
வன்னி அரசு
@VanniTamizhVCK • 15,100 subscribers
சமூக நீதித்துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு | துணை பொதுச் செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Videos

“ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு; அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு. அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் எமது தலைவர் எழுச்சிதமிழர் Thol. Thirumavalavan தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் கருத்து. இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்” - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 14.6.2026
வன்னி அரசு126,826 görüntüleme • 2 ay önce

'முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா!' திருவண்ணாமலை மாவட்டம் – நாயுடுமங்கலம் ஊராட்சியில் புதிதாக ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அருகில் அமைந்துள்ள பழைய முகாம்களில் வாழும் மக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய குடியிருப்புகளை நேற்று (21.06.26) பார்வையிட்டோம். கலசப்பாக்கம் வட்டம் – தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள முகாமில் வசிக்கும் 160 குடும்பங்கள் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டம் – காரியந்தல் முகாமில் வசிக்கும் 92 குடும்பங்கள் என மொத்தம் 252 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய வளாகத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குறைவான கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி, அங்கன்வாடி உள்ளிட்ட தேவைகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளதாக மக்கள் முறையிட்டனர். அனைத்து கோரிக்கைகளும் உரிய துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தேன். கடும் மழை பெய்து கொண்டிருந்த போதும், திரளான மக்கள் எம்மை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அங்கிருந்து விடைபெறும் போது, ‘முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா’ என்று பெண்கள் கூட்டாக தெரிவித்தனர். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, ஈழத்தமிழர்கள் சொல்லி அனுப்பிய வாழ்த்தினை அவையில் பகிர்ந்துக் கொண்டேன். மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுமாறு கோருகிறோம். CMOTamilNadu
வன்னி அரசு44,453 görüntüleme • 2 ay önce

'நான் உங்கள் வன்னி அரசு பேசுகிறேன். #திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திண்டிவனம் வேட்பாளராக களத்தில் உள்ளேன். MLA என்றால் என்னைப் பொறுத்தவரைக்கும் Member of Labour Assembly. மக்களுக்கு வேலை பார்க்கக் கூடிய முதல் வேலைக்காரன் நான். திண்டிவனத்தை திண்டிவளமாக மாற்றுவேன். உங்கள் வாக்குகளை பானைச் சின்னத்தில் அளிக்கும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்' Thol. Thirumavalavan Gingee Masthan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Dr D.Ravikumar MP #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும் #Thirumavalavan #VCK #வன்னிஅரசு #Vanniarasu #Tindivanam #திண்டிவனம் #vanniarasufortindivanam #voteforvanniarasu
வன்னி அரசு50,269 görüntüleme • 4 ay önce

இன்று (26.05.2026) சென்னை தாட்கோ தலைமை அலுவலகக் கூட்டரங்கில் எனது தலைமையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து தாட்கோ அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி. ரவிக்குமார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.ந. சுப்பையன் இ.ஆ.ப., ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.க.சு. கந்தசாமி இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப., சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.ம. சிந்தனை செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் #சமூக_நீதித்துறை #TAHDCO #தமிழ்நாடு_அரசு
வன்னி அரசு34,021 görüntüleme • 3 ay önce

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் சமூக நீதித்துறை கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரம் குறைந்த முறையில் உணவு வழங்கப்படுவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கு மாணவிகள் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்ததாகவும், இப்புகாருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், நேற்று (28.05.26) விடுதி மாணவிகளை வீடியோ காலில் அழைத்து அவர்களின் புகார் குறித்து விசாரித்தேன். இப்புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நினைவேற்றப்படும் என்றும் மாணவிகளிடம் உறுதி அளித்தேன். விரைவில் மாணவிகளை சந்திப்பதற்கு நேரில் வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தேன்.
வன்னி அரசு21,790 görüntüleme • 3 ay önce

நீண்ட காலம் சிறையில் வாடும் 22 இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து, அவர்களுக்கு முதற்கட்டமாக நீண்ட கால பரோல் வழங்கியும், விதிகளுக்குட்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்வதற்கும் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களை 25.05.26 அன்று சந்தித்து வலியுறுத்தினோம். நேற்று (01.06.26) தமிழக முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் சிறைவாசிகளின் குடும்பத்தினர் என்னை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைக்கு பின்னுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இதற்கான முன்னெடுப்புகளுக்காக நன்றி தெரிவித்தனர். 'நீண்டகால சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது எங்களுடைய கோரிக்கையும் ஆகும். இது எங்கள் கடமை தான். சட்ட விதிமுறைகளின்படி அனைவரின் விடுதலையும் விரைவில் சாத்தியமாகும்' என்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். - வன்னி அரசு அமைச்சர் - சமூக நீதித்துறை தமிழ்நாடு அரசு 02.06.26
வன்னி அரசு14,769 görüntüleme • 2 ay önce

'அண்ணன் திருமாவளவன் உடன் சமூகநீதி களத்தில் பயணிக்கும் அன்பு சகோதரர் வன்னி அரசு திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்' திரைப்பட இயக்குநர் திருமதி.லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும் #Thirumavalavan #VCK #வன்னிஅரசு #Vanniarasu #Tindivanam #திண்டிவனம் #vanniarasufortindivanam #voteforvanniarasu
வன்னி அரசு19,687 görüntüleme • 4 ay önce

