
Urimai Kalam TV
@Peruvazhuthiyar • 10,198 subscribers
அம்பேத்கரியம் 🔥🔥 பெரியாரியம்🔥🔥 மார்க்சியம்🔥🔥
Shorts
Videos

உங்களுக்கு கூசவில்லையா அண்ணா.?? நீங்கள் விஜய் அவர்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள் தவறு இல்லை. ஆனால் தலைவர் திருமாவளவன் அவர்கள் என்ன முடிவென்று அறிவிக்கும் முன்னரே, தலைவரை மீறி பொதுத்தளத்தில் ஒரு Negative Narrative Set செய்ய உங்களுக்கு கூசவில்லையா.?? மேலும் தன்னை MLA ஆக்கிய தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, சட்டமன்றத்தினுடைய கடைசி நாளில் நன்றி கூறாமல், மு.க.ஸ்டாலின் அவர்களுடைய துணைவியாருக்கு நன்றி சொன்ன பொழுது உங்களுக்கு நா கூசவில்லையா.??? கூச்சத்தை பற்றி நீங்கள் வகுப்பெடுப்பது தான் பெரும் ஆச்சரியமாக உள்ளது அண்ணா.??
Urimai Kalam TV47,010 views • 1 month ago

"ஆட்டோ டிரைவர் MLA ஆகக்கூடாது... ஆட்டோ டிரைவர்'க்கு என்ன தெரியும்.??" என்று நடிகர் #பிரகாஷ்ராஜ் பேசியதுக்கு என்னைக்கு திமுக கொத்தடிமைகள் பயர் விட்டாங்களோ, அன்னைக்கே சனாதன வர்ணாசிரம கட்டமைப்பை எதிர்க்கும் தகுதியை திமுக இழந்துவிட்டது... சமூக நீதியை நிலை நாட்டுவதில் திமுக விட்ட gape எல்லாத்தையும் தவெக Fill பண்ணிட்டாங்க... மறுமுறை திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், "தவெக'வை விட கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அமைச்சரவை பகிர்ந்து அளிக்கின்றோம், அதிக சீட்டுகள் பகிர்ந்து அளிக்கின்றோம்" என்ற சமூக நீதிப் போட்டியை தான் திமுக இனி மேற்கொள்ள வேண்டுமே தவிர, வழக்கம்போல Rss கைக்கூலி என்று முத்திரை குத்தும் நமுத்து போன பொரியை பிரச்சாரமாக மேற்கொண்டால் திமுகவுக்கு எதிர்காலத்தில் சங்கு தான். - இரா.இளம்பெருவழுதி
Urimai Kalam TV29,622 views • 29 days ago

அவ்வளவு சாதிவெறி.. " தொடர்ச்சியாக தலித் மக்களிடம் மட்டுமே அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டு போய் சேர்ப்பதை விட, பொது சமுதாய மக்களிடமும் அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்" இடம்:- கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி மேற்கு ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமம்.
Urimai Kalam TV298,268 views • 1 year ago

விசிக சார்பாக பலமுறை புகார் அளித்திருக்கின்றோம். பல கட்ட போராட்டங்களையும் மேற்கொண்டு இருக்கின்றோம். அதிகாரிகள் வருவார்கள், ஆய்வுகள் செய்வார்கள், கடையை மூடுகின்றோம் என வாக்குறுதி அளிப்பார்கள் ஆனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தண்ணீரில் போட்ட கோலம் போல கரைந்து விடும். ஏன் இவர்கள் சாராயக்கடையை மூடவில்லை என்றால், இப்பகுதியின் பார்கள் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆதலால் தான் சாராயக்கடைகளை மூடுவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இன்று மூடப்பட்ட 717 கடைகளில் எங்கள் பகுதியியுடைய சாராயக்கடையும் ஒன்று. மிக்க நன்றிகள் முதல்வர் அவர்களே.. விரைவில் மீதம் இருக்கும் மூன்று சாராயக்கடைகளையும் அகற்றுவார் என நம்புகின்றோம். குறிப்பு:- அருகில் தான் பாத்திமா பெண்கள் மகளிர் கல்லூரி உள்ளது.
Urimai Kalam TV24,926 views • 1 month ago

ஓ.. இதுக்கு தான் 🅰️ சான்றிதழ் கொடுத்தாங்களா... அடேய் செஞ்சித்.. 🤣🤣🤣
Urimai Kalam TV252,254 views • 1 year ago

எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் - காவல்துறை திருநெல்வேலியை சார்ந்த செல்வம் என்ற மாணவன் தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 13.02.2025 அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இருந்து கடந்துள்ளார். காவல்துறை மருத்துவமனையில் உடலை சேர்த்ததற்கு பின், மாணவன் இறந்த கிடந்த இடத்தை பெற்றோர்களிடம் காண்பித்த பொழுது, "ஏன் இவ்வளவு ரத்தம் சிந்தி இருக்கின்றது" என்று பெற்றோர்கள் கேட்டதற்கு எறும்பு கடித்திருக்க கூடும் என்று பதில் கூறியுள்ளார். எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் எவ்வாறு வெளிவரும்.?? உலகத்தில் யாருமே ஒரு இறப்புக்கு இது போன்ற காரணத்தை கூறி இருக்க மாட்டார்கள். எறும்பு கடித்திருந்திருக்க கூடும் என்று காவல்துறை முந்திக்கொண்டு ஒரு காரணத்தை கூறுகின்றார் என்றால், அந்த குறிப்பிட்ட காவல் அதிகாரி எந்த உண்மையை மறைக்க நினைக்கின்றார்.?? யாரை காப்பாற்ற நினைக்கின்றார்.?? என்ற பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் இறந்து கிடந்த செல்வத்தினுடைய காதுகளில் ரத்தம் வழிந்து இருக்கின்றது. உடலில் கீறல்கள் இருந்திருக்கின்றது. ஆசனவாய் பகுதியில் ரத்தம் உறைந்து இருக்கின்றது என்று பெற்றோர்கள் கூறுகின்றார்கள். மேலும் உடலை உடல்கூறாய்வு செய்யும் பொழுது வீடியோ காட்சி பதிவு செய்ய வேண்டுமெனவும், சிபிசிஐடி'க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.
Urimai Kalam TV157,619 views • 1 year ago

