
Shanmugam P
@Shanmugamcpim • 18,147 subscribers
Comrade | State Committee Secretary, Tamil Nadu | Central Committee Member Of CPI(M) @tncpim @cpimspeak @theekkathir
Videos

கல்லூரிச் சுற்றறிக்கை முதல் குஜிலியம்பாறை சுற்றறிக்கை வரை: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழ்நாடு அரசு? அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்? #CPIM #CPI தடை செய்யப்பட்ட கட்சிகளா? எந்த அடிப்படையில் சுற்றறிக்கை வெளியிடுகிறார்கள்? அதிகாரிகளின் சுற்றறிக்கை சட்டவிரோதமானது!
Shanmugam P122,546 次观看 • 9 天前

அனைத்தும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு அரசிடம் நிதியில்லை; ஆனால், அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவசக் கார்கள் வழங்க மட்டும் அரசிடம் நிதி இருக்கிறதா? அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசக் கார் வழங்கும் இம்முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
Shanmugam P67,409 次观看 • 8 天前

ஜூன் 20 வாச்சாத்தி வன்கொடுமை நடைபெற்ற தினம்! வாச்சாத்தி போராட்ட வரலாற்றைப் படிப்போம்! மனித உரிமைகளை மீட்டெடுப்போம்!! வாச்சாத்தி போராட்ட வரலாற்றைப் படிப்போம்! எங்கே மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், அதில் யார் ஈடுபட்டிருந்தாலும், அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியும்; குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர முடியும் என்பதை வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பும் நிரூபித்துக் காட்டியுள்ளன!
Shanmugam P248,142 次观看 • 2 个月前

தவெக ஆட்சி அமைக்க #CPIM ஆதரவளித்துள்ளதையடுத்து #CPIM மாநிலக்குழு அலுவலகத்திறகு வருகை தந்த #TVK தலைவர் சி.ஜோசப் விஜய் அவர்களை #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷணன், நானும் மலர்கொத்து கொடுத்து வரவேற்றோம். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டு மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தவெக தலைவர்கள் புஸ்சி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Shanmugam P149,010 次观看 • 3 个月前

மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்று சபைக்குச் சொல்லாமல், 'அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்' என்கிற அணுகுமுறை, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பானது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அது என்ன திருத்தம் என்று தெளிவாக விளக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை. எனவே, திங்கட்கிழமை காலை அவை கூடியவுடன், "தானாக முன்வந்து இந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறோம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
Shanmugam P80,165 次观看 • 2 个月前

சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது. அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை. இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
Shanmugam P47,185 次观看 • 2 个月前

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Shanmugam P10,126 次观看 • 1 个月前

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் சிபிஐ(எம்) மாறி மாறி கூட்டணி வைப்பதும், எதிர்ப்பதும் அரசியல் சூழ்நிலையை பொறுத்தது. தொகுதி உடன்பாடு கொள்வது, இரு தரப்புக்கும் நன்மை, வெற்றி தரும் ஏற்பாடே தவிர - ஒரு கட்சியின் அரசியல் முடிவில், இன்னொரு கட்சிக்கு 'துரோகம்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. வெற்றிக்கு பலம் பத்தாததால்தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது. எனவே 'எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம்' என்பதே யதார்த்தம். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் ஏற்பவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கூட்டணியை விட்டு விலகினாலே தாக்கும் திமுகவினரின் போக்கு தவறானது. உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் இத்தகைய நபர்களை திமுக தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும்.
Shanmugam P13,956 次观看 • 2 个月前

நெட்டூர்க்கு தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் செல்லவில்லை? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளைப் பெருமையாகப் பேசுகிறோம். எல்லா உயிரும் சமம்தான் என்று பேசுவது உண்மையானால், பெருமைப்படுவது உண்மையானால், பட்டியலின சாதி மக்களும் பழங்குடியின மக்களும் இத்தகைய கொடுமையான தாக்குதலுக்கு உள்ளாவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்குரிய பல்வேறு நல்ல ஆலோசனைகளை, நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
Shanmugam P13,345 次观看 • 2 个月前

ஜூன் 20 வாச்சாத்தி வன்கொடுமை நடைபெற்ற தினம்! இந்த நாட்டில் ஆதிவாசி மக்களும் போராடி நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு வாச்சாத்தி ஆவணப்படம். Vachathi - The Long March For Justice Watch Full Video on Youtube: #ComradeTalkies #வாச்சாத்தி #vachathi #CPIM
Shanmugam P11,194 次观看 • 2 个月前