#பாரதிராஜா

ஏனவர் இமயம்? பகுத்தறிவுவாதிக்குக் கருப்பு-சிவப்பு-வெள்ளைப் போர்வை.😃 மூடநம்பிக்கைக்காரனுக்குக் காவிச் சட்டை.😲 உடன் வாழும் மனிதனைக் காப்பாற்ற உதவாத பூசையையும் சாத்திரத்தையும் தூக்கி எறி, பூணூலைக் கழற்றி ஆற்றில் விடு எனக் காட்சியே வைத்ததெல்லாம் கலைத்துணிவின் உச்சம்! 🫡 #பாரதிராஜா
இ.பு.ஞானப்பிரகாசன் | E.Bhu.Gnaanapragaasan26,060 次观看 • 2 个月前

#பாரதிராஜா என்னும் இந்த மகத்தான கலைஞன் மரணம் எனக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் துயரத்தையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது. “என் இனிய தமிழ்மக்களே” என்னும் அந்த கிராமத்து குரலும் கூப்பிய கரங்களும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமானது. தமது படைப்புகள் மூலமாக தமிழ்நாட்டின் உணர்வுகளையும் பண்பாட்டையும் உலகுக்கு இலக்கியமாக்கியவர். “தேவர் என்பது நீங்க படித்து வாங்கிய பட்டமா”என்று சாதிய அமைப்பை கேள்வி கேட்டவர். தமிழீழத்தின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பெரும் வேட்கை கொண்டவர். தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த கரும்புலி முத்துக்குமார் நினைவை போற்றும் வகையில், திரைப்படங்களில் “கரும்புலிமுத்துக்குமாருக்கு சமர்ப்பணம்” என டைட்டில் கார்டுக்கு முன் போட வேண்டும் அறிவித்தவர். தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதற்கு மாற்றாக, தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றியவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இயக்குநர் இமயம் பாராதிராஜா குறித்து. இவை எல்லாவற்றையும் தாண்டி எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தையும் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களையும் நேசித்தவர். அத்தகைய பேரன்புக்கு சொந்தக்காரரான பாரதிராஜா என்னும் அந்த படைப்பாளிக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் 10.6.2026
வன்னி அரசு11,102 次观看 • 2 个月前







