The Kevin Paul Show's banner
The Kevin Paul Show's profile picture

The Kevin Paul Show

@kevinpaulshow4,366 subscribers

Conservative thinker | Anti-communist | Far-right Extremist |

Shorts

திருமா மாதிரி ஒரு வாயை மட்டும் ஒரு காலத்திலும் எனக்கு கொடுத்துவிடாதே, இறைவா. நான்கு மாதங்களுக்கு முன்பு "RSS பேசுவதை விஜய் பேசுகிறார்" என பேசிவிட்டு, இன்று விஜய் கட்சியோடு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ வாய்ப்பு வருகிறது என தெரிந்துகொண்டு அப்படியே மாற்றி பேசுகிறார்.

திருமா மாதிரி ஒரு வாயை மட்டும் ஒரு காலத்திலும் எனக்கு கொடுத்துவிடாதே, இறைவா. நான்கு மாதங்களுக்கு முன்பு "RSS பேசுவதை விஜய் பேசுகிறார்" என பேசிவிட்டு, இன்று விஜய் கட்சியோடு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ வாய்ப்பு வருகிறது என தெரிந்துகொண்டு அப்படியே மாற்றி பேசுகிறார்.

36,506 görüntüleme

அலகு குத்திக் காண்பித்து கடவுள் இல்லையென நிறுவுகிறார்களாம்! இயேசு கடல்மேல் நடந்தார் என பைபிளில் ஒரு சம்பவம் வரும். நம்ம திக தோழர்களும் கடலில் குப்புற குதித்து தங்கள் நாத்திகத்தை நிரூபிப்பார்கள்.

அலகு குத்திக் காண்பித்து கடவுள் இல்லையென நிறுவுகிறார்களாம்! இயேசு கடல்மேல் நடந்தார் என பைபிளில் ஒரு சம்பவம் வரும். நம்ம திக தோழர்களும் கடலில் குப்புற குதித்து தங்கள் நாத்திகத்தை நிரூபிப்பார்கள்.

80,680 görüntüleme

நாடார் குல சிங்கம் மாவீரன் ஜாக்கி சான் வாழ்க! “எல்லாமே தமிழன் தான்” + தீவிர மனநோய் + paranoia + delusion + narcissism + யூத வெறுப்பு + பிராமண வெறுப்பு + தற்குறி மூளை = TCP பாண்டியன். ❤️

Sensitive content

நாடார் குல சிங்கம் மாவீரன் ஜாக்கி சான் வாழ்க! “எல்லாமே தமிழன் தான்” + தீவிர மனநோய் + paranoia + delusion + narcissism + யூத வெறுப்பு + பிராமண வெறுப்பு + தற்குறி மூளை = TCP பாண்டியன். ❤️

25,693 görüntüleme

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு இவர் troll செய்கிறார் என்றே சந்தேகித்தேன். இவர் தீம்காகாரர்தான் என்பதை இவரது மற்றப் பதிவுகள் மூலம் உறுதிசெய்துகொண்டேன். தனியார் கம்பெனிக்காரன் முதலீடு செய்து தனியார் கம்பெனிக்காரன் கட்டிய கட்டிடங்களை தீம்கா கணக்கில் எழுதுகிறார். வீடியோவில் தாஜ் ஹோட்டலெல்லாம் வருகிறது. ஏழைகளின் ஏரியாவில் போடப்படும் ப்ளீச்சிங் பொடியில் கூட ஊழல் செய்துவிட்டு "பாண்ட்ஸ் பவுடரா இது" எனக் கேட்ட ஆட்சிதானே இது? சிங்கப்பூர் மாடல்!

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு இவர் troll செய்கிறார் என்றே சந்தேகித்தேன். இவர் தீம்காகாரர்தான் என்பதை இவரது மற்றப் பதிவுகள் மூலம் உறுதிசெய்துகொண்டேன். தனியார் கம்பெனிக்காரன் முதலீடு செய்து தனியார் கம்பெனிக்காரன் கட்டிய கட்டிடங்களை தீம்கா கணக்கில் எழுதுகிறார். வீடியோவில் தாஜ் ஹோட்டலெல்லாம் வருகிறது. ஏழைகளின் ஏரியாவில் போடப்படும் ப்ளீச்சிங் பொடியில் கூட ஊழல் செய்துவிட்டு "பாண்ட்ஸ் பவுடரா இது" எனக் கேட்ட ஆட்சிதானே இது? சிங்கப்பூர் மாடல்!

