Nanban's banner
Nanban's profile picture

Nanban

@YourNanban17,400 subscribers

பிரபஞ்சத்தின் தற்காலிகப் பயணி 🌌

Shorts

விடைபெறுகிறேன் ❤️ 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, மற்றும் உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் ணா TVK Vijay இந்த பதிவு கடின மனதோடு எல்லாம் எழுதவில்லை.இயல்பான சராசரி மனநிலையில் எழுதுகிறேன். அறிக்கையை விமர்சித்தேன். கண்ணியமாக! அண்ணன், ஸ்டாலின்,மோடி, டிரம்ப் என தலைவர்கள் யாரும் அறிக்கை எழுதுவதில்லை. படித்து ஒப்புதல் மட்டுமே கொடுப்பார்கள். தவறே இல்லை. இதுவே நடைமுறை. அதனாலே நான் நேரடியாக டீமை குறிப்பிட்டேன். இந்த புரிதல்? இது பற்றி நிறைய எழுதலாம் இதோடு நிறுத்துகிறேன். மாற்று கருத்தை மதிக்கும் பக்குவம் அண்ணனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும் என்றாவது வரும் என்று நம்புகிறேன். 11 வருடமாக திறக்கப்படாமல் இருந்த என் இதய புத்தகத்தின் ஒரு பக்கத்தை கட்டாயத்தின் பேரில் முதலும் கடைசியுமாக பகிர்ந்துவிட்டு நகர்கிறேன். நான் தலித்! ஒடுக்கப்பட்டவன்! இந்த 11 வருடத்தில் ஒரு முறை கூட நான் சொன்னதில்லை.நகரத்திலேயே பிறந்து வாழ்ந்தாலும் எனக்கும் புறக்கணிப்புகள், அவமானங்கள்,வலிகள் இருந்தும் ஒரு முறை கூட எழுதியது இல்லை.அனுதாபத்தை அறவே வெறுப்பதால்! டாக்டர் அனிதா தலித். எந்த நடிகரும், பல அரசியல்வாதிகளும் இறப்பிற்கு செல்லவில்லை.அண்ணன் சென்று தரையில் அமர்ந்தார்.ஒரு தலித்தாக நான் உருகினேன். நான் எப்படி அய்யா அண்ணனை விமர்சிக்க முடியும்? உங்களை விட நூறு மடங்கு அவரை நேசிக்கிறேன். அவர் உங்களுக்கு மனதோடு சம்பந்தப்பட்டவர். 21 வருட ரசிகன் என்பதை தாண்டி தலித்தாக அவர் எனக்கு உணர்வோடு சம்பந்தப்பட்டவர்! என்னை விட யார் அவருக்காக defend செய்து இங்கே பக்கம் பக்கமாக எழுதினீர்கள்? எதையும் யோசிக்காமல்,தெரியாமல் ஏன் தனிப்பட்ட தாக்குதல்.ஒவ்வொரு முறையும் நான் தீக்குளிக்க வேண்டுமா என்னை நிரூபிக்க? என் இறுதி அத்தியாயத்தை சாந்தமாக கடக்கிறேன். என்னால் இனி உங்களுக்கு சிரமம் இருக்காது. நன்றி: ஒரு தலித் அறிவோடு செயல்படுவதை பலர் விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் பெருவாரியாக இடைநிலை சாதிகளாக இருந்தும் என்னை ஆதரித்த பக்குவத்திற்கு கரம் பற்றி நன்றிகள். சொந்த சமூகம் பாதிக்கப்படும்போது சில நேரம் கண்டும் காணாமல் நான் துரோகம் செய்தேன்.பொதுவான ஒரு கட்சியை ஆதரிக்கும்போது அது ஒரு சார்பாக போய்விடக் கூடாது என்பதற்காக. ஆனாலும் தலித்துகளுக்காக நிறைய எழுதினேன்.ஆழமாக! இஸ்லாமியர்களுக்காக, பெண்களுக்காக, தொழிலாளர்களுக்காக, திருநர்களுக்காக,அரசியல்,பதிலடிகள், வரலாறு என நிறைய எழுதினேன். ஒன்னேகால் வருடமாக நேர்மையாக உழைத்தேன்.போட்டி பொறாமை இல்லாமல் திறமையானவர்களை ஆதரித்து கைகாட்டியிருக்கிறேன். என் கருத்தாக வைத்திருந்தால் எதுவும் சென்று சேர்ந்திருக்காது. அண்ணனின் பெயரும் புகைப்படமும் கருத்தோடு சேர்த்ததால் மட்டுமே அது சென்று சேர்ந்தது. அவர் இல்லை என்றால் நான் ஸிரோ. வாய்ப்பிற்கு நன்றி ணா! பணத்திற்காக, பதவிக்காக நான் எழுதவில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரீச் என்ற விமர்சனம். நூற்றுக்கணக்கான writeup. ரீச்சிற்காக என்றால் தெரிந்தே ஒரு மாற்று கருத்தை வைத்து விரும்பி தாக்குதலை எதிர்கொள்வார்களா? மாற்று கருத்து, என் இருப்பு இடைஞ்சலாக இருக்கும்பட்சத்தில் விடைபெறுகிறேன். கட்சியே பெரிது.தனி நபர் அல்ல. அண்ணனே முக்கியம். இதோடு என் பதிவை நிறுத்துகிறேன். என்னை நிரூபிக்க இதுவே ஒரே வழி.காலம் கடந்து என்னை புரிந்துகொள்வீர்கள். ஆப்லைனில் மகிழ்வாக பணி செய்வேன். என் சுற்றத்தாரிடம் அண்ணல் அம்பேத்கரை அண்ணன் TVK Vijay ஏற்றுகொண்டதை விளக்கி, இதனால் என்ன பயன் என்று விளக்கி 230 பேரின் ஆதரவை ஏற்கனவே பெற்றுவிட்டேன். ரீச் இல்லாமல்! நீங்கள் என்னால் காயப்பட்டிருந்தால் உண்மையாக வருத்தங்கள். எவர் மீதும் புகார் இல்லை.வெறுப்போருக்கும் அன்பையே கொடுக்கிறேன். இனியாவது கூட இருப்பவரை கீழே தள்ளாமல் எதிரியோடு மோதுங்கள். அன்பான வேண்டுகோள். வளைந்து கொடுக்காமல், தன்மானத்தை இழக்காமல் சுயமரியாதையோடு செல்கிறேன்!காணொளிகள்... மன்னிக்கவும். எனக்கே எனக்காக One last time! என், என் காதல் மனைவி, மகன்(லியோ கக்காஷி), மகள்(டைனோசர்) சார்பாக லவ் யூ ணா TVK Vijay என்னை ஆதரித்த, dm-ல் அன்பு செலுத்திய எல்லோருக்கும் அன்பும் நன்றியும். உங்களை ஒருபோதும் வாழ்வில் மறக்க மாட்டேன். 11 வருடத்தில் எத்தனை எத்தனை நினைவுகள், மகிழ்வுகள் ❤️ என்னுடைய இறுதி கோரிக்கை : ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம், சாதிவெறி நீங்க சீரிய திட்டம், அதிகாரத்தில் அமைச்சரவையில் தலித்துகளுக்கு உரிய இடம் கொடுக்க குரல் கொடுங்கள். ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துங்கள். கைவிட்டுவிடாதீர்கள் ! பாபாசாகேப் நிழலில் இளைப்பாறுகிறேன். பெரியாரும், மேதகு பிரபாகரனும் நினைவில்! அண்ணனும் அண்ணலும் மனதில்! மனநிறைவோடு விடைபெறுகிறேன் நன்றி ! தவெக ❤️ ஜெய் பீம் 💙 Nanban 🌌

