
டீ
@teakkadai1 • 114,919 subscribers
Shorts
Videos

வெறும் ஐந்து ரூபாயில், நடுத்தர/ கீழ் நடுத்தர, பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்தில் இருக்கும் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் இளைஞிகளுக்கு வேலை கிடைக்க/ புது தொழில் தொடங்க உலகத்தரமான வசதிகளை தருகிறது திராவிட மாடல் முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் முதல்வர் படைப்பகம். நம் வீட்டில் வசதி இல்லையே என எண்ண வேண்டாம்.. முதல்வர் படைப்பகத்தை பயன்படுத்தி முன்னேறி அந்த வசதிகளை நம் வீட்டில் விரைவாக கொண்டு வர முடியும். வரும் 2026-31 திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எல்லா தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார் நம் முதல்வர். அவர் செய்வதைத்தான் சொல்வார். இளைஞர்களின் கனவு நிறைவேறிட வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு.
டீ88,342 Aufrufe • vor 5 Monaten

மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருபவர்கள், மக்களைக் கண்டு ஒதுங்கி இருக்கக் கூடாது. நாளை நடைபெறவிருக்கும் மக்கள் சந்திப்பிற்கு கூட, பாஸ்கள் கொடுக்கப்பட்டு தகரம் அடித்து அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு சந்திப்பு நடக்கிறது. அரசியலுக்கு வந்த பின்னால், தன்னை சந்திக்க விரும்பி வரும் மக்களை சந்திக்காமல் பதுங்கிக் கொள்வது மக்களை கவராது.
டீ45,720 Aufrufe • vor 9 Monaten
0:21
Sensitive content
This media may contain sensitive content.

சென்ற முறை திருமங்கலம் சட்ட மன்றத் தொகுதியில், ஆர் பி உதயகுமார் அவர்களிடம் தோற்றார் மணிமாறன் அவர்கள். இந்த முறை எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று, கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார். பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், அதில் 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும்,ஹாட் பாக்ஸ் பிளாஸ்டிக் வாளி போன்றவற்றை மட்டுமே மக்களுக்கு கொடுத்து தொகுதிக்கு என எந்த முன்னேற்றத் திட்டங்களையும் கொண்டு வராததால் திருமங்கலம் நகர வாக்காளர்களிடம் பெரிய அதிருப்தி இருக்கிறது. அதை எப்படியாவது தனக்கான வாக்குகளாக மாற்றிக் கொண்டால் மணிமாறனுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
டீ34,186 Aufrufe • vor 9 Monaten