18,190 görüntüleme

Videos

kevinpaulshow's profile picture

தமிழ் நாட்டுக்கு ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பது தனி விவாதம். ஆனால் இந்தப் பெண் சொல்லும் அற்புதமான வாதம் நாம் கவனிக்க வேண்டியது. தமிழ் நாட்டில் ஹிந்தி வந்திருந்தால் நான் பானிப்பூரி விற்றிருப்பேன் என அவர் ஆரம்பித்தது rhetoric போல என்று நினைத்தால், இங்கு ஹிந்தி வந்திருந்தால் என்னால் கண்டிப்பாக இந்தியாவைத் தாண்டி சென்றிருக்க முடியாமல் இட்லி விற்றுக்கொண்டு இருந்திருப்பேன் என்கிறார் மீண்டும் அழுத்தமாக. Two languages = development என்றால், இரண்டு மொழிகளை மட்டுமே கற்றுக்கொண்ட நாடுகள் / மாநிலங்கள் வளர்ந்து விட்டனவா என்பது கேள்வி. இது எப்படியிருக்கிறது என்றால், ஒற்றை மொழிக் கொள்கை கொண்ட ஜப்பான், சீனா, தென் கொரியா ஜெர்மனி போன்ற நாடுகள் வளர்ந்ததற்கு காரணமே அவர்கள் ஒரே ஒரு மொழியில் கவனம் செலுத்துவது தான் என்று உளறுவது போன்றது. அவர்களின் உழைப்பு, உள்கட்டமைப்பு, ஊழலற்ற அரசியல், கல்வித் தரம் என வேறு எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒற்றை மொழி கற்றுக்கொண்டதால்தான் உயர்ந்துவிட்டார்கள் என பேசுவதை விட அபத்தம் வேறில்லை. ஹிந்தி வந்தால் பாடச்சுமை அதிகமாகும், பாடச்சுமை அதிகமானால் கல்வித் தரம் குறையும், கல்வித் தரம் குறைந்தால் நாங்கள் பானிப்பூரி விற்போம் என்பது கொத்தடிமைகளின் வாதம். on the other side, ஐரோப்பாவில் மிக வளர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து முதன்மையானது என்றால் யாரும் அதை மறுக்க முடியாது. ஆனால் வெறும் 90 லட்சம் மக்கள் வாழும் ஒரு குட்டி நாட்டில் (The population of Chennai is 1.2 crore), நான்கு அதிகாரப்பூர்வமான மொழிகள் இருக்கின்றன: ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன், ரோமன்ச். இந்த ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தாய் மொழியில் பேச முழு உரிமை உண்டு. அதே நேரம், அனைத்து அரசு ஆவணங்கள், பெயர்ப் பலகைகள், அறிக்கைகள், இணையதளங்கள் அனைத்தும் ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன் என்கிற மும்மொழிகளிலும் தான் இருக்கும். அனைத்து சுவிஸ் மக்களுக்கும் இந்த நான்கு மொழிகளும் தெரியாது; அவரவர் பகுதிகளில் அவரவர் மொழியைப் பேசிக்கொள்வார்கள். ஆனால்... ஆனால்... அனைத்து குழந்தைகளும் பள்ளியில் தங்கள் தாய் மொழியோடு கூட மற்றொரு தேசிய மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும். இதற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒற்றை மொழி மட்டுமே கற்றுக்கொண்ட ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் மொழியால் மட்டுமே தாழவும் இல்லை, பல மொழிகள் கற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து அதிக மொழி கற்றுக்கொண்டதால் மட்டுமே உயரவும் இல்லை. அவர்களின் வளர்ச்சி அதற்குள் அடங்காமல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், ஊழலுக்கு எதிரான வலுவான சட்டங்கள், அறிவியல் ஆய்வுகள், வளர்ச்சி சார்ந்த அரசியல் பார்வை என வேறு பல கூறுகளால் மட்டுமே சாத்தியமானது. Simply put, these countries prospered because they built institutions and skills, not because they taught fewer or more languages.