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில், தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கும், 'தியாகத்தந்தை' தொல்காப்பியன், 'அக்கா எனும் அம்மா' பானுமதி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அமைப்பாய் திரண்டோம்..! அங்கீகாரம் பெற்றோம்..! அதிகாரம் வென்றோம்..! என்று தலைவர் எழுச்சித்தமிழரின் முழக்கத்தை எழுப்பி விடுதலைச் சிறுத்தைகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Thol. Thirumavalavan Sinthanai Selvan VCK S.S.Balaji
வன்னி அரசு14,799 görüntüleme • 3 ay önce

#பாரதிராஜா என்னும் இந்த மகத்தான கலைஞன் மரணம் எனக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் துயரத்தையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது. “என் இனிய தமிழ்மக்களே” என்னும் அந்த கிராமத்து குரலும் கூப்பிய கரங்களும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமானது. தமது படைப்புகள் மூலமாக தமிழ்நாட்டின் உணர்வுகளையும் பண்பாட்டையும் உலகுக்கு இலக்கியமாக்கியவர். “தேவர் என்பது நீங்க படித்து வாங்கிய பட்டமா”என்று சாதிய அமைப்பை கேள்வி கேட்டவர். தமிழீழத்தின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பெரும் வேட்கை கொண்டவர். தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த கரும்புலி முத்துக்குமார் நினைவை போற்றும் வகையில், திரைப்படங்களில் “கரும்புலிமுத்துக்குமாருக்கு சமர்ப்பணம்” என டைட்டில் கார்டுக்கு முன் போட வேண்டும் அறிவித்தவர். தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதற்கு மாற்றாக, தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றியவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இயக்குநர் இமயம் பாராதிராஜா குறித்து. இவை எல்லாவற்றையும் தாண்டி எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தையும் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களையும் நேசித்தவர். அத்தகைய பேரன்புக்கு சொந்தக்காரரான பாரதிராஜா என்னும் அந்த படைப்பாளிக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் 10.6.2026
வன்னி அரசு11,102 görüntüleme • 2 ay önce

#எச்சரிக்கை தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி தலைவராக உள்ள திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் இந்த அறிக்கை தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது. வேங்கை வயல் மற்றும் நாங்குனேரியில் எமது தலைவர் என்ன செய்தார் என இப்போது கேள்வி கேள்வி எழுப்புகிறார். கடந்த திசம்பர் 27.12.2022 அன்று வேங்கைவயலில் தலித்துகள் குடியிருப்பு இருக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தனர் சாதியவாதிகள். உடனடியாக 31.12.2022 அன்று புதுக்கோட்டையிலேயே போராட்டத்தை நடத்தினார் எமது தலைவர் Thol. Thirumavalavan அவர்கள். அதற்கடுத்தபடியாக கடந்த சன.19, 2023 தமிழ்நாடெங்கும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. எமது தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தான் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த மார்.5, 2026 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலணியில் படுகொலை செய்யப்பட்ட ஜான் மார்க் குடும்பத்தினரையும் கிராம மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். கடந்த மார்ச் 8,2026 அன்று காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஆகாஷ் குடும்பத்தை மார்ச் 14,2026 அன்று சிவகங்கையில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாது, 2 லட்சம் நிதியுதவியும் கொடுத்து ஆதரவு தெரிவிந்தார் எமது தலைவர் எழுச்சித்தமிழர். எமது போராட்டக்களத்தை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், வேங்கை வயலில் மலம் கலந்த சாதியவாதிகளை கண்டித்து ஒரு போராட்டத்தை அதிமுக நடத்தியதுண்டா? அல்லது நாங்குனேரியில் சாதியவாதிகளை கண்டித்து ஒரு அறிக்கையை அதிமுக தலைவர் என்ற முறையிலாவது கொடுத்ததுண்டா? இப்படி எதுவுமே செய்யாமல் கள்ள மவுனம் காத்த திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் எமது தலைவரை பார்த்து இப்படி கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது. சிறுத்தைகளின் போராட்டங்களை திரு.எடப்பாடி பழனிச்சாமியும் அறிவார். எமது தலைவரின் போர்க்குணத்தையும் அறிவார். ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக இம்மாதிரியான அவதூறுகளை பரப்புகிறார் எடப்பாடியார். இது ஒருபுறம் இருக்கட்டும். தலித்துகள் மீது அக்கறை இருப்பது போல நாடகம் ஆடும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் 7 தலித்துகளை படுகொலை செய்த மேலவளவு கொடூர கொலையாளிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்தார். இது தான் தலித்துகள் மீதான அக்கறையா? தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சமரசமற்று போராடி வரும் எமது தலைவரை தலித் தலைவராக சுருக்க முனையும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சாதியப்புத்தி தான் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வலிமையாக உள்ள விடுதலைச்சிறுத்தைகளை எப்படியாவது வெளியேற்றத்துடிக்கும் சதி அரசியல் தான் வெளிப்படையாக தெரிகிறதே தவிர வேறொன்றும் இல்லை. அதிமுகவை பாஜக விழுங்கி கொண்டிருக்கிறது. முதலில் அதிமுகவை காப்பாற்ற முயற்சி எடுங்கள் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களே! - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 23.3.2026
வன்னி அரசு11,096 görüntüleme • 5 ay önce
Daha fazla içerik yok.