விடைபெறுகிறேன் ❤️ 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, மற்றும் உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் ணா TVK Vijay இந்த பதிவு கடின மனதோடு எல்லாம் எழுதவில்லை.இயல்பான சராசரி மனநிலையில் எழுதுகிறேன். அறிக்கையை விமர்சித்தேன். கண்ணியமாக! அண்ணன், ஸ்டாலின்,மோடி, டிரம்ப் என தலைவர்கள் யாரும் அறிக்கை எழுதுவதில்லை. படித்து ஒப்புதல் மட்டுமே கொடுப்பார்கள். தவறே இல்லை. இதுவே நடைமுறை. அதனாலே நான் நேரடியாக டீமை குறிப்பிட்டேன். இந்த புரிதல்? இது பற்றி நிறைய எழுதலாம் இதோடு நிறுத்துகிறேன். மாற்று கருத்தை மதிக்கும் பக்குவம் அண்ணனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும் என்றாவது வரும் என்று நம்புகிறேன். 11 வருடமாக திறக்கப்படாமல் இருந்த என் இதய புத்தகத்தின் ஒரு பக்கத்தை கட்டாயத்தின் பேரில் முதலும் கடைசியுமாக பகிர்ந்துவிட்டு நகர்கிறேன். நான் தலித்! ஒடுக்கப்பட்டவன்! இந்த 11 வருடத்தில் ஒரு முறை கூட நான் சொன்னதில்லை.நகரத்திலேயே பிறந்து வாழ்ந்தாலும் எனக்கும் புறக்கணிப்புகள், அவமானங்கள்,வலிகள் இருந்தும் ஒரு முறை கூட எழுதியது இல்லை.அனுதாபத்தை அறவே வெறுப்பதால்! டாக்டர் அனிதா தலித். எந்த நடிகரும், பல அரசியல்வாதிகளும் இறப்பிற்கு செல்லவில்லை.அண்ணன் சென்று தரையில் அமர்ந்தார்.ஒரு தலித்தாக நான் உருகினேன். நான் எப்படி அய்யா அண்ணனை விமர்சிக்க முடியும்? உங்களை விட நூறு மடங்கு அவரை நேசிக்கிறேன். அவர் உங்களுக்கு மனதோடு சம்பந்தப்பட்டவர். 21 வருட ரசிகன் என்பதை தாண்டி தலித்தாக அவர் எனக்கு உணர்வோடு சம்பந்தப்பட்டவர்! என்னை விட யார் அவருக்காக defend செய்து இங்கே பக்கம் பக்கமாக எழுதினீர்கள்? எதையும் யோசிக்காமல்,தெரியாமல் ஏன் தனிப்பட்ட தாக்குதல்.ஒவ்வொரு முறையும் நான் தீக்குளிக்க வேண்டுமா என்னை நிரூபிக்க? என் இறுதி அத்தியாயத்தை சாந்தமாக கடக்கிறேன். என்னால் இனி உங்களுக்கு சிரமம் இருக்காது. நன்றி: ஒரு தலித் அறிவோடு செயல்படுவதை பலர் விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் பெருவாரியாக இடைநிலை சாதிகளாக இருந்தும் என்னை ஆதரித்த பக்குவத்திற்கு கரம் பற்றி நன்றிகள். சொந்த சமூகம் பாதிக்கப்படும்போது சில நேரம் கண்டும் காணாமல் நான் துரோகம் செய்தேன்.பொதுவான ஒரு கட்சியை ஆதரிக்கும்போது அது ஒரு சார்பாக போய்விடக் கூடாது என்பதற்காக. ஆனாலும் தலித்துகளுக்காக நிறைய எழுதினேன்.ஆழமாக! இஸ்லாமியர்களுக்காக, பெண்களுக்காக, தொழிலாளர்களுக்காக, திருநர்களுக்காக,அரசியல்,பதிலடிகள், வரலாறு என நிறைய எழுதினேன். ஒன்னேகால் வருடமாக நேர்மையாக உழைத்தேன்.போட்டி பொறாமை இல்லாமல் திறமையானவர்களை ஆதரித்து கைகாட்டியிருக்கிறேன். என் கருத்தாக வைத்திருந்தால் எதுவும் சென்று சேர்ந்திருக்காது. அண்ணனின் பெயரும் புகைப்படமும் கருத்தோடு சேர்த்ததால் மட்டுமே அது சென்று சேர்ந்தது. அவர் இல்லை என்றால் நான் ஸிரோ. வாய்ப்பிற்கு நன்றி ணா! பணத்திற்காக, பதவிக்காக நான் எழுதவில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரீச் என்ற விமர்சனம். நூற்றுக்கணக்கான writeup. ரீச்சிற்காக என்றால் தெரிந்தே ஒரு மாற்று கருத்தை வைத்து விரும்பி தாக்குதலை எதிர்கொள்வார்களா? மாற்று கருத்து, என் இருப்பு இடைஞ்சலாக இருக்கும்பட்சத்தில் விடைபெறுகிறேன். கட்சியே பெரிது.தனி நபர் அல்ல. அண்ணனே முக்கியம். இதோடு என் பதிவை நிறுத்துகிறேன். என்னை நிரூபிக்க இதுவே ஒரே வழி.காலம் கடந்து என்னை புரிந்துகொள்வீர்கள். ஆப்லைனில் மகிழ்வாக பணி செய்வேன். என் சுற்றத்தாரிடம் அண்ணல் அம்பேத்கரை அண்ணன் TVK Vijay ஏற்றுகொண்டதை விளக்கி, இதனால் என்ன பயன் என்று விளக்கி 230 பேரின் ஆதரவை ஏற்கனவே பெற்றுவிட்டேன். ரீச் இல்லாமல்! நீங்கள் என்னால் காயப்பட்டிருந்தால் உண்மையாக வருத்தங்கள். எவர் மீதும் புகார் இல்லை.வெறுப்போருக்கும் அன்பையே கொடுக்கிறேன். இனியாவது கூட இருப்பவரை கீழே தள்ளாமல் எதிரியோடு மோதுங்கள். அன்பான வேண்டுகோள். வளைந்து கொடுக்காமல், தன்மானத்தை இழக்காமல் சுயமரியாதையோடு செல்கிறேன்!காணொளிகள்... மன்னிக்கவும். எனக்கே எனக்காக One last time! என், என் காதல் மனைவி, மகன்(லியோ கக்காஷி), மகள்(டைனோசர்) சார்பாக லவ் யூ ணா TVK Vijay என்னை ஆதரித்த, dm-ல் அன்பு செலுத்திய எல்லோருக்கும் அன்பும் நன்றியும். உங்களை ஒருபோதும் வாழ்வில் மறக்க மாட்டேன். 11 வருடத்தில் எத்தனை எத்தனை நினைவுகள், மகிழ்வுகள் ❤️ என்னுடைய இறுதி கோரிக்கை : ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம், சாதிவெறி நீங்க சீரிய திட்டம், அதிகாரத்தில் அமைச்சரவையில் தலித்துகளுக்கு உரிய இடம் கொடுக்க குரல் கொடுங்கள். ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துங்கள். கைவிட்டுவிடாதீர்கள் ! பாபாசாகேப் நிழலில் இளைப்பாறுகிறேன். பெரியாரும், மேதகு பிரபாகரனும் நினைவில்! அண்ணனும் அண்ணலும் மனதில்! மனநிறைவோடு விடைபெறுகிறேன் நன்றி ! தவெக ❤️ ஜெய் பீம் 💙 Nanban 🌌

