
Vanathi Srinivasan
@VanathiBJP • 332,117 subscribers
National President - @BJPMahilaMorcha | Former Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South | கோவை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் |
Videos

வணக்கம் 🙏 உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி 🙏 இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது. உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன் மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம்! இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம் வெற்றி நமதே! 🪷 அன்புடன், வானதி சீனிவாசன் 🙏 #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan85,399 görüntüleme • 2 ay önce

திருப்பூரில் பள்ளி மாணவர்களிடத்தில் கஞ்சா புழக்கம் பற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் புகார் கொடுத்தும் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என சம்மந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மீண்டும் புகார் அளித்திருக்கிறார். அவர் புகாரில் கூறியது போல் பள்ளி மாணவரின் புத்தகப்பையில் கஞ்சாவும், சிகரெட் பாக்கெட்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தியானது அப்போது பரபரப்பை உண்டாக்கியது. புகார் அளித்து ஆறு மாதங்களாக முறையான நடவடிக்கை இல்லை என்றால் அரசு எந்திரமும், காவல் துறையும் எவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறது என்பதற்கு இவரின் இந்த உணர்வுபூர்வமான முறையில் மண்டியிட்டு மறுபடியும் அளித்திருக்கும் புகாரே சாட்சி. கடந்த DMK ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா மாநிலம் என்ற பெயரை பெற்றிருந்ததை அனைவரும் அறிவர். புதிதாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் திரு TVK Vijay அவர்களே ஆபரேஷன் கஞ்சா வேட்டைகளை துரிதப்படுத்தி தமிழ்நாட்டின் மீதுள்ள இந்த களங்கத்தை துடைத்து இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்பீர்களா?
Vanathi Srinivasan30,785 görüntüleme • 25 gün önce

அரசியல் ரீதியாக 'கோவையின் மகள்' என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. #kovai #கோவையின்மகள் #kongu
Vanathi Srinivasan47,353 görüntüleme • 2 ay önce

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார் DMK-த்தின் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு ரா.பாரதிராஜா. இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்து 8 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட செவிலியர். கட்சிபேதத்தைத் தாண்டி ஒரு சக பெண்ணாய் முதல்வர் திரு M.K.Stalin அவர்களிடம் சில கேள்விகள். திமுகவின் கட்சி பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டது, தஞ்சாவூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்தது, செவிலியரை மிரட்டியது என தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவோர் பலரும் திமுகவினராக இருப்பது ஏன்? தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளிக்கப் பல அபலைப்பெண்கள் தயங்கும் நிலையில் புகார் அளித்த பெண்ணின் விபரங்களை பொதுவெளியில் விடுவது, புகார் அளித்து பல நாட்களாக நடவடிக்கை எடுக்காதது என பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் வதைப்பது ஏன்? குற்றச்செயல்களில் ஈடுபடும் திமுகவினரை காப்பாற்றுவதில் இருக்கும் தங்கள் அரசின் கவனம் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கி காட்டப்படாதது ஏன்? தங்களது ஆட்சியில் DMK-த்தின் மானத்தைவிட பெண்களின் பாதுகாப்பு என்று முக்கியத்துவம் பெறும்? தங்களது அரசின் நடவடிக்கையின்மையாலும் தங்கள் கட்சியினரின் குற்ற நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் பெண்களை கண்டு தங்கள் பொறுப்பை உணருங்கள்! இனியாவது தங்கள் கட்சியினரின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளை தடுத்து பெண்களுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குங்கள்!
Vanathi Srinivasan178,223 görüntüleme • 1 yıl önce

இன்று நாடு முழுவதும் #GST சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள ஒரு கடைக்கு நேரடியாகச் சென்று #GST-யின் தாக்கத்தை அறிந்து கொண்டேன். விற்பனையாளர் கூறுகையில், இந்த #GST சீர்திருத்தத்தின் மூலம் திண்பண்டங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், தினசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த முறையை அமல்படுத்திய பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் திருமதி. Nirmala Sitharaman அவர்களுக்கும் நன்றி கூறினார். #NextGenGSTReforms #GSTBachatUtsav
Vanathi Srinivasan94,444 görüntüleme • 8 ay önce
Sensitive content
This media may contain sensitive content.

Deeply disturbing visuals from Malda, WB where two tribal women were stripped naked and beaten mercilessly. While CM Mamata Banerjee sheds copious tears on the incidents happened elsewhere, she is silent on this incident. This exposes her failure as a CM. No leader from Thagbandhan I.N.D.I.A. have condemned this. This shows they have no seriousness for the safety of the women and just doing propaganda politics.
Vanathi Srinivasan285,530 görüntüleme • 2 yıl önce

