#vedan

இன்னும் வீரியமாக வளரட்டும் உன் புரட்சிப் பாடல்கள்... #Vedan
ச.ஷாஜஹான் .திருச்சி67,111 views • 1 year ago

#WATCH | விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை ஒட்டி ஆகஸ்ட் 16ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் பிரபல கேரள ராப் பாடகர் வேடன். வேடனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு #SunNews | #Thirumavalavan | #Vedan | Thol. Thirumavalavan | வன்னி அரசு
Sun News53,386 views • 11 months ago

தலைவன் கொரனா வைரஸ் மாதிரி உலகம் பூரா பரவிகிட்ருக்கான் 😻💙 #Vedan #வேடன்
Pragash Nandhan ⭐53,063 views • 1 year ago

"பரையர்" எல்லாரும் கூடி இனி "சாம்பவன்" என்று தங்கள் பட்டத்தை சூட்டிக்கொண்டாலும் இத்தனை ஆண்டுகள் பரையர் மீது வீசப்பட்ட பழி நீங்கிவிடுமா? நன்மை தான் உண்டாகி விடுமா? முற்போக்கு பேசும் சூத்திர ஜாதிவெறியன்களை எதிர்த்து நாமும் பட்டத்தை சூட்டிக்கொண்டால் என்ன? 🤔 #வேடன் #Vedan 🧎🏽💙
Pragash Nandhan ⭐51,628 views • 1 year ago

வேடன் #Vedan 🏹 சமீபத்தில் இந்த பெயர் கேரளம், ஈழ மக்கள், தமிழ்நாடு என தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வேடன் ஒரு தலித், மலையாளி, ஈழ தாய்க்கு பிறந்த மகன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துக்கொண்டு வேடனை கொண்டாடி வருகிறார்கள். வேடனின் அம்மா ஈழ தமிழர், ஈழத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று பின் கேரளாவில் குடிபெயர்ந்து ஒரு மலையாளியை திருமணம் செய்கிறார். ஹிரன்தாஸ் முரளி பிறக்கிறார். காலனியில் வளர்கிறார். நிறத்தால், சாதியால் பல காயங்களை பெறுகிறார். அநீதியை கண்டு ஆத்திரம் கொள்கிறார். சாதி, மதம், இடதுசாரி, வலதுசாரி, அரசியல் என எல்லாவற்றையும் உள்வாங்கி "வேடனாக" தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டு Rapper ஆக உருவெடுக்கிறார். பாடல் இசையில், குரலில், வார்த்தைகளில் அநீதிக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது. சாதி, மதம், பிரிவினைக்கு எதிராக பாடுகிறார். மலையாளத்தில், தமிழில் பாடுகிறார். ஈழ போராட்டத்தை, பாலஸ்தீனத்தை ஆதரித்து பாடுகிறார். எங்கெங்கு யார் யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக பாடுகிறார். வலதுசாரிகளை கேள்வி கேட்டு பாடுகிறார். பொறுக்குமா சங்கிக் கூட்டத்திற்கு? வேடனுக்கு எதிராக புகார், பொய் பிரச்சாரம் என சங்பரிவார் கும்பல் கிளம்ப, வேடனுக்கு ஆதரவாக கேரள இளைஞர்களும், கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நிற்க, வேடனை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள் சங்கிகள் ! தன் தனிப்பட்ட வாழ்வின் சில தவறுகளை திருத்திக்கொண்டு, வேடன் மெருகேறி வருகிறார். கேரளத்தின் சமூக, அரசியலில் தவிர்க்க முடியாத குரலாக இனி வேடன் பார்க்கப்படுவார். கேரளத்தில் பாடகர் யேசுதாஸிற்கு கூடும் கூட்டத்தை விட வேடனுக்கு கூடும் கூட்டம் அதிகம் என்கிறார்கள், கூட்டம் அலைமோதுகிறது என சிலாகிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவன் பேசும்போதும், எழுதும்போதும், பாடும்போதும் அதில் எப்போதும் ஜீவன் இருக்கும் ! வேடன் கேரளத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக வேட்டையாடுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது ❤️
Nanban45,806 views • 1 year ago





