正在加载视频...

视频加载失败

Free coaching class அரசு வேலை பெற இலவசமாக பயிற்சி பெரும் முறை.

16,415 次观看 • 1 年前 •via X (Twitter)

0 条评论

暂无评论

原始帖子的评论将显示在这里

相关视频

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்; சு.வெங்கடேசன் எம்.பி ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு இளைஞர்கள் வாய்ப்புகளை பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அது தொடர்பான பல பிரச்சினைகளையும் எழுப்பி வந்துள்ளேன். தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு தர மறுப்பது, தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களை வெகு தூரத்தில் தேர்வுகளுக்கு துரத்துவது, இந்தி மொழியை தேர்வு முறைமையில் திணிப்பது, இட ஒதுக்கீடு அமலாவதில் அநீதி இழைக்கப்படுவது என தொடர்ந்து நான் எழுப்பிய பிரச்சினைகளில் தீர்வுகளையும் காண முடிந்தது. ஆனாலும் ஒன்றிய அரசு எல்லாவற்றையும் மையப்படுத்துவது என்ற பெயரில் மாநில உரிமைகள், தமிழ்நாடு இளைஞர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதை விடவில்லை. முந்தைய காலங்களில் மண்டல வாரியான பணி நியமன தேர்வுகள் இருந்தன. அப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு இளைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பை பெற்றனர். அதனால் தமிழ்நாட்டு மக்களும் பயன் பெற்றனர். தாய் மொழி அறிந்தவர்கள் அதிகமாக உள்ள அலுவலக சூழல், எளிய மக்கள் சேவை பெற உகந்த இடங்களாக அரசு அலுவலகங்களை வைத்திருந்தது. இப்போதோ ஒரு தேசம், ஒரு தேர்வு என்ற முறையில் ஒன்றிய அரசின் பணிகளுக்கு தேசம் முழுமைக்குமான தேர்வு முறைமையை அமலாக்குகிறது. “பணி நியமனத் தேர்வு பயிற்சி" பெரும் தொழிலாக மாறி விட்டது. "நீட்" மோசடியில் எவ்வாறு தேர்வுகள் நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டன என்பதை நாடு தற்போது அறிந்துள்ளது. முறை சார்ந்த கல்வியைக் கூட ஒதுக்கி விட்டு பயிற்சி மையங்களை நோக்கி மாணவர்கள், இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அலுவலகங்களில் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறுவதும் குறைந்து விட்டது. ஆகவே மீண்டும் மண்டல அளவிலான தேர்வுகளை நான் வலியுறுத்தி வருகிறேன். இந்த நிலையில் இரண்டு தேர்வுகளுக்கு மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஒன்று Combined Graduate level தேர்வு. எதிர்வரும் ஜூலை 24 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி. இன்னும் 7 நாட்கள்தான் உள்ளன. வருமானவரி, கலால், கணக்காயர் போன்ற துறைகளில் பணி நியமனங்கள் பெற முடியும். இன்னொன்று Multi Tasking staff. இதற்கு + 2 கல்வித் தகுதி போதுமானது. எதிர்வரும் ஜூலை 31 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி. இன்னும் 14 நாட்கள்தான் உள்ளன. ஒரு பக்கம் மண்டல மட்ட தேர்வுகள் என்று நாம் கோரிக்கை வைத்தாலும், இன்னொரு பக்கம் அகில இந்திய மட்ட தேர்வுகளில் நாம் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருக்க கூடாது. ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிப்பது மிக குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே என்னுடைய வேண்டுகோள்! அன்பிற்குரிய தமிழ்நாட்டு இளைஞர்களே நீங்கள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள். தரமான நிலையான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள காலம். அரசு வேலைகள் பணிப் பாதுகாப்புடன் கூடியது. மக்களுக்கும் சேவை புரியும் வாய்ப்புடையது. ஆகவே உடனே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பியுங்கள். வெல்லுங்கள். உங்களால் தமிழ்நாடு அலுவலகங்கள் மக்களின் நண்பர்களாக மாற முன் வாருங்கள். வாழ்த்துகள். #Exam #TAMILNADU #Youth #Employment