176,229 Aufrufe

இப்ப CSK RCB ரெண்டுமே தோத்துடுச்சு. ஆனா CSK வரலாறு 5 கப்னு இருக்கும். RCB வரலாறு எப்பவும் போல அதே முட்ட தான் ! #RCBvsRR

இப்ப CSK RCB ரெண்டுமே தோத்துடுச்சு. ஆனா CSK வரலாறு 5 கப்னு இருக்கும். RCB வரலாறு எப்பவும் போல அதே முட்ட தான் ! #RCBvsRR

227,650 Aufrufe

மதுரையில் அமித்ஷா பேசிய பேச்சிற்கு ஸ்டாலினும் பதில் சொல்லவில்லை. இப்போது உதயநிதியும். கூடுதலாக உதயநிதியின் முகத்தில் பயம் தெரிகிறது. வழக்குகளை காட்டி இருவரையும் பாஜக மிரட்டியுள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. திமுக சரண்டர் ஆகிவிட்டது.

மதுரையில் அமித்ஷா பேசிய பேச்சிற்கு ஸ்டாலினும் பதில் சொல்லவில்லை. இப்போது உதயநிதியும். கூடுதலாக உதயநிதியின் முகத்தில் பயம் தெரிகிறது. வழக்குகளை காட்டி இருவரையும் பாஜக மிரட்டியுள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. திமுக சரண்டர் ஆகிவிட்டது.

89,134 Aufrufe

எந்த மேடையை, எந்த பெண் பிள்ளைகளை, எந்த பெண் பிள்ளைகளை பெற்ற தகப்பன்களை வக்கிரமாக பேசினீர்களோ Velmurugan.T அவர்களே நாளை நடக்கும் விருது விழாவில் உங்களுக்கு தங்கள் கருத்துக்களால் சவுக்கடி கொடுப்பார்கள் !

எந்த மேடையை, எந்த பெண் பிள்ளைகளை, எந்த பெண் பிள்ளைகளை பெற்ற தகப்பன்களை வக்கிரமாக பேசினீர்களோ Velmurugan.T அவர்களே நாளை நடக்கும் விருது விழாவில் உங்களுக்கு தங்கள் கருத்துக்களால் சவுக்கடி கொடுப்பார்கள் !

31,790 Aufrufe

தமிழக வெற்றிக் கழக TVK Vijay பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் 🔴 வியாசர்பாடி முல்லை நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தஞ்சம் புகுந்தனர். இந்த விபத்தை கேள்விப்பட்ட நம் தவெக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவும் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த சில காவல்துறையினர் தவெக நிர்வாகிகளை தடுத்துள்ளனர். ஜனநாயக வழியில் இதை எதிர்த்து கேள்வி கேட்ட கங்காவதி(45) என்னும் பெண் தோழரை வயிற்றில் மிதித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னொரு தவெக பெண் தோழர் தமிழ்ச் செல்வியின் ஆடையை பிடித்து இழுத்துள்ளனர். என்ன தவறு செய்தார்கள் தவெக தோழர்கள்? பெண் என்று கூட பாராமல் எதற்காக இந்த காட்டுமிராண்டி செயல்? அவர்கள் எரிகிற வீட்டில் திருட வந்தார்களா? அல்லது காவலர்களின் பணத்தில் உணவுகளை விநியோகித்தார்களா? அல்லது இதை வைத்து அரசியல் செய்தார்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுப்பதை கூட தடுப்பீர்கள் என்றால் நீங்கள் மனிதர்கள் தானா? தாக்குதல் நடத்திய காவலரகளுக்கு கடும் கண்டனம். அராஜகங்களுக்கு அடுத்த வருடம் முடிவு கட்டப்படும் 🔴

