#நேரலை

thirumaofficial's profile picture

#நேரலை என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் வணக்கம். 'வெல்லும் சனநாயகம் மாநாடு' தவிர்க்கமுடியாத காரணங்களால் சற்று ஒரு வார காலத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதாவது திசம்பர் 23 அன்று நடைபெறுவதாக இருந்த மாநாடு #திசம்பர்_29 அன்றைக்கு நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. அண்மையில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. மக்கள் இன்னும் அந்தப் பாதிப்புகளிலிருந்து மீளமுடியாமல் பெரிதும் அல்லலுற்று வருகின்றனர். தமிழ்நாடு் அரசு, நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாண்புமிகு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் தேவைப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாவட்டங்களில் நமது கட்சியின் மாநாட்டுப் பணிகளும் வெகுவாக தேக்கமடைந்துள்ளன. எனவே, ஒரு வார காலத்திற்கு மாநாட்டைத் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தோழர்கள் இதனை பொறுத்துக்கொள்வதுடன், மாநாட்டுப் பணிகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்துடன், மாவட்டச் செயலாளர்களுக்கு மாநாட்டுப் பணிகள், மக்கள் நலன்கள், வண்டிகளை நிறுத்தும் இடம், மற்றும் மேடை நிர்வாகம் போன்றவை குறித்த விளக்கங்களை அளிக்கும் கூட்டம் திசம்பர் 11 நடைபெறுவதற்குப் பதிலாக திசம்பர் 17 அன்று சென்னையில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தவறாமல் மாவட்ட , மண்டலப் பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும். மேலிடப் பொறுப்பாளர்கள், துணைப்பொதுச் செயலாளர்கள், தலைமைநிலைய செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களும் பங்கேற்க வேண்டும். நன்றி. இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக. #VCK #conference

Thol. Thirumavalavan

17,025 görüntüleme • 2 yıl önce

Daha fazla içerik yok.