The Kevin Paul Show

32,497 görüntüleme • 6 ay önce

kevinpaulshow's profile picture

கரூர் மரணங்களுக்கு விஜய் காரணமா, தமிழக அரசு காரணமா என சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகனைப் பார்க்க கும்பலாகச் சென்று விழுந்து செத்த அந்த மக்கள் தான் காரணம் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். 100% சரி. Wilhelm Reich என்கிற ஒரு மனோதத்துவவாதி எழுதிய The Mass Psychology of Fascism புத்தகத்தை மேற்கோள் காட்டுகிறார் ஜெமோ. சிந்திக்கும் திறனை இழந்த மக்குக் கும்பல் எப்படி அரசியல்வாதிகளை கடவுள் போல் பார்க்கிறார்கள் என விளக்கியிருப்பார் வில்ஹெம். தமிழக அரசியல், சினிமா மோகம் குறித்து புரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். கும்பலிடம் logic எடுபடாது; data எடுபடாது; அவர்களுக்கு புரியும் ஒரே மொழி, உணர்வுகளைத் தூண்டும் கூச்சல். டிவிட்டரில் அசிங்கமாக நடிகர் அஜித்தையும், விஜய் படங்களை விமர்சிக்கும் அனைவரையும் திட்டிக்கொண்டிருந்த ஒரு சைக்கோ கும்பலை நம்பி அரசியலுக்கு வந்து, அவர்களின் தயவில் முதல்வர் ஆகிவிடலாம் என கனவு கண்டு, இன்று அந்த கும்பலாலேயே அசிங்கப்பட்டு நிற்கிறார் விஜய்.

The Kevin Paul Show

44,656 görüntüleme • 9 ay önce

kevinpaulshow's profile picture

குடும்ப நிகழ்வுகளை வைத்து என்னதான் கதை சொல்ல முடியும்? அன்றாடம் நடக்கும் விஷயங்களை சுவாரசியமாக சொல்ல என்ன இருக்கிறது? இப்படி நினைப்போர் Bob's Burgers என்கிற ஒரு animated டிவி சீரிஸ் பாருங்கள். அம்மா, அப்பா, மூன்று குழந்தைகள். இவர்கள் ஒரு பர்கர் கடை நடத்துகிறார்கள். அங்கு நடக்கும் சாதாரண நிகழ்வுகளை அசாத்திய கதைசொல்லல் மூலம் தெறிக்க விட்டிருப்பார்கள். மொத்தம் 300 எபிசோடுகள். South Park பார்த்திருக்கிறீர்களா? My all-time favourite. 4 சிறுவர்களின் கதை. 330 எபிசோடுகளில் அதகளப்படுத்தியிருப்பார்கள். இதெல்லாம் நோலன் லெவெலுக்கு குழப்பி, சிக்கலான கதை எழுதி... அப்படியெல்லாம் இல்லை. நாம் தினமும் பார்க்கும் சாதாரணமான விஷயங்களான நட்பு, சண்டை, மதம், அரசியல் இவைகளை வைத்து sharp-ஆன கதைகளை சொல்லியிருப்பார்கள். ஆனால் தமிழ் நாட்டு டிவி சீரியல் மட்டும் ஏன் இப்படி கன்றாவியாக இருக்கிறது? நமக்கு இது போதும் என நாம் நினைத்துவிட்டோமா? அல்லது “இவனுங்க அறிவுக்கு இதுவே அதிகம்” என சீரியல் எடுப்பவர்கள் நினைத்துவிட்டார்களா? It’s about demand. நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தானே அவர்களும் கொடுப்பார்கள்?! சென்னையில் நான் வசிக்கும் பகுதி தான் தமிழ் சீரியல்களின் headquarters. தினமும் ஏதாவது ஒரு சீரியலின் படப்பிடிப்பு இந்தத் தெருக்களில் நடந்துகொண்டே இருக்கும். தமிழர்களை மடையர்களாக மாற்றும் அந்தக் கும்பலை பார்க்கையில் கோபமாக வரும். இலக்கியம் படிக்கிற ஒரு சமூகத்தில் இப்படியெல்லாம் அறீவீனமான சீரியல் எடுக்க முதலில் யோசிக்கத் தோன்றுமா? அப்படி எடுக்கப்பட்ட ஒரு காவியம் இதோ உங்களுக்காக. கடைசியில் அந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி moment! 😂

