
இரா.சரவணன்
@erasaravanan • 36,655 subscribers
முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...
Shorts
Videos

‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… #Nandhan #நந்தன்
இரா.சரவணன்252,894 Aufrufe • vor 1 Jahr

தம்பி முத்துக்குமரனை நேரில் பார்த்ததோ பேசியதோ இல்லை. படம் பார்க்கச் சொல்லிக் கேட்கவுமில்லை. #நந்தன் பார்த்து தம்பி பேசியிருக்கும் வார்த்தைகள் நன்றிக்குரியவை… தானாக முளைக்கும் காட்டாமணக்கு போல் இத்தகைய தன்னெழுச்சியான கருத்துகளால் அமேஸான் தளத்தில் அகில இந்திய அளவில் 4-வது இடத்தில் இருக்கிறான் நந்தன்… #NandhanOnPrime #Nandhan
இரா.சரவணன்199,585 Aufrufe • vor 1 Jahr

"படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். #நந்தன் அருமையான படைப்பு” -சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி 🙏 #Nandhan M.Sasikumar P.samuthirakani Trident Arts
இரா.சரவணன்184,037 Aufrufe • vor 1 Jahr

நாங்கள் #வேங்கைவயல் போயிருந்த போது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கச் சொல்லி கதறிய பெண்மணி… இப்போது அவர்களில் சிலரையே குற்றவாளியாக்கி இருக்கிறது காவல் துறை. அவர்களே மலம் கலந்து அவர்களே பருகுவார்களா? பாதிக்கப்பட்டவர்களே பலிகடா ஆக்கப்படுவது நியாயமாரே?
இரா.சரவணன்125,224 Aufrufe • vor 1 Jahr

‘நந்தன்’ கோரிக்கை நடந்தேறியது… தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் பேசினார்கள். “தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை அனைத்து பி.டி.ஓ.க்களும் உறுதி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் வேறு யாரும் கொடியேற்றக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை” என அரசு எச்சரித்ததாக சொன்னார்கள். சில பஞ்சாயத்துகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட, எந்தக் காலத்திலும் நிகழாத மாற்றமாக 79-வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற நல்லோர் எல்லோருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி… M.Sasikumar Ghibran Vaibodha P.samuthirakani VIJAY TV MOVIES
இரா.சரவணன்78,446 Aufrufe • vor 11 Monaten

ரசிகர் மன்றங்களின் மீது ஒருபோதும் பெரிய அபிப்பிராயம் இருந்தது கிடையாது. ஆனால், மக்களுக்கான நலப்பணிகளில் சூர்யா மன்றத்தினர் காட்டுகிற அக்கறை மகத்தானது. சூர்யா சாரின் 50வது பிறந்த நாளில் தமிழ்நாடு 800, கேரளா 250, பாண்டிச்சேரி 50, ஆந்திரா 50, கர்நாடகா 50, தெலுங்கான 50 என மொத்தமாக 1250 நற்பணி நிகழ்வுகள்… கோடி ரூபாயை தாண்டிய பேருதவிகள்… 5000 தம்பிகளின் இரத்த தானங்கள் என அவர் மன்றத்தினர் செய்திருக்கும் மக்கள் பணி வியக்க வைக்கிறது. நீங்க நல்லா இருக்கனும் Suriya Sivakumar சார்…
இரா.சரவணன்60,598 Aufrufe • vor 1 Jahr

செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார். பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம். ‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை? என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.
இரா.சரவணன்64,635 Aufrufe • vor 1 Jahr

“நந்தன் படம் பார்த்தேன். திருப்பி அடிக்காத பாட்ஷாவை பார்த்தது போலிருக்கிறது. ரொம்ப சூப்பரா இருக்கு. உங்களையும் அறியாமல் நிறைய இடத்தில் க்ளாப்ஸ் அடிப்பீங்க” -சூரி அண்ணனின் வாழ்த்து நெகிழ வைக்கிறது. #நந்தன் வெல்வான்… Actor Soori M.Sasikumar P.samuthirakani #NandhanFromSep20
இரா.சரவணன்62,417 Aufrufe • vor 1 Jahr

“ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களின் கதையைப் படமாக்கிய எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் நிஜமாகவே வாழும் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை…” மாற்று ஊடக மையம் நடத்திய சென்னை வீதி விருது விழாவில் ‘நந்தன்’ கௌரவிக்கப்பட்ட தருணம்… ஐயா காளீஸ்வரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி 🙏
இரா.சரவணன்36,495 Aufrufe • vor 1 Jahr

நெல் திருவிழாவில் கலந்துகொள்வதாக 6வருடத்துக்கு முன் நெல் ஜெயராமனிடம் உறுதி அளித்தார் சிவகார்த்திகேயன். சொன்னபடியே இந்த வருட நெல் திருவிழாவில் கலந்துகொண்டார். புதிய வரவாக #பவன் புரட்சி படைப்பாக #அமரன் -நெகிழ்வும் மகிழ்வுமாக இருக்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கு நல் வாழ்த்துகள்.
இரா.சரவணன்13,092 Aufrufe • vor 2 Jahren
Keine weiteren Inhalte verfügbar