Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

2,000 போலீசை பாத்தவடா நான்.. பாட்டி Suspend ஆகும்வரை பகிரவும்

392,409 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)

10 Yorum

🔥Latha Nimo😜 லதா நிமோ😂 profil fotoğrafı
🔥Latha Nimo😜 லதா நிமோ😂1 yıl önce

Please don't do this. Vai sandai lam varathu than. Avan avanuku ninachu nadakalanu video eduthu poduvan. Ithula beep vera. Just don't spoil someone's life by spreading videos like this. Parthalae theriyuthu that this was just an argument and the person who took was pulling for fight

kryptonian profil fotoğrafı
kryptonian1 yıl önce

Adei nethuthan da kerala government hospital poyitu vanthen apdi iruku avanga support atleast counter la 1 aalu, pharmacy la 1 aalu nu 24 hours um irukanga

Karthik profil fotoğrafı
Karthik1 yıl önce

கிழவிக்கு திமிர பாத்தியா 🤨

🌾கவிகண்ணா🌾 profil fotoğrafı
🌾கவிகண்ணா🌾1 yıl önce

Haha

Srinivasan79602786 profil fotoğrafı
Srinivasan796027861 yıl önce

ஒரு கைப்பேசி இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம் என்றாகிவிட்டது இவன் பேசியே அவங்க செய்ற வேலையா கெடுக்கிரான்

P.A.Pragash 🍁🌿 profil fotoğrafı
P.A.Pragash 🍁🌿1 yıl önce

பாட்டிய முடிச்சுவிட்டீங்க 😂😂😂

SHÊ!K SPARRØW profil fotoğrafı
SHÊ!K SPARRØW1 yıl önce

@Subramanian_ma Take Action sir @tnpoliceoffl

Murali profil fotoğrafı
Murali1 yıl önce

இந்த வயதிலும்... உழைத்து சம்பாரித்து.... சாப்பிடுது அந்த அப்பத்தா... மீடியா என்ற பெயரில்.... ஏற்கனவே அருந்தத் தாலிய... அறுத்துவிட்டு போங்கடா.. கேட்ட..( சமூக ஆர்வலர்.). அந்தப் போர்வை!

Arun Selvan profil fotoğrafı
Arun Selvan1 yıl önce

தவறு இருந்தால் வீடியோவில் சொல்வது போல CM செல்லில் புகார் தரலாம். அதைவிடுத்து இதுபோல மருத்துவமனைகளில் தகராறு செய்தால் தூய்மைபணியாளர் என்ன செய்வார்?

Gowtham Ms profil fotoğrafı
Gowtham Ms1 yıl önce

Pesunavane paithiyam pola Vayasana paatikitta poi kettukittu irukkan Doctor vanthathukku appuram kekkuratha vittutu Ithavera paati suspend aguravaraikkum share vera pannanuma 🤦

