
ஜெயராமன் திமுக
@jayaraman418 • 14,573 subscribers
சுயமரியாதையுள்ள திமுக தொண்டன்.
Shorts
Videos

மதுரையில் பெருகி வரும் ஆட்டோக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள். மதுரை. மதுரையில் உச்சகட்ட மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து - நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள். மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் அரசு பேருந்து அவுட்போஸ்ட் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பின்னால் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டிவந்த இருவர் அரசு பேருந்து மீது மோதியது. அரசு பேருந்தில் மாணவர்கள் பயணித்து வந்த நிலையில், நல்வாய்ப்பாக மாணவர்கள் காயமின்றி தப்பினர். உச்சகட்ட மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவிற்குள் இருந்து வெளியேற முடியாத அளவிற்கு போதையில் வெளியேற முடியாமல் தவித்ததோடு எவனையும் என்னை எதுவும் செய்ய முடியாது என கூறி சவால்விட்டபடி நின்றார். உச்சகட்ட மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை இயக்கிய நிலையில் நல்வாய்ப்பாக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் தப்பினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் ஷேர்ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுநர்கள் தொடர்ந்து மதுபோதையிலும் கஞ்சா போதையிலும் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஆளாகி வரும் நிலை உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில், மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை மீறி, அரசு நகரப் பஸ்கள் போல தொடர்ந்து செயல்படுகிறது. மேலும் பல ஆட்டோக்கள் உரிய பெர்மிட் இன்றியும், விதிகளை மீறி இயக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். தலை கவசம் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரை பாய்ந்து பிடிக்கும் காவல் துறையினர். விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை கண்டு காணாத போல விடுவது ஏன் என்பது பொதுமக்களின் புகார் ஆகும். மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டு, மாட்டுத்தாவணி, அண்ணாநகர், அரசு மருத்துவமனை, சிம்மக்கல்,தெப்பக்குளம், புதூர், சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், காளவாசல், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி, பயணிகள் பஸ்களுக்கு சென்று ஏறாதவாறு இடையூறாக நிறுத்துகின்றனர். மதுரை காவல் ஆணையாளர், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரிடையாக ஆய்வு செய்து, விதிகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. DELTA news..
ஜெயராமன் திமுக80,335 views • 17 days ago
6:30
Sensitive content
This media may contain sensitive content.

வந்து எங்களை சந்தோஷப்படுத்தினால் மட்டுமே #TVKகட்சியில் பொறுப்பு வாங்கித்தருவேன் என்று மிரட்டினார்கள். நான் பலமுறை இதை வேண்டாம் என்று கூறியதற்கு என்னிடம் அவர்களது நோக்கமான தவறுதலாக நடப்பதே இருந்து வந்தனர். மேலும் என்னிடம் பிரைட்டர் மற்றும் ரூஸ்வெல்ட் ஆகியோர்கள் பலமுறை எனது செல்போனில் தொடர்பு கொண்டு என்னிடம் ஆபாசமாக பேசியதுடன் Whatsapp-ல் வீடியோ கால் வரும்படியும் இரவு நேரங்களில் அழைப்பார்கள். நான் இதை தவிர்த்தால் மாறி மாறி Whatsapp-ல் அசிங்கமான படங்களை அனுப்புவார்கள். நான் பெண் என்று கூட பாராமல் கட்சியில் மேல்பொறுப்பு தருவதாக என்னிடம் ஆபாசமாக பேசி எனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தினார்கள். பொறுப்பு அமைச்சர் அவர்களே இவர்கள் மீது நீங்கள் இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?
ஜெயராமன் திமுக48,019 views • 19 days ago

மார்ட்டின் மருமகனை ஓட விட்டிருக்க வேண்டாமா?கதறடித்திருக்க வேண்டாமா?
ஜெயராமன் திமுக15,102 views • 6 days ago