
Mani Senthil/மணி செந்தில்
@manisenthilntk • 30,847 subscribers
🔥 நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.. ஆனால் காடு எங்களுடையது .🔥 வழக்கறிஞர்/Advocate/ மாநில ஒருங்கிணைப்பாளர் , நாம் தமிழர் கட்சி
Videos

கும்பகோணம் அண்ணல் அக்ரகாரம் பகுதியில் பகிரங்கமாக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்காளர் பட்டியலில் காசு கொடுத்தவர்களை டிக் செய்து அரசியல் வியாபாரம் செய்யும் திமுக திருடர்கள். படுத்து தூங்கும் தேர்தல் ஆணையம். செத்துப்போன காவல்துறை. இதில் தேர்தல் கூந்தல் வேறு. Chief Electoral Officer Tamil Nadu
Mani Senthil/மணி செந்தில்14,980 görüntüleme • 2 ay önce

அந்த வீடியோவை பார்த்தாலே தெரியும். யார் பிரச்சினையை தொடங்கியது.. என்று. ஆடுதுறை சேர்மன் அண்ணன் ம.க. ஸ்டாலின் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்க வரும்போது கூட வந்தவரை வேண்டுமென்றே வம்பிழுத்து, அவர் மீது காலணிகளை வீசி பிரச்சனை செய்தது அங்கு வந்த விசிக கட்சிக்காரர்கள் தான். அங்கு இருந்த செய்தியாளர்களே அதற்கு சாட்சி. காவல்துறையும் அங்கே இருந்தார்கள். காலணிகளை வீசுபவர்கள் மீது உடலை காண்பித்து கொண்டு நிற்க வேண்டும் என சட்டம் சொல்கிறதா..? ஆபாச வார்த்தைகளால் ஏசி பேசி திட்டிக்கொண்டே காலணி வீசுபவர்கள் உயிரை பாதிக்கும் வேறு எதையாவது வீசியிருந்தால் இன்று அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நிலைமையே ஏற்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. அந்த சூழ்நிலையில் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளவே போராடினார். தற்காப்பு என்பது எப்படி தாக்குதல் வழக்காக மாற முடியும்..? அரசியல் அதிகார நிர்பந்தங்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்க முயன்ற விசிக தொண்டர்கள் மீது விடுதலை சிறுத்தைகளின் தலைமை எடுத்த ஒழுங்கு நடவடிக்கை என்ன..? விமர்சிப்பவர்களை எல்லாம் இப்படித்தான் கட்சிக்காரர்களை விட்டு அடிக்க விடுவார்களா..?? "அமைப்பாய் திரள்வோம்" புத்தகம் எழுதிய தலைவரின் கருத்தியல் பயிற்சி இதைத்தான் போதிக்கிறதா..?? அப்படி என்றால் கட்சியின் தலைமை ஆதரவோடு தான் இந்த தாக்குதல் முயற்சி நடந்ததா..?? ஒரு அமைப்பின் தலைவரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு முன்பே வைத்து செய்தியாளர்களை வைத்துக்கொண்டு, காவல்துறை அதிகாரிகளை வைத்துக்கொண்டு காலணிகளால் தாக்கியவர்கள் மீது காவல்துறை எடுத்த சட்டப்படியான நடவடிக்கை என்ன?? இதுபோன்ற எந்த கேள்விகளுக்கும் விசிக தலைமையிடமிருந்து பதில் இல்லை.தமிழகக் காவல்துறையிடமும் இல்லை. இந்நிலையில் அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். தன்னை தற்காத்து கொள்ளப் போராடிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொண்டு வெல்வார் ! இது போன்ற கடின சூழ்நிலைகள் பலரின் ஜனநாயக போலி முகமூடிகளை கிழித்தெறியும். இவர்கள் பேசும் கருத்துரிமை, ஜனநாயக விழுமியங்கள் எல்லாம் சாலையில் நின்று கெட்ட வார்த்தை பேசி காலணி எறிவதில்தான் என்றால், இத்தனை ஆண்டு காலம் அரசியல் நடத்தி, உண்மையில் யார் தோற்று