
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK
@imSurjithKumar • 1,355 subscribers
District Secretary | AIADMK IT WING | Chennai Sub-Urban District | Proud AIADMK-ian
Shorts
Videos

காங்கிரஸின் அமைச்சர், "எங்க ராகுல் காந்தி பிரதமரானுதும் நீட் ரத்து செய்யப்படும்" என உருட்டியதற்கு பொடனியிலேயே அடித்து வெளுத்து விட்டார் எடப்பாடியார். சுவாரஸ்யம் என்னவென்றால், "காங்கிரஸ் நீங்க நீட் கொண்டு வந்ததால தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.. நீங்க கொண்டு வராம இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லை" என அவர் சொல்லவும் பின்னால் அமர்ந்திருக்கக் கூடிய திமுக உறுப்பினர்களான மெய்யநாதன் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டியது தான்! அதை விட உச்சகட்ட காமெடி மெய்யநாதனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் திமுக உறுப்பினர் மேஜையைத் தட்டப் போக, மெய்யநாதனும் சிவசங்கரும், "டேய் என்னடா பண்ற..?" என்பது போல பதற, அந்த உறுப்பினர் டக்கென அதை சமாளித்தது தான்! காட்டியும் குடுத்து.. ஊட்டியும் குடுத்து.. இந்த திமுக படும் அந்த வேதனை இருக்கே வேதனை..! ரோஃபல் 🤣 #TNAssembly
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK49,110 görüntüleme • 17 gün önce

"கல்லையே அமைச்சராக்கியவர் எங்கள் அண்ணன். மரகதம் கிடைத்தால் விட்டு விடுவாரா?" என ஓப்பனாக மரகதம் குமரவேலை மதுராந்தகத்தின் இடைத்தேர்தல் வேட்பாளராக டிக்ளேர் செய்கிறார் Aadhav Arjuna தவெக சார்பாக தலித் எழில்மலையின் மகளான எழில் கேத்ரின் மதுராந்தகத்தில் போட்டியிட்டு இரட்டை இலை சின்னத்திடம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அவரையே நிறுத்தலாமே? ஏன் நிறுத்தவில்லை? அவர் கூட வேண்டாம்.. தவெகவிற்காக உழைத்த வேறொரு கல்லை நிறுத்தலாமே? இப்படி கூச்சமே இல்லாமல் மாற்று கட்சி தொண்டனின் உழைப்பால் வெற்றி பெற்ற ஒருவரை அமைச்சர் ஆசை காட்டி ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அதே நபரை TVK Party HQ கட்சியின் வேட்பாளராக நிறுத்தி களம் காண வைப்பது தான் தூய சக்தியா? சில நாட்களுக்கு முன் N Anand, "தளபதிக்கு முப்பது வருடமாக போஸ்டர் ஒட்டியவர்களுக்கு தான் முன்னுரிமை. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் பொறுமையாக உழைக்க வேண்டும்" என சொன்ன நிலையில் அவரை மேடையில் வைத்துக் கொண்டே ஓடி வந்த மரகதத்தை மறைமுகமாக வேட்பாளராக அறிவிப்பது அவலம் இல்லையா? அப்படி என்றால் பொதுச்செயலாளரான புஸ்ஸிக்கு அதிகாரம் இல்லையா? சொந்த கட்சியிலேயே லாட்டரி மாஃபியாவின் ஆதிக்கம் பீடித்திருக்கும் போது மாற்றுக் கட்சியினரை எளிதாக ஆசை காட்டி இழுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை தானே? "இணைப்பு விழாவிற்கே ஏழு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்றால்.." என இக் வைக்கும் ஆதவ் சொல்ல வருவது என்ன? இடைத்தேர்தலில் மொத்த அமைச்சரவையையும் இறக்கி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வெற்றி பெற வைப்போம் என்ற ஆணவம் தான் மாற்றமா? இதெல்லாம் கேவலம் இல்லை என்றால் திமுகவும் அண்ணா திமுகவும் இணைந்து இந்த கழுதை பேரத்தை செருப்பால் அடிப்பதில் எந்தக் கேவலமும் இல்லை! #மதுராந்தகம்
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK42,182 görüntüleme • 2 ay önce

குறுவை சாகுபடி என்றால் என்ன? எந்தெந்த தேதியில் நீர் கிடைத்தால் எவ்வளவு மகசூல் கிடைக்கும்? குறித்த காலத்திற்கு காவிரி நீர் கிடைக்காவிடில் எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் பட்டுப் போகும் என அநாயாசமாக எந்த குறிப்பும் இல்லாமல் நிதானத்துடனும் பக்குவத்துடனும் எடுத்துரைக்கிறார் எடப்பாடியார் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK சென்னை போன்ற நகரப் பகுதிகளில் எந்த அரசியல் புரிதலும் இல்லாமல் மக்கள் இந்த பித்தலாட்ட கும்பலை தேர்ந்தெடுத்ததைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வேளாண் குடி மக்களுக்கு என்ன தான் ஆனது? எடப்பாடியாரைப் போலவே அர்த்தம் பொதிந்த உரை திருமதி Sowmiya Anbumani அவர்களுடைய மேகதாது அணை குறித்த உரை! தமிழக சட்டபேரவையில் மக்கள் நலனுக்காக பேசவும் தலைவர்கள் உள்ளார்கள் என்பதே இப்போதைக்கான ஆறுதல்! #TNBudget
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK11,892 görüntüleme • 27 gün önce