The Kevin Paul Show

50,031 görüntüleme • 11 ay önce

kevinpaulshow's profile picture

அடிப்படைப் பொருளாதாரம் புரியாமல் எப்படியெல்லாம் நம்மை மூளைச்சலவை செய்கிறார்கள் பாருங்கள் (watch the video below). ஒரு பொருள் உற்பத்தியாகும் போது அதை வேறு எங்கேயோ இருக்கும் நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதே ஒரு விவசாயியின் நோக்கமாக இருக்க முடியும். பாட்டி மூன்று ரூபாய்க்கு விற்கும் சோளம் பெருநகரங்களில் 20 ரூபாய். அந்த 17 ரூபாய் லாபம் என்பது திருட்டு தானே என தங்கள் மூளையைப் பிழிந்து அதில் எஞ்சி நிற்கும் ஒரு அறிவான கருத்தை நமக்கு நீட்டுகிறார்கள் இந்த கம்யூனிஸ்ட் சினிமாக்காரர்கள். சரி, இவர்களிடம் பொருளாதாரம் கற்ற ஒரு விவசாயி அந்த 3 ரூபாய் சோளத்தை நானே விற்கிறேன் என அவர் அறுவடை செய்த கிராமத்தில் அவரே ஒரு கடையைப் போட்டு வியாபாரம் செய்தால் எத்தனை லட்சத்தை அள்ளிவிட முடியும்? இவர் விற்கும் 3 ரூபாய் சோளத்தை வாங்க பக்கத்து ஊரிலிருந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு யார் வருவார்? காருக்கு 300 ரூபாய் டீசல் போட்டு எந்த பக்கத்து நகரத்திலிருந்து யார் வருவார்? அந்தக் குக்கிராமத்தில் அவரின் 50 மூட்டைச் சோளத்தில் 5 மூட்டை வேண்டுமானால் அதிகபட்சம் அவரால் விற்க முடியும். மொத்தமும் நஷ்டமாகி விவசாயமே அழிந்துபோகும். நம்ம விவசாயி அந்த 3 ரூபாய் சோளத்தை 5 ரூபாய் என விலை வைத்து பக்கத்து ஊர் மொத்தக் கொள்முதல் வியாபாரிக்கு விற்கிறார் என்றால், 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்வு என்பது 66.6% லாபம். இவரிடமிருந்து மொத்தமாக மூட்டைகளை வாங்கிய ஒருவர் லாரி மூலம் சென்னைக்கு அதை ஏற்றுமதி செய்கிறார். குடவுன் வாடகை, தொழிலாளிகள் சம்பளம், ஓட்டுநர் சம்பளம், எரிபொருள் என இப்போது அந்த 5 ரூபாய் சோளத்தில் இவை எல்லாம் சேர்ந்து 10 ரூபாயாக மாறி நிற்கும். அதை offload செய்வதற்கான கூலி, அவர்களுக்கான லாபம் எல்லாம் சேர்த்து நம்ம சோளம் இப்போது 15 ரூபாய். பெருநகரங்களின் பல்வேறு hub மூலம் மூலை முடுக்கெல்லாம் அந்த சோளம் போகும். கடைசியில் சென்னைத் தள்ளுவண்டிக்காரர் அவருக்கு ஒரு லாபம் வைத்து, பணக்காரர்களுக்கு என கொஞ்சம் அதிகம் விலை வைத்து (ஒரு பொருள் எங்கு இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு அதன் விலை மாறும்; மார்க்ஸ் பேசிய Labour Theory of Value என்பதை நான் தவறு என நம் காணொளிகளில் காட்டியிருப்பேன்), நமக்கு 20 ரூபாய் என விற்பார். ஒரு மக்காச்சோளம் சாப்பிட நான் ஈரோட்டுக்கோ திண்டுக்கல்லுக்கோ செல்ல வேண்டியதில்லை. சென்னையில் என் வீட்டு வாசலில் வாங்கிக்கொள்ளலாம். இப்போது சோளம் நன்கு விற்பனையானால் இந்த cycle அப்படியே reverse-ல் நடக்கும். சோளத்திற்கான தேவை அதிகமானதால் அந்த தள்ளுவண்டிக்காரர் சென்னை hub-ல் அதிகம் வாங்குவார், அந்த முதன்மை hub-காரர்களுக்கு அதிக மூட்டைகள் தேவைப்படும், அவர்கள் அந்த மொத்தக் கொள்முதல் அண்ணாச்சியிடம் அதிக மூட்டைகளைக் கேட்பார்கள், அவர் அந்த விவசாயியிடம் அதிக சோளத்தைக் கேட்பார், அந்த விவசாயி அடுத்த ஆண்டு அதிகமாக சோளத்தை விவசாயம் செய்து அதிக மகசூலைப் பெறுவார். அதன் மூலம் தன்னந்தனியாக விற்றுக்கொண்டிருந்ததை விட 66.6% அதிக லாபத்தில் நிறைய மூட்டைகளை விற்க முடியும். இந்த cycle பெரியது. இதில் பயனடைவோர் லட்சக்கணக்கானோர். கம்யூனிஸ்ட்காரன் பேசும் சினிமா வசனங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் கோவணம் கூட மிஞ்சாது.

