Nainar Nagenthran's banner
Nainar Nagenthran's profile picture

Nainar Nagenthran

@NainarBJP98,168 subscribers

State President - TN BJP | Former Minister

Shorts

கல்வி நிலையங்களை கலையரங்குகளாக மாற்ற முயற்சிக்கிறாரா முதல்வர் திரு. TVK Vijay அவர்கள்? தவெக அமைச்சர்கள் திரு. Arunraaj TVK, திரு. TVK Sampath Coimbatore மற்றும் திரு. Vignesh TVK ஆகியோர் பங்குபெற்ற கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தவெக கட்சியின் பிரத்யேகப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதல்வராக என்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து, விளம்பர வெறி முற்றிய தவெகவினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் வகுப்பு நடக்கும் போதே அத்துமீறி நுழைந்து சினிமா வசனம் பேசி ரீல்ஸ் எடுப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து “விஜய் மாமா வாழ்க” என அவர்களை கோஷம் போட வைத்து ரீல்ஸ் எடுப்பது, அரசு நிகழ்ச்சி என்று கூறி பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று, தவெக சார்பாக சான்றிதழ் வழங்குவது, அரசு நிகழ்வுகளில் தவெகவின் பாடலை ஒலிபரப்புவது என ஒட்டுமொத்த தமிழகத்தையே சர்க்கஸ் கூடாரம் போல தவெகவினர் மாற்ற முயன்றுக் கொண்டிருப்பது அப்பட்டமான விளம்பர அரசியல். பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், படிக்கும் பிள்ளைகளை தங்கள் கட்சியின் விளம்பரத் தூதர்களாகவும், அரசு பட்டமளிப்பு விழாக்களை கட்சி கொண்டாட்டங்கள் போலவும் நினைப்பதை நிறுத்தி விட்டு, அரசு நிகழ்ச்சிகளுக்குரிய மாண்பை கற்றுக் கொள்ளுமாறு முதல்வரையும் அவரது அமைச்சரவையையும் வலியுறுத்துகிறேன்.

கல்வி நிலையங்களை கலையரங்குகளாக மாற்ற முயற்சிக்கிறாரா முதல்வர் திரு. TVK Vijay அவர்கள்? தவெக அமைச்சர்கள் திரு. Arunraaj TVK, திரு. TVK Sampath Coimbatore மற்றும் திரு. Vignesh TVK ஆகியோர் பங்குபெற்ற கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தவெக கட்சியின் பிரத்யேகப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதல்வராக என்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து, விளம்பர வெறி முற்றிய தவெகவினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் வகுப்பு நடக்கும் போதே அத்துமீறி நுழைந்து சினிமா வசனம் பேசி ரீல்ஸ் எடுப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து “விஜய் மாமா வாழ்க” என அவர்களை கோஷம் போட வைத்து ரீல்ஸ் எடுப்பது, அரசு நிகழ்ச்சி என்று கூறி பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று, தவெக சார்பாக சான்றிதழ் வழங்குவது, அரசு நிகழ்வுகளில் தவெகவின் பாடலை ஒலிபரப்புவது என ஒட்டுமொத்த தமிழகத்தையே சர்க்கஸ் கூடாரம் போல தவெகவினர் மாற்ற முயன்றுக் கொண்டிருப்பது அப்பட்டமான விளம்பர அரசியல். பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், படிக்கும் பிள்ளைகளை தங்கள் கட்சியின் விளம்பரத் தூதர்களாகவும், அரசு பட்டமளிப்பு விழாக்களை கட்சி கொண்டாட்டங்கள் போலவும் நினைப்பதை நிறுத்தி விட்டு, அரசு நிகழ்ச்சிகளுக்குரிய மாண்பை கற்றுக் கொள்ளுமாறு முதல்வரையும் அவரது அமைச்சரவையையும் வலியுறுத்துகிறேன்.

21,174 views

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை. காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை. காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin அவர்களை வலியுறுத்துகிறேன்.