"மாவட்டக் கழகச் செயலாளரும் ஐடி விங் நிர்வாகிகளும் என்னை தொடர்ந்து சமூகவலைதளத்தில் கொச்சைப் படுத்தினார்கள்.. அதை எடப்பாடியார் கண்டிக்கவில்லை" என்கிறார். அடுத்த நொடியே, "எடப்பாடியார் என்னை மரியாதையோடு தான் நடத்தினார்" எனவும் சொல்கிறார் Maragatham Kumaravel - Say No To Drugs & DMK "இருக்கின்ற இடத்தில் இருந்தே இருக்கும் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதால் எங்களை பச்சோந்தி என்றோ பயந்தாங்கொள்ளி என்றோ எண்ணி விட வேண்டாம்" என்ற மனநிலையில் அக்கா இருப்பது தெளிவாகிறது! செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர் என மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகம். அதன் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் அவர்கள் திருப்போரூர் தவிர மற்ற இரண்டு இடங்களில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த பெருமைக்குரியவர்! அவரோடு சேர்ந்து மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை உழைத்த நிர்வாகிகளும் கடைநிலைத் தொண்டனும் பொதுச்செயலாளரை அவமானப்படுத்தி நீங்கள் ஆடிய சுயநல ஆட்டத்தைக் கண்டு ஆற்றாமையில் வசைபாட தான் செய்வான்! சொல்லப் போனால், "அடிக்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள அலர்ற.." என்பது போல உங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாமல் வேலுமணி, சண்முகம், விஜய பாஸ்கரை தான் பெருமளவில் கண்டித்து எழுதினோம். ஒன்றிய பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என ஏற்றி வைத்து அழகு பார்த்த இயக்கத்தை கேவலம் லாட்டரி சீட்டு கும்பலிடம் காட்டிக் குடுத்த உங்களை திட்டுவதற்கு எல்லாம் அகராதியிலேயே வார்த்தைகள் கிடையாது! இலவு காத்த கிளிகளாக வாழ்க்கை முழுக்க விசிலை வாயில் வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டே இருக்க அண்ணா திமுக காரனின் வாழ்த்துக்கள்..! #WeStandWithEPS #எதுவரினும்_எடப்பாடியார் 💪
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK32,083 görüntüleme • 3 ay önce

என்னுடைய சொந்த கிராமம் அமைந்திருக்கும் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 80-களில் 'மாடர்ன் டெய்லர் ஆறுமுகம்' என பரவலாக அறியப்பட்டவர் தான் அண்ணன் திரு திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் அவர்கள். புரட்சித் தலைவர் காலந்தொட்டு கழகத்திற்காக நீண்ட நாள் உழைத்து ஒன்றியச் செயலாளராக உயர்ந்து சமீபத்தில் தான் மாவட்டக் கழகச் செயலாளர் என்ற பொறுப்புக்கு வந்தார். அமைப்பு ரீதியாக அவரது பொறுப்பின் கீழ் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகிறது. இதில் திருப்போரூர் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அங்கே வழக்கறிஞர் ஐயா Balu Kaliyaperumal போட்டியிட மற்ற இரண்டு தொகுதிகளான செய்யூர் மற்றும் மதுராந்தகம் தனி தொகுதிகளில் இரட்டை இலை களம் கண்டது. செய்யூர் தொகுதியில் எங்கள் மரியாதைக்குரிய பெரும்பாக்கத்தார் Perumbakkam E Rajasekar அவர்களும் மதுராந்தகத்தில் இந்தப் பெண்ணும் வெற்றி பெற்ற நிலையில் ஆறுமுகம் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை என்பது என்ன மாதிரியான வாதம்? ஏற்றி வைத்து அழகு பார்த்த கழகத்தையும் உடன் பழகிய தொண்டர்களையும் ஓவர் நைட்டில் மறந்து எட்டி மிதித்து ஓடியவருக்கு திருக்கழுக்குன்றம் ஆறுமுகத்தின் விசுவாசத்தைப் பற்றி பேச என்ன தார்மீக தகுதி உள்ளது? #அதிமுககாரன் #மதுராந்தகம்
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK16,532 görüntüleme • 2 ay önce

"யூ சீ மாலதீ.. விஜய் என்னும் மாபெரும் அலை வீசிய போதே எடப்பாடி பழனிசாமி என்ற ஒற்றை மனிதர் 47 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது சாதாரணமான வெற்றி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!" -பொறை வீசாமல் இருந்திருந்தால்... "கட்சி ஒற்றுமையாக இருக்கும் போதே எடப்பாடி பழனிசாமி வெறும் 47 தொகுதிகளில் தான் ஜெயித்திருக்கிறார். இனி இளைஞர்கள் இல்லாமல் அரசியல் இல்லை.. அதிமுக தலைமை மாற வேண்டும்" -பொறை வீசிய பிறகு... Savukku Shankar என்னும் 'கிருஷ்ணவேணி' 🫢 #SavukkuShankar
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK16,762 görüntüleme • 2 ay önce
Daha fazla içerik yok.