The Kevin Paul Show

52,609 görüntüleme • 1 yıl önce

kevinpaulshow's profile picture

என் நண்பர் ஒருவர் அயர்லாந்து நாட்டின் கார்க் நகரத்தில் வசிக்கிறார் (Peaky Blinders, Oppenheimer நடிகர் கில்லியன் மர்ஃபியின் ஊர்). நண்பரோடு பேசும் போது அந்நாட்டின் உள்கட்டமைப்பு குறித்து பேசினேன். அயர்லாந்தில் சர்வதேச விமான நிலையங்கள் மட்டும் 5 இருக்கிறது. அதைத்தாண்டி பல உள்நாட்டு விமான நிலையங்களும் இருக்கின்றன. அந்நாட்டின் சைஸ்? 70,000 square km. மக்கள் தொகை? 54 லட்சம் பேர். தமிழ் நாட்டு நிலப்பரப்பு? 130,000 square km. நம் மக்கள் தொகை? 8 கோடி. தமிழ் நாடு அயர்லாந்தை விட 90% அதிகப் பரப்பளவை கொண்ட ஒரு நிலம் (நாம் அவர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிய ஊர்). அவர்களை விட 16 மடங்கு அதிக மக்கள் தொகை இங்கு இருக்கிறார்கள். அந்த ஒரு குட்டித் தீவில், பத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் நாட்டில் இரண்டாவதாக (!) ஒரு விமான நிலையம் பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து என்னென்ன அலப்பறைகளோ நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அதன் infrastructure-ஐப் பொறுத்தே அமையும். Economy என்பது ஒரு connected ecosystem. Network விரிவடைந்து, முதலீடுகள் பெருகி, பொருளாதார மையங்கள் (economic zones) உருவானால் மட்டுமே பெருக்கம் ஏற்படும். Expanded networks, investments, economic zones — இம்மூன்றும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்புடையவை. Networks பெருகும் போது முதலீடு அதிகரிக்கும், முதலீடு அதிகரிக்கும் போது அந்த இடம் ஒரு economic zone-ஆக வளரும். இந்த மூன்றும் நடக்கவேண்டுமென்றால், முதலில் infrastructure மேம்பட்டதாக இருக்க வேண்டும். சாலையே ஒழுங்காக இல்லாத ஒரு ஊர் எப்படி அதன் பொருட்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று networks-ஐப் பெருக்கும்? அந்த ஊருக்கு யார் முதலீடு செய்ய வருவார்கள்? முதலீடு இல்லாமல் எப்படி அந்த இடத்தில் concentrated growth நடந்து economic zone உருவாகும்? ஒரு வளர்ச்சி ஏற்படும் போது disruptions இருக்கத்தான் செய்யும். இன்று இருக்கும் சென்னை-திருச்சி நெடுஞ்சாலை 200 ஆண்டுகளுக்கு முன் காடாக, விவசாய நிலமாகத்தான் இருந்திருக்கும். நான் அங்கு இருந்த போதெல்லாம் சந்து மாதிரி இருந்த தேனி-மூணார் சாலை, இன்று அவ்வளவு அழகாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த இடம் ஒரு மலை தானே? "சுற்றுலா வளர்ச்சி மட்டும் வேண்டும், ஆனால் ரோடு போடமாட்டேன், சாலைகள் அமைத்தால் மலைகள் பாதிக்கப்படும்" என நினைத்தால் மூணாருக்கு இன்று எவன் போவான்? இன்று மூணாரின் டீ எஸ்டேட்களில் வேலை பார்க்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. நாங்கள் அங்கு இருந்த பகுதிகளில் இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாமல் மயானம் போல இருக்கிறது. மூணாரின் தற்போதைய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 80% tourism மட்டுமே. இந்த கோபி நயினார் மாதிரியான ஆட்கள் பேசுவது சிறுபிள்ளைத் தனமானது மட்டுமல்ல, பேராபத்தும் கூட. கம்யூனிஸ சித்தாந்தம் கொண்டவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மொத்தமாக வேட்டுவைத்து முடித்துவிட்டு போய்விடுவார்கள். விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் இவை அனைத்தும் நம் பொருளாதாரம் முன்னேற மிக முக்கிய கூறுகள். அதற்கான நில கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் concerns போன்ற விஷயங்களை அரசு regulate செய்வது அவசியம். ஆனால் இந்த வெட்டிப் போராளிகளுக்கு தெரிந்த ஒரே கோஷம்: இழுத்து மூடு. இவனுங்கள இழுத்து மூடிட்டா தமிழ் நாடு முன்னேறும்.

