அடிச்சாம் பாரு ஆப்பு! திமுகவின் அரசியலை தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும்... ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் நெருங்கித்தொட முடியாது. 20 ம் தேதி பாராளுமன்றம் கூடுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பாராளுமன்றத்தில் டீலிமிட்டேஷன் குறித்து கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவை தலைமையேற்று தோற்கடித்தது திமுக திமுக திமுக மட்டுமே! அது அமீத்ஷாவுக்கான ""பர்சனல்'' தோல்வி. இங்கே ஆதவ் அர்ஜுனா கொக்கரிப்பது போல என் தலைவர் 5 நிமிஷம் தான் பேசினார். கொளத்தூர்ல கொத்துபரோட்டா போட்டுட்டோம்,இந்த கதையெல்லாம் அமீத்ஷா காதில் விழுந்தா நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வான் அந்த ஆள். கொளத்தூரில் மற்றும் தமிழ்நாட்டின் திமுக கட்சியின் தோல்வி என்பது ஏப்ரல் மாதம் டெல்லியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதே எழுதப்பட்டுவிட்டது. அது திமுக தலைவருக்கும் தெரியும். டெல்லிக்கும் தெரியும். ஆதவ் அர்ஜுனா போன்ற தற்குறிகளுக்கும், இப்போது ஏதோ தற்குறியான் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாய் நினைத்து தாவிக்கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் குட்டி குட்டி குஞ்சுகுளுவான்களுக்கும் தான் தெரியாது. இப்போது பந்து முத்துவேல் கருணாநிதியின் காலின் கீழ் கிடக்கின்றது. கோல் போஸ்ட் அருகிலேயே இருக்கின்றது. கொஞ்சமா ஒரு எத்து எத்தினா கோல் ஆகும். ஒட்டு மொத்த இந்தியாவும் இதோ 20 ம் தேதி கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கொண்டுவரப்போகும் டீலிமிட்டேஷன் குறித்தும் திமுகவின் கையில் தான் அந்த மசோதாவின் வெற்றி தோல்வி கணக்கு வழக்கு இருக்கின்றது என்று திமுக என்ன சொல்லப்போகின்றது என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வாயை பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஒருவேளை டீலிமிட்டேஷன் கொண்டு வரப்பட்டால் வடமாநிலங்களில் இனி காங்கிரஸ் எம்.பி சீட்டுகள் பெறுவது சாத்தியமேயில்லை எனும் நிலை. காங்கிரஸ் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் வழித்து எறியப்படும். காங்கிரஸ் உயிரோடு இருக்க மு.க.ஸ்டாலின் தான் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும். இந்த கணக்கு வழக்கெல்லாம் ப்ரவீன் நக்குறவர்த்திக்கும், மாணிக்டுபாக்கூருக்கும் மயிரைக்கூட தெரியாது. ப்ரவீன் நக்குறவர்த்திக்கு தான் எம்.பி ஆக வேண்டும். மாணிக்டுபாக்கூருக்கு தான் த.நா காங்கிரசில் மாநில தலைவர் ஆகனும். அத்தனையே அஜண்ட்டா. அதை நிறைவேத்திகிட்டானுங்க. திமுகவை எதிர்த்து தற்குறியான்கிட்டே போறோமே அதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் என்னாகும் என்கிற கவலையோ அல்லது பப்பு பிரதமர் ஆக வேண்டும் என்கிற நினைப்போ மயிர்நுனி அளவுக்கு கூட கிடையாது. இப்போ திமுகவிடம் கெஞ்சிகிட்டு இருக்கானுங்க. பதிவின் தலைப்புக்கு இப்போ வரேன். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும், இந்தியாவின் தேசிய கட்சிகளும் திமுகவின் வாயையே பார்த்துக்கொண்டிருக்க திமுக சற்று முன்னர் அடித்த சிக்சர் தான் யாருமே...பாஜக உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காதது. கிடுக்கிப்பிடி என்பார்களே அதுதான் இது. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கலைஞர் பராசக்தியில் எழுதினாரே வசனம்.... தடாகத்தில் இருக்கும் மீன்கள் அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்துகின்றதே... அதாவது சுயநலம் கலந்த பொதுநலம்... அந்த பார்முலாவை திமுக கையிலெடுக்கும் என இந்தியாவில் எந்தக்கட்சியும் எதிர்பார்க்கவில்லை. கர்நாடகாவில் கட்டப்படும் மேகதாது அணைக்கட்டு குறித்தும், தீர்ப்பாயம் குறித்தும், ஜூன் 12 ல் திறக்க வேண்டிய நீர் குறுவை சாகுபடிக்கு 35 நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது குறித்தும் விவாதிக்க ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இன்றைக்கு சற்று நேரம் முன்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்து விட்டது. முதலில் இந்த ஒத்திவைப்புத்தீர்மானம் பின்னரே டீலிமிட்டேஷன் மசோதா என திமுக நோட்டீஸ் கொடுத்து விட்டது. சபாநாயகர் பாஜகவின் சபா அவர்கள் திமுகவின் இந்த கோரிக்கை நோட்டீசை புறந்தள்ளிவிட முடியாது. ஏனனில் திமுகவின் ஆதரவோ அல்லது அந்த மசோதா வாக்கெடுப்பின் போது வெளிநடப்போ இரண்டில் ஒன்ற பாஜக திமுலவிடம் கடுமையாக எதிர்பார்க்கின்றது. அதனால் திமுக கொண்டு வரும் இந்த மேகதாது அணை குறித்தான விவாத ஒத்திவைப்புத்தீர்மானத்தை அனுமதித்தே ஆக வேண்டிய சூழல். காங்கிரசும் தாங்கள் இந்தியாவில் கட்சி நடத்த வேண்டுமெனில் திமுகவின் காலைப்பிடித்தாவது டீலிமிட்டேஷன் மசோதாவை தோற்கடித்தே ஆக வேண்டிய நிலை. அதில் காங்கிரசுக்கு அடுத்த சிக்கல் மேகதாது அணை பிரச்சனை என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் குடகு மலையில் இருந்து தான் ஆரம்பம். திமுகவின் பேச்சை கேட்பதா, டி.சிவக்குமாரின் பேச்சை கேட்பதா என்னும் பெருங்குழப்பம். 22 எம்.பி வச்சுகிட்டி திமுக பார்லிமெண்ட் கேண்டீனில் வடை தான் சாப்பிட வேண்டும் என கேலி பேசினவன் எல்லாம் வரிசையில் வரவும். 1st Comment please 👇show more