Su Venkatesan MP

58,696 次观看 • 2 年前

ஆதி திராவிட & பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும்! தொழில்முனைவோர்களாக, வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி கற்க, குடியிருப்புகள் மேம்பட, நிலவுரிமை பெற எனப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளோம்! இவற்றால் ஏற்பட்டுள்ள விளைச்சலின் முழுத் தாக்கம் வெளிப்படும்போது வியப்பு மேலிடும்! ஒரு தலைமுறையையே மாற்றிக்காட்டியுள்ளது நமது #DravidianModel அரசு! சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம் எனும் எங்களது உறுதிப்பாட்டை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ளும் நாளாக, இன்றைய நாள் அமைந்ததில் மகிழ்ச்சி! #JaiBhim! 💙

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

26,672 次观看 • 8 个月前

தமிழக அரசு நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு எழுதிய 2,36,000 பேரில் 85,000 பேர் மற்ற அனைத்து பாடத்தேர்வையும் நன்றாக எழு​தி, தமிழ் தகு​தித்​தாளில் தேர்ச்சி பெறாத​தால் வெற்றி வாய்ப்​பை இழந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு விடியா திமுக அரசு சொல்லும் காரணம்.... கட்டாயத் தமிழ் மொழி தகு​தித்​தாள் தேர்​வில் 30 கேள்வி​களுக்கு 50 மதிப்​பெண் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீத மதிப்​பெண் அதாவது 50-க்கு 20 மதிப்​பெண் பெற்​றால் மட்​டுமே தேர்​வர்​களின் பாட விடைத்​தாள் மதிப்​பீடு செய்​யப்​படும் என்று சொல்லியுள்ளது. மாண்புமிகு.அம்மா, எடப்பாடியார் ஆட்சிகாலத்தில் 2016 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசுப் பணிகளில் சேருவதற்கு தமிழ் மொழித் தகுதி கட்டாயமாக்கப்பட்டது. ஆனால்... தமிழ் தெரியாதவர்கள், பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டது. விடியா திமுக அரசோ...தேர்வு எழுதும் போதே தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இளைஞர்கள், இளம்பெண்களின் அரசு வேலை வாய்ப்பு கனவினை சிதைத்துவிட்டது. ஆகவே தமிழ் மொழி தகுதியைப் பொறுத்தவரை, அரசுப் பணிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலையே தொடர வேண்டும்.

Dr.VPB.Paramasivam @official

27,011 次观看 • 8 个月前

தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது. மகளை இழந்து வாடும் தாயாருக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மழை வந்தால் ஒழுகுவதும், காற்றடித்தால் உடைந்து பறப்பதும், வேகத்தடை மீது ஏறி இறங்கினால் படிக்கட்டுகள் கழன்று விழுவதும் தான் திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளின் அவல நிலை என்பதையும், இத்தகைய பேருந்துகள் பொது மக்களுக்கு பெரும் ஆபத்தானவை என்பதையும் நாம் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். இப்படிப்பட்ட ஓட்டை உடைசல் பேருந்துகளை ஓட்டுநர்களால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஆளும் அரசு மக்கள் பாதுகாப்பைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இன்று ஒரு பிஞ்சு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது. ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் தனது மகளைப் பறிகொடுத்து வாடும் அந்த அன்னையின் இழப்பை ஈடு கட்ட முடியுமா? எனவே, இந்தக் கோர விபத்திற்கு திறனற்ற திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஓட்டுநரின் மீது பழியைப் போட்டு மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஏழை மக்களின் உயிரை துச்சமென நினைக்கும் அறிவாலயத்தின் ஆணவத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்!