"கரூர் கும்பல் ஊழல் சக்கரம்" — இதை நான் சுழற்றுகிறேன், நீங்களே பாருங்கள் என்ன வருகிறதென்று! 471 நாள் சிறைவாசம் செய்தவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்தார் ஸ்டாலின், துறையே இல்லாத மந்திரி பதவி கொடுத்தார், TASMAC வருவாயை கொள்ளையடிக்க அனுமதித்தார், பினாமி நிலங்களை அபகரிக்க உதவினார், அதிகாரிகள் மீது கரூர் கும்பலை ஏவிவிட்டார், தலைமறைவு வாழ்க்கைக்கு துணை நின்றார், கமல்ஹாசன் போன்றோர் ஆதரவு கொடுத்தார்கள் — எல்லாமே இந்த ஒரே ஊழல் சக்கரத்தில் இருக்கிறது! கரூரில் இருந்து 100 கி.மீ தள்ளி கோவை தெற்கில் போட்டியிட வருகிறார், யாருக்காக வருகிறார்? கோவை தெற்கு மக்களே உஷார்! தமிழகம் தலைநிமிர இளைஞர் சக்தியை மீட்டெடுக்க ஆதரிப்பீர் NDA கூட்டணியை.. கோவை வடக்கில் நமது வெற்றி சின்னம் தாமரைக்கு வாக்களியுங்கள் #Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan14,702 görüntüleme • 1 ay önce

கமல்ஹாசனோட பேச்சு உங்களுக்காவது புரிஞ்சதா சொல்லுங்க..! #DMKFailsTN
Vanathi Srinivasan30,295 görüntüleme • 4 ay önce

இன்று கோவை கணபதி பகுதியில் உள்ள கார் விற்பனையகத்திற்குச் சென்று, விற்பனை மேலாளரிடம் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து உரையாடினேன். ஜி.எஸ்.டி குறைப்பால் கார்களின் விலையில் ₹50,000 முதல் ₹2,40,000 வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன விற்பனை அதிகரித்துள்ளதாகவும் மேலாளர் தெரிவித்தார். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பழைய மற்றும் புதிய விலைப்பட்டியலை காண்பித்து, விலை குறைப்பு பயன்களை விளக்கினார். மேலும் #GST விலை குறைப்பை பற்றி பொதுமக்களுக்கு தெளிவாக விளம்பர பலகைகள் வைக்க கோரிக்கை வைத்தார். #NextGenGSTReforms #GSTBachatUtsav
Vanathi Srinivasan51,393 görüntüleme • 8 ay önce

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். #happydiwali2025
Vanathi Srinivasan43,050 görüntüleme • 7 ay önce

தமிழக அரசுக்கு கோவை தரும் வரிப்பணம் எங்கே செல்கிறது?
Vanathi Srinivasan36,678 görüntüleme • 6 ay önce

கடந்த 15 நாட்களுக்கு முன் கோவை, கருமத்தம்பட்டி அருகே டீ குடிக்க வந்த வடமாநில இளைஞர்களை சிலர் தாக்கி கத்தியால் குத்த முயலும் சி.சி.டி.வி காட்சிகள் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும் தாக்குதல் நடத்திய நபர்களை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கிடையேயான தேவையில்லாத பதட்டத்தையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு உடனடியாக இவ்விவகாரங்களில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Vanathi Srinivasan29,497 görüntüleme • 5 ay önce

என்ன பண்ணோம்..? எதுக்கு பண்ணோம்..? கோவை தெற்கு தொகுதியில் கோவை மக்கள் சேவை மையத்தின் மூலமாகவும், சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் செய்து கொடுக்கப்பட்டுள்ள மற்றும் செயல்படுத்தப்படும் மக்கள் நலப் பணிகள் மற்றும் திட்டங்கள்... #vanathisrinivasan | #vanathibjp | #coimbatore | #socialservice | #vanathimla | #kovaisouth | #tnelections2026
Vanathi Srinivasan14,511 görüntüleme • 2 ay önce

விமர்சனங்கள் எனக்குப் புதிதல்ல.. #politics | #criticism | #kovai | #kovaileader | #bjp
Vanathi Srinivasan14,540 görüntüleme • 2 ay önce

என்னுடைய பயணம் Power - ஐ நோக்கியதல்ல.. #politics | #publicservice | #political | #leader
Vanathi Srinivasan13,219 görüntüleme • 2 ay önce

தொடரும் வடமாநிலத்தவர் மீதான கொடூர தாக்குதல்கள்.. நேற்று திருத்தணியில் வடமாநில இளைஞர் சிறார்களால் வெட்டப்பட்ட சம்பவமே மனதை விட்டு அகலா நிலையில் இன்று மற்றுமோர் சம்பவம் நடைபெற்று புலம்பெயர் தொழிலாளர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கரும்புக்கடை பகுதியில் உணவகம் ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சுராஜ் என்பவரை புல்லுக்காடு பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைய ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். கொலையான இளைஞரிடம் அவரின் பெயரைக் கேட்டு நீ வட மாநிலத்தைச் சேர்ந்தவன் இங்கே வந்து பேசுகிறாயா என்று கேட்டு தான் அடித்து தள்ளி விட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பல்லடத்தில் நடந்த திமுக மகளிரணி மாநாடு காரணமாக இச்செய்தியானது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் உண்மை ஒருபோதும் மறைவதில்லை. இப்படி தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டுகொள்ளாத தீய சக்தி திமுக, பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டி மாநாடு நடத்தி விளம்பரம் தேடிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. காவல்துறை இந்த விஷயத்தில் விரைவில் உண்மையைக் கண்டறிந்து ஜனநாயக நாட்டில் இன்னொரு குடிமகன் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினை பேசும் தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், குற்றம் புரிந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.
Vanathi Srinivasan21,004 görüntüleme • 5 ay önce
Sensitive content
This media may contain sensitive content.