Benzer Videolar

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே நான் எழுதிய பதிவு காலத்துக்கும் நிலைச்சு நிற்கக் கூடிய ஒரு பதிவு ❤️என்னைக்கு இந்த வீடியோ எப்போது பார்த்தாலும் எனக்கு கண் கலங்கும் ❤️ இதெல்லாம் பாதம் தாங்கிய பழனிசாமிக்கு புரிய வாய்ப்பே இல்லை... 5 வருஷத்துக்கு முன்னாடி எழுதிய பதிவு தான்... இன்னைக்கு படிச்சாலும் அந்த வீடியோ பார்த்தாலும் சிலுக்குது அதுதான் எங்க தலைவன் ❤️ .... அம்மா மரணித்த போது எனக்கு அழுகை வரவில்லை.. அவரை காசநோய் பீடித்திருந்தது... ஒரு பக்க நுரையீரலை அது கபளீகரம் செய்திருந்தது... அதனால் அவள் சொல்லொணாத் துயரம் அடைந்தாள்... மரணம் அவள் சமீபமாய் இருந்தது... ஒரு மாதம் இருமல் வலியோடு அதிகம் பேசினாள்... ஒருநாள் காலை ஏழு மணியளவில் மரித்துப்போனாள்... அவள் இறந்த போது எனக்கு அழுகை வரவே இல்லை.... வலியிலிருந்து விடுதலை அடைந்தார் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது... அம்மாவின் உடலை குழியில் கிடத்தி அவள் மேல் மண் விழுந்த போது தான் அழுகை பீறிட்டு வந்தது... அதற்கு முன் ஒரு சொட்டு அழுகை கூட எனக்கு வரவில்லை... அப்பா இறந்து போன அரை மணி நேரத்தில் பெரும் அழுகை வந்தது... அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் மறைமுகமான பாசம் முடிவுக்கு வந்த ஒரு கேவல் அதனுள் இருந்தது... சத்யம் தியேட்டரில் படம் பார்க்கும்போது உணர்ச்சி வேகத்தில் அழுகை வந்தால் அழுது விடுவேன் அதற்கு நான் வெட்கம் பார்ப்பதில்லை... இறந்த உடனே தனக்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்... இரவு முழுவதும் பெரும் பதட்டம்.... நண்பகல் வரை ரத்த அழுத்தம் தமிழகத்தில் அனைவருக்கும் ஏறிக்கொண்டிருந்தது... இடம் கொடுக்கவில்லை என்றால் தமிழகம் பெரும் கலவரத்தில் முடிந்திருக்கும்.... என் தலைவன் குளிக்கப் போய் 200 உயிர்களை பறித்தவன் அல்ல... அவன் சமூக நீதிக்காக கடைசிவரை போராடியவன்... அவனால் வாழ்வு பெற்றவர்கள் தமிழகத்தில் ஏராளம்... பரபரக்கும் நொடிகளோடு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... சொத்துக் குவிப்பு குற்றவாளி எல்லாம் அரியவகை ஏழையாக பிறந்த காரணத்தால்... அரசு மரியாதையோடு நல்லடக்கம் நடைபெற்ற போது... தலைவர் கலைஞர் இறந்தும் தனக்கான உரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாரே..??? என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தேன்... நண்பகலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஒரு பெரும் சலசலப்பு... தீர்ப்பு என்னவாக வந்திருக்கும் என்ற ஒரு பரபரப்பு அந்த நொடிகள் மிகக் கொடுமையானவை... பதிவின் கீழே இருக்கும் வீடியோ காட்சியை பார்த்த நான் வீட்டின் ஹாலில் வெடித்து அழுதேன்...அப்படி ஒரு அழுகை எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை? அப்போதுதான் தெரிந்தது அரியவகை ஏழையாக பிறக்காத காரணத்தால் திருட்டு ரயில் என்றும் தீய சக்தி என்றும் எள்ளி நகையாடிய கலைஞரை நான் எவ்வளவு நேசித்து இருக்கிறேன் என்று.... இந்த காட்சியை பார்க்கும் எந்த உடன்பிறப்பும் உடனே மறந்து விடமாட்டான்... முக்கியமாக இந்த வீடியோவில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தங்கை கனிமொழியை பார்த்தபிறகு மொத்தமாக உடைந்து அழும் அந்த காட்சியை எப்போது பார்த்தாலும் கயவர்களை மன்னிக்கவும் மறக்கவும் கூடாது என்று நினைவுகூற வைக்கும்... இந்த பதிவையும் இந்த வீடியோவையும் பார்க்கும் எவருக்கும் கண்ணீர் வெளிப்படும் ஏனென்றால் உடன் பிறப்புகள் அவ்விதம் தான் குறிப்பு... இது அரசியல் பதிவு அல்ல அனுபவப்பகிர்வு... இதுபோல் நீங்கள் யாருக்காவது கண்கலங்கிய பதிவு இருந்தால் அதை பின்னூட்டங்களில் பகிரவும் நன்றி வணக்கம் ஜாக்கி சேகர் #Kalaignar #Stalin #DMK #Jackiesekar #StalinIsMoreDangerous #KalaignarMemorial #kalaingar100 #kalaigarforever

Jackie Cinemas

73,349 görüntüleme • 5 ay önce

எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்! ​ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார். ​இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை! ​அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும். பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும். ​மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் , தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும், மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துக்கள் AIADMK #WomensDay