தமிழக வெற்றிக் கழக TVK Vijay பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் 🔴 வியாசர்பாடி முல்லை நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தஞ்சம் புகுந்தனர். இந்த விபத்தை கேள்விப்பட்ட நம் தவெக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவும் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த சில காவல்துறையினர் தவெக நிர்வாகிகளை தடுத்துள்ளனர். ஜனநாயக வழியில் இதை எதிர்த்து கேள்வி கேட்ட கங்காவதி(45) என்னும் பெண் தோழரை வயிற்றில் மிதித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னொரு தவெக பெண் தோழர் தமிழ்ச் செல்வியின் ஆடையை பிடித்து இழுத்துள்ளனர். என்ன தவறு செய்தார்கள் தவெக தோழர்கள்? பெண் என்று கூட பாராமல் எதற்காக இந்த காட்டுமிராண்டி செயல்? அவர்கள் எரிகிற வீட்டில் திருட வந்தார்களா? அல்லது காவலர்களின் பணத்தில் உணவுகளை விநியோகித்தார்களா? அல்லது இதை வைத்து அரசியல் செய்தார்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுப்பதை கூட தடுப்பீர்கள் என்றால் நீங்கள் மனிதர்கள் தானா? தாக்குதல் நடத்திய காவலரகளுக்கு கடும் கண்டனம். அராஜகங்களுக்கு அடுத்த வருடம் முடிவு கட்டப்படும் 🔴

21,140 Aufrufe

Videos

YourNanban's profile picture

விடைபெறுகிறேன் ❤️ 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, மற்றும் உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் ணா TVK Vijay இந்த பதிவு கடின மனதோடு எல்லாம் எழுதவில்லை.இயல்பான சராசரி மனநிலையில் எழுதுகிறேன். அறிக்கையை விமர்சித்தேன். கண்ணியமாக! அண்ணன், ஸ்டாலின்,மோடி, டிரம்ப் என தலைவர்கள் யாரும் அறிக்கை எழுதுவதில்லை. படித்து ஒப்புதல் மட்டுமே கொடுப்பார்கள். தவறே இல்லை. இதுவே நடைமுறை. அதனாலே நான் நேரடியாக டீமை குறிப்பிட்டேன். இந்த புரிதல்? இது பற்றி நிறைய எழுதலாம் இதோடு நிறுத்துகிறேன். மாற்று கருத்தை மதிக்கும் பக்குவம் அண்ணனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும் என்றாவது வரும் என்று நம்புகிறேன். 11 வருடமாக திறக்கப்படாமல் இருந்த என் இதய புத்தகத்தின் ஒரு பக்கத்தை கட்டாயத்தின் பேரில் முதலும் கடைசியுமாக பகிர்ந்துவிட்டு நகர்கிறேன். நான் தலித்! ஒடுக்கப்பட்டவன்! இந்த 11 வருடத்தில் ஒரு முறை கூட நான் சொன்னதில்லை.நகரத்திலேயே பிறந்து வாழ்ந்தாலும் எனக்கும் புறக்கணிப்புகள், அவமானங்கள்,வலிகள் இருந்தும் ஒரு முறை கூட எழுதியது இல்லை.அனுதாபத்தை அறவே வெறுப்பதால்! டாக்டர் அனிதா தலித். எந்த நடிகரும், பல அரசியல்வாதிகளும் இறப்பிற்கு செல்லவில்லை.அண்ணன் சென்று தரையில் அமர்ந்தார்.ஒரு தலித்தாக நான் உருகினேன். நான் எப்படி அய்யா அண்ணனை விமர்சிக்க முடியும்? உங்களை விட நூறு மடங்கு அவரை நேசிக்கிறேன். அவர் உங்களுக்கு மனதோடு சம்பந்தப்பட்டவர். 21 வருட ரசிகன் என்பதை தாண்டி தலித்தாக அவர் எனக்கு உணர்வோடு சம்பந்தப்பட்டவர்! என்னை விட யார் அவருக்காக defend செய்து இங்கே பக்கம் பக்கமாக எழுதினீர்கள்? எதையும் யோசிக்காமல்,தெரியாமல் ஏன் தனிப்பட்ட தாக்குதல்.ஒவ்வொரு முறையும் நான் தீக்குளிக்க வேண்டுமா என்னை நிரூபிக்க? என் இறுதி அத்தியாயத்தை சாந்தமாக கடக்கிறேன். என்னால் இனி உங்களுக்கு சிரமம் இருக்காது. நன்றி: ஒரு தலித் அறிவோடு செயல்படுவதை பலர் விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் பெருவாரியாக இடைநிலை சாதிகளாக இருந்தும் என்னை ஆதரித்த பக்குவத்திற்கு கரம் பற்றி நன்றிகள். சொந்த சமூகம் பாதிக்கப்படும்போது சில நேரம் கண்டும் காணாமல் நான் துரோகம் செய்தேன்.பொதுவான ஒரு கட்சியை ஆதரிக்கும்போது அது ஒரு சார்பாக போய்விடக் கூடாது என்பதற்காக. ஆனாலும் தலித்துகளுக்காக நிறைய எழுதினேன்.ஆழமாக! இஸ்லாமியர்களுக்காக, பெண்களுக்காக, தொழிலாளர்களுக்காக, திருநர்களுக்காக,அரசியல்,பதிலடிகள், வரலாறு என நிறைய எழுதினேன். ஒன்னேகால் வருடமாக நேர்மையாக உழைத்தேன்.போட்டி பொறாமை இல்லாமல் திறமையானவர்களை ஆதரித்து கைகாட்டியிருக்கிறேன். என் கருத்தாக வைத்திருந்தால் எதுவும் சென்று சேர்ந்திருக்காது. அண்ணனின் பெயரும் புகைப்படமும் கருத்தோடு சேர்த்ததால் மட்டுமே அது சென்று சேர்ந்தது. அவர் இல்லை என்றால் நான் ஸிரோ. வாய்ப்பிற்கு நன்றி ணா! பணத்திற்காக, பதவிக்காக நான் எழுதவில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரீச் என்ற விமர்சனம். நூற்றுக்கணக்கான writeup. ரீச்சிற்காக என்றால் தெரிந்தே ஒரு மாற்று கருத்தை வைத்து விரும்பி தாக்குதலை எதிர்கொள்வார்களா? மாற்று கருத்து, என் இருப்பு இடைஞ்சலாக இருக்கும்பட்சத்தில் விடைபெறுகிறேன். கட்சியே பெரிது.தனி நபர் அல்ல. அண்ணனே முக்கியம். இதோடு என் பதிவை நிறுத்துகிறேன். என்னை நிரூபிக்க இதுவே ஒரே வழி.காலம் கடந்து என்னை புரிந்துகொள்வீர்கள். ஆப்லைனில் மகிழ்வாக பணி செய்வேன். என் சுற்றத்தாரிடம் அண்ணல் அம்பேத்கரை அண்ணன் TVK Vijay ஏற்றுகொண்டதை விளக்கி, இதனால் என்ன பயன் என்று விளக்கி 230 பேரின் ஆதரவை ஏற்கனவே பெற்றுவிட்டேன். ரீச் இல்லாமல்! நீங்கள் என்னால் காயப்பட்டிருந்தால் உண்மையாக வருத்தங்கள். எவர் மீதும் புகார் இல்லை.வெறுப்போருக்கும் அன்பையே கொடுக்கிறேன். இனியாவது கூட இருப்பவரை கீழே தள்ளாமல் எதிரியோடு மோதுங்கள். அன்பான வேண்டுகோள். வளைந்து கொடுக்காமல், தன்மானத்தை இழக்காமல் சுயமரியாதையோடு செல்கிறேன்!காணொளிகள்... மன்னிக்கவும். எனக்கே எனக்காக One last time! என், என் காதல் மனைவி, மகன்(லியோ கக்காஷி), மகள்(டைனோசர்) சார்பாக லவ் யூ ணா TVK Vijay என்னை ஆதரித்த, dm-ல் அன்பு செலுத்திய எல்லோருக்கும் அன்பும் நன்றியும். உங்களை ஒருபோதும் வாழ்வில் மறக்க மாட்டேன். 11 வருடத்தில் எத்தனை எத்தனை நினைவுகள், மகிழ்வுகள் ❤️ என்னுடைய இறுதி கோரிக்கை : ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம், சாதிவெறி நீங்க சீரிய திட்டம், அதிகாரத்தில் அமைச்சரவையில் தலித்துகளுக்கு உரிய இடம் கொடுக்க குரல் கொடுங்கள். ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துங்கள். கைவிட்டுவிடாதீர்கள் ! பாபாசாகேப் நிழலில் இளைப்பாறுகிறேன். பெரியாரும், மேதகு பிரபாகரனும் நினைவில்! அண்ணனும் அண்ணலும் மனதில்! மனநிறைவோடு விடைபெறுகிறேன் நன்றி ! தவெக ❤️ ஜெய் பீம் 💙 Nanban 🌌