இருக்கிறார்கள் என்பதை புரியும். அரசியல் விமர்சனங்களுக்கு எல்லாம் சாலையில் கெட்ட வார்த்தை பேசி , காலணி எறிந்து அடித்துக் கொள்ள ஆரம்பித்தால் , இங்கே சாலைகள் சாலைகளாக இருக்காது. யார் தவறு செய்தாலும் தவறுதான். அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பேசியதில் முரண்பாடுகள்/ தவறுகள் இருந்தால் சட்டப்படி வழக்கு தொடர்ந்து இருக்கலாம். அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி நட்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பி இருக்கலாம். அதையெல்லாம் விடுத்து, எல்லாவித ஜனநாயக நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கை இழந்து, நட்டநடு சாலையில் கெட்ட வார்த்தை பேசி காலணி எறிவதும் தாக்க முனைவதும், அவர் தன்னை காத்துக் கொள்ள, திருப்பித் தாக்கினால் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டு வழக்கு கொடுப்பதும், ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் அதிகாரத்தை வைத்துக் கொண்டு கைது செய்வதும் தான் "ஜனநாயகத்தை காப்போம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்தியவர்களின் வேலையா..?? உண்மையில் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவன் இத்தனை ஆண்டு காலம் பராமரிக்க முயல்கிற ஜனநாயக கருத்துரிமை சார்ந்த , அரசியலை முதிர்ச்சியாக அணுகுகிற முகத்திற்கு இது ஒரு சவால். அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு இதனால் எந்த அவப்பெயரும் இல்லை. அதனால்தான் அவர் மிகுந்த நிறைவு மிகுந்த புன்னகையோடு காவல்துறை வண்டியில் ஏறுகிறார். அவர் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு என்ன விலை எதிர்பார்த்தாரோ அந்த விலை கேள்விகளாக விசிக தலைவர் திரு.திருமாவளவன் முன்னால் முளைத்து நிற்கின்றன. அவர் ஒருவேளை பதில் சொல்லாவிட்டால்..காலம் பதில் சொல்லும். இதையெல்லாம் காண்கின்ற மக்களும் ஜனநாயக களத்தில் பதில் சொல்வார்கள். அதுதான் வரலாற்றில் எப்போதும் நடந்து வந்திருக்கிறது. கருத்துரிமையும் , ஜனநாயக விழுமியங்களும் வெல்லட்டும் ! #release_airportmoorthi மணி செந்தில்
Mani Senthil/மணி செந்தில்13,076 görüntüleme • 9 ay önce

நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் கொள்கை மொழி தமிழ் என்று எழுதப்பட்டு தமிழே பயிற்று மொழியாக இருக்கும் ஆங்கிலம் கட்டாய பாட மொழிகளில் ஒன்றாக திகழும். விருப்ப மொழியாக உலக மொழிகள் எதனையும் கற்கலாம் இந்தி உட்பட என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தானே நாங்களும் புதியக் கல்வி முறையில் குறிப்பிட்டுள்ளோம் என்று பொய்யான தகவல்களை முன் வைத்து குழப்புகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அது முற்றிலும் தவறு. விருப்ப மொழி என்பது சம்பந்தப்பட்ட மாணவனின் தனிப்பட்டத் தேர்வு (option). ஒரு மாணவனது வாழ்வியல் சூழல், எதிர்காலத் திட்டங்களை சார்ந்து எடுக்கப்படுகின்ற தேர்வு. அது கட்டாயம் அல்ல. ஒருவர் பிரான்சுக்கு செல்கிறார் என்றால் பிரெஞ்சு மொழி பயின்றுவிட்டு செல்லலாம். ஜெர்மனிக்கு செல்லும் திட்டம் இருந்தால் ஜெர்மானிய மொழி பயிலலாம். அவருக்கு அதுபோன்ற திட்டங்கள் இல்லை