
Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்
@poovulagu • 33,692 subscribers
Poovulagin Nanbargal is a 30-year-old movement, working on socio-environmental issues in Tamil Nadu.
Shorts
Videos

எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கௌத்தி, இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் இறந்துள்ளன. இரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இக்கழிமுகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மீனவ கிராமங்கள் இப்பகுதியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அனல் மின் நிலையம் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளால் கொசஸ்தலை ஆறும் கழிமுகமும் மாசடைந்த விஷயம் ஏற்கெனவே அறிவியல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒன்று. தொழிற்சாலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவது தொடர்கதை ஆகிவிட்டது. தமிழ் நாடு அரசு உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டநிறுவவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மீனவர்களுக்கான இழப்பீட்டையும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் எனக் கோருகிறோம். CMOTamilNadu TVK Vijay
Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்19,391 views • 12 days ago

பொதுமக்களை கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எல்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது.
Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்16,122 views • 1 year ago
No more content to load