வன்னி அரசு's banner
வன்னி அரசு's profile picture

வன்னி அரசு

@VanniKural18,449 subscribers

துணை பொதுச் செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Videos

VanniKural's profile picture

#இரங்கல் அய்யகோ எங்கள் #பாட்ஷா_பாய் மரணித்தாரே.. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார் #அல்_உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்சா அவர்கள். 2007 ஆம் ஆண்டு பாட்ஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை கொடுஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். 80 வயதைக்கடந்த பாட்ஷா அவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலமின்றி சிறை விடுப்பில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6 மணியளவில் சிகிச்சையிலிருந்தவாறே மரணித்தார். இச்செய்தி பெரும் வேதனையையும் வலியையும் ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு சிறை விடுப்பில் வந்த அய்யா பாட்ஷா அவர்களை அவரது கோவை இல்லத்தில் சந்தித்தோம். அத்தனை ஆரவாரத்துடனும் வாஞ்சையுடனும் ஆரத்தழுவி வரவேற்றார். சிறையிலிருந்த எந்த வலியையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக,அந்த காலத்தில் நடந்த பல வீர தீர சம்பவங்களை நினைவுப்படுத்தி பெருமையோடு பேசினார். துணிச்சல் மிகுந்த போராட்டத்துக்கு சொந்தக்காரர். தான் சார்ந்த முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் உண்மையாக களமாடிய பெருந்தகை அவர். இரு நாட்களுக்கு முன் என்னோடு தொலைபேசியில் உரையாடினார். “ தம்பி வன்னி அரசு உங்களோடு பேச வேண்டும் போல இருந்தது. இப்போது போத்தனூர் மகள் வீட்டிலிருக்கிறேன்.வந்து போங்க” என்றார். பேசி ஓரிரு நாட்களுக்குள் மறைந்து போனார். “நான் மட்டுமல்ல; தலைவர் திருமாவளவனும் முஸ்லீம்களுக்கு உண்மையான தலைவர்” என எப்போதும் பெருமையோடு பேசுவார். அப்படி விடுதலைச்சிறுத்தைகளை நேசித்த அய்யா பாட்ஷா அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். #வன்னி #விடுதலை_சிறுத்தைகள் #தமிழ்நாடு

வன்னி அரசு

117,681 görüntüleme • 1 yıl önce

VanniKural's profile picture

#நந்தன் திரைப்படத்தை படைத்த படைப்பாளி திரு.இரா.சரவணன் அவர்களின் இந்த துணிச்சலான முன்னெடுப்புக்கு முதலில் பாராட்டுகள். அன்று சனாதனக்கும்பலால் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டான் நந்தன். இன்றோ அதிகாரத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறான் நந்தன். அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி அதிகாரம் மறுக்கப்பட்ட சமூக கட்டமைப்பு அப்படியே இருப்பதையும் அதை தகர்க்க நந்தன்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகவும் அதே வேளையில் சமரசமில்லாமல் சொல்லியுள்ளார் இயக்குனர். அதுகாரத்துக்காக கொலையும் செய்வார்கள் சாதி இந்துக்கள் என்பதை அப்படி அப்படியே அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் இரா.சரவணன். எப்படியெல்லாம் தலித்துகளை பயன்படுத்துகிறார்கள்; ஏமாற்றுகிறார்கள் என்பதை சமூக கட்டமைப்பின் குரலாகவே ஒலித்துள்ளார் இயக்குனர். எப்போதும் அரிவாளும் கையுமாகவே காட்டப்பட்ட திரு.சசிக்குமார் அவர்கள் இத்திரைப்படத்தில் அம்பேத்குமார் எனும் தலித்தாகவே வாழ்ந்துள்ளார். தலித்துகளின் வலியையும் வேதனையையும் அப்படியே காட்டியுள்ளார். அம்பேத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி அவர்களின் அந்த கோபமும் ஏக்கமும் சேரிப்பெண்களின் ஆதங்கமாகவே இருந்தது. அதே போல இயக்குனர் பாலாஜி சக்திவேல் அதிகாரத்தை விட மறுக்கும் அதிகார வெறிபிடித்த கோப்புலிங்கமாகவே மாறி சாதி வெறியாட்டம் போட்டுள்ளார். காலம் காலமாக சாதி இந்துக்களே ஊராட்சி மன்றத்தலைவராக இருந்து பழக்கப்பட்ட இடத்தை திடீரென தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டால் என்ன எதிர்வினை ஏற்படும்? சாதியவாதிகள் எப்படியெல்லாம் சாதிவெறியோடு அந்த தலைவர் பதவியை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கதை. சிக்கலான அதே நேரத்தில் மிக கவனமாக கையாள வேண்டிய கதையை நேரடியாக எந்த சமரசமும் இல்லாமல் சாதியத்துக்கு எதிராக இறங்கியுள்ளார் இயக்குனர் இரா.சரவணன். தலித் அல்லாத சமூகத்தில் பிறந்து சாதிய கட்டமைப்புக்கு எதிராக களமாடி வரும் இயக்குனர்கள் வெற்றிமாறன்,சுசீந்திரன், போஸ் வெங்கட் போன்றோர் வரிசையில் இரா.சரவணன் அவர்களும் இணைந்துள்ளார். சாதிப்பெருமைகளை போட்டு அடித்து உடைத்துள்ளார். ஆளுவதற்காக தான் அதிகாரம் தேவைன்னு இருந்தோம்; இப்ப வாழ்வதற்காகவே அதிகாரம் தேவைப்படுது என்பதை வலிமையாக காட்சிப்படுத்தியுள்ளார். அம்பேத்குமாராக வாழும் சசிக்குமார் அவர்களும் கோப்புலிங்கமாக ஆடும் பாலாஜி சக்திவேல் அவர்களும் போட்டி போட்டு கொண்டு நடித்துள்ளார்கள். இன்றைக்கும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற முடியாத அவலம் தொடர்வதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர். #நந்தன் இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க வெளியாகிறது. சமூக மாற்றத்தை விரும்பக்கூடிய எல்லோரும் காண வேண்டிய திரைப்படம். திரைப்படக்குழுவினருக்கு அன்பின் முத்தங்கள். #வன்னி #விடுதலை_சிறுத்தைகள் #தமிழ்நாடு