பாதிக்கப்பட்டவன் கேட்க தான் செய்வான்.. 🔥🔥🔥 அதுக்கு ஏன் சார் கத்துறீங்க..
Urimai Kalam TV53,169 views • 5 months ago

இவர் கூறியவாறு இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முன்பாக வேங்கவயல் செய்தி வெளியான போது Roots தமிழ் youtube சேனலில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் இருந்த Roots தமிழ் லோகோ தெரியாதவாறு ஜூம் செய்துதான் தற்பொழுது புதிய வீடியோ போன்று இந்த வீடியோவை ஆதாரம் என்னும் பெயரில் வெளியிடுகின்றார்கள். (பழைய வீடியோ:- அந்த பழைய வீடியோவை புது வீடியோ போல பிரேக்கிங் நியூஸ் செய்தியாக வெளியிடுவதன் மூலம், பொதுச் சமுதாய மக்களிடம் ஒரு Narrative Set செய்து, அதன் மூலம் இயல்பாகவே அவர்களிடம் இருக்கும் சாதி உணர்வை சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்த முயல்கின்றார்கள்.
Urimai Kalam TV127,296 views • 1 year ago

100k Subscribers.. 💙❤️ அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தம் திருத்தமாக வளர்வோம்..
Urimai Kalam TV63,396 views • 7 months ago

வேங்கைவயல் மரணம் அரச பயங்கரவாதம்... செத்துப்போன பிணத்திற்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட உறவினர்களை காவல்துறை வேங்கை வயலுக்குள் அனுமதிக்கவில்லையாம்... அதனால் பிணத்தை ரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றார்கள். சமத்துவம், சமூகநீதி பேசிய தமிழ்நாட்டு மண்ணில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா.?? முள்ளிவாய்க்காலை சூழ்ந்த சிங்களப் படையைப் போல, மாற்றான் தாய் மனப்போக்குடன் வேங்கவயலை சூழ்ந்துள்ளது தமிழ்நாட்டு காவல் படை. அப்பட்டமான அரசு பயங்கரவாதம்..
Urimai Kalam TV103,687 views • 1 year ago

தேர்தலுக்கு முன்பு பணம் ஏன்.??? செல்வபெருந்தகை கடும் விமர்சனம்..
Urimai Kalam TV34,963 views • 4 months ago

எங்கே செல்கிறது திமுக..?. இதைத்தான் நீண்ட காலமாகவே எழுதிக் கொண்டிருக்கின்றேன்.. வலிந்து ஒரு மனநிலையை மக்களிடம் உருவாக்காதீர்கள் என்று.. மக்கள் முதலமைச்சரை நடனமாடி வரவேற்றார்கள் என்று செய்தி வரும். ஆனால் அதனுடைய பின்னணியில் குரூப் டான்ஸ்ர்களை திட்டமிட்டு ஆட வைத்திருப்பார்கள். துணை முதல்வர் அவர்களை மாணவர்கள் விளையாட்டு பொருட்களுடன் ஆடி பாடி வரவேற்றார்கள் என்ற செய்தி வரும். ஆனால் அதனுடைய பின்னணியில் குரூப் டான்சர்கள் பயிற்சி மேற்கொண்டு நடனம் ஆடி இருப்பார்கள். தூய்மை பணியாளர்கள் ரோஜா பூக்களை கொடுத்து முதல்வர் அவர்களை வரவேற்றார்கள் என்று செய்திகள் வரும். ஆனால் அதனுடைய பின்னணியில் தூய்மை பணியாளர்களுடைய வறுமையையும், நிர்வாக அதிகாரிகளுடைய அதிகாரத்தை பயன்படுத்தியும் வரவழைக்கப்பட்டிருப்பார்கள். Road Show'வில் முதல்வர் அவர்களை பிரம்மாண்டமாய், வழிநெடுக மக்கள் வரவேற்றார்கள் என்று செய்தி வரும். ஆனால் அதனுடைய பின்னணியில் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் அரசு பேருந்து அனுப்பி இருநூறு ரூபாய் பணம் கொடுத்து வலிந்து மக்களை வரவழைத்து வரவேற்க வைக்கப்பட்டு இருப்பார்கள். அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு, மக்கள் மத்தியில் ஏன் வலிந்து ஒரு மனநிலையை உருவாக்க வேண்டும்.?? இது போலி, இது நிலைக்காது என்று தெரிந்தும் எதற்கு இவ்வளவு விளம்பர மோகம்.? அந்த விளம்பர மோகத்தின் நீட்சி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் இதன் மூலம் வெளிப்படுகின்றது. எங்கே செல்கிறது திமுக..??
Urimai Kalam TV70,383 views • 1 year ago