
Rajbjp
@rajsd_bjp • 6,126 subscribers
saffron stock.. State secretary IT & SM Tamil Nadu
Shorts
Videos

பாராளுமன்றத்தில் மோடி ஜி பேச்சு :- என்னை மிகவும் தாழ்த்தப்பட்டவன் என்பதை நினைவுறுத்திய தர்மேந்திர சிங் அவர்களுக்கு நன்றி :- அகிலேஷ் அதை எனது நெருங்கிய நண்பர். எதையும் அருமையாகவும் உண்மையாகவும் பேசக் கூடியவர். ஆனால் அவர் பக்கத்தில் இருப்பவர்கள் அவரைப் பேச விடுவதில்லை (அருகில் அமைந்திருக்கும் ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கிய மோடி ஜி ) தன்னை நெருங்கிய நண்பர் என்று சொன்னதும் சிரித்த முகத்துடன் நன்றி சொன்ன அகிலேஷ் யாதவ். இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு யார் வேண்டுமானாலும் அவர்களுடைய முயற்சிதான் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள். நாடு முழுவதும் இவர்களால் தான் மசோதா சட்டமானது என்று பேனர்களையும் போஸ்டர்களும் நானே வைத்து தருகிறேன். எனக்கு எந்த ஒரு பாராட்டுக்களும் வேண்டாம். ஆனால் மசோதா நிறைவேற மட்டும் ஒத்துழையுங்கள். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் மோடிஜி பேச்சு.
Rajbjp221,731 Aufrufe • vor 9 Tagen

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக:- தொகுதி மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு 🌹திமுக ஆதரவு 🌹 தெரிவிப்பதாக திமுகவின் திருச்சி சிவா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு . தமிழகத்தின் விகிதாசார அடிப்படையிலான தொகுதி ஒடுக்கீட்டில் தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டதால் இந்த முடிவை திமுக எடுத்துள்ளது. அதாவது 59 முதல் 61 தொகுதிகள் திமுக தமிழகம் பெறும். (7.2%)
Rajbjp279,494 Aufrufe • vor 25 Tagen

மாறிய திமுக :- தொகுதி மறு சீரமைப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு எங்கள் முடிவு அறிவிப்போம் என்று 22 எம்பிகளை வைத்து இருக்கும் திமுக அறிவிப்பு. கடந்த முறை இதே மசோதா கொண்டுவரப்பட்ட போது முதல் ஆளாக அதை எதிர்த்தது. ஆனால் தற்போது ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திமுக... 300 எம்எல்ஏ, 60 எம்பி, 27 எம்பி ( ராஜ்யசபா) என தமிழகத்திற்கு கிடைக்கும் லாபத்தை கருத்தில் கொள்கிறது. அனேகமாக திமுக பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஆதரவை தெரிவிக்காவிட்டாலும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்யலாம்.
Rajbjp146,680 Aufrufe • vor 28 Tagen

தூத்துக்குடியில் காமராஜர் சிலையை திறந்து வைக்க வந்த லெஜென்ட் சரவணா ஸ்டோர் அதிபரும், நடிகருமான திரு சரவணன் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு பார்க்கும்போது பயமாக இருக்கிறது. தமிழனுக்கு ஏன் இந்த நிலைமை என்று புரியவில்லை. இது தானாக சேர்ந்த கூட்டமா, கூட்டி வந்த கூட்டமா தெரியவில்லை. ஆனால் இவை எதுவும் நல்லதற்கில்லை. சிலரை தலைவர்களாக உயர்த்தி மக்கள் செய்யும் சில தவறுகளால் இவரை போன்றவர்கள் தங்களுக்கு தானே தலைவனாக பட்டம் சூட்டிக் கொள்கிறார்கள்.
Rajbjp125,587 Aufrufe • vor 28 Tagen

