Sensitive content

This media may contain sensitive content.

Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

105,294 Aufrufe • vor 4 Monaten •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

#Watch | திருவேற்காடு நகராட்சி கோலடி கிராமத்தில் விளையாட்டு மைதானமாக மக்கள் பயன்படுத்தி வந்த 8 ஏக்கர் நிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வர உள்ளதாகவும், அதற்காக இரும்பு வேலி அமைக்கவுள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து, மைதானத்தில் குவிந்து எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள். மைதானத்தில் தனி நபர் ஒருவர் மணல் தேக்கி வைத்து, அதனை வாகனங்களில் கொண்டு செல்வதாகவும், அதனால் மைதானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதாகவும் நகராட்சி ஆணையர் அளித்த விளக்கக் கடிதத்தை பொதுமக்களுக்கு போலீசார் படித்துக் காட்டினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. #SunNews | #Thiruverkadu | #Police

Sun News

71,588 Aufrufe • vor 1 Jahr

காவிரில போற‌ தண்ணிய தேக்கி வைப்பதே இல்லை.., தமிழ்நாடு அரசு அணையை கட்டி தண்ணிய தேக்கினா கடலுக்கு வீணாக போவதை தடுக்கலாம்" என‌ பலரும்‌ பேசுவதையும், எழுதுவதையும் பார்க்கிறோம். உண்மையில் என்ன நிலைமை..!?🤔 செக்கனூர் நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி ஊராட்சிக்கோட்டை சமயசங்கிலி வெண்டிப்பாளையம் சோழசிராமணி காரணாம்பாளையம் புஞ்சைப்புகழூர் மாயனூர் முக்கொம்பு கல்லணை கம்பரசன்பேட்டை திருவானைக்கோவில் நவப்பட்டி பூலாம்பட்டி குதிரைக்கல்மேடு கீழ மேட்டூர் பேரேஜ் பவானி கட்டளை வண்டிப்பாளையம் பாசூர் அணை- பவானி கட்டளை -3 இதெல்லாம் காவிரி ஆற்றில் அமைந்துள்ள barrage/ தடுப்பணைகள். புஞ்சைப்புகழூர் அணை தற்போது கட்டப்பட்டு வருகிறது.. இது தவிர - 10-15 கிராமங்களுக்கு ஒன்றென.. 'சிறிய தரைப்பால நீர் சேமிப்பு அணைகள்' புதிதாக கட்டியிருக்கிறது திமுக அரசு மேலும்.. காவிரி ஆறு மேட்டூர்ல இருந்து ஆரம்பித்து ஈரோடு வரை குறுகலாக இருக்கும், கரூர் மாவட்டத்தில் அகலம் அதிகமாக ஆரம்பிக்கும். குளித்தலையில் உள்ள முசிறியை இணைக்கும் காவிரி பாலம் தான் நீளமான பாலம் என்பார்கள், கலைஞர் ஆட்சியில் 1970ல் துவங்கப்பட்ட அந்தப் பாலம் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நீளம் உள்ளது. இது தமிழ்நாட்டின் நீளமான ஆற்று பாலம் எனவும் சொல்வார்கள். இத்தகைய இடத்தில் தடுப்பணைகள் கட்டுவது என்பது இலகுவாக இருக்காது. ஆனாலும் அரசுகள் தகுந்த இடத்தில் கட்டிக்கொண்டே வருகின்றன. மேட்டூருக்கும் திருச்சிக்கும் நடுவே காவிரியில் 20-க்கும் மேல் அணைகள் உள்ளன, ஆனா இதில் பலவற்றில் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் வந்த 'குரங்குபேட்டை படத்தில்' கூட ஊராட்சிக்கோட்டை தடுப்பணை காட்டப்பட்டிருக்கும்.. மேட்டூரில் இருந்து கரூர்/திருச்சி வரை காவிரி ஆற்றோடு பயணம் செய்தவர்கள் இந்த அணைகளை கண்டிருக்கலாம். மற்ற ஏரியாவில் உள்ளவர்கள், இதைப் பற்றி எதுவும் தெரியாமல் வெறுமனே அணை கட்டி தண்ணீர தேக்காமல் கடலில் விடுகிறார்கள் என்பதெல்லாம் அறியாமையால் அல்லது அரசியல் வன்மத்தால் சொல்லப்படுவதே..! கல்லணை - திருவையாறு - கும்பகோணம் வழி போறவங்களுக்கு நல்லாவே தெரியும். கல்லணை தாண்டினா காவேரி மூன்றாக பிரிஞ்சிரும் அகலம்.. பாதி கூட இருக்காது. இன்னும் உள்ளிகட தாண்டுனா.. அரசலாறு பிரிஞ்சி.., காவேரி வாய்க்கால் மாதிரி தான் போகும். அதுலயும்.. தடுப்பணை, கதவனைன்னு நிறைய இருக்கு. கும்பகோணம் வந்துட்டா காவிரியும், அரசலாறும் வீரசோழன், கீர்த்திமான், நாட்டாறு, மன்னியாறுன்னு இன்னும் பிரிஞ்சு வாய்க்கால் மாதிரி ஆகிடும் காவிரி. ஒரு அணை கட்டுவது என்பது.. வெறுமனே சிமெண்டினால் சுவர் எழுப்புவது மட்டுமல்ல.. நிலம், சுற்றுச்சூழல், மக்கள் பாதுகாப்பு, அணையில் தண்ணீர் சேகரிப்பதால் அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தின் பாதுகாப்பு, அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வழி பாதை, அணையின் கொள்ளளவு, அணையின் பாதையில் இருக்கும் வழித்தட பாதுகாப்பு என்று எவ்வளவோ உள்ளது. இதற்கு மேல் தமிழகத்தில் காவிரியில் அணை கட்ட தேவையான புவியியல் அமைப்பு இல்லை.. என்பது தான் உண்மை. சில படிக்காத தற்குறிகள் நாம் தடவல் கட்சியில் சேர்த்துக் கொண்டு வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டு திரிகிறது.. இதுக்கும் மேல வேணும்னா எதாச்சும் ஒரு ஊரை காலி பண்ணிட்டு பெரிய ஏரிய தோண்டி, தண்ணிய தேக்கி வச்சா தான் உண்டு.

Unmai Kasakkum

56,584 Aufrufe • vor 1 Jahr