Nanban

176,229 Aufrufe • vor 1 Jahr

அரசியலை அரசியலாக எதிர்கொள்ளாமல் அண்ணன் விஜய்யை TVK Vijay தனிப்பட்ட முறையிலும், நடிகர் என்னும் தொழிலை நொடிகர் என கொச்சைப்படுத்தி பேசியதற்கும் Milton கடும் கண்டனம் ! தவெக அரசியல் மீது விமர்சனம் இருந்தால் அதை கூறலாம் அதைவிட்டுவிட்டு ஆட்சி இருக்கிறது என்பதற்காக ஆணவத்தில் தனிப்பட்ட முறையில் வக்கிரமாக பேசுவது அதிகப்ரசங்கித்தனம். அதென்ன நொடிகர்? அப்போ நொடிகர்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி யார்? நடிப்பில் தோற்றுப்போன மு க முத்துவும், ஸ்டாலினும், உதயநிதியும் யார்? ஒருவர் செய்யும் தொழிலை அவமதிப்பதை விட கேவலமான செயல் உலகில் வேறு எதுவும் இல்லை. குரூர எண்ணம் கொண்ட வக்கிரவாதிகளால் தான் ஒருவர் தொழிலை இப்படி கொச்சைப்படுத்த முடியும். விசுவாசத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் உங்கள் பண்ணையார்த்தனத்தை காட்டிவருகிறீர்கள். உங்களை போல் எங்களுக்கு பேச தெரியாதா? திமிரை அடக்கி வையுங்கள் மில்டன். முதிர்ச்சி இல்லாத உங்கள் பேச்சு சகிக்கவில்லை !
1:11

Sensitive content

This media may contain sensitive content.

YourNanban's profile picture

அரசியலை அரசியலாக எதிர்கொள்ளாமல் அண்ணன் விஜய்யை TVK Vijay தனிப்பட்ட முறையிலும், நடிகர் என்னும் தொழிலை நொடிகர் என கொச்சைப்படுத்தி பேசியதற்கும் Milton கடும் கண்டனம் ! தவெக அரசியல் மீது விமர்சனம் இருந்தால் அதை கூறலாம் அதைவிட்டுவிட்டு ஆட்சி இருக்கிறது என்பதற்காக ஆணவத்தில் தனிப்பட்ட முறையில் வக்கிரமாக பேசுவது அதிகப்ரசங்கித்தனம். அதென்ன நொடிகர்? அப்போ நொடிகர்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி யார்? நடிப்பில் தோற்றுப்போன மு க முத்துவும், ஸ்டாலினும், உதயநிதியும் யார்? ஒருவர் செய்யும் தொழிலை அவமதிப்பதை விட கேவலமான செயல் உலகில் வேறு எதுவும் இல்லை. குரூர எண்ணம் கொண்ட வக்கிரவாதிகளால் தான் ஒருவர் தொழிலை இப்படி கொச்சைப்படுத்த முடியும். விசுவாசத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் உங்கள் பண்ணையார்த்தனத்தை காட்டிவருகிறீர்கள். உங்களை போல் எங்களுக்கு பேச தெரியாதா? திமிரை அடக்கி வையுங்கள் மில்டன். முதிர்ச்சி இல்லாத உங்கள் பேச்சு சகிக்கவில்லை !