The Kevin Paul Show

43,690 görüntüleme • 11 ay önce

kevinpaulshow's profile picture

Margaret Mary Ray என்கிற ஒரு பெண் ஒரு ஆடம்பர காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். அது டேவிட் லெட்டர்மேன் என்கிற புகழ்பெற்ற tv talk show host-க்கு சொந்தமான கார். சந்தேகத்தின் பெயரில் அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் சொன்ன பதில்: “லெட்டர்மேன் எனது கணவர், நான் அவரது மனைவி.” பின்னர் தான் தெரிந்தது, அந்தப் பெண்மணி லெட்டர்மேனின் காரைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறார். ஏன்? 1980-களில் tv boom நடந்த காலகட்டத்தில் talk show நடத்தி புகழ்பெற்றவர் லெட்டர்மேன். வாய்ப்பிருந்தால் லெட்டர்மேன் பேசுவதைப் பாருங்கள், மிகத் திறமையான ஒரு host/comedian. அவர் மீது அந்தப் பெண் காதல் வயப்பட்டிருக்கிறார். அந்த ஒருதலைக் காதல் பிறகு வேறு மாதிரி மாறியிருக்கிறது. லெட்டர்மேன் தன்னைக் காதலிப்பதாக அந்தப் பெண் கற்பனை செய்துகொண்டு, தினமும் லெட்டர்மேனின் வீட்டிற்கு முன் போய் நின்றிருக்கிறார். லெட்டர்மேன் தினமும் அவரது show-வில் பேசும் போது அவர் தன்னைக் குறித்து தான் பேசுகிறார் என அந்தப் பெண் கற்பனை செய்திருக்கிறார். பல முறை லெட்டர்மேனின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போயிருக்கிறார். மனநோய் தீவிரமாக மாறி லெட்டர்மேனுக்கு அந்தப் பெண்ணால் ஆபத்து நேரிடுமென நினைத்த நீதிமன்றம் அவரை மனநல காப்பகத்தில் அடைத்தது. அவருக்கு schizophrenia இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இது போல் பல முறை நடந்திருக்கிறது. கடைசியில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் Margaret. நம்மூரில் இது போல நிறைய மார்கரெட்கள் இருக்கிறார்கள். விஜய் பாதுகாப்பாக பனையூரில் பதுங்குவது அவருக்கு நல்லது.

