Sensitive content

This media may contain sensitive content.

Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

சைவ முத்தம் கொடுத்தால் 🥵

40,649 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

மதுரை சைவ மட ஆதினத்திற்கு சில கேள்விகள். குகை இடிக்கலகம் என்ற வரலாறு படித்ததுண்டா? பிள்ளைமார்கள் உள்ளிட்ட துறவிகள் மடம் அமைக்கக்கூடாது என்று சொல்லி பார்ப்பனர்கள் இடித்துத்தள்ளியதே அந்த வரலாறு. திருநெல்வேலியின் கா.சு.பிள்ளையைத் தெரியுமா? சென்னை சட்டக்கலூரியின் பார்ப்பனர் அல்லாத முதல் சட்டப்பேராசிரியர். அவரை வழக்கு நடத்தவும், விரிவுரையாற்றவும் பார்ப்பனர்கள் தடுத்தார்கள். திராவிட இயக்கம் தான் அவருக்கு துணை நின்று போராடியது. திராவிடமும் வேளாளரும் என்ற ஆ.வேங்கடாசலபதி எழுதிய நூலைப் படிக்கவும். பிள்ளைமார் சமூகத்தவர் படித்து ஆசிரியர்களாகப் பணியாற்ற அரவணைத்து உள்ளே அழைத்தது அன்றைய கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் தான். சி.சு.மணி எழுதிய நூலைப்படிக்கவும். கடற்புரத்தில் மீனவர்கள் 1500 களில் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள். உள் பகுதியில் முதலில் கிறிஸ்தவத்தை ஏற்றவர்கள் யார் தெரியுமா? நெல்லை பிள்ளைமார்கள். கயத்தாறு முதல் காமநாயக்கன்பட்டி தொடங்கி தமிழ்நாடு முழுமையும் பரவியது. கிறிஸ்தவத்தை தமிழ்நாட்டின் உள்பகுதியில் பரப்ப புரட்டப்பட்டவர்கள் பிள்ளைமார்கள். தேவாலயத்தின் பொறுப்பாளர்களாக அவர்களே நியமிக்கப்பட்டார்கள். அப்படி தூத்துக்குடியிலிருந்து சென்ற பிள்ளைமார் தான் நடிகர் விஜயின் தாத்தா சேனாதிபதி பிள்ளை. ஈச நாதன் (சிவன்) எனும் பொருளில் இயேசு நாதர் எனப்பெயரிட்டவர் யார்? ஆறுமுகம் பிள்ளை தானே? தமிழ்நாட்டில் மீனவர், பிள்ளைமார் முதல் மறவர், வன்னியர், நாடார், பட்டியல் பிரிவினர் என பலரும் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள். உழைத்தார்கள். கிறிஸ்தவத்தில் உயர்ந்ததாக கருதப்படும் புனிதர் பட்டம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு தான் வரங்கப்பட்டது. அது ஆரல்வாய்மொழி தேவசகாயம் பிள்ளைக்கு தான். நெல்லையப்பர் கோவிலை காஞ்சி சங்கராச்சாரி கைப்பற்றத் துணிந்தததற்கு எதிராக திருநெல்வேலி சைவர்கள் போராடினார்கள். இன்று வரை சங்கராச்சாரியால் நெல்லையப்பர் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அந்த வரலாறாவது தெரியுமா? தமிழ் மணக்கும் சைவ மடங்களெல்லாம் சோறு மணக்கும் மடங்களாக மாறிப் போனதே என பல தமிழறிஞர்கள் வேதனைப்பட்டார்கள். இன்று தமிழ் மணந்த சைவ ஆதினமான நீங்கள், சமஸ்கிருத மணம் வீசக் காரணமென்ன? ஆண்டியோட குண்டியைத் தட்டுனா சாம்பல் தான் பறக்கும் என்பது கிராமத்து வழக்கு. உம்மை தட்டினால் அனைத்து விஷப்பூச்சிகளும் வந்து விழுகிறதே. துறவிக்கான இலக்கணம் என்ன என்று மகாபாரதம் கூறுவதையாவது படித்ததுண்டா? நெறி வளர்த்த சைவ மடத்தின் தலைவர் வெறி வளர்க்க முயற்சிக்கலாமா?

Surya Xavier

39,337 просмотров • 1 год назад