Varaaki's banner
Varaaki's profile picture

Varaaki

@VaraakJournalis7,536 subscribers

WHISTLE BLOWER, Voice of truth , https://t.co/WRozevzcBs

Shorts

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?? அடக்குமுறைக்கு என்றைக்கும் அடங்க மாட்டேன்..! நீதித்துறைக்கு நான் என்றும் தலை வணங்குவேன்..!!!

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?? அடக்குமுறைக்கு என்றைக்கும் அடங்க மாட்டேன்..! நீதித்துறைக்கு நான் என்றும் தலை வணங்குவேன்..!!!

79,985 görüntüleme

Videos

VaraakJournalis's profile picture

விசில் சத்தம்: 4 எதுவும் நிந்திரம் இல்லை. 3 AC, 8 Inspectors, 13 SI , 7 Techies… 11 வாகனம், மொத்தம் 80 போலிசார்.. பயங்கரவாதியா?? தீவிரவாதியா?? பூட்டை உடைத்து, கதவை பிளந்து CCTV DVR கூட சூறையாடப்பட்டது.. ஏன் இந்த கொலை வெறி..??? என்ன வேண்டும் உனக்கு??? எதை தேடுகிறாய்? GREATER CHENNAI POLICE -GCP Tamil Nadu Police உன் வாழ்நாள் முழுவதும் நீ இப்படியே, இதே பதவியில், இதே அதிகாரத்தில் இருந்துவிட முடியாது? காலம் மாறும்.. காட்சிகள் மாறும்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. எதுவும் நிரந்திரம் இல்லை.. இதே மாதிரி செய்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.. ஓடி போய் விட்டார்கள்.!! Advice செய்ய ஆலே இல்லையா?? தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் வெல்லும்!!!! நீதி நிலைநாட்டபடும்.. நீதிமன்றம் முடிவுரை எழுதும்..

Varaaki

138,591 görüntüleme • 1 yıl önce

VaraakJournalis's profile picture

விசில் சத்தம்- 11 பள்ளி வளாகத்தை கஞ்சா அடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் பயன்படுத்திய கயவர்களை பற்றி போலீசாரிடம் தகவல் தெரிவித்த துணிச்சல் மிக்க சட்டக் கல்லூரி மாணவி- whistle Blower மீது கடும் தாக்குதல்- பாதுகாப்பு வேண்டும்!!! தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள KK பட்டி என்னும் ஊரில் உள்ள பள்ளி வளாகத்தை கஞ்சா புகைப்பதற்கும், மது அருந்துவதற்கும் சில சமூகவிரோதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் அந்த போக்கிரிகள் சாலையில் நின்றுகொண்டு அந்த பக்கம் வருபவர்கள் போகிறவர்களிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார்கள். அந்த கயவர்களின் செயல்களை பற்றி ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுற்றுக் காவலுக்கு வரும்போது, அதே ஊரைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவி துணிச்சலாக தகவல் தெரிவித்துள்ளார். அந்த நற்செயலினால் கடுப்பாகிய தீயவர்கள், மாண்புமிகு மாணவியை அசிங்கமாக திட்டி, harass செய்து மிரட்டி உள்ளார்கள். இதனை மாணவியின் பாட்டி தட்டிக் கேட்க சென்றுள்ளார். அப்போது, கொடியவன் பாட்டியை அடிக்க முற்பட்டுள்ளான். அதனை தடுக்க மாண்புமிகு மாணவி முயன்றுள்ளார். கொடியவன் இரும்பு bucket-ஆல் மாணவியை அடித்துள்ளான். மாணவியின் நெற்றியில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அந்த தாக்குதல் மாணவிக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மரியாதைக்குரிய மாணவி நம்மை தொடர்பு கொண்டால், நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்ற நம்பிக்கையில் நம்மை தொடர்பு கொண்டுள்ளார். அவர் அனுப்பிய வீடியோ அவரது ஒப்புதலின் பேரில் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், எதிரிகள் கைது செய்யப்பட்டார்களா என்கிற விவரம் கூட தெரியவில்லை. பாதிக்கபட்ட மாணவிக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும், அவருக்கு தகுந்த நஷ்டஈடு வழங்கவும், குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்று தரவும், இம்மாதிரியான சம்பவம் நடக்காமல் இருக்கவும், தமிழக அரசும் - காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.!!!!! வாராகி WHISTLE BLOWER 9940444476 CMOTamilNadu Office of Udhayanidhi Stalin Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Tamil Nadu Police GREATER CHENNAI POLICE -GCP Tamil Nadu Police - South Zone District Collector, Theni State Police Master Control Room: Dial-100 Theni District Police