வன்னி அரசு

111,470 görüntüleme • 1 yıl önce

VanniKural's profile picture

#இசைவாணி மக்கள் பாடகர் மட்டுமல்ல; மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் மகத்தான கலைஞர். கலை இலக்கியத்தின் மூலம் பெண் விடுதலை மற்றும் தலித் விடுதலையை முழங்கி வருபவர். தமிழ்நாட்டு கலை இலக்கிய அரசியல் சூழலில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று புரட்சிகரமாகவும் தனித்துவமாகவும் களமாடி வருபவர். நீண்ட காலமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மாதவிடாய் காரணம் சொல்லப்பட்டது. 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அய்யப்பனை தரிசிக்க முடியாத சூழலில் தான், கடந்த 2018 அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது. பெண்களும் உள்ளே சென்று வழிபடலாம் என்பது தான் அந்த தீர்ப்பு. இந்த பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் தான், “ஐ ஆம் ஸாரி அய்யப்பா நான் உள்ள வந்தா தப்பாப்பா பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா நான் தாடிக்கார பேத்தி காலம் மாறி போச்சு…..” தம்பி தெருக்குரல் அறிவு எழுதிய இப்பாடலை சகோதரி இசைவாணி மிகுந்த எழுச்சியுடன் கடந்த 5 ஆண்டுகளாக பாடி வருகிறார். அப்பாடலில் என்ன தவறு இருக்கிறது? எதற்காக சனாதனக்கும்பல் கதற வேண்டும்? இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அம்பேத்கரியவாதிகள் அஞ்ச மாட்டோம். சகோதரி இசைவாணியுடன் விடுதலைச்சிறுத்தைகள் துணை நிற்போம். தமிழ்நாடு முழுக்க ஒலிக்கட்டும் ஐ ஆம் ஸாரி அய்யப்பா… #வன்னி #விடுதலை_சிறுத்தைகள் #தமிழ்நாடு

வன்னி அரசு

63,270 görüntüleme • 1 yıl önce

VanniKural's profile picture

#தலித்துகள் மலம் அள்ளுவது கடவுளுக்கு செய்யக்கூடிய தொண்டு” என தன்னுடைய #கர்மா_யோகி நூலில் ஞாயப்படுத்திய மோடியை கண்டித்தும் மோடிக்கு விருந்து வைக்கும் ஜெயலலிதாவை கண்டித்தும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் 2008 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மறியல் போராட்டத்தில் எமதுதலைவர் Thol. Thirumavalavan அவர்கள். தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து அதே தொழிலை செய்வது குலத்தொழிலாக மாற்றும் முயற்சி என்பதே விடுதலைச்சிறுத்தைகளின் சமூகநீதிப்பார்வை. 1990 களின் தொடக்கத்திலிருந்தே #எழுச்சித்தமிழர் கோரிக்கை இது தான். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை விடுதலைச்சிறுத்தைகள் போராடுவோம்! - வன்னி அரசு விடுதலைச்சிறுத்தைகள் 19.8.2025

வன்னி அரசு

20,155 görüntüleme • 1 yıl önce

VanniKural's profile picture

#கண்டனம் வேலூர் மாவட்டத்தில் விடுதலைச்சிறுத்தையாக கருத்தியல் ரீதியாக தீவிரமாக களமாடி வருபவர் தம்பி அஜீத் செல்வராஜ். நேற்று இரு சக்கர வண்டியில் வேலூர் லட்சுமி தியேட்டர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, போக்குவரத்து காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் திரு.ரஜினி என்பவரால் வழி மறிக்கப்பட்டார். கேட்ட லைசன்ஸ் அத்தனையும் காட்டிய பிறகும், “என்னடா திருமாவளவன்,பெரியார், அம்பேத்கர் ஸ்டிக்கரல்லாம் ஒட்டியிருக்க. உனக்கு கட்சி,சாதி இருக்குன்னா எனக்கும் இருக்குடா”ன்னு கையை முறுக்கி கடுமையாக தாக்கியுள்ளார். போக்குவரத்து பிரிவில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு கூடுதலாக பணி பளுவால் மன அழுத்தம் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக, அம்பேத்கர்,தலைவர் திருமா படங்களை பார்த்வுடன் இன்னும் கூடுதலாக மன அழுத்தம் ஏற்பட்டு சாலையிலேயே ரவுடித்தனம் செய்வது எப்படி சரியாக இருக்கும்? இப்போது தம்பி அஜீத் செல்வராஜ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்தவற்றை கேட்டறிந்தேன். உடனடியாக Tamil Nadu Police காவல்துறை சம்மந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். #வன்னி #விடுதலை_சிறுத்தைகள் #தமிழ்நாடு

வன்னி அரசு

23,091 görüntüleme • 1 yıl önce