#vichithra

#BiggBossTamil7 வீட்டில் #Jovika "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு நிறைய பேரு🔥விடுகிறார்கள். #Vichithra சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கலாம்.. ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த தவறுமில்லை. “காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, காசு இருந்தா புடிங்கிடுவானுங்க. ஆனால் படிப்ப மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது சிதம்பரம், அதனால நல்லா படிங்க" என்று அசுரன் படத்தில் வரும் டயலாக் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்கும் தெரியும். Not every kid who choose to drop school is privileged enough to get the limelight as #Jovika. You knew the reasons. Education is the only weapon available to underprivileged kids to improve their lives in the society அதேபோல நீயா நானா கோபி அவர்களின் இந்த பேச்சை மட்டும் கேளுங்கள். படிப்பின் அருமை புரியும். படிப்பினால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கிறது என்று புரியும்! #BiggBossTamil #BiggBoss7Tamil
Surya Born To Win551,045 次观看 • 2 年前

#MustRead and Watch! #BiggBossTamil7-ல் நேற்று நடந்த #Vichithra Vs #Jovika உரையாடலைப் பற்றி நீயா நானா Gobinath Chandran பேசிய காணொளியோடு ஆரம்பித்து வைத்த விவாதம் நேற்றிரவு சமூக வலைதளத்தில் தீப்பிழம்பாய் பற்றி எரிந்தது. ஜோவிகாவிற்கு 🔥விட்ட பலர் அதன் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். 97% பேர் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்றும் வழக்கம் போல அந்த 3% மேல்தட்டு எலைட்டுகள் சமோசா விற்று பிழைத்துக் கொள்ளலாம்.. டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என உருட்டினர்.. நம் விவாதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக Delhi based writer cum Economic journalist Madhavan Narayanan அவர்கள் நேற்று எதேச்சையாக பதிவிட்ட அவரின் இந்த ட்விட்டர் பதிவு மிக முக்கியத்துவம் பெறுகிறது "2028ல் இந்தியாவின் பொருளாதாரம் #5Trillion dollar economyஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் தமிழ்நாடு மட்டும் #1Trillion dollar economyஐ தொடும் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் . இந்தியாவின் மக்கள்தொகையில் 6% மட்டுமே உள்ள தமிழ்நாடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%க்கு அருகில் இயங்குகிறது எனவும் இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகநீதியின் விளைவு என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். இது எப்படி சாத்தியமாயிற்று? 1920ம் ஆண்டு நீதிக்கட்சியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என இன்றைய முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் வரை தங்கள் ஆட்சியில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததுதான். புத்தகம் தர்றோம், படிக்க வாங்க மதிய சாப்பாடு தர்றோம் படிங்க வாங்க சத்துணவு தர்றோம் படிங்க வாங்க முட்டை தர்றோம் படிங்க வாங்க பால் தர்றோம், படிக்க வாங்க சைக்கிள் தர்றோம், படிக்க வாங்க யூனிபார்ம் தர்றோம், படிக்க வாங்க மாசம் ஆயிரம் ருபாய் தர்றோம், படிக்க வாங்க தற்போது காலை உணவும் தர்றோம் படிங்க.. என எப்டியாவது தமிழக குழந்தைகள் எல்லோரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டி அரசியல்கட்சிகள் மற்றும் தலைவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த கட்டமைப்பை உடைக்கத்தான் வடக்கிலிருந்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இங்கிருக்கும் சில புரோக்கர்களும் துணை செல்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி வெற்றி பெறுவோம். நம் குழந்தைகள் அனைவரும் முன்னேறி செல்வார்கள். கடேசியாக அந்தம்மா பேசியதை மட்டும் கேளுங்கள்..கல்வி, படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்வீர்கள்!
Surya Born To Win327,891 次观看 • 2 年前
没有更多内容可加载