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

19,885 görüntüleme • 5 ay önce

டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன். "திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகளை, குடோனுக்கு எடுத்து செல்லாததால், புதிய கொள்முதல்களை வைக்க இடமில்லை" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனை சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டால், அதனை மறுத்த திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர், தாங்கள் வேகமாக, துரிதமாக செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுவதாகவும் கூறினார். ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு இருக்கும் Loadman, ஒரு நாளுக்கு வெறும் 800-900 மூட்டைகள் தான் எடை போடப்படுவதாக சொல்கிறார். திமுக அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது விவசாயத்திற்கு விரோதமான செயல். அஇஅதிமுக ஆட்சியில், ஒரு நாளுக்கு 1,000 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டன. இரவு பகலெனப் பாராமல் 100 நாட்கள் போராடி விளைவித்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது? செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை நான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்னார். ஆனால், கடந்த 18.08.2025 அன்றே மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இது கூடத் தெரியாமல், சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் திமுக அரசின் அமைச்சர். தான் போட்ட நகையை அடமானம் வைத்து விளைவித்த நெற்பயிரை 20 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து, தற்போது மழையில் நனைந்து முளைத்துப் போனதால் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீருடன் என்னிடம் பெண் விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது, கலங்கச் செய்தது. இது ஒரு கொடுமையான செயல். AIADMK ஆட்சியில் 2020-21 காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சியை, 2024-25 காலத்தில் 0.09% ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை. விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது. விவசாயிகளுடன் எப்போதும் துணை நிற்பது போல், இந்த கடினமான நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களோடு துணைநிற்கும்.