Nanban

146,160 Aufrufe • vor 10 Monaten

YourNanban's profile picture

பிரஷாந்த் கிஷோர் 2011 = குஜராத் / மோடி வெற்றி 2014 = இந்தியா / மோடி வெற்றி 2015 = பீகார் / நிதிஷ் குமார் வெற்றி 2017 = உத்தர பிரதேஷ் / காங்கிரஸ் தோல்வி 2017 = பஞ்சாப் / ஆம் ஆத்மீ வெற்றி 2019 = ஆந்திரா / ஜெகன் மோகன் வெற்றி 2020 = டெல்லி / கெஜ்ரிவால் வெற்றி 2020 = பீகார் / நிதிஷ் குமார் வெற்றி 2021 = மேற்கு வங்கம் / மம்தா வெற்றி 2021 = தமிழ்நாடு / ஸ்டாலின் வெற்றி 2026 = தமிழ்நாடு / லோடிங்....... பிரஷாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட்ட 10 தேர்தல்களில் 9 தேர்தல்களில் அவர் ஆதரித்து வேலை செய்த கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு முறை மட்டும் தோல்வி. எனில் அவரின் வெற்றி விகிதாசாரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். பிரஷாந்த் கிஷோர் கட்சி தன் சொந்த மாநிலத்தில் இடைத்தேர்தலில் தோற்றது என்று கொக்கரிக்கிறார்கள். IAS பாஸ் ஆகாத ஆசிரியர்கள் தான், பாடம் எடுத்து பல மாணவர்களை IAS தேர்வில் வெற்றி பெற வைக்கிறார்கள். வெற்றி பெறாத ஒரு பயிற்சியாளர் தான் பயிற்சி கொடுத்து தன் அணியை வெற்றி பெற வைக்கிறார். யார் யார் வெற்றி பெற போகிறார்களோ அவர்களை தெரிந்துகொண்டு பிரஷாந்த் கிஷோர் அவர்களுக்கு பணியாற்றுகிறார் என்று அவரை எதிர்ப்போர் விமர்சிப்பதும் உண்டு. சொல்லப்போனால் அவர் மீது வைக்கும் முக்கியமான விமர்சனம். அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டால், அப்போ 2026 தமிழ்நாடு தேர்தலில் விஜய் வெற்றி பெற போகிறார் என்று தெரிந்து தான் தவெகவோடு வேலை செய்ய வந்திருக்கிறாரா? மகிழ்ச்சி. திறமை இல்லாதவர்கள் திறமை இருப்பவரை பார்த்து பொறாமைபடுவது இயல்பு. அவர்கள் திறமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரஷாந்த் கிஷோர் அவ்வளவு எளிதாக ஒரு கட்சியை ஆதரிக்க மாட்டார். கட்சியின் பலம், தேர்தல் களம் உணர்ந்தே ஆதரிப்பார். இப்போது தவெகவை ஆதரிக்கிறார். அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று உறுதி ஆகிறது. பிரச்சார யுக்தி, தோழர்களின் கள செயல்பாடுகள், தலைவரின் TVK Vijay சுற்றுப்பயணம், பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து 2026 தேர்தலில் தவெக தன் பலத்தை நிரூபிக்கும்.

