Loading video...

Video Failed to Load

Go Home

இறைவனின் படைப்பில்

147,630 views • 1 year ago •via X (Twitter)

5 Comments

Bala's profile picture
Bala1 year ago

இனிய காலை வணக்கம்

Rajini's profile picture
Rajini1 year ago

Good morning bro

Solar Heavy's profile picture
Solar Heavy1 year ago

- All I Knew

Arokiyaraj Raja's profile picture
Arokiyaraj Raja1 year ago

😚😚😚😚

Shiv V's profile picture
Shiv V1 year ago

Awwwww

Related Videos

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ள இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களை இன்று (05-03-2025) சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன். தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தன் இசையால் நீக்கமற நிறைந்திருக்கும் இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்கள், மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கும் இனிய திருநாளாகும். இவ்வரலாற்றுப் பெருநிகழ்வு சிறப்புற நடந்தேற என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்! உலக அரங்கில் தமிழ்ப்பேரினத்திற்குப் பெருமை சேர்க்கவிருக்கும் இசை இறைவனின் இசைத் திருவிழாவில் உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்று இசையருள் பெறுக என வாழ்த்துகிறேன். Ilaiyaraaja

செந்தமிழன் சீமான்

230,564 views • 1 year ago

கமல்ஹாசனும் இளையராஜாவும் விழிப்புலன் அற்ற சிறுவர் இல்லத்தின் மரத்தடியில் அழுத நிகழ்வை முன்னர் பகிர்ந்திருந்தேன். இப்போது அபூர்வ சிங்கீதத்திலும் சொன்னார்கள். அதை விட முக்கியமாக 2015 இல் சென்னைப் பெருவெள்ளத்தில் அந்தப் பள்ளி சிக்கிய போது இசைஞானி தேடிச் சென்று ஆதரவு கொடுத்தது ❤️❤️❤️ மேன் மக்கள் மேன் மக்களே ❤️❤️❤️ நானும் இளையராஜாவும் கட்டிப்பிடித்து அழுதோம் ❤️ ஜெமினியில் உள்ள சிறுமலர் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர், வாய் பேச முடியாதோர் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2018 இல் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரை வழி நெடுகிலும் குழந்தைகள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் மேடையில் பேசும்போது கண்கலங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''இங்கே நான் வாழ்த்த வந்தேன் என்பதை விட வாழ்த்து பெற வந்தேன். நான் சினிமாவில் பாடி உங்களுக்கு உத்வேகமூட்டிய அந்தப் பாடல் இன்று எனக்கே தெம்பூட்டுவதுபோல் தோன்றியது. நான் செல்ல வேண்டிய பாதையில் இன்னும் வேகமாக பீடுநடை போட்டுச் செல்ல குழந்தைகள் வாழ்த்தியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. 37 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் இதேபோன்ற மாணவர்களுடன் 'ராஜபார்வை' படத்திற்காக நானும், இளையராஜாவும் வந்தோம். அப்போது உள்ளே போகும்போது பலரும் பாட ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்து என்னாலும், இளையராஜாவாலும் அழுகையை அடக்க முடியவில்லை. தனியாக இருவரும் வெளியே வந்து ஒரு மரத்தின் மறைவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழுதோம்'' என்று கமல் பேசினார். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இந்தச் செய்தியைக் கடந்த நவம்பர் 14, 2018 தமிழ் இந்து செய்தித் தளத்தில் படிக்கும் போதே பாதியில் கண்கள் பூத்தன. சினிமா என்றாலும் கூட உணர்வினைச் சீண்டிப் பார்க்கும் காட்சியமைப்பு வந்தால் இடம் பாராமல் கண்ணில் நீர் சொரிந்து விடும் எனக்கு. அப்படித்தான் “ராஜ பார்வை” படத்தில் விழிப்புலனற்ற சிறுவர்களோடு கலந்து பேசி விட்டு கமல் (ரகு என்ற பாத்திரம்) திரும்பும் போது “ரகு அண்ணா.. ரகு அண்ணா கிட்ட வாங்கண்ணா” என்று பேபி பேபி சாரதா ப்ரீத்தா கூப்பிட்டு அவர் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பாளே அந்த நேரம் என் விழி நீர் சொரிந்ததை நினைவுபடுத்தியது கமலின் மேற்கண்ட பேச்சு. அந்தக் காட்சியோடு தொடர்ந்து ஒரு பாடல் ஒலிக்கும். படத்தின் காட்சிக்காகவே மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட பாட்டு அது. இசைஞானி இளையராஜா சினிமா எனும் ஊடகத்தில் எவ்வளவு அணுக்கமாக, ஆத்மார்த்தமாக இயங்கியிருக்கிறார் என்பதற்கு இந்தப் பாடலும் ஆகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று. எமது வாழ்வியலோடு பாடல்களைப் பொருத்தி அனுபவிக்க முடியும் என்றால் அதற்கு இம்மாதிரியான உணர்வு பூர்வமான பந்தம் ஒரு படைப்பில் பிணைக்கப்பட்டு கருவிலேயே உருவாகியிருக்க வேண்டும்: கமலும் ராஜாவும் தம்முடைய படத்துக்காக அந்தக் களம் தேடிக் கண்டு உருகியதைப் பின் காட்சியிலும், இசையிலும் அப்படியே கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். 2015 இல் சென்னை வெள்ளத்தில் இந்தப் பள்ளி சிக்கிய போது இளையராஜா நேரில் சென்று ஆறுதல் பகிர்ந்திருந்தார் இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி எவ்வளவு மனித நேய சிந்தனை கொண்டவர் என்பதற்கான சான்று அது. கமலின் பேச்சைக் கேட்டு விட்டு இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய் சிலிர்ப்போடு கண்ணீர் வந்தது. பனி விழும் பொழுதினில் இரு விழி நனைந்தது நேற்று மலர்களின் இமைகளைத் திறந்தது மெல்லிய காற்று இரவின் பிள்ளைகள் நாங்களே காதுகளே எம் கண்களே நிறங்களில் பேதம் இல்லையே... கானா பிரபா

கானா பிரபா

60,927 views • 1 year ago

கூட்டத்தை வெச்சு மாஸ் காட்டலாம், அவிங்களுக்கு என்ன ஆனாலும் அதை நம்ம ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கலாம்னு நெனைக்கற TVK Vijay போன்ற கேவலவாதிகள் கவனத்திற்கு : “மதுரைல 1000 பேருக்கு விருந்து வெக்கறேன்னு சொன்னோம், இப்ப ஒரு லட்சம் Applications வந்துருக்கறது பெரிய பயத்தை கொடுக்குது.. Invitations இல்லாதவங்க வராதிங்க, அங்க மண்டபம் 1000 பேர் தான் Capacity. கிடைக்காதவர்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம். வர்றவங்க குடிக்காம வாங்க, குழந்தை, குடும்பமா வராங்க எல்லாம்.” VJ Siddhu மாதிரி ஒரு சாதாரண Youtubers இவ்ளோ தெளிவா சொல்றாங்க Video போட்டு.. இதுதான் நமக்காக வர்ற ரசிகர்கள் மேல அக்கறை கொண்ட மனுசன் பேசற பேச்சு.

தோழர் ஆதி

228,369 views • 17 hours ago