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

21,520 görüntüleme • 10 ay önce

அடிப்படைப் பொருளாதாரம் புரியாமல் எப்படியெல்லாம் நம்மை மூளைச்சலவை செய்கிறார்கள் பாருங்கள் (watch the video below). ஒரு பொருள் உற்பத்தியாகும் போது அதை வேறு எங்கேயோ இருக்கும் நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதே ஒரு விவசாயியின் நோக்கமாக இருக்க முடியும். பாட்டி மூன்று ரூபாய்க்கு விற்கும் சோளம் பெருநகரங்களில் 20 ரூபாய். அந்த 17 ரூபாய் லாபம் என்பது திருட்டு தானே என தங்கள் மூளையைப் பிழிந்து அதில் எஞ்சி நிற்கும் ஒரு அறிவான கருத்தை நமக்கு நீட்டுகிறார்கள் இந்த கம்யூனிஸ்ட் சினிமாக்காரர்கள். சரி, இவர்களிடம் பொருளாதாரம் கற்ற ஒரு விவசாயி அந்த 3 ரூபாய் சோளத்தை நானே விற்கிறேன் என அவர் அறுவடை செய்த கிராமத்தில் அவரே ஒரு கடையைப் போட்டு வியாபாரம் செய்தால் எத்தனை லட்சத்தை அள்ளிவிட முடியும்? இவர் விற்கும் 3 ரூபாய் சோளத்தை வாங்க பக்கத்து ஊரிலிருந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு யார் வருவார்? காருக்கு 300 ரூபாய் டீசல் போட்டு எந்த பக்கத்து நகரத்திலிருந்து யார் வருவார்? அந்தக் குக்கிராமத்தில் அவரின் 50 மூட்டைச் சோளத்தில் 5 மூட்டை வேண்டுமானால் அதிகபட்சம் அவரால் விற்க முடியும். மொத்தமும் நஷ்டமாகி விவசாயமே அழிந்துபோகும். நம்ம விவசாயி அந்த 3 ரூபாய் சோளத்தை 5 ரூபாய் என விலை வைத்து பக்கத்து ஊர் மொத்தக் கொள்முதல் வியாபாரிக்கு விற்கிறார் என்றால், 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்வு என்பது 66.6% லாபம். இவரிடமிருந்து மொத்தமாக மூட்டைகளை வாங்கிய ஒருவர் லாரி மூலம் சென்னைக்கு அதை ஏற்றுமதி செய்கிறார். குடவுன் வாடகை, தொழிலாளிகள் சம்பளம், ஓட்டுநர் சம்பளம், எரிபொருள் என இப்போது அந்த 5 ரூபாய் சோளத்தில் இவை எல்லாம் சேர்ந்து 10 ரூபாயாக மாறி நிற்கும். அதை offload செய்வதற்கான கூலி, அவர்களுக்கான லாபம் எல்லாம் சேர்த்து நம்ம சோளம் இப்போது 15 ரூபாய். பெருநகரங்களின் பல்வேறு hub மூலம் மூலை முடுக்கெல்லாம் அந்த சோளம் போகும். கடைசியில் சென்னைத் தள்ளுவண்டிக்காரர் அவருக்கு ஒரு லாபம் வைத்து, பணக்காரர்களுக்கு என கொஞ்சம் அதிகம் விலை வைத்து (ஒரு பொருள் எங்கு இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு அதன் விலை மாறும்; மார்க்ஸ் பேசிய Labour Theory of Value என்பதை நான் தவறு என நம் காணொளிகளில் காட்டியிருப்பேன்), நமக்கு 20 ரூபாய் என விற்பார். ஒரு மக்காச்சோளம் சாப்பிட நான் ஈரோட்டுக்கோ திண்டுக்கல்லுக்கோ செல்ல வேண்டியதில்லை. சென்னையில் என் வீட்டு வாசலில் வாங்கிக்கொள்ளலாம். இப்போது சோளம் நன்கு விற்பனையானால் இந்த cycle அப்படியே reverse-ல் நடக்கும். சோளத்திற்கான தேவை அதிகமானதால் அந்த தள்ளுவண்டிக்காரர் சென்னை hub-ல் அதிகம் வாங்குவார், அந்த முதன்மை hub-காரர்களுக்கு அதிக மூட்டைகள் தேவைப்படும், அவர்கள் அந்த மொத்தக் கொள்முதல் அண்ணாச்சியிடம் அதிக மூட்டைகளைக் கேட்பார்கள், அவர் அந்த விவசாயியிடம் அதிக சோளத்தைக் கேட்பார், அந்த விவசாயி அடுத்த ஆண்டு அதிகமாக சோளத்தை விவசாயம் செய்து அதிக மகசூலைப் பெறுவார். அதன் மூலம் தன்னந்தனியாக விற்றுக்கொண்டிருந்ததை விட 66.6% அதிக லாபத்தில் நிறைய மூட்டைகளை விற்க முடியும். இந்த cycle பெரியது. இதில் பயனடைவோர் லட்சக்கணக்கானோர். கம்யூனிஸ்ட்காரன் பேசும் சினிமா வசனங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் கோவணம் கூட மிஞ்சாது.