959,101 views

மாண்புமிகு பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் அன்பு சொந்தங்கள் என் இல்லம் வந்து வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! தமிழக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த எனக்கு அளித்த ஆதரவுக்கும், பாஜகவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் அன்பு சொந்தங்கள் என் இல்லம் வந்து வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! தமிழக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த எனக்கு அளித்த ஆதரவுக்கும், பாஜகவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

74,830 views

Your extreme hatred towards Hinduism will lead to your downfall, Thiru Udhay! The fact that you spoke about abolishing Sanatana Dharma, the faith of hundreds of millions of Hindus, in your very first Assembly speech only shows that you are not yet politically mature. The relentless targeting of Hindus is utterly deplorable and deserves the strongest condemnation. The reason you have been demoted from Deputy Chief Minister to Leader of the Opposition is that you once publicly declared “I will abolish Sanatana Dharma” thereby earning the undying hatred of Hindus. Therefore, if you wish to grow further in politics, it is essential that you cast aside the hatred you harbour towards a particular religion and truly embrace religious harmony. You must henceforth understand that for every person belonging to each religion, Hindu, Muslim, or Christian - their religious identity and beliefs are of utmost importance. Remember that if you instead continue to belittle the beliefs of Hindus and attempt to do political based on religion, you will fall into a pit from which there is no return. Furthermore, Tamil Nadu is now eagerly watching to see how Chief Minister TVK Vijay, who has formed a government elected by the people - will respond to this hate campaign.

Your extreme hatred towards Hinduism will lead to your downfall, Thiru Udhay! The fact that you spoke about abolishing Sanatana Dharma, the faith of hundreds of millions of Hindus, in your very first Assembly speech only shows that you are not yet politically mature. The relentless targeting of Hindus is utterly deplorable and deserves the strongest condemnation. The reason you have been demoted from Deputy Chief Minister to Leader of the Opposition is that you once publicly declared “I will abolish Sanatana Dharma” thereby earning the undying hatred of Hindus. Therefore, if you wish to grow further in politics, it is essential that you cast aside the hatred you harbour towards a particular religion and truly embrace religious harmony. You must henceforth understand that for every person belonging to each religion, Hindu, Muslim, or Christian - their religious identity and beliefs are of utmost importance. Remember that if you instead continue to belittle the beliefs of Hindus and attempt to do political based on religion, you will fall into a pit from which there is no return. Furthermore, Tamil Nadu is now eagerly watching to see how Chief Minister TVK Vijay, who has formed a government elected by the people - will respond to this hate campaign.

10,894 views

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு முத்து பலவேசம் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு தமிழ்ச்செல்வன் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு முத்து பலவேசம் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு தமிழ்ச்செல்வன் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி

19,842 views

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில், தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பாக வரவேற்பு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு. சித்ராங்கதன் அவர்கள், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு. தமிழ்ச் செல்வன் அவர்கள் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்துபலவேசம் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில், தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பாக வரவேற்பு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு. சித்ராங்கதன் அவர்கள், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு. தமிழ்ச் செல்வன் அவர்கள் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்துபலவேசம் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

16,874 views

Videos

NainarBJP's profile picture

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு! முதல்வர் திரு. TVK Vijay பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா? "மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்" என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்! உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்!

Nainar Nagenthran

29,874 views • 1 day ago

NainarBJP's profile picture

திருப்பூரில் மக்களுக்குப் பயன்பாடற்ற இடத்தில் தார் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்த சமூக ஆர்வலரைத் திமுக பேரூராட்சித் தலைவர் திரு. பழனிசாமி கார் ஏற்றிக் கொன்றதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திராவிட மாடல் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மரணம் தான் பரிசளிக்கப்படுமா? 'திமுகக்காரன்' எனும் ஒற்றை அடையாளமும், பதவி அதிகாரமும் இருந்தால் ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை உண்டா? இதுபோன்ற குற்றங்கள் வெளிவரும்போது கண்துடைப்புக்காகத் தான் கைது நடக்கிறதே தவிர, கன்னித்தீவு தொடரைப் போலத் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றன. இப்படி நான்காண்டுகளாய் மக்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டு, அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போரின் உயிரையும் பறித்துவிட்டு, 'நாடு போற்றும் நல்லாட்சி' என்று பெருமை பேச திமுகவினர் நாண வேண்டும்!

Nainar Nagenthran

174,590 views • 9 months ago

ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது. சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!
0:41

Sensitive content

This media may contain sensitive content.