Varaaki

41,075 görüntüleme • 1 yıl önce

VaraakJournalis's profile picture

புதிய தற்காலிக டிஜிபி கவனத்திற்கு... பவானியில் முதிய தம்பதியரின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்பவருக்கு ஆதரவாக செயல்படும் DSP ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த 82 வயதுடைய திரு. சின்னுவும், அவரது மனைவியுமான 77 வயது மூதாட்டி திருமதி. ராஜாமணி இருவரும் .. வர்ணாபுரம் 5 வது தெரு பவானி ஈரோடு மாவட்டம் முகவரியில் வாழ்ந்து வருகிறார்கள். தனது மகன் தொழில் நிமித்தமாக லோன் வாங்குவதற்காக எழுதி கொடுத்த ஆவணங்களை, வெங்கடாசலம் மகள் ஹிந்துஜா ஆகியோர் தவறாக பயன்படுத்தி சொத்தை அபகரிக்க பார்க்கிறார்கள் என்றும், தங்களை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் என்றும், தங்களது வீட்டிற்கு முன் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டிடம் கட்டி, அவசர அடிப்படை தேவைகளுக்கு கூட யாரும் செல்ல முடியாத அளவிற்கு அத்துமீறல்கள் செய்கிறார்கள் என்றும் புகார் அளித்துள்ளார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளார். DSP திரு.ரத்தினகுமார் அவர்கள், மூதாட்டியின் மகன் பாபுவை உடனடியாக ஸ்டேஷனுக்கு வரவில்லை என்றால் எதிர்தரப்பில் புகார் வாங்கி Woman Harassment வழக்கு போட்டு ரிமேண்டு செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். பவானி சரக காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) பேசிய ஆடியோ பதிவை கேளுங்கள்!!!! பொய் வழக்கு போடுவது சர்வ சாதாரணம் ஆகி விட்டது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம். பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால், அந்த பழியும் பாவமும் உங்களை ஒன்னும் செய்யாது… Proceed!!!! CMOTamilNadu Tamil Nadu Police Whistle Blower Activitist TAMILNADU POLICE WEST ZONE Erode District Police

Varaaki

23,420 görüntüleme • 9 ay önce

VaraakJournalis's profile picture

விசில் சத்தம்: 12 அதிகார துஷ்பிரயோகம் மிரட்டுவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜீவராஜ் மணிகண்டன். மிரட்டப்படுவது: சேராம்பட்டு கிராம மக்கள். அப்பாவி அடித்தட்டு மக்களிடமா உங்களது அதிகார பலத்தையும், ஆணவத்தையும், வாய்ஜாலத்தையும் காட்டுவீர்கள்????? மக்களை மிரட்டும் ரவுடிகளிடமும்!, பொறுக்கித்தனம் செய்யும் கயவர்களிடமும்!, ஊரைக் கொள்ளை அடிக்கும் ஊழல்வாதிகளிடமும்!, அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளிடமும்!, இந்த ATTITUDE-யை காட்ட வேண்டியது தானே!!! Dialogue-க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!!! கவனிக்குமா காவல்துறை ??? கவனிக்குமா காவல்துறையை நிர்வகிக்கும் உள்துறை??? Tamil Nadu Police TN Prohibition Enforcement Wing Tiruvannamalai District Police

Varaaki

30,332 görüntüleme • 1 yıl önce

VaraakJournalis's profile picture

விசில் சத்தம்:5 (பகுதி : 1) : NEED PROTECTION FOR WHISTLE BLOWER RAJ KAMAL!!! (as per High Court’s order dated 11.11.2024)!! தமிழ்நாடு அரசு நிறுவனம் (TAHDCO) வழங்கும் லோன் திட்டத்தில் பலகோடி கணக்கில் ஊழல் முறைகேடுகள் நடந்ததை தட்டிக்கேட்ட, ஊழலையும் அதிகார துஷ்ப்ரயோகத்தையும், வெளிஉலகத்திற்கு கொண்டு வந்த whistle Blower திரு. ராஜ் கமல் மீது சிறு கீறல் பட்டாலோ,!!!!! அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ !!!!! அதற்கு முழு பொறுப்பு இந்த அரசும், காவல் துறையும் தான் …!!! மிகவும் கொடுமையான, மிகவும் வருந்தத்தக்க, மோசமான நிகழ்வுகளை விரிவாக எழுதி அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கு முன்னர் இதனை பதிவிடுகிறேன். இந்த பதிவு ‘எச்சரிக்கை’ அல்ல !!! அரசையும், காவல்துறையையும் பொறுப்பு ஏற்க வைக்கும் பதிவு !!! கடந்த ஜனவரி மாதம், புதுக்கோட்டையில் whistle Blower ‘ஜக்பர் அலி’ கொலை செய்யப்பட்டது போல, இனி எந்த சம்பவமும் தமிழ்நாட்டில் நடக்காமல் இருப்பதற்காக!!! NEED JUSTICE FOR WHISTLE BLOWER RAJKAMAL !!! CMOTamilNadu Tamil Nadu Police GREATER CHENNAI POLICE -GCP Avadi Police Commissionerate

Varaaki

23,994 görüntüleme • 1 yıl önce

Daha fazla içerik yok.