The Kevin Paul Show

38,968 görüntüleme • 10 ay önce

kevinpaulshow's profile picture

சென்னையில் நேற்று நடந்த ஒரு forum-ல் பத்திரிக்கையாளர்கள் திரு. ரங்கராஜ் பாண்டே மற்றும் திருமிகு. பால்க்கி ஷர்மா இருவரும் இந்திய வளர்ச்சி குறித்து பேசினார்கள். அவர்கள் பேச்சைக் கேட்க நானும் போயிருந்தேன். நக்ஸல் தீவிரவாதிகள் குறித்து (ஆம், அவர்களும் அவர்களை ஆதரிப்போரும் தீவிரவாதிகளே) பாண்டே சொன்ன விஷயம் கவனத்திற்குரியது. படிப்பறிவில்லாத ஆதிவாசி மக்களை அரசு கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது, அவர்களுக்கான எந்த வசதிகளும் இல்லை, எனவே தான் அந்த மக்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கவே ஆயுதமேந்தி போராடுகிறார்கள் என்பது பொதுவான ஒரு narrative. ராஜஸ்தான் போன்ற பல இடங்களில் ஆதிவாசி மக்கள் இன்னும் எந்த உதவியும் இல்லாமல் ஏழ்மையில் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அதே நேரம், இந்த மாவோயிஸ்ட் திருடர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை அவர்கள் வேண்டுமென்றே முன்னேறாமல் தடுக்கிறார்கள். அவர்களைத் தூண்டிவிடுவது அறுந்த ராய் போன்ற ஜந்துக்கள். Jan Myrdal தெரியுமா? சுவீடன் நாட்டு கிறுக்கு lefty. உலகம் முழுக்க பயணம் செய்து கம்யூனிஸ்ட்களின் தீவிரவாதத்தை ஊக்குவித்த இவர், இந்தியாவிற்கு வந்து இங்கிருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஆதரித்து “புரட்சி செய்வோம்” என முழங்கிக் கொண்டிருந்தார். இங்கிருந்த மாவோயிஸ்ட் தலைவர்கள், கொரில்லா கொலைகாரர்கள், தொண்டர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து பேசினார். அவரது அனுபவங்களை ‘Red Star Over India: As the Wretched of the Earth are Rising’ என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார். அதை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். எப்படியெல்லாம் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத ஆதரவாளர்களாக மாறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். தலைப்பு ரொம்ப முக்கியம். ‘Red Star Over China’ என்பது அமெரிக்காவைச் சேர்ந்த Edgar Snow என்பவர் 1930-களில் சீனாவின் மாவோ கொலைகாரனைப் பற்றி எழுதிய புத்தகம். கம்யூனிசம் ஆ! கம்யூனிசம் ஊ! என ஊதியிருப்பார். கடைசியில் மாவோ சீன மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்றான் என்பது வரலாறு. அடுத்து “the Wretched of the Earth.” இது Frantz Fanon என்கிற ஒரு கறுப்பின மார்க்சிஸ்ட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு (இந்த புத்தகம் குறித்து விரிவாக ஒரு பதிவு அல்லது வீடியோ பண்றேன்). இன்றைய நவீன இடதுசாரி தீவிரவாதிகளின் Godfather என இவரை அழைக்கலாம். வன்முறை மட்டுமே “ஒடுக்கப்பட்டோரின்” ஒரே தீர்வு என வெளிப்படையாக எழுதியிருப்பார். Jan Myrdal தான் இந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை உலகமெங்கும் கொண்டுபோய் அதற்கு legitmacy பெற்றுக்கொடுத்தவர். நாட்டை வளரவிடாமல் வேண்டுமென்றேத் தடுத்து, அதற்கு அரசின் மேல் பழிபோட்டு, அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டி, அரசை destabilise செய்வதே மாவோயிஸ்ட்களின் ஒரே நோக்கம். உலகமெங்கும் இப்படித்தான் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

The Kevin Paul Show

31,540 görüntüleme • 10 ay önce

kevinpaulshow's profile picture

ஈவேராவின் 'பெண் ஏன் அடிமையானாள்' புத்தகம் படித்துவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார் நம் முற்போக்கு டோலி. ஏன்? "'பெரியார்' எதிர்பார்த்த ஒரு சொசைட்டில பெண்கள் இல்லை என்பதை நினைக்கும் போது..." என அவர் சொல்லும் போது அவரது குரலில் ஒரு தழுதழுப்பு. துக்கம் அவரது தொண்டையை அடைக்கிறது. பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி ஒரு நொடி அப்படியே மனம் வெதும்பி நிற்கிறார். அப்படி என்ன சொசைட்டியைப் "பெரியார்" எதிர்பார்த்தார்? Cuckold கணவன் ஓட்டல் பலகார உறவு அறுத்தெறியப்பட்ட கர்ப்பப்பை "Free love" சுபாவப்படியான வாழ்க்கை (என்ன தோணுதோ அதை செய்) Enjoyment without responsibility திருமணம் என்பதே பெண்ணடிமைத்தனம் "ஆசையைத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமே" Why are these liberal women so stupid?