NainarBJP's profile picture

ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது. சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!

Nainar Nagenthran

108,062 views • 5 months ago

NainarBJP's profile picture

It is a shame that the DMK Government has named Waddels road in Chennai after Late Father Ezra Sargunam, a known-Hindu hater. The video I have attached is proof of the venom he has spewed against Hindus. He has openly instigated violence against Hindus. Is there no limits for DMK’s Minority appeasement politics? The people of Tamil Nadu are watching. I urge the TN Government to immediately rollback the decision to name Waddels Road after Father Ezra Sargunam. இந்து மத வெறுப்பாளரான மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது பெயரை சென்னையில் உள்ள வேடல்ஸ் சாலைக்கு வைத்தது திமுக அரசு செய்த வெட்கக்கேடான செயலாகும். அவர் இந்துக்கள் மீது தீவிர வெறுப்புணர்வை உமிழும் வகையில் பேசியவற்றை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம். இந்துக்கள் மீது வன்முறையைத் தூண்டும் விதத்திலும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். திமுகவின் சிறுபான்மை ஓட்டரசியல் எல்லையை மீறிப் சென்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் இவையனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். எனவே, வேடல்ஸ் சாலைக்கு பேராயர் எஸ்றா சற்குணம் பெயரை வைத்த இந்த முடிவை DMK அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

166,469 views • 11 months ago

NainarBJP's profile picture

இன்று, சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் திரு. Dr.SG Suryah அவர்கள் மீதும், இளைஞர் அணி நிர்வாகிகள் மீதும் திமுக ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியின் கோரமுகத்தைக் கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், இதுபோன்ற வன்முறையினைக் கையில் எடுத்துள்ளனர் திமுகவினர். விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாகக் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையையே பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம். தமிழக முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.

Nainar Nagenthran

70,061 views • 5 months ago

NainarBJP's profile picture

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்? பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சாதிகள் இல்லையடி என போதித்த வாயால் மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது ஆகியவையெல்லாம் திமுக-வின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள். இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் “பள்ளிக்கல்வித்துறை எனது கோட்டை” என சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு. Dr. Anbil Mahesh அவர்கள். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர்! இவ்வாறு, தங்களது நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் கல்வித்தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை எளிய மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும் DMK அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் திறனற்ற மக்கள் விரோத திமுகவைத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்!

Nainar Nagenthran

112,842 views • 11 months ago

NainarBJP's profile picture

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நமது மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல. மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள் குறித்த காணொளியை இந்தப் பதிவுடன் இணைத்துள்ளதோடு, மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin விரும்பினால் அவரை நேரில் அழைத்து சென்று காண்பிக்கவும் தயாராக உள்ளேன். ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் மூலம் தமிழக மக்களைக் குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக-வினர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Nainar Nagenthran

101,573 views • 1 year ago

NainarBJP's profile picture

குழந்தைகளை வதைக்கும் உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார்? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதரஸா பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசும் காணொளி வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காணொளியைப் பார்த்த பின், "படிக்க வந்த சிறுவனைத் தூக்கியெறியும் அளவிற்கு அப்படி என்ன தவறு நிகழ்ந்தது? மதபோதனைக்காக வந்த சின்னஞ்சிறு மாணவர்களை இப்படி அடித்து உதைக்கும் உரிமை யார் அளித்தது? இது போல எத்தனை மதப் பள்ளிகளில் நம் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர்?" போன்ற எண்ணிலடங்காத கேள்விகள் மனதைத் துளைக்கின்றன. மதச்சார்பின்மையின் பாதுகாவலராகவும் தமிழகப் பிள்ளைகளின் "அப்பா" என்றும் தம்மை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மதரஸா பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

