youturn's banner
youturn's profile picture

youturn

@youturn_in40,654 subscribers

Verified IFCN signatory 🌐 | Our website: https://t.co/NGfUziWQ0q 📰✨

Shorts

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று அண்ணாமலை சொன்ன பொய் தமிழ்நாட்டை விடவும்(100.70ரூ) பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம்(106.47ரூ), மகாராஷ்டிரா(103.44), பீகார்(105.18), ராஜஸ்தானில்(104.88ரூ) பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. டீசல் விலையில் தமிழ்நாடு(92.34ரூ), ஆந்திரா (96.17ரூ), கேரளா (96.13ரூ), தெலங்கானா (95.65ரூ) , சத்தீஸ்கர் (93.33ரூ) ஆக உள்ளது. Link :

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று அண்ணாமலை சொன்ன பொய் தமிழ்நாட்டை விடவும்(100.70ரூ) பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம்(106.47ரூ), மகாராஷ்டிரா(103.44), பீகார்(105.18), ராஜஸ்தானில்(104.88ரூ) பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. டீசல் விலையில் தமிழ்நாடு(92.34ரூ), ஆந்திரா (96.17ரூ), கேரளா (96.13ரூ), தெலங்கானா (95.65ரூ) , சத்தீஸ்கர் (93.33ரூ) ஆக உள்ளது. Link :

36,752 Aufrufe

அமலாக்கத்துறையால் பதியப்படும் வழக்குகளில் தண்டனை விகிதம் (Conviction rate) 95 சதவீதம் என்று எச்.ராஜா சொல்வது தவறான தகவலாகும். கடந்த ஐந்தாண்டுகளில் அமலாக்கத்துறையால் 911 வழங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 42 வழக்குகளில் மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறதுஅதாவது தண்டனை விகிதம் 6.42 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அமலாக்கத்துறையால் பதியப்படும் வழக்குகளில் தண்டனை விகிதம் (Conviction rate) 95 சதவீதம் என்று எச்.ராஜா சொல்வது தவறான தகவலாகும். கடந்த ஐந்தாண்டுகளில் அமலாக்கத்துறையால் 911 வழங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 42 வழக்குகளில் மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறதுஅதாவது தண்டனை விகிதம் 6.42 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

22,441 Aufrufe

Videos

youturn_in's profile picture

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 06.09.2021 அன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 10.05.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக அதற்கு அடிக்கல் நாட்டினார். 2024 நவம்பர் மாதம் அதன் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதனை விரைந்து முடிக்கச் சொல்லி உத்தரவிட்டார். இதனை அறியாமல், ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் கட்ட திமுக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று தவெக தலைவர் விஜய் பேசிய தகவல் தவறானது.

youturn

216,524 Aufrufe • vor 10 Monaten

youturn_in's profile picture

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மீது எவ்வித ஊழல் புகாரும் இருந்ததில்லை என்று Red Pix பெலிக்ஸ் சொல்வது அப்பட்டமான பொய். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம், போக்குவரத்து கழகத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்த வழக்கில் செங்கோட்டையன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 105000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு நீதிமன்றத்தால் செங்கோட்டையன் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் மறைத்து செங்கோட்டையன் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத உத்தமர் என்று பெலிக்ஸ் பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

youturn

49,919 Aufrufe • vor 8 Monaten

youturn_in's profile picture

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு இடத்தை 210 பவுண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்து, பெரியார் உருவப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்ததாக இந்தியா டூடே ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன் கூறியது தவறான தகவலாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் ஜிம் மாலின்சன் (Jim Mallinson, University of Oxford),மற்றும் பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி (Faisal Devji (St Antony's College) ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர் என்பதை, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. அதே போல் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது குறித்து, 'Asian Studies Centre' ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து யூடர்ன் தரப்பில் இருந்து செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியின் 'Asian Studies Centre'-ஐ தொடர்பு கொண்டதில், அவர்களும் இந்த செய்திகளை உறுதி செய்துள்ளனர். மேலும் பெரியார் படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் நமக்கு உறுதி செய்துள்ளனர். Proof :

youturn

50,956 Aufrufe • vor 11 Monaten

youturn_in's profile picture

சீமானின் இன்றைய பொய்! ஊடகவியலாளர் நிரஞ்சன் அவர்கள் எழுதிய ’இந்தியா வென்றது’ புத்தக வெளியீட்டு விழாவில், சபாநாயகர் அப்பாவுவிற்கு ஞானசேகரன் என்பவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடையவர் கிடையாது. அந்நபரின் பெயர் குறித்து அப்பாவு அந்த மேடையிலேயே பேசியுள்ளார். இந்த பெயரைக் கொண்டு சர்ச்சை எழக்கூடுமென அப்பாவு கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையிலேயே ஊடகவியலாளர் இந்திரகுமார் விளக்கம் அளித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னரே (ஜன.21) இது பொய் செய்தி என தெரிந்த நிலையில், சீமான் இதனை செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கிறார். Proof Link:

youturn

69,676 Aufrufe • vor 1 Jahr