இரா.சரவணன்'s banner
இரா.சரவணன்'s profile picture

இரா.சரவணன்

@erasaravanan36,655 subscribers

முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...

Shorts

அஜீத் சாரின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை... சாமி சரணம் ஐயப்பா... #Thunivublockbuster #thunivu #துணிவு_பொங்கல்

அஜீத் சாரின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை... சாமி சரணம் ஐயப்பா... #Thunivublockbuster #thunivu #துணிவு_பொங்கல்

228,571 просмотров

Videos

erasaravanan's profile picture

‘நந்தன்’ கோரிக்கை நடந்தேறியது… தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் பேசினார்கள். “தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை அனைத்து பி.டி.ஓ.க்களும் உறுதி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் வேறு யாரும் கொடியேற்றக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை” என அரசு எச்சரித்ததாக சொன்னார்கள். சில பஞ்சாயத்துகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட, எந்தக் காலத்திலும் நிகழாத மாற்றமாக 79-வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற நல்லோர் எல்லோருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி… M.Sasikumar Ghibran Vaibodha P.samuthirakani VIJAY TV MOVIES

இரா.சரவணன்

78,446 просмотров • 11 месяцев назад

erasaravanan's profile picture

செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார். பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம். ‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை? என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.

இரா.சரவணன்

64,635 просмотров • 1 год назад

Больше нет контента для загрузки