victoria smith

53,504 görüntüleme • 1 yıl önce

காயிதேமில்லத் நகரை இடிக்கமாட்டோம், ஆகவே அனகாபுத்தூர் போராட்டத்தில் இணையாதீர், வீடுகளை பாதுகாத்து தருகிறோமென ஒன்றாக போராடியவர்களை பிரித்தார்கள். மற்ற வீடுகளை இடித்தபின், நாளை காயிதேமில்லத் நகரை இடிக்கிறார்கள். 250+ இசுலாமிய வீடுகள் மசூதி இங்குள்ளன. இப்பகுதி வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக 2026ல் மாறலாம். அதிகாரிகளோ, காசாக்ராண்ட் கம்பெனியோ திமுகவிற்கு ஓட்டுபோட போவதில்லை. வீடியோவில் நீங்கள் காணும் முதியவர் ஜெயவேலு தன் வீட்டிற்கான பட்டா, வீடுகட்ட அரசு ஒப்புதல் உள்ளிட்ட ஆவணங்களையும், வீடு இடிக்கப்படக் கூடாது என்பதற்கான வழக்கை வெற்றிகரமாக நடத்தியவர். இவரைபோல ஆவணம் வைத்திருக்கும் 5 வீடுகளை இடிக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட வீட்டினை ஏன் இடிக்கிறீர்கள் என கேட்டால், 'இடித்தபின் முறையீடு செய்யுங்கள்' என்றார்கள் அதிகாரிகள். அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தும் வீடுஇடிப்பு நிற்கவில்லையெனில் அமைச்சர்களை விட அதிகாரிகள் உயர்வானவர்களா? அதிகாரிகள் ஆட்சி நடத்துகிறார்கள் எனில் சட்டமன்றம், அமைச்சரவை எதற்கு? 'நீதிமன்ற தீர்ப்பு' என ஆட்சியாளர்கள் சொல்வதன் உண்மை நிலையென்ன? திடீரென 'ஆக்கிரமிப்பு' என அரசிடமிருந்து அறிவிப்பு வந்தால், அன்றாடங்காய்ச்சி ஏழைகள் தமக்கு தெரிந்த வழக்கறிஞர், கட்சி பொறுப்பாளரிடம் தெரிவிப்பார்கள். வழக்கு நீதிமன்றம் வரும்பொழுது கள நிலவரத்தை அறியாத அரசு வழக்கறிஞர்கள் மக்களுக்கு எதிராக வழக்கு நடத்துவார்கள். அதிகாரிகள் உண்மைக்கு மாறான அல்லது பாதி உண்மையை தெரிவிக்கிறார்கள். இதை ஆய்வுசெய்து வழக்கு நடத்த வசதி-வாய்ப்போ மக்களுக்கில்லாததால் எதிரான தீர்ப்புகள் வரும். இதைவைத்து 'நீதிமன்ற உத்தரவுபடி' ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என அதிகாரிகள் படையோடு அராஜகமாக வீடுகளை இடிக்கிறார்கள். 'நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நான் என்ன செய்ய முடியும்?' என ஆளும்-எதிர்கட்சி கைவிரிக்கின்றன. நாளை இடிபட இருக்கும் காயிதேமில்லத் நகர் 'நீர்நிலை ஆக்கிரமிப்பு' என அறிவிக்கிறார்கள். ஆனால் அரசு சர்வேயின்படி அப்படியாக இல்லை. வழக்கறிஞர் இவ்விவரம் தெரியாமல், 50 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் எனவே நிவாரணம் கொடுங்கள் என கேட்கிறார். வரைபடத்தின்படி ஆக்கிரமிப்பா இல்லையா என நிரூபிக்காமலேயே , அதிகாரிகள் 'வேறுவீடுகள் தருகிறோம்' என இடிக்க நீதிமன்ற உத்தரவு பெறுகிறார்கள். அரசு வழக்கறிஞர் எதிர்ப்புமில்லாமல் தலையாட்ட, தீர்ப்பு மக்களுக்கு எதிராக வந்தது. தனியார்களுக்கு பட்டா, கட்டிடம் கட்ட அங்கீகரத்தை உடனே கொடுக்கும் அதிகாரிகள் ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமல் 20-30 ஆண்டு அலைய வைப்பார்கள். திறமையான மக்கள் சார்பான வழக்கறிஞர்கள் இல்லாததால் பல வழக்குகள் மக்களுக்கு எதிரான தீர்ப்பை பெற்றுள்ளன. 'ஆக்கிரமிப்புகள்' என நிரூபிக்காமலேயே அரைகுறை ஆவணங்களை கொண்டு அரசு வழக்கில் வெற்றிபெருகிறது. இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் வீடுகளை 'போலீசை கொண்டு இடிக்க முடியவில்லையெனில் ராணுவத்தை கொண்டாவது இடியுங்கள்' என தீர்ப்புகளெல்லாம் வந்துள்ளன. இதை வைத்து, 'நீதிமன்ற அவமதிப்பு வந்துவிடும்' என முரட்டுத்தனமாக அகற்றுவார்கள். ஊடகமும் 'ஆக்கிரமிப்பு அகற்றம்' என செய்தியாக்கும் அரசு கொடுத்த தரங்குறைந்த வீட்டிற்கு கட்டிட தொகையை, GST கட்டி ஏழைகள் வருமானமிழப்பார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடம் அருகே இல்லாததால் கல்வியை நிறுத்துவார்கள். அனகாபுத்தூரிலும், 'குடிசைபிரபுக்களாக(slum lords) சிலர் ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து லாபம் கொழிக்கிறார்கள் எனும் செய்தியை பத்திரிக்கையில் பார்த்தோம். எனவே இந்த குடிசைபிரபுக்களை அகற்ற உத்தரவிடுகிறோம் என நீதிமன்ற தீர்ப்பொன்று வந்தது. அனகாபுத்தூரில் அப்படியாக யார் slum-lord என ஊடகம், பெயரை குறிப்பிடவில்லை. உண்மையில் அப்படியாரும் அங்கே இல்லை. ஆனால் ஆங்கில ஊடகம் பொய் செய்தி வெளியிட்டது. இது உண்மையெனில் நீதிமன்றத்தில் குற்றவாளி யாரென அதிகாரிகள் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படியாக சொல்லவில்லை. பத்திரிக்கையில் காசாக்ராண்ட் விளம்பரங்கள் வந்துள்ளன. எனில் Slum Lords செய்தி எப்படி உண்மையாக இருக்கமுடியும்? இவை எதற்காக? காசாக்ராண்ட் போன்றோரின் ப்ராஜெக்ட்டுகள் வெற்றிபெற, ஆற்றோர பூங்கா-சுத்திகரிப்பு-நடைபாதை அமைக்கும் கான்ராக்ட் சம்பாத்தியத்திற்காக. இந்த நுணுக்கங்களை புரிந்துகொள்ள நாம்-தமிழர் கட்சியிடம் ஆட்கள் கிடையாது. எனவே விளக்கி புரியவைக்க முயன்றதையும் புரிந்துகொள்ளாத 'பிசிறுகள்' நிறைய அங்கேயுள்ளன. அக்கட்சி மாநில நிர்வாகிகள் உண்மையிலேயே க்ரீஸ்டப்பாக்கள் என்பதை புரியமுடிந்தது. இந்த அநீதி அனகாபுத்தூரோடு நிற்காது. 'திராவிடம்' ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தியல். திமுக ஆட்சியாளர்கள் நினைப்பதுபோல அதிகார வர்க்க ஆதிக்க கருத்தியல் அல்ல. அந்த கருத்தியலை காக்க மக்களோடு நிற்போம், மக்களுக்காக போராடுவோம்.