தான் நடித்த துரந்தர் படம் குறித்து நடிகர் மாதவன்:- அஜித் தோவல் என்ற மனிதர் தனித்தன்மையோடு வாழ்ந்து வருகிறார். இவரால் மற்றவர்களைப் போல் பொதுவெளியில் சுதந்திரமாக செயல்படவோ மற்றவர்களோடு வெளிப்படையாக பேசவோ முடியாது. மற்றவர்களைப் போல் பார்ட்டிக்கு சென்று குடித்துவிட்டு சில வார்த்தைகள் தவறாக பேசி விட்டால் பலருடைய உயிர் பாதிக்கப்படும். அஜித் தோவல் போன்றவர்கள் தனிமையில் இருப்பதும் மற்றவர்களோடு எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் மிகவும் கடினமான விஷயம்தான். அஜித் தோவல் அவர்களுக்கு ஒரே ஒரு நண்பர் இருக்கிறார். அந்த நண்பரோடு தான் பேசுகிறார் அவரோடு தான் வாழ்கிறார். "அது அவர் புகைக்கும் சிகரெட்" அஜித் தோவல் பேசுவது சிந்திப்பது எல்லாமே அந்த சிகரெட் உடன் தான்.
Rajbjp23,133 Aufrufe • vor 5 Tagen

மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி முன்னிலையில் மாநில முதல்வர் பேசிய உரை :- நேருவைப் பற்றியோ, இந்திரா காந்தியை பற்றியோ, காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய, ஒரு வார்த்தை கூட பெருமையாக பேசவில்லை. விவேகானந்தர் பற்றி பேசினார். அடல் பிகாரி வாஜ்பாய் பற்றி பேசினார். டாடா பற்றி பேசினார். மோடி பற்றி பேசினார். பிரதமர் இந்த மிகச்சிறந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். மேலும் 👇 சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி எனக்கு நினைவுக்கு வருகிறது, "நீங்கள் தோல்வியடையும் போது தைரியமாக இருங்கள், வெற்றியைப் பெறும்போது பெருந்தன்மையாக இருங்கள்." இன்று நமது பிரதமர் இங்கு வந்துள்ளார் ஒட்டுமொத்த உலகமே இந்தியாவையும், கர்நாடகா மற்றும் பெங்களூரு வழியாகத்தான் பார்க்கிறது. எனவே, கர்நாடகாவிற்கு உதவ நீங்கள் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Rajbjp45,421 Aufrufe • vor 12 Tagen

சுக்கு நூறாக உடைகிறது அதிமுக :- கோவை அதிமுகவை ஆட்சி செய்த எஸ்பி வேலுமணி அதிமுகவை விட்டு விலகல். ஒரு நினைவூட்டல் :- அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த கடந்த ஆண்டு அமித்ஷா தில்லியில் இருந்து வந்திருந்தார். அண்ணாமலையை கட்சி பதவியில் இருந்து எடுத்தால் தான் பேச்சு வார்த்தை என எடப்பாடி அடம்பிடித்தார். அண்ணாமலையும் நீக்கப்பட்டார். சுமார் மூன்று மணி நேரம் அமித்ஷா காத்திருந்தார். பிறகு அவருடைய டுவிட்டரில் அண்ணாமலை மாற்றப்பட்டார் என பதிவிட்ட பிறகு தான் மாலை அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி. "இதெல்லாம் எதற்கு சொல்றேன்னா.... அதுக்கு தான்... 😂"
Rajbjp164,522 Aufrufe • vor 1 Monat

வந்துவிட்டார்..... K.Annamalai இது இரண்டாவது இனிங்க்ஸ்... களத்தில் கொம்பன் சும்மா அதிரப்போகுது....
Rajbjp171,293 Aufrufe • vor 2 Monaten

தமிழகத்தில் மூன்று தைவான் நிறுவனங்கள் சுமார் 80,000 கோடி முதலீடு செய்ய திட்டம் :- அது எப்படி திமிங்கலம் !!! துபாய் நாட்டிற்கு குடும்பத்தோடு போகவில்லை. ஸ்பெயின் நாட்டிற்கு போகவில்லை. அமெரிக்கா போகவில்லை. ஜப்பான் போகவில்லை. தாய்வானுக்கு கூட போகவில்லை. முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வருகிறது எப்படி? முன்னாள் முதல்வர் படையை திரட்டி கொண்டு போய் சாதித்ததை விட இங்கே உட்கார்ந்தே சாதிக்கிறார்களே எப்படி?
Rajbjp67,987 Aufrufe • vor 1 Monat

இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாததால் கதறும் காங்கிரஸ் தலைவர்கள் :- இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதால் திமுக மிகப்பெரிய இழப்பை வரும் சட்டமன்றத் தேர்தல் சந்திக்கும். சரி...Karti P Chidambaram அதைப்பற்றி திமுக தானே கவலைப்பட வேண்டும் காங்கிரசுக்கு ஏன் இந்த கவலை? 👇👇👇👇 அடுத்து கதறுவது Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப ஏப்ரல் 17ஆம் தேதி தொகுதி மறு சீரமைப்பு மசோதாக்கு எதிராக வாக்களித்தவர்கள் இப்போது மாறியது ஏன் என கேள்வி? 😂 ... 👉அப்போது காங்கிரஸ் தமிழகத்தில் முதுகில் குத்தும் என்று திமுகவிற்கு தெரியாது இதுதானே உண்மை. ... 👉இந்திய மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ... 👉நீங்கள் திமுகவிற்கு செய்த துரோகத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
Rajbjp35,108 Aufrufe • vor 24 Tagen

இன்றும் காங்கிரஸ் கட்சியை அடித்து நொறுக்கும் Saravanan Annadurai அவர்கள் :- தேசிய நலன் பற்றியும் மாநில நலன் பற்றியும் காங்கிரஸ் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். தேசிய நலன் பற்றியும் மாநில நலன் பற்றியும் எங்களுக்கு தெரியும் பதவி ஆசையோடு இரவோடு இரவாக ஓடிப் போன கட்சி காங்கிரஸ். திமுக பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை. 545 உறுப்பினர்கள் என்ற பாராளுமன்றத்தில் 7.2 % தமிழகத்திற்கான பங்கு நாங்கள் விட்டுத் தர மாட்டோம். கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் 50 % மாநிலங்களின் தொகுதி உயர்த்தப்படும் என்றவுடன் தொகுதி மறுசீரமைப்பிற்கு ஒப்புதல் தெரிவித்தவர் கே சி வேணுகோபால். 7.2 % என்ற எங்கள் நிலைப்பாடு பூர்த்தி செய்யப்பட்டால் அப்போது நாங்கள் அப்போது முடிவு எடுப்போம். (அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% தொகுதிகள் உயர்த்தப்படுவதால், புதிய 816 இடங்கள் கொண்ட அவையிலும் தமிழ்நாட்டின் அரசியல் பலம் மற்றும் பங்கீடு (சுமார் 7.2%) குறையாமல் அப்படியே பாதுகாக்கப்படுகிறது.)
Rajbjp37,041 Aufrufe • vor 25 Tagen

ஆபத்தின் விளிம்பில் ஸ்பெயின் நாடு:- அமைச்சர் ஜெயசங்கர் ஒருமுறை "ஐரோப்பாவின் பிரச்சனை உலக நாடுகளுக்கான பிரச்சனை ஆனால் உலக நாடுகளின் பிரச்சனை ஐரோப்பாவின் பிரச்சனை இல்லை" என்ற மனநிலையில் இருந்து ஐரோப்பியா ஆட்சியாளர்கள் மாற வேண்டும். எனக்கு கூறி இருந்தார். இஸ்லாமியருக்கு எதிராக இந்தியாவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்கள் இதே ஐரோப்பா ஆட்சியாளர்கள். இப்போது 60 ஆயிரம் மோராக்கா நாட்டை சேர்ந்த முஸ்லிம்கள் ஸ்பெயின் நாட்டில் அத்துமீறி புகுந்துள்ளனர் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் வட ஆப்பிரிக்க கடற்கரையில் உள்ள சியூட்டா என்ற எல்லைப் பகுதிக்கு, மொராக்கோ நாட்டிலிருந்து ஒரே நாளில் சுமார் 60,000 அகதிகள் கடல் வழியாகவும், எல்லை வேலிகளைத் தாண்டியும் நுழைந்துள்ளனர். இந்த திடீர் வருகையால் எல்லையில் கடுமையான மோதல்களும், கூட்ட நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டினர் வீடுகள் சூறையாடப்படுகிறது. பொதுசொத்துக்களை நாசம் செய்கிறார்கள் அகதிகள் . அகதிகளை விரட்டி அடிக்குமாறு அமெரிக்க அதிபர் முதல் எல்லோரும் ஆதரவு குரல் கொடுக்கிறார்கள். கர்மா... திருப்பி தாக்குகிறது.
Rajbjp16,784 Aufrufe • vor 12 Tagen

திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று நிறைய இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக பார்த்து வருவோம். முதலில் சென்னை மாநகர மேயர் கோலமாவா ? அல்லது பான்ஸ் பவுடரா என்பதை ஆராய்ந்த தருணம். இறைச்சி வெட்டும் இடத்தில் தெளிக்கப்பட்ட ப்ளீச்சிங் பவுடரில் சுத்தமாக வாசனை வரவில்லை, அது ஒரு கோலமாவு என்று நிரூபர் கேட்கும் போது அதற்கு தெனாவட்டலாக பதில் சொல்லும் முன்னாள் மாநகர மேயர் பிரியா. திமுகவின் அழிவிற்கு இவரும் ஒரு காரணம்... 😂
Rajbjp74,053 Aufrufe • vor 2 Monaten

அழிவின் விளிம்பில் இருக்கும் அண்ணா திமுகவை காப்பாற்ற திரு. K.Annamalai அவர்களை அழைக்க வேண்டும் தொண்டர்கள் ஒருமித்த குரல். இதே அண்ணாமலை கட்சி தலைவர் பதவியில் இருந்து எடுத்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று சொன்னவர் எடப்பாடி யார் என்ற வீணாய் போனவர். இப்போது அதே கட்சியை காப்பாற்ற அண்ணாமலை அழைக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் கர்மா.
Rajbjp41,117 Aufrufe • vor 1 Monat

ஸ்ரீதர் வேம்புவிற்கு கொலை மிரட்டல் :- இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபரின் பள்ளி அனுமதிக்காக லஞ்சம் கேட்டதாக திராவிடியா பையன்கள் மீது Sridhar Vembu குற்றம் சாட்டினார். அதற்கு மிரட்டல் விடுக்கும் திராவிடியா ரவுடி கும்பல். மத்தியிலும் ஆட்சியில் இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.
Rajbjp38,112 Aufrufe • vor 1 Monat

அடுத்து வேறொரு விவாதத்திற்கு வருவோம் :- ராவணன் தமிழனா..??? ராவணனின் பூர்வீகம் நோய்டா அதாவது இன்றைய உத்திரப்பிரதேச எல்லையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன். புலஷ்திய வம்சத்தில் வந்தவன் ராவணன்... விஷ்வத்திய குலத்தவன் ராவணன். குபேரனின் சகோதரன் ராவணன். எனவே தமிழுக்கும் ராவணுக்கும் சம்மந்தம் இல்லை. வால்மீகி ராமாயணத்தின் தழுவளே கம்பராமாயணம் இதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள். தமிழ் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டதே கம்பராமாயணம்.
Rajbjp31,101 Aufrufe • vor 1 Monat

ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ளுங்கள் :- 2013 காலகட்டத்தில் இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்தாலும் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு ஓடுவார்கள். இந்தியாவில் குண்டு வைத்து விட்டார்கள் இதற்கு நியாயம் தேடி தாருங்கள் என்று கேட்பார்கள். ஆனால் திருட்டு அமெரிக்கா பாகிஸ்தானையும் காட்டிக் கொடுக்காது, இந்தியாவையும் காப்பாற்றாது. இருவரும் வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடுவது. ஆனால் இன்று அப்படி இல்லை... உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்து நடத்தியபோது பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கிய ஒரே காரணத்திற்காக துருக்கியை இந்தியா இப்போது தனிமைப்படுத்தி இருக்கிறது. துருக்கியை சுற்றியுள்ள ஆர்மீனியா, கிரீஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது. இதனால் துருக்கி மற்றும் ஆஜர்பைஜான் நடுங்குகிறது. எங்கெல்லாம் சீன ஆயுதங்களை வாங்கினார்களோ, அங்கெல்லாம் இப்போது இந்திய ஆயுதங்கள் விற்கப்படுகிறது. இந்தியாவின் ஆயுத வளர்ச்சியை கண்டு அமெரிக்கா பிரமித்து போயிருக்கிறது. இப்படிப்பட்ட இந்தியாவை தான் நாங்கள் கனவு கண்டோம்.
Rajbjp27,074 Aufrufe • vor 1 Monat