Nanban

107,050 Aufrufe • vor 1 Jahr

YourNanban's profile picture

விஜய்யை TVK Vijay பாஜக தான் இயக்குகிறது என்று உளறி வரும் ஒட்டுமொத்த திமுக ஆதரவாளர்களுக்குமான S.M.Mathivadhani பதில் இது. பாஜக தான் விஜய்யை அரசியலுக்கு அழைத்து வந்து பாசிசம் பாயாசம் என்று பேச வைக்கிறது, பாசிசத்தை மழுங்கடிக்கிறது, எப்படி திமுகவும் பாஜகவும் ஒன்றாகும் என்று மதிவதனி கேட்கிறார். என்னுடைய பதில் இதோ, ED, IT என்று விஜய் பயந்திருந்தால் அவர் ஏன் தனியாக கட்சி ஆரம்பித்து, பெரியாரியம் அம்பேத்கரியம் என்று பேச வேண்டும்? பாஜக தான் அனுப்புகிறது என்றால் அவர்கள் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் மதவாதத்தையும், தேசியத்தையும், சாவர்க்கரையும், சனாதனத்தையும் வளர்த்தெடுக்க வேண்டுமென்பது தானே கொள்கையாக இருக்க முடியும்? அதற்கு நேர்மாறாக 1 கோடி தொண்டர்களை எதற்காக விஜய் பெரியாரியம் அம்பேத்கரியம் என்று முற்போக்காக இழுத்து செல்ல வேண்டும்? இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு கெடுதலாக தானே முடியும்? இந்தியாவையே ஆளும் பலமான கட்சியான பாஜகவில் இணைந்து மாநில தலைவராகி, திமுக புள்ளிகளை சிறையில் தள்ளி, அதிமுக தலைகளை மிரட்டி பாஜகவில் இணைத்துக்கொண்டு 10000 கோடிகளை அதானிகளிடம் வாங்கி 2026 தேர்தலை சந்தித்து திமுக போல் வாக்கிற்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாமே? விஜய்க்கு இது எளிது தானே? கெஜ்ரிவால், ஹேமந்த் போன்ற மாநில முதல்வர்களையே சிறையில் தள்ளிய பாஜகவிற்கு செந்தில் பாலாஜியும் ஸ்டாலினும் எம்மாத்திரம்? காட்டாட்டம் ஆடலாமே? விஜய் இதை செய்யவில்லை ! இல்லை திராவிட கொள்கை போர்வையில் திமுக வாக்குவங்கியை உடைப்பதற்காக விஜய்யை முற்போக்கு திசையில் இறக்கி விட்டிருக்கிறார்கள், பெரியாரியம் பேசினால் தான் இங்கே வாக்கு கிடைக்கும் என்கிறீர்களா? அதிமுக என்ன பெரியாரியம் பேசுகிறது? இப்போதைக்கு 20% வாக்குவங்கி வைத்திருக்கிறார்கள். பெரியாரியம் பேசாத பாஜக 11% பெரியாரியம் பேசாத நாதக 8% இவை மொத்தம் 39% விஜய் பெரியாரியம் பேசாமல் களமிறங்கினாலே 20% குறைந்தது வாங்குவார். ஏனென்றால் பெரியாருக்காக அண்ணல் அம்பேத்கருக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு யாரும் ரசிகர்களாக வரவில்லை, மன்றத்தில் சேரவில்லை, நற்பணிகள் செய்யவில்லை. விஜய் என்ற ஒற்றை மனிதருக்காக எல்லாம் செய்தார்கள். விஜய் கைகாட்டும் திசையில் எந்த தயக்கமும் இல்லாமல் பயணிப்பார்கள். விஜய் ஹிந்துத்துவா தான் என் கொள்கை என்று சொல்லியிருந்தாலும் இதே 1 கோடி உறுப்பினர்கள் சேர்ந்திருப்பார்கள். இதே ஆதரவு, பலம் இருந்திருக்கும். ஆனால் அவர் அதற்கு மாறாக பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு கோடி உறுப்பினர்களுக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் கொண்டு சேர்கிறார். இதுவே ஒரு சமூக புரட்சி. கருணாநிதி பேரன் உதயநிதியால் கூட முடியாதது இது. இதற்குமேலும் இல்லை என்று மறுத்தால் "இந்த 1 கோடி பேரும் காவி கட்டிக்கொண்டு, பராத்த்த்... மாத்தா கி என்று சொல்லிக்கொண்டு, மாட்டுக்கறி உண்ணாதே என்று அடித்துக்கொண்டு, இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு போ என்று விரட்டிக்கொண்டு, மதிவதினியே அடுப்பங்கரைக்கு ஓடு என்று முறுக்கிக்கொண்டு" இருக்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். துயரமாக இருக்கிறதா? ஆனால் விஜய் இதை செய்யவில்லை. மீண்டும் சொல்கிறேன் 1949க்கு பிறகு நடக்கும் சமூக புரட்சி இது. ஆனால் மூளை மழுங்கடிக்கப்பட்டு கொத்தடிமையாக மாறிவிட்டதால் உங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை. உங்களை போன்ற அடிமைகளுக்கு என்ன அறிவு இருக்க போகிறது? நான்கு புத்தகங்களை படித்துவிட்டு ஆரியம் திராவிடம் என்று உருட்டிக்கொண்டு இருக்க வேண்டியது. ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் சாதிய கொடுமைகளை கேட்பதில்லை. ஏனென்றால் சுயசாதி பற்றுடைய சாதிவெறியர்களாகிய நீங்கள் எப்படி கேட்பீர்கள்? எங்கே தலித்துகளுக்காக நின்றால் தங்கள் முதலாளியின் கட்சிக்கு சாதிய வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்று அச்சப்படும் மூடர்கள் தானே நீங்கள்? கருணாநிதி பாஜகவோடு கூட்டணி வைத்தார். விஜய் வைக்கவில்லை. கருணாநிதி எச் ராஜாவை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தார், விஜய் செய்யவில்லை. குஜராத்தில் கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்படும்போது கருணாநிதி பாஜக கூட்டணியில் இருந்தார், விஜய் இல்லை. கருணாநிதி - விஜய் இதில் யார் பாஜகவின் பங்காளி? கருணாநிதி போன்ற அரசியல் புரிதல் இல்லாத ஒருவரை வைத்துக்கொண்டு விஜய்யை கைநீட்ட கூச்சமாக இல்லையா? விஜய்யின் நேர்மையை சந்தேகிப்பது அயோக்கியத்தனம். பெண்ணாக இருப்பதால் பெரியாரியம் பேசுவதால் அறிவாக தான் இருக்க வேண்டுமென்பது இல்லை உங்களை போன்று கடைந்தெடுத்த தற்குறியாகவும் இருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் பெரியாரியத்திற்கு இழுக்கு ✍️

Nanban

77,027 Aufrufe • vor 1 Jahr

YourNanban's profile picture

பாஜக = சீட்டுகள் குறைந்து மோசமான வெற்றி திமுக = வெற்றி நாதக = 8% இது தான் என் கணிப்பு, அரசியல். இன்று மீண்டும் சொல்கிறேன்(SS எடுக்கணும்னா எடுத்துக்கோங்க) திமுக ஆட்சியை அடுத்த இரு சட்டமன்ற தேர்தலுக்குள் விஜய் வீட்டுக்கு அனுப்புவார். தவெக ஆட்சியை பிடிக்கும் அல்லது குறைந்தது 20% வாக்குகள் வாங்கும். அது 25% 28% கூட செல்லலாம். அதற்கான Strategy, திறன், தலைமை விஜய்கிட்ட இருக்கு. திமுக ஆதரவு யூடியூபர்ஸ், விலை போன ஊடகங்கள், ஆன்லைன் அபிமானிகள் எவ்வளவு அழுது புரண்டாலும் உங்க இளவரசர் உதயநிதி வீழ்ச்சிய யாராலும் தடுக்க முடியாது. இரு துருவ அரசியல் உடைத்தெறியப்படும். விஜய் இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும். தவெகவோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும். விஜய் 2026 தன் பலத்தை நிரூபிப்பார். 2031 கூட்டணியை ஒருங்கிணைப்பார். எல்லாமே கணக்கு. எந்த கூட்டணி கணக்கை போட்டு திமுக வெற்றிபெறுகிறதோ அதே கூட்டணி கணக்கு திமுகவை வீழ்த்தும். மிக எளிமையாக புரிய வேண்டுமென்றால் நிரூபிக்கப்பட்ட வாக்குவங்கி நாதக = 8% பாமக = 5% விசிக = 5%(இன்றைய தேதியில் தனித்து நின்றால் வாங்குவார்கள்) டிடிவி = 3% காங்கிரஸ் = 4%(2014 தனித்து நின்று வாங்கியது, இன்று வாங்கிய 10% திமுகவால்.. அதனால் 10% கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை) கம்யூனிஸ்ட்கள் = 1% மதிமுக = 1% மொத்தம் = 27% விஜய் = 20%(குறைந்தது) இரண்டையும் கூடினால் 20+27 = 47% இதில் எல்லோரும் வருவார்கள் என்று நம்ப நான் சங்கி இல்லை. திமுகக் கெஞ்சிக் கூத்தாடி சிலரை தக்கவைத்துக்கொள்ளும். மாற்றம் மற்றும் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் விஜய்யோடு வருவார்கள். வருவோரை வைத்துக்கொண்டு விஜய்யால் 30-35% மொத்தமாக வாங்க முடியும். இன்னொரு கணக்கு. இன்று வாக்குவங்கி சரிந்து தோல்வியில் துவளும் அதிமுக 20% வாங்கியிருக்கிறது. விஜய் 20%. மொத்தம் 40%. இந்த கூட்டணி அமைந்தால் திமுக படுதோல்வி அடையும். வெற்றிபெற்று அதிமுக ஆதரவோடு விஜய் முதல்வர் ஆகலாம். அல்லது 60 முதல் 80 எம்எல்ஏ பலத்தோடு விஜய் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக அமரலாம். சிறந்த உதாரணம் 2011 விஜயகாந்த், 2024 பவன் கல்யாண் ..... அப்பொழுது ஸ்டாலினும் உதயநிதியும் 20,30 எம்எல்ஏக்களோடு ஓரத்தில் இருப்பார்கள். விஜய் கையில் தான் இனி திமுக எதிர்காலம் இருக்கிறது. தனித்தோ கூட்டணியோ விஜய் முடிவெடுப்பார். திட்டம் போட்டு வெற்றி பெறுவார். அண்ணாவில் முடிந்த பெரியாரிய கொள்கை மீண்டும் மீட்டெடுக்கப்படும். கருணாநிதியால் தொடங்கிய மன்னர் முறை வீழ்த்தப்படும். அடுத்த 30-40 ஆண்டுகள் தமிழ்நாட்டு அரசியல் ஈர்ப்பு இல்லாத உதயநிதியை சுற்றி இருக்காது. விஜய்யை சுற்றி இருக்கும். Game on ✍️ #தமிழகவெற்றிக்கழகம்