thirumurugan gandhi

26,155 görüntüleme • 1 yıl önce

🇱🇧 Israeli aircraft sprayed chemical substances over areas along the Blue Line across southern Lebanon on February 1, which Lebanon’s Ministries of Agriculture and Environment confirmed included the herbicide glyphosate at concentrations 20 to 30 times higher than normal levels. The ministries said the spraying constitutes a hostile act and a grave violation of Lebanese sovereignty, warning of severe damage to vegetation, soil fertility, agricultural production, water sources, and long-term public health. They held Israel fully responsible for the resulting environmental, agricultural, and health harm, and announced expanded field surveys and precautionary measures for residents and farmers. Glyphosate is commonly used in military vegetation-clearing operations along borders to kill crops, grass, and ground cover, strip concealment, create exposed buffer zones, damage agricultural livelihoods, and discourage civilian presence and return. Lebanese authorities warned that its use in this context threatens food security and long-term environmental stability. The chemical has been classified as “probably carcinogenic to humans” by the International Agency for Research on Cancer, a UN-affiliated body, raising additional concerns over health risks from high-concentration aerial spraying. UNIFIL said it was informed in advance by the Israeli military that a so-called “non-toxic” chemical would be dropped near the Blue Line, forcing peacekeepers to suspend operations for more than nine hours across roughly one third of their area of responsibility. UNIFIL called the action unacceptable and a violation of UN Security Council Resolution 1701. Lebanese President Joseph Aoun condemned the spraying as an environmental and health crime and ordered diplomatic and legal action. Lebanon has documented more than 2,000 Israeli ceasefire breaches in the final three months of 2025, as Israel continues to occupy Lebanese territory and block reconstruction in border villages. 🎥 Video from GreenSoutherners

Drop Site

61,937 görüntüleme • 7 ay önce