Nainar Nagenthran

24,225 次观看 • 1 年前

#தமிழ்நாடு அரசு பணிகளில் 50% -60% தெலுங்கு உட்பட பிறமொழியாளர்களே ஆக்கரமித்துள்ளனர். #யார்_தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்..! 1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் #கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை. அவ்வாறே #ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், #கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது. இதே நிலைபோல் #தமிழகத்திலும் தமிழ்ச்சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம் " 1972 - இல் கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது. #சட்டநாதன்_ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து பட்டியல்களிலும், தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான #சின்னமேளம் (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார். தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். #இடத்தை_பறிகொடுத்த_தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள். ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க. " சட்டநாதன் ஆணையத்தை" தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும். #தமிழினத்துரோகி_கருணாநிதி

மன்னர் மன்னன் Fanclub

59,262 次观看 • 11 个月前

தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் செய்யும் ஏதாவது சில எதிர்மறை செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி விடுகின்றன ஆனால் மாணவர்கள்,ஆசிரியர்களின் நேர்மறையான செயல்பாடுகள் மக்களிடம் சென்றடைவதே இல்லை.. நான் செய்யும் நற்செயல்பாடுகள் சிலவற்றை பொது தளங்களில் பதிவு செய்தால் எங்கள் ஆசிரியர்களே இவர் விளம்பர பிரியர் என்று நமக்கு பட்டம் கட்டி விடுவார்கள். நிற்க... நாளை தமிழ்நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு NMMS தேர்வு (தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை" (National Means-cum-Merit Scholarship) நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 (வருடம் ரூ.12,000) அரசால் வழங்கப்படும். இந்த தேர்வில் தங்களுடைய பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களை வெற்றி பெற வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய கடின உழைப்பினை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கருத்தாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் இணைய வழியாகவும் நேரடியாகவும் வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வினாதாள்கள் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காகவே ஒவ்வொரு நடுநிலை,உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரு பிரிண்டர் அரசால் தரப்பட்டுள்ளது. இதில் எளிதாக பத்து நிமிடங்களில் மாணவர்களுக்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் OMR ஷீட்டுகள் பிரிண்ட் அவுட் எடுக்கப்படுகின்றன. தேர்வு நடத்தப்பட்டு அன்று மாலையே விடைத்தாள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி போட்டி தேர்வுகளை எப்படி அணுகுவது என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை எட்டாம் வகுப்பிலேயே சிறப்பாக பெற்று விடுகின்றனர்.OMR ஷீட் கையாள்வது ,வினாக்களை விரைவாக புரிந்து கொண்டு அதற்கான பதிலை தருவது, சிக்கலான புதிர்களை தீர்ப்பது, நேர மேலாண்மை போன்ற சிறப்பான திறன்களை எளிதில் பெற்று விடுகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் சிறப்பாக இணைய வசதியுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இணைய வகுப்புகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்டத்தில் ஆர்வமாக உள்ள 1500 மாணவர்களை ஒருங்கிணைத்து மாநில கருத்தாளர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.(இந்த காணொலியில் கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலுடன் நான் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த மூன்று நாள் பயிற்சி).. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் இந்த சிறப்பான வழிகாட்டுதலால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டில் படித்த பள்ளி மாணவர்களே அரசு ஊழியராக,அதிகாரிகளாக இருப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மாணவர்களை தேர்வில் வெற்றி பெற வைக்க அயராத உழைக்கும் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட, மாநில கருத்தாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். குறிப்பு: அரசு, மாணவர்களுக்கு தரும் விலையில்லா பொருட்களையும்,சிறப்பான திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைகின்றார்கள். அதை எட்டி உதைப்பவர்கள் அவர்களுக்கான இடத்தை பெறுகின்றார்கள்.. #கல்வி_சிறந்த_தமிழ்நாடு M.K.Stalin Udhay Dr. Anbil Mahesh

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..

25,503 次观看 • 7 个月前