
கானா பிரபா
@kanapraba • 32,620 subscribers
Radio Show Producer & Presenter (ATBC Australia ) | Blogger | Vlogger
Videos

கள்ளபார்ட் நடராஜன் ❤️ தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் செய்த மிக முக்கியமான செயல், பழம் பெரும் நடிகர்களான காக்கா ராதாகிருஷ்ணனையும், கள்ளபார்ட் நடராஜனையும் என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியது தான். தமிழ் சினிமாவில் ஆதிகாலத்தில் கோலோச்சிய இருவருமே கால ஓட்டத்தில் வாய்ப்புகள் இன்று தூரதர்ஷன் சின்னத்திரைக்குள் அடங்கி விட்டார்கள். அவர்களுக்கு மீண்டும் சிவப்புக் கம்பள விரிப்பாக தேவர் மகன் அமைந்தது. அதன் பின் காக்கா ராதாகிருஷ்ணனுக்குத் திகட்டத் திகட்ட அற்புதமான பாத்திரங்கள். கள்ளபார்ட் நடராஜன் அந்தக் காலத்தில் கதாநாயகனாக, பாடகராவும் கூட இருந்தவர். நாடகத்தில் கள்ளபார்ட் இல் நடித்துப் பிரபல அடையாளம் சேர்த்தவர். கள்ளபார்ட் நடராஜனுக்கும் தொடர்ந்து திரையுலக வாய்ப்புகள் வந்தாலும், தேவர் மகன் அளவுக்கு அவை நியாயம் செய்யவில்லை. தன் மகள் ரேவதியை ஒரு இக்கட்டுக்குள் மாட்டி விட்டோமே என்ற பதபதைப்பு, ஏழையின் கையாலாகாத கோபம் இவை எல்லாவற்றையும் ஒரு சிறுதுளிக் காட்சியில் கள்ளபார்ட் நடராஜன் பிரதிபலித்திருப்பார். பின்னர் தன் மகளுக்கு சக்திவேல் உடன் திருமணம் காணும் போது எழும் பூரிப்பு அப்பப்பா. ஒரு சமயம் யூடியூபில் கள்ளபார்ட் நடராஜன் தோன்றிய காட்சியைச் சிலாகித்துப் பின்னூட்டம் எழுதினேன். அப்போது அவர் மகன் பதிலுரைத்தார். ஒரு சின்னத்திரைப் பேட்டி ஒன்றில் நடிப்பின் பரிமாணங்களை விளக்கிக் காட்டும் போதே மயங்கி விழுகிறார். அதுவும் நடிப்போ என்றால் இல்லை அந்த. இடத்தில் கலைஞனாகவே அவர் இறந்து போனது கண்டு உறைந்து போனார்கள். இன்றோடு கள்ளபார்ட் நடராஜன் இறந்து 20 ஆண்டுகள். கானா பிரபா 27.03.2026
கானா பிரபா53,765 次观看 • 5 个月前

ஜெயராம், ஊர்வசி அனுஹாசனோடு அதகளப்படுத்திய பேட்டியைப் பார்த்தேன். அதில் எனக்குப் பிடித்த சத்யன் அந்திக்காட், சிங்கீதம் சீனிவாசராவ் இன் இயக்கும் திறன் குறித்துப் பேசியது சுவாரஸ்யம். நாகேஷ், கிரேசி மோகன் இல்லாமல் பஞ்ச தந்திரம் பாகம் 2 எடுக்க முடியாதே என்று ஜெயராம் சொன்ன போது அவர்களின் இழப்பின் ஆழத்தை மீளவும் உணர்த்தியது. சதி லீலாவதி (தெனாலி என்று மறந்து போய்ச் சொன்னார்) படத்தில் அக்கா கல்பனா பண்ணிய அதே வேடத்தை கன்னடத்தில்ராமா ஷாமா பாமா தான் நடித்ததாக ஊர்வசி குறிப்பிட்டார். படத்தின் இறுதிக் காட்சியில் அந்த இடத்தில் ஏதாவது நகாசு வேலை செய்யச் சொல்லி கமல் சொன்னதும், நாய் மாதிரிக் குரைக்கட்டுமா? என்று கேட்டு அதையே பண்ணி விட்டாராம். ஊர்வசி முன் சொன்ன சத்யன் அந்திக்காட் இன் உத்தி அவருக்குப் பின்னாளில் கை கொடுத்ததை இந்த அனுபவப் பகிர்வு உணர்த்தியது.
கானா பிரபா26,661 次观看 • 3 个月前

