
Abdul Muthaleef
@MuthaleefAbdul • 24,227 subscribers
Special field of Coverage Politics, Crime, Civic bodies, & Special Stories. Political Analyst.
Shorts
Videos

"ஸ்டாலின் தான் சி.எம்., உதய்தான் டெபுடி சி.எம், திமுக ஆட்சிதான், இப்போ இருக்கிற பிரதமரை எனக்கு தெரியாது மன்மோகன் சிங் தான் பிரதமர், இப்ப இருக்கிற 500 ரூபாய் நோட்டு எனக்கு தெரியாது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுத்தான் நம்புவேன்" -சத்யராஜ் என்ன சார் ஆச்சு இவருக்கு? அது ஒன்னுமில்ல சார் கடந்த மே மாதத்திலிருந்து செலக்டிவ் அம்னீஷியாவால பாதிக்கப்பட்டிருக்கார் சார்...
Abdul Muthaleef72,212 Aufrufe • vor 1 Monat

30 வயது இளைஞரா? என பிரமிக்க வைத்த ஆளுநர். யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் வேலம்மாள் பள்ளி சார்பில் 10,000 மாணவர்களுடன் யோகா செய்தார் ஆளுநர். பேருக்கு யோகா செய்யாமல் மைக் மாட்டிக்கொண்டு ஆசனங்களை முறையாக செய்து காட்டினார். முத்தாய்ப்பாக 51 தண்டாலை விடாமல் செய்தது எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. மேடையில் இருப்பது 70 வயதை கடந்தவரா? 30 வயது இளைஞரா என கேட்க வைத்தது. சிராக் ஷூட் டி-ஷர்ட்டில் வேக நடை நடந்து வந்தது அவர் Ex. IPS அதிகாரி என்பதை காட்டியது. Spinco Giriş
Abdul Muthaleef175,038 Aufrufe • vor 1 Jahr

"பாளையக்கோட்டை சிறையினிலே பாம்பு பல்லி நடுவினிலே" இதுதான் திமுகவினர் காலாகால டெக்னிக். சோ அன்றே காமெடியில் கிண்டலடித்துவிட்டார். அன்றைய காங்கிரஸார்,பல தலைவர்கள் சுதந்திர போரில் கொடுஞ்சிறையில் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் தேசத்துக்காக உழைக்கும் மக்களுக்காக பல பத்தாண்டுகள் இளமையை தொலைத்து கொடுஞ்சிறையிலும் சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் தியாகம் செய்துள்ளனர், வாழும் சாட்சியாக நம் முன் வாழ்ந்த தோழர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு இருவரும் 17 ஆண்டுகள் சிறை, தலைமறைவு வாழ்க்கையில் குடும்பத்தாரை பிரிந்து வாழ்ந்துள்ளனர். நமது அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் வெள்ளையனை எதிர்த்து கொடுஞ்சிறையில் உயிர் நீத்த வரலாறு உண்டு. வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் புகழ்பெற்ற வழக்கறிஞர் செக்கிழுத்த செம்மல், சுப்ரமணியம் சிவா, பாரதியார், திருப்பூர் குமரன் என்னற்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ்நாடு பெயர் வைக்க போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் என தியாகிகள் வரிசை சொல்லி மாளாது. லௌகீக இன்பமா பகத்சிங், வாஞ்சிநாதன், மதன்லால் திங்க்ரா, சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு, சுகதேவ் இவர்களும் லௌகீக வாழ்க்கையை மட்டுமல்ல வாழ்க்கையையே இழந்தவர்கள். ஆனால் சில மாதங்கள், வாரங்கள் சிறையிலிருந்து அதை பெரும் தியாகமாக பேசுவதுதான் திமுகவினர் சாதனை.
Abdul Muthaleef21,280 Aufrufe • vor 1 Monat