Nanban

92,949 Aufrufe • vor 2 Jahren

YourNanban's profile picture

நீங்கள் Saravanan Annadurai பதிவிட்டது கருத்து அல்ல, களிமண் ! அண்ணன் விஜய் TVK Vijay படிக்க வேண்டாம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த டாஸ்மாக்கில் குடியுங்கள் என்று சொல்லவில்லை. நிறைய படிப்பு இருக்கிறது, நீட்டால் மனஅழுத்ததிற்கு ஆளாகாதீர்கள் என்றார் ! காரணம் நீட்டால் நிகழ்ந்த பல மாணவர்களின் தற்கொலை ! நாற்பதை கடந்த சரவணனுக்கே சிந்திக்கும் திறன் கிஞ்சித்தும் இல்லாதபோது 18 வயதில் மாணவர்களுக்கு என்ன புரிதல் இருந்துவிட முடியும்? நீட் தான் உலகம் என்று மூர்க்கமாக படிப்பார்கள். தோல்வி அடைந்தால் உயிரை மாய்ப்பார்கள். நீட் ரகசியம் சொல்கிறேன் என்று மாணவர்களை ஏமாற்றிய உதயநிதிகள் இரங்கல் தெரிவிப்பார்கள். அறிவுரை கூறுவார்கள். உயிர் போன பின்னே நீங்கள் கூறும் அறிவுரை மலத்திற்கு சமம் ! உங்கள் அறிவுரை போன உயிரை திரும்பக் கொண்டு வருமா? பிள்ளையை இழந்த தகப்பனின் தாயின் வலியை பற்றி யோசித்திருக்கிறீர்களா? கெட்டவை நடக்கும் முன்பே அறிவுரைக் கூறி, மாணவர்களை இயல்பான நிலைக்கு நகர்த்துவது தான் சரியான செயல்பாடு. அண்ணன் விஜய் அதை தான் செய்தார். "நீட்டில் தோற்றால் கொன்று விடுவேன்" என்று எந்த பெற்றோராவது தன் பிள்ளைகளிடம் கூறுவார்களா? அல்லது தன் பிள்ளையை அடித்து உதைப்பார்களா? அறிவிருக்கும் எந்த பெற்றோரும் "முயற்சி செய், நீட்டில் தோற்றால் வேறு படிப்பு இருக்கிறது, துவண்டு போகாதே" என்று தான் தன் பிள்ளைகளிடம் கூறுவார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு சொல்லும் அதே அறிவுரையை தான் அண்ணன் விஜய் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லிவிட்டார். மாணவர்கள் ஸ்டாலின் போன்ற ஒன்றுமே தெரியாத, திறனற்ற முதல்வரின் பேச்சை மதிப்பதில்லை ஆனால் தனக்கு பிடித்த நடிகர் சொன்னால் கேட்பார்கள், தங்கள் பெற்றோரிடம் அதை பகிர்வார்கள்! நீட் தேர்விற்கு கடுமையாக உழைப்போம், முயற்சி செய்வோம், வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் அண்ணன் விஜய் சொல்வது போல் வேறு படிப்பை தேர்ந்தெடுப்போம் என்று மாணவர்கள் தங்கள் நண்பர்களுக்குள் விவாதிப்பார்கள் ! இந்த நுணுக்கமான சமூகம் சார்ந்த பார்வை, புரிதல், மாணவர்கள் மீதான அக்கறை உங்களுக்கு இல்லை. ஏன் இல்லை? சிந்திக்கும் திறன் இல்லை ! உங்கள் பிள்ளைகள் விசயத்தில் "Force பண்ணாதீங்க, Pressure போடாதீங்க, Impose பண்ணாதீங்க, அவங்கவங்க துறைல நிச்சயம் சாதிச்சுக் காட்டுவாங்க" என்று அண்ணன் விஜய் கூறினார். மாணவர்கள் படிக்க வேண்டும் ! ஆனால் அது அவர்களுக்கு பிடித்த படிப்பாக, துறையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பெற்றோர்களுக்கும் அறிவுரைக் கூறினார் ! அண்ணன் விஜய்யின் இரண்டு நிமிட பேச்சு பல மாணவர்களின் உயிரை காப்பாற்றும். நீட்டிற்கு தயாராகும் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் "ரகசிய பித்தலாட்ட அரசியல் செய்யாமல், விஜய் உண்மையாக பேசுகிறார்" என்று அண்ணன் விஜய்க்கு அன்பு பாராட்டுவார்கள் ! இப்படி உதயநிதிக்கு கிடைக்காத அன்பு அண்ணன் விஜய்க்கு கிடைப்பது தான் உங்களுக்கு ஆத்திரம் என்றால் "மனது விட்டு அழுங்கள் சரவணா" ❤️

Nanban

51,123 Aufrufe • vor 1 Jahr