John Pandian's banner
John Pandian's profile picture

John Pandian

@JohnPandianTMMK17,723 subscribers

Party Leader Tamilaga Makkal Munnetra Kazhagam- TMMK PARTY

Videos

JohnPandianTMMK's profile picture

எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். ஆனால் திமுகவின் மிரட்டல்களால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” என தவெகவைச் சேர்ந்த நிர்வாகி திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுவெளியில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ் சினிமாவில் 50-ஆண்டுகாலமாக முத்திரை பதித்து பல்வேறு விருதுகளைப் பெற்று, இமயம் தொட்டவர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள், பொதுவெளியில் பேசி மக்கள் மனதில் பிரபலமாக்கலாம் என்ற எண்ணத்திலும், இது போன்று பேசி பத்திரிக்கையின் கவனத்தை பெறலாம் என்ற நோக்கதோடு செயல்படும் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற தவெக தலைமை அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி காந்த் அவர்களிடமும், அவரது ரசிகர்களிடம் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். Rajinikanth Aadhav Arjuna

John Pandian

57,796 görüntüleme • 4 ay önce

JohnPandianTMMK's profile picture

தமிழக மக்களின் விருப்பம் தெளிவாக வெளிப்பட்டுள்ள இந்த சூழலில், காலதாமதமின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடாகும். மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை மதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும் செயல்படுவதும் ஆளுநரின் அடிப்படை பொறுப்பாகும். அந்த அடிப்படையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் இயக்கத்திற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரின் ஒருமித்த குரலாகும். TVK Vijay

John Pandian

35,530 görüntüleme • 2 ay önce

JohnPandianTMMK's profile picture

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூர ஆயுதங்களால் தாக்கியிருப்பது கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறி தாக்குதலில் ஒரு இளைஞருக்கு கையில் பலத்த வெட்டு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. மேலும், சில இளைஞர்கள் சாதிவெறியுடன் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல்கள் வெளியாகுவது மிகவும் கவலைக்கிடமானது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு மற்றும் காவல்துறை உடனடியாக தலையிட்டு, இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அப்பகுதியில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்து, பட்டியல் சமூக மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். CMOTamilNadu

John Pandian

14,175 görüntüleme • 2 ay önce

Daha fazla içerik yok.