The Kevin Paul Show

20,524 görüntüleme • 6 ay önce

kevinpaulshow's profile picture

இரத்தக் கொதிப்பு முடிந்து இப்போது காமக் கொதிப்பில் இருக்கிறார் இந்த புள்ளிங்கோ பாடகர். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் சுற்றிகொண்டிருந்தார். சாலையில் போகிறவர்கள் மீது கற்களையும் செடிகளையும் எடுத்து எறிந்துகொண்டிருந்ததால், பலமுறை போலீசுக்கும் தனியார் மனநல காப்பகத்துக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன. எந்த நடவடிக்கையும் இல்லை. அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலை வந்து நிற்பார்கள். அதற்கு எதிரே பத்து கடைகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று உண்டு. அதன் சுவற்றில் சினிமா விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு நாள், இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் அந்த போஸ்டரைக் கிழித்து தரையில் போட்டு அதன் மீது படுத்து எதோ செய்திருக்கிறார். காலை எட்டரை மணிக்கு. இதனைப் பார்த்து பேருந்துக்கு காத்திருந்த பெண் பிள்ளைகள் ஓடியிருக்கிறார்கள். கடைக்காரர்கள் அவரைப் பிடித்து அடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்குப் பின் முகமெல்லாம் வீங்கி, உடையெல்லாம் கிழிந்து சாலையோரம் படுத்திருந்தார். அது தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. இந்த மனநலம் பாதிக்கப்பட்ட புள்ளிங்கோ கும்பலையும் பத்திரமாக எங்காவது அடைத்து வையுங்கள்.

The Kevin Paul Show

21,144 görüntüleme • 6 ay önce

kevinpaulshow's profile picture

சங்க இலக்கியமான அகநானூறு கவித்தொகுப்பில் ஒரு முதலிரவு காட்சி: “தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின் உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றநின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்றச் சிறுவரை திறஎன ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுப்பெயர்ந்து இமைப்ப மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென நாணினள்.” நம் உறவினர்கள் நமக்குக் கொடுத்த இந்த முதலிரவில், உன் கற்பு நிறைந்த உடல் என் உயிரோடு கலக்கிறது. முருங்கைக் கிளைகள் வளைந்து ஒன்றோடொன்று உரசுவது போல நம் உடல்கள் உரசுகின்றன. பிறை போன்ற உன் நெற்றியில் வேர்வைத் துளிகள் மின்னுகின்றன (உடலுறவில் வேர்வை கொட்டுகிறதாம்!). உடலின் சூடு குறைந்த பின்பு (ம்ம்ம்!), போர்வையை மெதுவாக விலக்கி உன் உடலைப் பார்க்கையில் என் நெஞ்சம் மகிழ்கிறது. இலைகளுக்குள் மறையும் மான் போல அந்தப் பெண் வெட்கி நாணுகிறாள். என்ன பெரிய ஷேக்ஸ்பியர்? என்ன பெரிய ஷெல்லி? என்ன பெரிய Sappho? இதை விட ஒரு கவிதை மொழி உண்டா?! கடைசி வரி கவனியுங்கள்: “மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென நாணினள்.” “ஒய்யென நாணினள்.” ஒய்யென நாணின‘ன்’ இல்லை. It’s feminine. இது தான் தமிழர் வாழ்வியல்! பெண்ணும் ஆணும் கலப்பது தான் தமிழர் திருமணம். சுத்தி வளைத்து உருட்டாமல் நேரடியாக வானவில்லை எதிர்த்து நிற்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு அன்பும் நன்றியும். கம்யூனிஸ்ட்டும் தீம்காவும் கடிக்க வருவான். உறுதியாக இருங்கள் அண்ணன். ❤️

The Kevin Paul Show

21,412 görüntüleme • 8 ay önce