தேவையற்ற மனித உழைப்பை குறைப்பது என்பது மக்கள் ஆக்கபூர்வமாக செயலாற்ற, குடும்பத்துடன் இனிய நேரத்தை செலவிட, வளர்ச்சியோடு சேர்ந்து மகிழ்ச்சி குறியீடும் அதிகரித்திட வழிவகுக்கும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் இன்றைய நடுத்தர/ கீழ் நடுத்தர குடும்பங்களில், குடும்பத்தின் அதிக உழைப்பை கோரும் பணிகளில் ஒன்றாக துணிகளை துவைப்பது இருக்கிறது. எல்லோராலும் வீட்டில் துணி துவைக்கும் இயந்திரங்களை வாங்கி வைத்து விட முடியாது. அதீத திறனுடன், அதிக கொள்ளளவுடன் மிக விரைவாக இந்த வேலைகளை முடிக்கும் High end சலவை இயந்திரங்கள் வந்துவிட்டன. இந்த இயந்திரங்கள் அரை மணி நேரத்திலேயே துவைத்து காய வைத்து கொடுத்து விடும் திறன் உள்ளவை. எனவே ஒரு குடும்பத்திற்கான துணிகளை மிக குறைந்த கட்டணத்தில் துவைத்து பெறுவது என்பது குடும்பத்தில் உள்ளவர்களின் உழைப்பை வெகுவாக குறைக்கும். அவர்கள் அடுத்த முன்னேற்றத்திற்கான வழியை யோசிக்க அந்த நேரம் பயன்படும்.. சிங்கப்பூரில் இதுபோல சமுதாய சலவை கூடம் சிறப்பாக செயல்படுவதை கண்ட அப்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் Dr V P Jeyaseelan அவர்கள் சோதனை முயற்சியாக ராஜபாளையம் நகராட்சியில் கொண்டு வந்த திட்டம் இது. இங்கே துணிகளை கொண்டு போய் கொடுத்தால் அரை மணி நேரத்திலேயே துவைத்து காய வைத்து திருப்பி கொடுத்துவிடுவார்கள் மிக மிகக் குறைந்த கட்டணத்தில். இதை நகராட்சியே திறம்பட நடத்துகிறது. ஸ்டீம் அயன் வசதியும் உண்டு. ஆற்றங்கரைகளில், நாகரிகங்கள், கலை,இலக்கியங்கள் வளர காரணமே, நீர் இருந்ததால் அவர்களது உழைப்பு குறைந்ததால் தான். காவேரி கரையில் வளர்ந்த இசை இலக்கியம், வளர்ச்சி, மகிழ்ச்சி குறியீடு இவற்றை வறண்ட வட மாநில பகுதிகளில் எதிர்பார்க்க முடியாது. ராஜஸ்தான் பாலைவன மக்கள் தண்ணீர் எடுப்பதிலேயே தண்ணீர் எடுப்பதிலேயே தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை தொலைத்து விடுகிறார்கள். தமிழ்நாட்டில் கூட அப்படி சில பகுதிகள் இருந்தன. இப்படி தேவையற்ற மனித உழைப்பை குறைப்பது தான் ஒரு நல்ல அரசின் முக்கிய முன்னெடுப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதோ தினம் தினம் தேவைப்படும் உழைப்பு. Recurring. Recurring process simplified by non-recuuring machine என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால், அது தமிழ்நாட்டு மக்களின் தேவையற்ற மனித உழைப்பை குறைக்கும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். தமிழ்நாட்டின் மகிழ்ச்சி குறியீட்டை அதிகரிக்கும். இதுபோல சமுதாய சலவைக்கூடங்கள் அமைப்பது எதிர்காலத்தில் சமுதாய கிச்சன்கள் வருவதற்கும் ஒரு ஆரம்பமாக இருக்கும்.
டீ20,150 Aufrufe • vor 6 Monaten

ஒரு மாநிலம் நேர்மையாக கடுமையாக உழைக்கிறது. ஆனால் சில மாநிலங்கள் எந்தவித உழைப்பையும் செய்யாமல் படுத்து தூங்குகின்றன ஆனால் ஒன்றிய அரசோ நேர்மையாக கடுமையாக உழைக்கும் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கடுமையாக வரி வசூல் செய்து ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே திருப்பி கொடுத்து மற்றவற்றை சோம்பேறித்தனமாக இருக்கும் உத்தரபிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது. நமது மாநில பிள்ளைகளின் கல்விக்காக கூட ஒன்றிய அரசிடம் திமுக அரசு போராட வேண்டி இருக்கிறது. நம்முடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டிய அதிமுகவோ அவர்கள் பக்கமே நிற்கிறது. இவர்களுடன் மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் சுயமரியாதையுடன் நாம் தலைநிமிர்ந்து வாழவும் திராவிட மாடல் முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் பெரிய சட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். மாநில உரிமைகளை மீட்டெடுத்திட, நமக்கு தேவையான பங்கினை போராடிப் பெற்றிட வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களியுங்கள். ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்...
டீ14,753 Aufrufe • vor 5 Monaten

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கஸ்டோடியல் டார்ச்சர் மரணங்கள் 24 என்கிற பொய்யை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பதிய வைக்கிறார்கள். இதன் பின்னிருக்கும் உண்மை நிலை என்ன? நீதிமன்ற காவலில் சிறையில் நேர்ந்த இறப்புகள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு ஏற்பட்ட இறப்புகளையும் இதில் சேர்த்திருக்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன என்பதை இதில் விரிவாக அலசி இருக்கிறார்கள்.
டீ29,270 Aufrufe • vor 1 Jahr