63,562 views • 7 months ago

NainarBJP's profile picture

மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரேசன் அவர்களை இடைநீக்கம் செய்த உடனேயே மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடத்தப்படுவதாக காணொளி வெளியாகி உள்ளது. பட்டப்பகலில் பொதுவெளியில் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் படுஜோராக இப்படி சட்டவிரோத மதுவிற்பனை செய்ய ஏதுவாக இருக்கத் தான் ஒரு நேர்மையான அதிகாரி மீது போலிக்குற்றச்சாட்டுகளை வைத்து DMK அரசு இடைநீக்கம் செய்ததா? இந்த சட்டவிரோத மது விற்பனையை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவாரா? இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை, நாளை என்ன? திரு. சுந்தரேசன் அவர்கள் மூடிய 23 சட்டவிரோத பார்களின் திறப்பு விழாவா? சமூகநீதி குறித்து மேடைகளில் விளம்பரப்படுத்திவிட்டு, நேர்மையான காவல் அதிகாரிகளை விரட்டியடித்துவிட்டு, பின்பக்கம் சட்டவிரோத சாராய விற்பனையை ஊக்குவித்து, சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை!

Nainar Nagenthran

89,205 views • 11 months ago

NainarBJP's profile picture

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது? நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய DMK அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத் தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.

Nainar Nagenthran

68,711 views • 9 months ago

NainarBJP's profile picture

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிப்பதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மொட்டை வெயிலில் மொட்டை மாடியில் மாணவர்களை உட்கார வைப்பது நியாயமா? சுற்றுச்சுவர் கூட இல்லாத மொட்டை மாடியால் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு நேராதா? அடிக்கும் வெயிலில் மாணவர்களின் உடல்நலம் என்ன ஆவது? வகுப்பறைகூட இல்லாத நிலைதான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா? பள்ளிக்கல்வித்துறைக்கு என வருடந்தோறும் ஒதுக்கப்படும் ₹40,000 கோடி ரூபாய் என்ன ஆனது? சொந்த விளம்பரத்திற்காகக் காட்டும் அக்கறையில் சிறிது கூட அரசுப் பள்ளி மாணவர்களின் மீது காட்ட முயற்சிக்காதது ஏன்? அரசுப் பள்ளியில் படிப்போர் ஏழை எளியோர் தானே, மழையோ வெயிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார வைக்கலாம் என்ற அலட்சிய எண்ணம் கொண்டு செயல்படும் DMK அரசின் போக்கே அதனை அழிவுப் பாதைக்கு கூடிய விரைவில் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை!

Nainar Nagenthran

57,231 views • 11 months ago

NainarBJP's profile picture

திமுக ஆட்சியால் தலைவிரித்தாடும் போதைப் புழக்கமும் வன்முறையும்! விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய்தோரைத் தட்டிக்கேட்ட நான்கு வாலிபர்களைப் போதை கும்பல் அரிவாளால் தாக்கிய காணொளியும், செங்கல்பட்டில் கஞ்சா போதை கும்பல் ஒன்று சிறுவர்களையும் இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கி அச்சுறுத்தும் காணொளியும் வெளியாகியிருப்பது மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. ஐந்தாண்டுகளாகத் தெருவெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கத்தால், புத்தகத்தை ஏந்த வேண்டிய தமிழக இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திப் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் குற்றவாளிகளாக உருமாறி வருகின்றனர். தனது திறனற்ற நிர்வாகத்தால், தமிழகத்தைப் போதைப் பொருட்களின் கூடாரமாக மாற்றிய DMK, இனி ஒருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும்! எனவே, தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம்! போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம்!

Nainar Nagenthran

18,381 views • 2 months ago

NainarBJP's profile picture

கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்!

Nainar Nagenthran

42,251 views • 9 months ago

NainarBJP's profile picture

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற அறிவாலய ஆட்சி ஒழிய வேண்டும்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சதீஷ் என்பவர் அரிவாளைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள காணொளி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. திமுக நிர்வாகியின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி சதீஷ் அப்பெண்ணைத் தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் பிரிந்து விட்டதாகவும் பலவாறான தகவல்கள் வெளிவந்தாலும் கூட, பொதுவெளியில் பகிரங்கமாக ஒரு பெண்ணை ஆயுதம் காட்டி மிரட்டும் ஆணவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய கொடூர மனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் கட்டளைகளை நிறைவேற்றும் கைக்கூலிகளாக காவல்துறையினர் மாறிவிட்டதன் விளைவு தான் DMK ஆட்சியில் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகக் காவல்துறைக்குத் தலைமையை நியமிக்க மறுக்கும் முதல்வரின் அலட்சியத்தால் தான் குற்றவாளிகள் எல்லாம் கொழுப்பெடுத்துப் போய்த் திரிகின்றனர். இப்படிப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை. இப்பேற்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்! பெண்களின் பாதுகாப்பும் மக்களின் நிம்மதியும் சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும்!