கமல்ஹாசனும் இளையராஜாவும் விழிப்புலன் அற்ற சிறுவர் இல்லத்தின் மரத்தடியில் அழுத நிகழ்வை முன்னர் பகிர்ந்திருந்தேன். இப்போது அபூர்வ சிங்கீதத்திலும் சொன்னார்கள். அதை விட முக்கியமாக 2015 இல் சென்னைப் பெருவெள்ளத்தில் அந்தப் பள்ளி சிக்கிய போது இசைஞானி தேடிச் சென்று ஆதரவு கொடுத்தது ❤️❤️❤️ மேன் மக்கள் மேன் மக்களே ❤️❤️❤️ நானும் இளையராஜாவும் கட்டிப்பிடித்து அழுதோம் ❤️ ஜெமினியில் உள்ள சிறுமலர் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர், வாய் பேச முடியாதோர் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2018 இல் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரை வழி நெடுகிலும் குழந்தைகள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் மேடையில் பேசும்போது கண்கலங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''இங்கே நான் வாழ்த்த வந்தேன் என்பதை விட வாழ்த்து பெற வந்தேன். நான் சினிமாவில் பாடி உங்களுக்கு உத்வேகமூட்டிய அந்தப் பாடல் இன்று எனக்கே தெம்பூட்டுவதுபோல் தோன்றியது. நான் செல்ல வேண்டிய பாதையில் இன்னும் வேகமாக பீடுநடை போட்டுச் செல்ல குழந்தைகள் வாழ்த்தியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. 37 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் இதேபோன்ற மாணவர்களுடன் 'ராஜபார்வை' படத்திற்காக நானும், இளையராஜாவும் வந்தோம். அப்போது உள்ளே போகும்போது பலரும் பாட ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்து என்னாலும், இளையராஜாவாலும் அழுகையை அடக்க முடியவில்லை. தனியாக இருவரும் வெளியே வந்து ஒரு மரத்தின் மறைவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழுதோம்'' என்று கமல் பேசினார். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இந்தச் செய்தியைக் கடந்த நவம்பர் 14, 2018 தமிழ் இந்து செய்தித் தளத்தில் படிக்கும் போதே பாதியில் கண்கள் பூத்தன. சினிமா என்றாலும் கூட உணர்வினைச் சீண்டிப் பார்க்கும் காட்சியமைப்பு வந்தால் இடம் பாராமல் கண்ணில் நீர் சொரிந்து விடும் எனக்கு. அப்படித்தான் “ராஜ பார்வை” படத்தில் விழிப்புலனற்ற சிறுவர்களோடு கலந்து பேசி விட்டு கமல் (ரகு என்ற பாத்திரம்) திரும்பும் போது “ரகு அண்ணா.. ரகு அண்ணா கிட்ட வாங்கண்ணா” என்று பேபி பேபி சாரதா ப்ரீத்தா கூப்பிட்டு அவர் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பாளே அந்த நேரம் என் விழி நீர் சொரிந்ததை நினைவுபடுத்தியது கமலின் மேற்கண்ட பேச்சு. அந்தக் காட்சியோடு தொடர்ந்து ஒரு பாடல் ஒலிக்கும். படத்தின் காட்சிக்காகவே மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட பாட்டு அது. இசைஞானி இளையராஜா சினிமா எனும் ஊடகத்தில் எவ்வளவு அணுக்கமாக, ஆத்மார்த்தமாக இயங்கியிருக்கிறார் என்பதற்கு இந்தப் பாடலும் ஆகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று. எமது வாழ்வியலோடு பாடல்களைப் பொருத்தி அனுபவிக்க முடியும் என்றால் அதற்கு இம்மாதிரியான உணர்வு பூர்வமான பந்தம் ஒரு படைப்பில் பிணைக்கப்பட்டு கருவிலேயே உருவாகியிருக்க வேண்டும்: கமலும் ராஜாவும் தம்முடைய படத்துக்காக அந்தக் களம் தேடிக் கண்டு உருகியதைப் பின் காட்சியிலும், இசையிலும் அப்படியே கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். 2015 இல் சென்னை வெள்ளத்தில் இந்தப் பள்ளி சிக்கிய போது இளையராஜா நேரில் சென்று ஆறுதல் பகிர்ந்திருந்தார் இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி எவ்வளவு மனித நேய சிந்தனை கொண்டவர் என்பதற்கான சான்று அது. கமலின் பேச்சைக் கேட்டு விட்டு இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய் சிலிர்ப்போடு கண்ணீர் வந்தது. பனி விழும் பொழுதினில் இரு விழி நனைந்தது நேற்று மலர்களின் இமைகளைத் திறந்தது மெல்லிய காற்று இரவின் பிள்ளைகள் நாங்களே காதுகளே எம் கண்களே நிறங்களில் பேதம் இல்லையே... கானா பிரபா
கானா பிரபா60,927 次观看 • 1 年前
没有更多内容可加载