணி; திமுக வேட்பாளர் பட்டியல் வெற்றுப் பட்டியல்; நாளை அவர்கள் சொல்லப்போவது வெற்று வாக்குறுதிகள்! ஆனால் AIADMK கூட்டணி வெற்றிக் கூட்டணி; நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்கள்; நமது தேர்தல் அறிக்கை மக்களின் மனங்களில் சென்று வெற்றி அடைந்துவிட்டது. அஇஅதிமுக பெறப்போகும் வரலாற்று வெற்றியை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இன்றே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு இணைந்து நானும் கழகத் துண்டை சுழற்றி, நாளை நமது நல்லாட்சி மலரப் போவதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டேன்! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK37,352 views • 4 months ago

மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமாரின் தாயாரிடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாகப் பேசினேன்; என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன். தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் AIADMK துணை நிற்கும்! #JusticeForAjithkumar
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK89,411 views • 1 year ago

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம், "மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி, நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை, இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, AIADMK தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! #என்றென்றும்_அம்மா
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK58,153 views • 8 months ago

'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்... AIADMK எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்கி, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்! #என்றும்_எங்கள்_வாத்தியார்MGR #MGR109
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK45,454 views • 6 months ago

#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய AIADMK-க்கான வெற்றி முழக்கம் திரு. M.K.Stalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின். தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை! திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்? திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்? தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்! “My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே? 2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே? இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK28,723 views • 4 months ago

கிராமப்புற திறன் மற்றும் புத்தாக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிற Zoho -வின் #Tenkasi அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டேன். உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் பெருநகரங்களைத் தாண்டி செழிக்க முடியும் என்பதை நிரூபித்ததற்காக Sridhar Vembu மற்றும் அவரது அணியினர்க்கு எனது பாராட்டுகள். Visited the Zoho #Tenkasi office today — A shining example of rural innovation and talent empowerment. My appreciation to Sridhar Vembu and his team for proving that world-class technology can thrive beyond metros. AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK66,279 views • 1 year ago

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. 43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது. மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்? 2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு? பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக M.K.Stalin அரசு உறுதி செய்திட வேண்டும் . பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! AIADMK #DMKFailsTN
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK32,050 views • 4 months ago

#AsianYouthGames-ல் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன். எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள். #Kabaddi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK45,881 views • 9 months ago