Nainar Nagenthran

32,302 views • 6 months ago

NainarBJP's profile picture

முதல்வரின் விளம்பர நாடகத்திற்கு மக்கள் எதற்கு வீணாக அலைய வேண்டும்? இன்று மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் ரோட் ஷோ நிகழவிருப்பதைக் காரணம் காட்டி, உடுமலைப்பேட்டை நகரப் பேருந்து நிலையத்தையே மாற்றி 1.5 கி.மீ. தொலைவில் ஒரு குப்பை மேட்டில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ள DMK அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் பல பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் விளம்பர அரசியலுக்காக தெருவில் இறங்கி தரிசனம் காட்டும் முதல்வரின் தேர்தல் உத்திக்காக, வியர்க்க விறுவிறுக்க பேருந்து நிலையத்தைத் தேடி மக்கள் எதற்கு அலைய வேண்டும்? அதுவும் பேருந்து நிலையத்தை மாற்றுகிறோம் என அரசு சார்பில் மக்களுக்கு முறையாகத் தெரியப்படுத்தப்பட்டதா என்று கூடத் தெரியவில்லை. படிக்கும் பிள்ளைகள் முதல் வயதான முதியோர் வரை எத்தனை பேர் பேருந்துக்காக பழைய இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? சொல்லாமல் கொள்ளாமல் சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டு மொத்த ஊரையும் வெள்ளத்தில் மிதக்கவிட்ட இந்த அலங்கோல அரசு எதைத்தான் ஒழுங்காகச் செய்துள்ளது? உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை மொட்டை வெயிலில் காய விடுவது, ரோட் ஷோ என்ற பெயரில் பொதுமக்களைப் பாடாய்ப்படுத்துவது என தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக தொடர்ந்து மக்கள் நலனைக் கிள்ளுக்கீரையாக பிய்த்து எறிந்து வரும் இந்த அராஜக திராவிட மாடல் ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் நாள் வெகு தூரமில்லை!

Nainar Nagenthran

36,251 views • 10 months ago

NainarBJP's profile picture

அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காதீர்கள், முதல்வர் திரு. M.K.Stalin அவர்களே! சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டப் பஞ்சாயத்து செய்து "தீர்க்க வந்த" சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. இப்படி எந்தவொரு அதிகாரமும் நாகரிகமுமின்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொடங்கி பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் காமுகர்கள் வரை அனைத்து உடன்பிறப்புகளையும் ஆளுங்கட்சி திமிரை ஊட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் DMK-த்தின் திராவிட மாடலா? ஆமாம், பொது மேடையில் வைத்தே அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டே பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? ரவுடிகளை மட்டும் தான் வளர்த்துவிடும்! இத்தகைய கருப்பு சிவப்புப் படையைக் கைக்குள் வைத்துக்கொண்டு, "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று முழங்குவது வெட்கக்கேடு! தாங்கள் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து உடனடியாக, அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரைத் தாக்கிய கார் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிய உத்தரவிடுங்கள்!

Nainar Nagenthran

19,537 views • 6 months ago

NainarBJP's profile picture

தமிழ் மன்னர்களை இண்டி கூட்டணியினர் இழிவுபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது! தமிழ் அழிவதற்கும் தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காரணமானவர்கள் என விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. Thol. Thirumavalavan அவர்கள் கொச்சையாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை என்றும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது. மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போல சித்தரிக்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா, யார் தமிழின விரோதிகள் என்று? தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகச் சேரக்கூடாத இடம் சென்று சேர்ந்து, தான் கெடுவதோடு நில்லாமல், பழம்பெருமைமிக்க மன்னர்களின் புகழையும் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கொடிய முயற்சியை சகோதரர் திரு. திருமாவளவன் அவர்கள் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!

Nainar Nagenthran

16,692 views • 4 months ago