
Nainar Nagenthran
@NainarBJP • 98,261 subscribers
State President - TN BJP | Former Minister
Shorts
Videos

இந்து மதத்தின் மீதுள்ள வெறுப்பு, உங்கள் ஐம்புலன்களையும் ஒடுக்கிவிட்டதா அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களே? சமீபத்தில் நீங்கள் கலந்து கொண்ட பள்ளி விழாவில் “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என NCC மாணவர்கள் உங்களுக்கு வரவேற்பளித்ததை, “ஜெய் ஸ்ரீராம்” என தவறாகப் புரிந்து கொண்டு, பள்ளி மேடையிலேயே பாஜகவை வாய்க்கு வந்தபடி நீங்கள் வசைபாடியிருப்பது, இந்து மதத்தின் மீதும் பாஜகவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அளவுகடந்த வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. பள்ளிகளில் அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை தெரியாமல், பள்ளி மாணவர்களிடையே இவ்வாறான வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்த உங்கள் அரசியல் மாண்பற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. காலங்காலமாக இந்திய இராணுவப் படைகளிலும், சீருடைப் பணிகளிலும் மூத்தவர்களை “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என விளிப்பது தான் மரபு. அதுமட்டுமன்றி, பல பத்தாண்டுகளாக இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஒவ்வொரு இந்துக் கடவுளின் பெயரைக் கூறி கோஷங்களை எழுப்புவதும் வழக்கமான ஒன்று தான். எனவே, இங்கு யாரும் எதையும் புதிதாக திணிக்கவில்லை என்பதை தேசிய மாணவர் படைக்கும், சாரணர் படைக்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய பள்ளி மாணவர்களிடையே, தனது அமைச்சர்கள் இதுபோன்ற இந்து மத வெறுப்பு கருத்துக்களை பரப்புவதை முதல்வர் திரு. TVK Vijay அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
Nainar Nagenthran18,836 Aufrufe • vor 14 Tagen

“ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! “ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. Virudhai Magal Keerthana -இன் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது. எனவே, முதல்வர் திரு. TVK Vijay அவர்கள், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!n
Nainar Nagenthran41,071 Aufrufe • vor 1 Monat

Condemnation of Thiru. Aadhav Arjuna for Spreading Unwanted Remarks Against Superstar Thiru. Rajinikanth! Superstar Thiru. Rajinikanth is one of the most respected and celebrated figures in Indian cinema, having reigned over the Tamil film industry for more than four decades. A global face of Tamil cinema, he has been honoured with some of the nation’s highest recognitions, including the Dadasaheb Phalke Award, the Padma Bhushan, and the Padma Vibhushan. Beyond his remarkable artistic achievements, he is widely admired for his humility, spiritual outlook, and the immense affection he enjoys among people across caste, religion, language, and region. It is therefore deeply inappropriate and condemnable that Thiru. Aadhav Arjuna of TVK has chosen to make unwarranted remarks about such a widely respected personality in the public domain. Attempts to gain publicity by targeting a figure who commands such enduring goodwill among the people of Tamil Nadu reflect a lack of basic decorum. I urge the leadership of his party to take note of these remarks, publicly disassociate themselves from them, and advise him to refrain from such conduct in the future. Further, Thiru. Aadhav Arjuna should issue an unconditional apology to the fans and well-wishers of Superstar Thiru. Rajinikanth avl.
Nainar Nagenthran133,918 Aufrufe • vor 4 Monaten

திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு! திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? திரு. ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா? அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. TVK Ramesh அவர்கள், இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக புகாரை தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் திரு. TVK Vijay அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்!
Nainar Nagenthran43,553 Aufrufe • vor 1 Monat

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு! முதல்வர் திரு. TVK Vijay பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா? "மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்" என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்! உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்!
Nainar Nagenthran40,923 Aufrufe • vor 1 Monat

“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திரு. Rajmohan அவர்களே! நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்லத் திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள். அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது. காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் TVK Vijay அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!
Nainar Nagenthran26,029 Aufrufe • vor 1 Monat

திருப்பூரில் மக்களுக்குப் பயன்பாடற்ற இடத்தில் தார் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்த சமூக ஆர்வலரைத் திமுக பேரூராட்சித் தலைவர் திரு. பழனிசாமி கார் ஏற்றிக் கொன்றதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திராவிட மாடல் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மரணம் தான் பரிசளிக்கப்படுமா? 'திமுகக்காரன்' எனும் ஒற்றை அடையாளமும், பதவி அதிகாரமும் இருந்தால் ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை உண்டா? இதுபோன்ற குற்றங்கள் வெளிவரும்போது கண்துடைப்புக்காகத் தான் கைது நடக்கிறதே தவிர, கன்னித்தீவு தொடரைப் போலத் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றன. இப்படி நான்காண்டுகளாய் மக்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டு, அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போரின் உயிரையும் பறித்துவிட்டு, 'நாடு போற்றும் நல்லாட்சி' என்று பெருமை பேச திமுகவினர் நாண வேண்டும்!
Nainar Nagenthran174,623 Aufrufe • vor 11 Monaten
0:41
Sensitive content
This media may contain sensitive content.

ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது. சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!
Nainar Nagenthran108,123 Aufrufe • vor 7 Monaten

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர்! கடந்த வாரம் தமிழகத்தையே உலுக்கிய நெல்லை இரட்டைக் கொலையின் பதற்றம் தணிவதற்குள்ளேயே, கோவை சிங்காநல்லூர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தப்பட்டுள்ள சம்பவமும், விருதுநகர் மாவட்டம் அருகே, திமுக கொடி கட்டிய காரை ஏற்றி ஒரு சிறுமியைக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவமும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. பட்டப்பகலில் பொதுவெளியில் யார், யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம், தாக்கலாம், கொலை செய்யலாம் என்னுமளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதும், அதை ஜோசப் விஜய் அரசு வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக, தவெக ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கே பொதுவெளியில் பாதுகாப்பளிக்க முடியாமல் முதல்வர் திரு. TVK Vijay அவர்கள் திணறுவது, அவரின் நிர்வாகத் தோல்வியைத் தான் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. “மாற்றம்” வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு தினந்தினம் இப்படி உயிர்பயத்தைக் காட்டிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது. எனவே, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையும் வேளையிலாவது, முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும்! தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
Nainar Nagenthran22,803 Aufrufe • vor 1 Monat

It is a shame that the DMK Government has named Waddels road in Chennai after Late Father Ezra Sargunam, a known-Hindu hater. The video I have attached is proof of the venom he has spewed against Hindus. He has openly instigated violence against Hindus. Is there no limits for DMK’s Minority appeasement politics? The people of Tamil Nadu are watching. I urge the TN Government to immediately rollback the decision to name Waddels Road after Father Ezra Sargunam. இந்து மத வெறுப்பாளரான மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது பெயரை சென்னையில் உள்ள வேடல்ஸ் சாலைக்கு வைத்தது திமுக அரசு செய்த வெட்கக்கேடான செயலாகும். அவர் இந்துக்கள் மீது தீவிர வெறுப்புணர்வை உமிழும் வகையில் பேசியவற்றை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம். இந்துக்கள் மீது வன்முறையைத் தூண்டும் விதத்திலும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். திமுகவின் சிறுபான்மை ஓட்டரசியல் எல்லையை மீறிப் சென்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் இவையனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். எனவே, வேடல்ஸ் சாலைக்கு பேராயர் எஸ்றா சற்குணம் பெயரை வைத்த இந்த முடிவை DMK அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Nainar Nagenthran166,474 Aufrufe • vor 1 Jahr

இன்று, சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் திரு. Dr.SG Suryah அவர்கள் மீதும், இளைஞர் அணி நிர்வாகிகள் மீதும் திமுக ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியின் கோரமுகத்தைக் கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், இதுபோன்ற வன்முறையினைக் கையில் எடுத்துள்ளனர் திமுகவினர். விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாகக் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையையே பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம். தமிழக முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.
Nainar Nagenthran70,061 Aufrufe • vor 7 Monaten

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்? பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சாதிகள் இல்லையடி என போதித்த வாயால் மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது ஆகியவையெல்லாம் திமுக-வின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள். இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் “பள்ளிக்கல்வித்துறை எனது கோட்டை” என சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு. Dr. Anbil Mahesh அவர்கள். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர்! இவ்வாறு, தங்களது நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் கல்வித்தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை எளிய மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும் DMK அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் திறனற்ற மக்கள் விரோத திமுகவைத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்!
Nainar Nagenthran112,881 Aufrufe • vor 1 Jahr

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நமது மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல. மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள் குறித்த காணொளியை இந்தப் பதிவுடன் இணைத்துள்ளதோடு, மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin விரும்பினால் அவரை நேரில் அழைத்து சென்று காண்பிக்கவும் தயாராக உள்ளேன். ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் மூலம் தமிழக மக்களைக் குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக-வினர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Nainar Nagenthran101,582 Aufrufe • vor 1 Jahr

மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரேசன் அவர்களை இடைநீக்கம் செய்த உடனேயே மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடத்தப்படுவதாக காணொளி வெளியாகி உள்ளது. பட்டப்பகலில் பொதுவெளியில் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் படுஜோராக இப்படி சட்டவிரோத மதுவிற்பனை செய்ய ஏதுவாக இருக்கத் தான் ஒரு நேர்மையான அதிகாரி மீது போலிக்குற்றச்சாட்டுகளை வைத்து DMK அரசு இடைநீக்கம் செய்ததா? இந்த சட்டவிரோத மது விற்பனையை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவாரா? இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை, நாளை என்ன? திரு. சுந்தரேசன் அவர்கள் மூடிய 23 சட்டவிரோத பார்களின் திறப்பு விழாவா? சமூகநீதி குறித்து மேடைகளில் விளம்பரப்படுத்திவிட்டு, நேர்மையான காவல் அதிகாரிகளை விரட்டியடித்துவிட்டு, பின்பக்கம் சட்டவிரோத சாராய விற்பனையை ஊக்குவித்து, சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை!
Nainar Nagenthran89,205 Aufrufe • vor 1 Jahr

குழந்தைகளை வதைக்கும் உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார்? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதரஸா பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசும் காணொளி வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காணொளியைப் பார்த்த பின், "படிக்க வந்த சிறுவனைத் தூக்கியெறியும் அளவிற்கு அப்படி என்ன தவறு நிகழ்ந்தது? மதபோதனைக்காக வந்த சின்னஞ்சிறு மாணவர்களை இப்படி அடித்து உதைக்கும் உரிமை யார் அளித்தது? இது போல எத்தனை மதப் பள்ளிகளில் நம் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர்?" போன்ற எண்ணிலடங்காத கேள்விகள் மனதைத் துளைக்கின்றன. மதச்சார்பின்மையின் பாதுகாவலராகவும் தமிழகப் பிள்ளைகளின் "அப்பா" என்றும் தம்மை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மதரஸா பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Nainar Nagenthran63,562 Aufrufe • vor 8 Monaten

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது? நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய DMK அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத் தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.
Nainar Nagenthran68,711 Aufrufe • vor 11 Monaten

திருமாலின் 108 திவ்ய தளங்களில் முக்கியமானதும், "பூலோக வைகுண்டம்" என்று அழைக்கப்படும் பெருமைமிக்க ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் நேற்று தரிசனம் செய்யும் நல்வாய்ப்புக் கிட்டியது. உடன் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. Dr.L.Murugan அவர்களும் மூத்த தலைவர்களும் கட்சி நிர்வாகிகளும் தரிசனம் செய்ததில் பெரு மகிழ்ச்சி.
Nainar Nagenthiran72,299 Aufrufe • vor 1 Jahr

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிப்பதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மொட்டை வெயிலில் மொட்டை மாடியில் மாணவர்களை உட்கார வைப்பது நியாயமா? சுற்றுச்சுவர் கூட இல்லாத மொட்டை மாடியால் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு நேராதா? அடிக்கும் வெயிலில் மாணவர்களின் உடல்நலம் என்ன ஆவது? வகுப்பறைகூட இல்லாத நிலைதான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா? பள்ளிக்கல்வித்துறைக்கு என வருடந்தோறும் ஒதுக்கப்படும் ₹40,000 கோடி ரூபாய் என்ன ஆனது? சொந்த விளம்பரத்திற்காகக் காட்டும் அக்கறையில் சிறிது கூட அரசுப் பள்ளி மாணவர்களின் மீது காட்ட முயற்சிக்காதது ஏன்? அரசுப் பள்ளியில் படிப்போர் ஏழை எளியோர் தானே, மழையோ வெயிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார வைக்கலாம் என்ற அலட்சிய எண்ணம் கொண்டு செயல்படும் DMK அரசின் போக்கே அதனை அழிவுப் பாதைக்கு கூடிய விரைவில் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை!
Nainar Nagenthran57,231 Aufrufe • vor 1 Jahr

கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் திரு. M.K.Stalin அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்!
Nainar Nagenthran42,272 Aufrufe • vor 11 Monaten

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற அறிவாலய ஆட்சி ஒழிய வேண்டும்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சதீஷ் என்பவர் அரிவாளைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள காணொளி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. திமுக நிர்வாகியின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி சதீஷ் அப்பெண்ணைத் தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் பிரிந்து விட்டதாகவும் பலவாறான தகவல்கள் வெளிவந்தாலும் கூட, பொதுவெளியில் பகிரங்கமாக ஒரு பெண்ணை ஆயுதம் காட்டி மிரட்டும் ஆணவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய கொடூர மனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் கட்டளைகளை நிறைவேற்றும் கைக்கூலிகளாக காவல்துறையினர் மாறிவிட்டதன் விளைவு தான் DMK ஆட்சியில் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகக் காவல்துறைக்குத் தலைமையை நியமிக்க மறுக்கும் முதல்வரின் அலட்சியத்தால் தான் குற்றவாளிகள் எல்லாம் கொழுப்பெடுத்துப் போய்த் திரிகின்றனர். இப்படிப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை. இப்பேற்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்! பெண்களின் பாதுகாப்பும் மக்களின் நிம்மதியும் சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும்!
Nainar Nagenthran32,356 Aufrufe • vor 8 Monaten