சட்டசபையின் நிகழ்வின் சுருக்க வீடியோ...இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது... சிரித்து ரசிக்க மட்டும்...
Abdul Muthaleef26,366 Aufrufe • vor 1 Monat

ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தலால் ஐ.ஐ.எம். பட்டமளிப்பு விழாவில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுதான் ஆளுநர். அவருக்கு தமிழ் மீது பற்று என்பது நடிப்பல்ல இயற்கையாகவே அவர் தமிழை நேசிக்கிறார். மாற்றாரையும் நேசிக்க வைக்கும் திறன் தமிழ் மொழிக்கு உண்டு. ஆளுநர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது இந்த முயற்சி பெருமையாக இருக்கிறது. அவருக்கு நன்றி. @rajbhavan_tn
Abdul Muthaleef122,041 Aufrufe • vor 1 Jahr

விஜய்யின் முடிவு சிக்கலில் தவெக, சந்தோஷத்தில் நிர்வாகிகள்....அப்பாவி தொண்டர்கள்... விஜய் கரூர் சம்பவத்தில் தனக்கு உதவிய அதிமுக, பாஜகவை கரம் கோர்க்காமல் நேரம் பார்த்து கழன்று கொண்டுள்ளார். இது விஜய்க்கு பின்னடைவாக மாறும். விஜய் பெறப்போகும் வாக்குகள் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுத்தராது. மாறாக இன்னொரு பெரிய மக்கள் நலக்கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது. ஒரு கட்சி அதன் கள அரசியலை நம்பி முடிவெடுக்கவேண்டும். ஆனால் பயிற்சியோ, களஅனுபவமோ பொருளாதார பின்புலமோ இல்லாத குறிப்பாக தளபதிகள் இல்லா வீரர்களை வைத்து களத்தில் குதிக்கிறார் விஜய். உடனிருப்பவர்களின் தவறான கணிப்புகள் போக போக விஜய்க்கு புரியும். தேர்தல் முடிவுகள் அவருக்கு சந்தோஷத்தை தராது அதைவிட தேர்தல் களத்திலேயே அவர் விரும்பாத சம்பவங்கள் அவர் எதிர்கொள்ள நேரலாம். விஜய்யை இம்முடிவை நோக்கி தள்ளிய ஆதவ், ஜான், புஸ்ஸி உள்ளிட்டோருக்கு ஆட்சியை பிடிக்க மாட்டோம் என்பது தெரியும். அவர்கள் அஜெண்டா வேறு. ஆனால் விஜய் மீது அபிமானம் கொண்ட அப்பாவி தொண்டர்கள், களத்தில் போராடும் கீழ்மட்ட நிர்வாகிகள் தான் பாவம். பொருளாதரத்தை இழந்து கடனாளி ஆகும் நிலையும் வரலாம். இதுவரை இக்கட்டான நேரங்களில் துணிவை காட்டாத விஜய் இனியும் அப்படி இருந்தால் சிக்கல்தான். களம் யாருக்கு சாதகம் பொறுத்திருந்து பார்ப்போம். TVK Vijay
Abdul Muthaleef56,595 Aufrufe • vor 6 Monaten

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை.... ஒரு கட்சியின் தலைவர் வருங்கால முதலமைச்சராக வர வாய்ப்புள்ளவரை ஒரு அரசியல் தலைவரின் பிறந்த நாளில் விழாவை சிறப்பாக நடத்துவதை விடுத்து இப்படி சாலையில் செல்வோம் எங்கு சிலை இருக்கிறதோ மாலை போடுவோம் ரேஞ்சுக்கு நடத்துவது சரியா? என்னதான் அவர் இவர்கள் இசைவுக்கு ஒத்து வருகிறார் என்பதால் இப்படி செய்யலாமா? இதற்காகத்தான் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமியை விமர்சிப்பது. அடையாறு மணி மண்டபம் எல்லாம் அவருக்கு தெரியாது.
Abdul Muthaleef106,226 Aufrufe • vor 1 Jahr