என்றால் விருப்ப மொழி எதையும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அது கட்டாயம் (Mandatory ) இல்லை. ஆனால் தமிழ் என்பது பயிற்று மொழி என்பதால் ஒரு மாணவன் தனக்குரிய எல்லா பாடங்களையும் தாய்மொழி தமிழில் தான் படிக்க முடியும். வரலாறு புவியியல் அறிவியல் போல ஆங்கிலமும் ஒரு பாடமாக இருக்கும். மற்றபடி எல்லாம் தமிழில் தான் ஒரு மாணவன் படிக்க முடியும். விருப்பப் பாடம் என்பது கட்டாயம் (Mandatory ) அல்ல. விருப்பப்பாடம் தேர்வு ( Choose) செய்யாத மாணவர்களும் உள்ளடக்கிய கல்வி முறையைத் தான் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது. ஆனால் புதிய கல்விமுறையோ இந்தியை கட்டாய ஒரு பாடமொழியாக திணிக்கிறது. இந்தி ஒரு தமிழ் மாணவனுக்கு தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி ஆட்சி வரைவின் அடிப்படையில் விருப்பப் பாடமாக தேர்வு செய்து ( Option ) படிக்கலாம். ஆனால் அது கட்டாயம் (Mandatory) அல்ல. ஆனால் தமிழை தமிழ்நாட்டில் படிக்கும் அனைவரும் பயிற்று மொழியாக பயின்றே ஆக வேண்டும். தமிழிலேயே தொடக்கக் கல்வி முதல் முதுநிலை கல்லூரி கல்வி வரை முனைவர் பட்டம் வரை படிக்கும் சூழ்நிலை ஏற்படும். நாம் தமிழர் கட்சி ஆட்சி முன் வரைவின் தலைப்பே " கொள்கை மொழி தமிழ்" என தீர்மானமாக வரையறுப்பு செய்கிறது. புதிய கல்விக் கொள்கை இதற்கு முற்றிலும் எதிரானது. புதிய கல்விக் கொள்கை இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கிறது. சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்க முயல்கிறது. புதிய கல்விக் கொள்கை முன் வைக்கும் ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த குலக்கல்வி முறையில் வேறு வடிவம் தான். புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி மோடி "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்பதை முன்மொழிந்தார். பல மொழிகள் பேசக்கூடிய தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் அந்தந்த தேசிய இனங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை, மொழி வழிக் கல்வியை அழிக்கும் முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை. நாடு முழுக்க ஒரே ஒரு கல்வித் திட்டம் என்பது உலகளாவிய அணுகுமுறை என்று மாற்றப்பட்டு 1994 ல் கொண்டுவரப்பட்ட "காட் ஒப்பந்தத்தின்படி" மேற்கொள்ளப்படுகிற கார்ப்பரேட் நுழைவுக்கு வழிவகுக்கிற கல்வித் திட்டமாகும். தமிழ்நாடு உள்ளிட்ட எளிய மாணவர்கள் பயன்பெறுகிற அங்கன்வாடி போன்ற சிறு சிறு பள்ளிகளை மூடிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் கல்வியை கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் ஆபத்து தான் புதிய கல்வித் திட்டம். அதை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. ஆட்சி வரைவிலும் மிகத் தெளிவாக அதை குறிப்பிட்டு இருக்கிறது. மணி செந்தில்.
Mani Senthil/மணி செந்தில்12,550 görüntüleme • 1 yıl önce

எம் மொழி ..எம் தாய்மொழி.. சிந்தை சிலிர்த்து உள்ளம் அதிர்கிறது.. நீதியரசர் மகாதேவன். ❤️❤️❤️
Mani Senthil/மணி செந்தில்14,889 görüntüleme • 1 yıl önce
Daha fazla içerik yok.